Contact us at: sooddram@gmail.com

 

தீண்டிய தீ

(மேலாண்மை பொன்னுச்சாமி)

அப்போது நான் மனதளவில் திமுக ஆதரவாளன். தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா சென்னை மாநகரில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தை நிறைவேற்றியதையும், தனியார் முதலாளி களின் கைவசமிருந்து பேருந்துகளை அரசுடமையாக்கியதையும் நினைத்து நினைத்துக் கொண்டாடிக் கொண்டிருந் தேன். மேலாண்மறைநாடு கிராமத்தில் என் கடையின் கூரைத் தாழ்வாரத்தில் வந்தவர்கள் போனவர்களிடமெல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பேன். அப்போது விருதுநகர் கல்லூரியில் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த தோழர் ஆர்.பெரியசாமி சனி, ஞாயிறுகளில் ஊர் வருவார். எனது பக்கத்துவீட்டுக்காரர். கையில் கொண்டு வருகிற தீக்கதிர் பத்திரிகையை விரித்துப்படிப்பார், என் கடைத்தாழ்வாரத்தில் உட்கார்ந்து. ஆர் வப்பெருக்குடன், உற்சாகத்துள்ளலுடன் நான் செய்கிற திமுக பரப்புரையை பார்ப் பார். கவனிப்பார். தற்செயலாக போட்டு விட்டுப் போகிற பாவனையில் தீக்கதிர் பத்திரிகையை கடைக்குள் போட்டு விட்டுப் போவார்.

எடுப்பான். சும்மாவாவது பார்ப்பான்... படிப்பான்என்று அவருக்கொரு நம்பிக் கை... அப்படியோர் எதிர்பார்ப்பு.

மறுநாள் வந்து கேட்பார். தீக்கதிர் படிச்சீயா?’

நா தொடக்கூட செய்யலே

ஏன்?’

அது தீக்கதிராச்சே... தொட்டால் சுடுமே

என்று நான் நையாண்டி செய்வேன்.
நக்கலடிப்பேன். அவர்முகம் நிறம் மாறும். உதட்டுப் புன்னகை சுருங்கும். கருகும். அவர் முகம் கறுப்பதை பார்த்து ரசிப்பேன்.

அவரும் முன்னாள் ஆசிரியர் கிருஷ்ணசாமியும் கடை தாழ்வாரத்தில் உட்கார்ந்து மணிக்கணக்காக பேசுவார்கள்.

பி.ராமமூர்த்தி திமுக அரசுக்கு எச் சரிக்கை செய்து பேசியதையும், முத லமைச்சர் அண்ணா அதைப் பொருட் படுத்தாமல் கேலிசெய்வதையும் மனக் கொதிப்போடு அவர்கள் பேசுவதை கடுப் புடன் பார்த்துக் கொண்டிருப்பேன்.

கீழத்தஞ்சையில் லேண்ட் லார்டு களின் (நிலப்பிரபுக்கள்) தந்திரம் பற்றியும், மஞ்சள் கொடி விவசாயிகள் சங்கம் போலி பற்றியும், செங்கொடித் தொழி லாளர்களை ஒடுக்கமுனைவது பற்றியும் அவர்கள் உக்ரமமாக விவாதிப்பார்கள். ஏதோ ஒரு பயங்கரம் நெருங்கி வருவதைப் போன்ற பீதியை கிளப்புவார்கள்.

எனக்கு எரிச்சலாக இருக்கும். வேலையற்றோரின் வெட்டியரட்டையாக எனக்குத் தோன்றும்.

மறுவாரம், சனி ஞாயிறு, அவர் படித்து விட்டு கடைக்குள் போட்டுவிட்டுப் போன தீக்கதிர் இதழில் பிரசுரமாகியிருந்த ஒரு புகைப்படம் என் உயிரைச்சுண்டி யது. கருகி விறைத்த ஒரு மனிதக்கட்டை, அகலித்து உள்மடக்கிய கால்களுடன் தலைகுப்புற கவிழ்ந்துகிடந்த ஒரு கருகிய மனிதக்கட்டை. பார்த்தால், அது வாச லில் கிடக்கிற பிரேதம். வீட்டுக்குள் குவிந்தநிலையில் நிறைய பிரேதங்கள். கருகிப்போன குழந்தைகள் உட்பட நிறைய கரிக்கட்டைகள்.

அந்தப்படம் என்னை உலுக்குகிறது. உயிரை அதிர்வுக்குள்ளாக்குகிறது. கீழ வெண்மணியில் விவசாயத் தொழி லாளர்கள் கூரைக்குடிசைக்குள் அடைத்து தீ வைத்து கொளுத்தி மகிழ்ந்த கொடூரம்.

நடுங்கும் விரல்களால் தீக்கதிரை முதன்முதலாக தொடுகிறேன். அந்தப் புகைப்படத்துடன் வந்திருந்த செய்தியை வாசிக்கிறேன். அன்றுதான் நான் தீக்கதிர் வாசகனானேன்.

மற்றைய நாளிதழ்களில் இதுபற்றிய செய்திகளை நான் பார்த்ததில்லை. பார்த்து, படித்து, சர்ச்சை செய்கிற முக் கியத்துவத்துடன் எந்த நாளிதழிலும் இடம்பெறாத இச்செய்தி தீக்கதிரில்தான் விலாவாரியாக விவரிக்கப்பட்டிருந்தது. வெறும் அச்செழுத்துத் தகவலாக மட்டும் செய்தி வராமல், ஒரு வகையான உணர்ச் சித் தெறிப்புடன் மனக்கொதிப்புடன் வந்திருந்தது.

செய்திகள்... நிறைய இடத்தில் வந்தி ருந்தன. பி.ராமமூர்த்தி எச்சரித்ததை முதலமைச்சர் அண்ணா மதித்து உரிய சமயத்தில் தலையிட்டிருந்தால் வெந்து கருகிய நாற்பது நான்கு உயிர்களை காப் பாற்றியிருக்கலாம்என்ற தொனியிலான அறிக்கைகள். நிலப்பிரபுக்களின் நலனுக்கேற்ப செயல்பட்ட திமுக அரசு பற்றி சிபிஎம்மின் கோபாவேசமான கண்டனங்கள். கண்ணீர் பேட்டிகள். கவிதைகள்.

இறந்தவர்கள் கூலித்தொழிலாளர் கள். உரிமை கேட்ட தமிழ் மனிதர்கள். எரித்துக் கொன்றவர்கள் நில உடமை யாளர்கள். தனித்தமிழர்கள்.

தமிழனே தமிழனை எரிக்கிற எதார்த் தம், எனது திமுக ஆதரவு மனசை பற்றி உலுக்கியது. தீக்கதிரின் செய்திகளும் விபரங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்கள் பற்றிய செய்திகளும் விவரிப்புகளும் என் உயிரைச் சுருட்டி முடக்கி வைத்திருந்த திமுக சிந்தனை எனும் தோல் கருகி எரிந்து சுருண்டு உதிர்கிறது.

தொட்டால் சுடும் என்று புறமொதுக் கிய தீக்கதிர் என் உயிரைத் தொட்டு உயிர்ப்பித்தது. மூடிக்கிடந்த திரைகளை எரித்துக்கருக்கியது. கீழவெண்மணி கொலை பாதகம் பற்றிய செய்திகளை தீக்கதிரில் தேடிப்தேடிப் படித்தேன்.

எல்லா இதழ்களும் மௌனம் சாதிக் கிற தருணத்தில் இந்த தீக்கதிர் இதழ் மட்டும் இந்தச் செய்தி பற்றிய பேருண் மைகளை சத்தம் போட்டு சொல்கிற ஊடக அரசியல் அப்போது புரியவில் லை. ஆயினும், தீக்கதிர் எளியோர் ஆன் மாவாக திகழ்வதை நான் உணர்ந்தேன்.

மெல்ல மெல்ல அந்த விஷயம் எனக்கு பிடிபட்டது. கூலித்தொழி லாளர்கள் அரைப்படி நெல் உயர்த்தித் தரும்படி கேட்டுப் போராடுகிறார்கள். நிலப்பிரபுக்கள் தரமறுக்கிறார்கள். போராட்டம் வலுக்கிறது.

இறங்கி வருகிற மாதிரி பாவனை காட்டுகிறது நிலப்பிரபுத்துவம். மஞ்சள் கொடி சங்கத்தில் மெம்பராகுங்கள். பேச்சு வார்த்தை நடத்தலாம்”.

கூலித்தொழிலாளர்களின் கருத்த மேனியின் வியர்வை முழங்குகிறது. உயிரினும் மேலான செங்கொடியை கீழே போடமாட்டோம். மஞ்சள்கொடி வேண் டாம். எங்கள் உழைப்புக்கு பதில்சொல். மஞ்சள்நெல்லை உயர்த்தித்தாஎன்ற முழக்கங்கள் நாலாதிசை கிராம வெளி களிலும் எழுகின்றன.

ஆயுதம்தாங்கிய ரௌடிகளும், போலீ சாரும் சுற்றிவளைத்து முற்றுகையிட்டு தாக்குகின்றனர். உயிருக்குப் பயந்து ஓடிச்சிதறுகிற வாலிபர்கள். பெரியவர்கள். ஆண்கள். ஓடமுடியாத தாய்மார்களும், பெண்களும், கிழவிகளும், குழந்தை களும் பயந்தோடி ராமையா குடிசைக்குள் ஒளிகின்றனர்.

குடிசைக்கதவை இழுத்துப்பூட்டி, பெட்ரோல் ஊற்றப்பட்ட கூரையில் தீ வைக்கின்றனர். உயிர் கருகிய மனிதக் கதறல்கள் வயல்வெளியெல்லாம் தெறிக் கின்றன.

இத்தனை விஷயங்களையும் தீக்கதிர் மூலமாகவே கற்றுணர்கிறேன். தீக்கதிர் செய்திகள் அச்சான காகிதமாக மட்டும் நின்றுவிடாமல், வாழ்க்கையெனும் வகுப்பறையில் சமூகம் எனும் பாடத்தை நடத்துகிற அரசியல் ஆசானாகவும் செயல்படுகிறது என்பதை அப்போது நான் உணரவில்லை. ஆனால், அதுதான் நிகழ்கிறது.

தமிழ் நிலப்பிரபுகளே தமிழ் உழைப் பாளிகளை ஏன் வதைக்கிறார்கள்? ஏன் மிரட்டுகிறார்கள்? ஏன் எரிக்கிறார்கள்?

அப்படியெனில்... தமிழன் என்ற இன உணர்வு பொய்யா? ஏமாற்றா? மாயமானா?

அதையும் தாண்டிய உண்மை என்ன? எது உண்மை? வர்க்கம் என்பது தான் நிஜமா?

இந்த அரசியல் கல்வியை முதன் முதலாக தீக்கதிர் எனக்குள் இறக்குகிறது. அப்புறம் தீக்கதிரின் தொடர்வாசகனாகி றேன். ஐ.மாயாண்டிபாரதிஐ.மா.பாஎன்ற பெயரில் எழுதிவந்த கண்ணோட்டம் என்ற பகுதி என்னை மிகவும் வசீகரிக் கிறது. சிறுசிறுவாக்கியக் கேள்விகள். சிறுசிறு கவிதைமேற்கோள்கள். கவித் துவமான சொற்தெறிப்புகள். நறுக்குத் தெறித்த வார்த்தைவெடிப்புகள். ஐ.மா.பா. வின் மொழிநடையின் வசீகரத்தில் புதிய புதிய அரசியல் செய்திகள், சமுதாய விமர் சனங்கள். உணர்வைத்தொட்டு உலுக்கி, அறிவை சலவை செய்கிற அற்புத மொழி நடை. தீக்கதிரின் கண்ணோட்டம் பகுதி தான் என்னை கம்யூனிஸ்டாக்கியது.
1969ல் நான் கட்சி உறுப்பினரானேன்.

(இக்கட்டுரை இலங்கை தமிழ் மக்களுக்கும் பொருந்தும் என்ன தி.மு.க இடத்தில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் (இவர்களின் தலைமையில் ஆட்சி கிடைத்திருந்தால் இவ்வாறுதான் நடந்திருக்கும்) கம்யூனிஸ்ட் கட்சி இடத்தில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள இடதுசாரி அமைப்புக்களையும் பொருத்திப் பார்க்கவும். மத்தாளோடை கிராமத்து போராட்டம் சங்கானை, மாவிட்டபுரம் போன்ன இடங்களிலும் சிறுப்பிட்டி மயிலங்காடு பிரதேசங்களின் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை நினைவுபடுத்துகின்றது.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com