Contact us at: sooddram@gmail.com

 

அரசியல் சிக்கல்களினால் சர்வகட்சி மாநாடு இயற்கை மரணத்தை எதிர்நோக்கியது

(டாக்டர் சுப்ரமணியம் சுவாமி)

க்கிய தேசியக் கட்சி தமிழ் பேசும் மக்களை பல்வேறு பிரச்சினைகள் எதிர்நோக்கியிருக்கிறதென்பதை ஏற்றுக்கொள்கிறது. தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தினால் தமிழ் பேசும் மக்கள் தனி நாடொன்றை உருவாக்கும் இயக்கமொன்றை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஐக்கியத்திற்கு முழு நாட்டிலும் பொருளாதார அபிவிருத்தி ஏற்படுத்தப்படுவது அவசியம் என்று கட்சி கருதுகிறது. எனவே கால தாமதம் இன்றி இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று இக்கட்சி விரும்புகிறது.

தங்கள் கட்சி மீண்டும் பதவிக்கு வந்தால் பின்வரும் துறைகளில் இவர்களுக்கு இருக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும்.

1. கல்வி
2. குடியேற்றம்
3.
தமிழ்மொழியைப் பிரயோகித்தல்
4.
அரச சேவையிலும், அரச

கூட்டுத்தாபனங்களிலும் வேலைவாய்ப்பு நாம் முன்னர் கூறியது போன்று சர்வகட்சி மாநாடு ஒன்றைக் கூட்டி அதன் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவோம். சர்வ கட்சி மாநாட்டில் சிங்களம் பேசாத மக்களின் பிரச்சினைகளையும் அரசியல் சாசனத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நாம் யோசனை தெரிவிக்கப் போகிறோம்.

இதில் ஒரு விடயத்தை நாம் பொதுவாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடாத இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெருமளவு தமிழ் வாக்குகள் கிடைத்தன. பெருந்தோட்டத் தமிழர்களின் பெருமளவு ஆதரவு கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்தது.

அதன் தலைவர் திரு. எஸ். தொண்டமான் ஜே. ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை வகித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பிரிவினை வாதத்திற்கான மக்கள் ஆதரவு இருந்தாலும் அக்கட்சியும் மாற்றுவகையான தீர்வை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி உறுதிமொழி அளித்த வட்ட மேசை மாநாடு மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை காண்பதற்கான சிறந்த வாய்ப்பு இருந்தது. பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு வாக்கெடுப்பில் தமிழர்கள் வேதனைக்குரிய ஒரு சமூகம் என்று தீர்மானிக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் நேரம் வேகமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜயவர்தன அரசாங்கம் முன்னர் அளித்த வாக்குறுதிக்கமைய வட்ட மேசை மாநாட்டைக் கூட்டவில்லை. அதற்குப் பதிலாக அந்த அரசாங்கம் 1978 ம் ஆண்டின் குடியரசு அரசியல் சாசனத்தின் அவசர கால நிலை தொடர்ந்தும் நீடித்துக்கொண்டிருந்த வேளையில் அதனை நிறைவேற்றியது.

இந்த சந்தர்ப்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கு கிழக்கு பிராந்தியங்களில் தமிழர்களுக்கு சுயாதிபத்தியத்தை பெற்றுக்கொடுக்கக் கூடிய வகையில் அரசியல் சாசனத்தை திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த யோசனை நிராகரிக்கப்பட்டதை அடுத்து தமிழர் விடுதலைக்கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் சாசனத்தை மாற்றியமைக்கும் கூட்டங்களில் பங்கு கொள்ளவில்லை. அரசியல் சாசனத்தில் சிங்கள மொழிக்கும் பெளத்த சமயத்துக்கும் ஒரு அதிமுக்கிய இடம் அளிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் சிங்கள மொழி ஓரே அரச கரும மொழியாக இருந்ததுடன் அது இலங்கை முழுவதும் நிர்வாக மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்த அரசியல் சாசனத்தில் அரசாங்கம் பெளத்த மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் பெளத்த சாசனத்தை பேணிப் பாதுகாக்கும் வழியையும் தவறாது நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது. இலங்கை ஒரே ஒரு ஒற்றையாட்சி நாடாக இருக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் அறிவித்ததன் மூலம் முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்புக்கு முற்றுப்புள்ளியும் வைத்தது.

புதிதாக அமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. உட்பட ஏனைய தீவிரவாதக் குழுக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களை சிங்களத் தலைவர்கள் ஏமாற்றி விடுவார்கள் என்ற நிலையில் இருந்தனர். அவை ஆயுதப் போராட்டத்தின் மூலமே தமிழர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நிலையில் இருந்து வாதாடினார்கள்.

1983 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெற்ற வன்முறைகளினால் சுமார் 80,000 தமிழர்கள் இங்கிருந்து தமிழ் நாட்டிற்கு சென்றார்கள். அதையடுத்து இந்தியாவுக்கு இலங்கை தொடர்பாக ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. அன்றைய இந்தியப் பிரதம மந்திரி திருமதி இந்திரா காந்தியின் விஷேட தூதுவர் ஒரு தடவையல்ல பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்தார். இங்கு வந்து பிரதான அரசியல் கட்சிகளையும் பெளத்த மகாசங்கத்தினரையும் சந்தித்து தீர்வு ஒன்றை ஏற்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தினார்.

திருமதி இந்திரா காந்தியும் இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் விளையாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று கூறுவதற்கில்லை. திருமதி இந்திரா காந்தி திரு. ஜே. ஆர் ஜயவர்தனவை தனிப்பட்ட முறையில் விரும்பவில்லை. 1971 ம் ஆண்டில் கிழக்குப் பாகிஸ்தானில் ஏற்பட்ட நெருக்கடி நிலையைப் போன்றே இலங்கைப் பிரச்சினையும் இருக்கின்றதென்று திருமதி காந்தி நினைத்தார்.

திருமதி காந்தியின் தூதுவருக்கும், இலங்கை அரசாங்கத் தலைவருக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவருக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்ததையடுத்து பின் இணைப்பு வி என்ற ஆவணம் தயாரிக்கப்பட்டது. ஜனாதிபதி ஜயவர்தன 1983ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற பொதுநல அமைப்பு நாடுகளில் தலைவர்களின் மாநாட்டில் ஏற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி ஜயவர்தன கூட்டவிருந்த சர்வகட்சி மாநாட்டில் பின் இணைப்பு வி யை மையமாகக் கொண்டே பேச்சு வார்த்தைகள் நடைபெற இருந்தன. பின் இணைப்பு வி யில் பின்வரும் அம்சங்கள் இருந்தன.a மாவட்ட சபைகளில் மூலமே அதிகாரப் பரவலாக்களை அமுலாக்க வேண்டும். ஆயினும் ஒரு மாவட்டம் மக்களின் அபிப்பிராய வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கும் பட்சத்தில் ஒரு மாவட்டத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்திய சபைகள் ஏற்படுத்த முடியும்.bவடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு மாகாணத்திலும் மாவட்ட சபைகளின் ஒன்றியம் ஏற்றுக்கொள்ளப்படும்.ணீ ஒவ்வொரு பிராந்திய சபைக்கும் ஒரு அமைச்சர்கள் குழு பிரதம அமைச்சர் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களில் இருந்து நியமிக்கப்படும். னீபிராந்திய சபைகளுக்கு சட்டம் நிறைவேற்றும் மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் இருக்கும்.

நிறைவேற்று அதிகாரம், உள்ளக சட்டம் மற்றும் ஒழுங்கு, நீதித்துறை, சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி கலாசார அபிவிருத்தி மற்றும் காணிக்கொள்கை ஆகியவை தொடர்பாக இருக்கும். பிராந்திய சபைகளுக்கு வரிகளை அறவிடுவதற்கும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து குறிப்பிட்ட தொகையை நிதி உதவியாக பெறுவதுடன் கடனுதவியாக வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது. லீமக்களின் சனத்தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் ஆயுதப்படை மற்றும் பொலிஸிலும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

இது வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் இன விகிதாசார அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும்.ஜீகாணிகளில் குடியேற்றுதல் தொடர்பாக ஒரு தேசிய கொள்கை வகுக்கப்பட்டு அது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும். சகல குடியேற்றத் திட்டங்களும் இன விகிதாசார திட்டப்படி மேற்கொள்ளப்பட்டு சகல இனங்களுக்குதம் ஏற்றத்தாழ்வு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.gஅரசியல் சாசனமும் சிங்கள அரச கரும மொழி மற்றும் தமிழ் தேசிய மொழி, தேசிய கீதம், தேசிய கொடி போன்றவை தொடர்பான சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

1984ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதியன்று நடைபெறவிருந்த சர்வகட்சி மாநாட்டுக்கு ஆரம்பத்தில் 9 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பின்னர் இதில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பெளத்த, கிறிஸ்தவ, முஸ்லிம், இந்து மதத் தலைவர்களுடன் இது விடயத்தில் ஆர்வம் கொண்ட குழுக்களின் பிரதிநிதிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக அரசியல் கட்சிகளிடையே நடத்தப்படவிருந்த மாநாடு இறுதியில் பலதரப்பட்ட முரண்பாடுகளையுடைய கொள்கைகளை கடைப்பிடிக்கும் பல்வேறு குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் ஒரு மாநாடாக மாற்றம் பெற்றது.

பின்னிணைப்பு விஅடிப்படையாக வைத்து சமரசப் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் உடன்பாடு தெரிவித்த பின்னர் பெளத்த அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் பின்னிணைப்பு வி கைவிடப்பட்டது. சர்வகட்சி மாநாடு 1984ம் ஆண்டு முழுவதும் நடைபெற்றது. ஆயினும் பல்வேறு இடைவெளிக்கு பின்னரே இது நடந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த சர்வகட்சி மாநாட்டில் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய சிங்கள அரசியல் கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சி கலந்து கொள்ளாமல் அதனை புறக்கணிப்பு செய்தது.

இந்தக் காலகட்டத்தில் அக்கட்சியின் தலைவி திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசியல் உரிமை பறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது அரசாங்கம் எடுத்த சில குற்றவியல் வழக்கு தொடர்பாகவே திருமதி பண்டாரநாயக்கவின் சிவில் உரிமை பறிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் சர்வகட்சி மாநாடு நடைபெறாமலேயே இயற்கை மரணத்தை அடைந்தது.

இந்த மகாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளுக்கிடையில் இணக்கப்பாடு ஏற்படாததை அடுத்து ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன, தனது யோசனைகளை இரண்டு நகல் சட்ட மூலங்கள் மூலம் சமர்ப்பித்தார். இது முன்னர் நடைபெற்ற மாநாட்டில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட விடயம் என்று அவர் கூறினார்.
 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com