Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைக்கு தீங்கு ஏற்படுவதற்கு இந்தியா ஒருபோதும் இடமளிக்காது - இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி

தமிழ் நாட்டின் மூலம் இலங்கைக்கு தீங்கு ஏற்பட இந்திய அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டாது. இலங்கைத் தீவை பாதுகாப்பதற்கு இந்தியா இருக்கிறது என்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் இந்திய ஜனதாக் கட்சியின் தலைவருமான டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கூறினார். தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் எல்.டி.டி.ஈ யினருக்கு ஆதரவாக செயல்படுவது பற்றி சுப்ரமணியன் சுவாமி எடுத்துரைக்கையில் இலங்கை இந்த விடயத்தில் அதிக அக்கறை செலுத்தக் கூடாது. அங்குள்ள பெரும்பான்மையான மக்கள் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கமாட்டார்கள் என்பதால் இலங்கையர்கள் அவர்களை அசட்டை செய்யப் பழகிக்கொள்ள வேண்டுமென்று கூறினார்.

படையினரை யுத்தம் செய்ய திறமையாக வழிநடத்தி பயங்கரவாதத்தை தோற்கடித்த பெருமை அரசியல் தலைவரும் நாட்டின் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷவுக்கே உரியதாகும். இந்திய மக்கள் இந்த வெற்றியை தமது தேசிய பாதுகாப்புக்கு ஒரு பங்களிப்பாக அடையாளம் கண்டுகொண்டுள்ளதோடு எதிர்காலத்தில் இந்தியாவின் மிக உயர்ந்த கெளரவத்தைப் பெறுவதற்கு உரித்துடையது என்றும் கருதுகின்றனர்.

தமிழ் - சிங்கள மக்களுக்குக்கிடையிலான இன ரீதியான ஒற்றுமைபற்றி சுவாமி விபரிக்கையில் இந்த இரண்டு இனத்தவர்கள் மத்தியிலும் இனவேறுபாடு கிடையாது. இந்த வேறுபாட்டை உருவாக்கியவர்கள் மேற்கத்தேயத்தினர் தான். அது ஒரு மூடத்தனமான விடயம். தமிழருக்கும், சிங்களவருக்கும் ஒரே பரம்பரையலகுகள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அவர்களுடைய சமயமும் பொதுவானதுதான். இரண்டு இனங்களுக்கிடையிலும் சமய வேறுபாடுகள் காணப்படவில்லை. மொழி ரீதியிலான வேறுபாடுகளும் காணப்படவில்லை. ஏனெனில், சமஸ்கிருதத்திலிருந்து வந்த பொதுவான சொற்கள் இரண்டு மொழிகளிலும் காணப்படுகின்றன. சமஸ்கிருதத்திலிருந்து வந்த 40 சதவீதமான சொற்கள் தமிழ் மொழியில் காணப்படுகின்றன. ஆதலால் முதலாவதாக இரண்டு பகுதியினரும் இணைந்து தாங்கள் ஒரு சமூகம், இரண்டு சமூகங்கள் அல்ல என்று கூறவேண்டும். வடபகுதியில் சிங்களவர்களும், தென்பகுதியில் தமிழர்களும் வாழவேண்டும். இரண்டு பகுதியினரும் கலந்து வாழவேண்டும். இலங்கையை ஐக்கியப்படுத்த இதுவே சிறந்த வழி. இப்படி சுவாமி கூறினார்.

இந்தியாவின் பங்களிப்பு தொடர்பான தனது பார்வைபற்றி சுவாமி கூறியதாவது,

எதிர்வரும் இந்திய தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணி அதிகாரத்தைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த முன்னணியில் ஜனதா கட்சியும் ஒரு பகுதி. நிச்சயமாக அரசாங்கத்தில் நாங்கள் மிக நெருக்கமாக இருப்போம். அப்போது சில வேறுபாடுகளைக் காணலாம். ஏனென்றால் நான் நினைக்கிறேன் சிலர் எல்.டி.டி.ஈ யை ஆதரித்தனர். அதிர்ஷ்டவசமாக என்னைப்போன்றவர்களின் அழுத்தம் காரணமாக அரசாங்கம் எல்.டி.டி. மீதான தடையை மேலும் இரண்டு வருடகாலத்துக்கு நீடிக்க வேண்டி ஏற்பட்டது. தேர்தல் நடக்கும் வருடத்தில் இலங்கையும், இந்தியாவும் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கும். நாட்டுப்பற்றுமிக்க இந்திய மக்களைப் பொறுத்தளவில் தேசிய ரீதியான விடயமே முதலாவதாகும். ஏனையவை இரண்டாந்தரமே. இலங்கையின் நலனை இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்பதில் எனக்கு நிச்சயமாக நம்பிக்கையுண்டு. இந்தியாவில் இருக்கும் நாங்கள் இலங்கையரோடு உணர்வுபூர்வமாக, சரித்திரபூர்வமாக, சமய ரீதியாக, மொழி ரீதியாக மற்றும் நம் இரண்டு நாடுகளினதும் பாதுகாப்பு நலன் ரீதியாக நெருங்கிய உறவைக் கொண்டிருக்கிறோம். இலங்கையின் நலனுக்கு எதிராக இந்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை இந்தியர்கள் ஆதரிப்பதில்லை.

உதாரணத்துக்கு அமெரிக்க அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைக் கவுன்ஸிலால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை ஆதரிப்பதற்கு இந்திய அரசாங்கம் எடுத்த முடிவை பெரும்பாலான இந்திய மக்கள் எதிர்த்தனர். எல்.டி.டி.ஈ. தொடர்பாக தமிழகத்தில் சாதாரண மக்களின் நிலைப்பாடுபற்றி சுவாமி கூறுகையில் பொதுமக்கள் மத்தியில் எல். டி.டி.ஈ யினருக்கு பெரிதாக ஆதரவு கிடையாது. எப்பொழுது தேர்தல் வந்தாலும் அவர்கள் தோல்வியடைகின்றனர். ஆனால், அது செயல்பாட்டுக்கு வரும்போது அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தனி ஈழ கோரிக்கை அங்குள்ள பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எல் டி.டி.ஈ யை ஆதரிக்கும் டெசோ பற்றி சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவிக்கையில்,

என்னைப்போன்றவர்கள் நீதிமன்றத்துக்குப் போய் எதிர்ப்பு தெரிவிப்பதால் தமிழ் ஈழம் பற்றி பேசக்கூடாது என்றும் தவறினால் எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கருணாநிதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக என்னால் அடிப்படை உரிமைகள் வழக்கு ஒன்று பதிவு செய்யமுடியும். இந்த விடயத்தில் இலங்கை கூடிய கவனம் செலுத்தக் கூடாதென்றே கருதுகிறேன். இத்தகைய அரசியல்வாதிகளை கணக்கெடுக்காமல் இருக்க இலங்கை மக்கள் பழகிக் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டினால் இலங்கைக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. நாங்கள் அங்கு இருக்கிறோம். அப்படி எதுவும் நடக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

அரசாங்கத்தின் கூட்டணியில் சில நிர்ப்பந்தங்கள் உள்ளன. அதனால் அவர்கள் இங்கும் அங்கும் சிலவற்றை அனுசரித்துப்போக வேண்டியுள்ளது. ஆனால் எல்.டி.டி.ஈ தடையை மேலும் நீடிக்கும் சட்டம் வந்தபோது கருணாநிதியால் எதுவும் செய்ய முடியவில்லை. மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கையின் முயற்சி பற்றி சுவாமி கூறியதாவது, பிரித்தானியரால் சரித்திரம் திரிபுபடுத்தப்பட்டு விஷமூட்டப்பட்டிருக்கிறது. ஆரியர், திராவிடர் என்னும் நிலையில் இருந்து நாம் வெளிவரவேண்டும். கருணாநிதியும் மற்றவர்களும் திராவிடரின் பெரிய ஹீரோ என்று கூறும் இராவணன் வட இந்தியாவில் பிறக்கவில்லை. டெல்லியின் எல்லைப்பகுதியிலேயே பிறந்தார். அவரின் மனைவி மாதுரி மிஹிரத்தில் பிறந்தார். பின்னர் இராவணன் கைலாயத்துக்குச் சென்று சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற்று இலங்கைக்கு வந்தார். இங்குள்ள செல்வத்தின் மீது ஆசை கொண்டே அவர் இங்கு வந்தார். முழு சரித்திரமும் பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்காக கவனமாக மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் எல்லா இனங்களும் இணைந்து வாழ்வதுபோல இலங்கையர்க ளும் வாழவேண்டுமென்று விரும்புகிறேன். மாகாண சபைகளுக்கு சுய அதிகாரம் வழங்குவது பற்றி சுவாமி கருத்து தெரிவிக்கையில், நான் சுய அதிகாரம் பற்றி பேசமாட்டேன். ஆனால் ஒரு முதலமைச்சருக்கு உள்ளூர் அதிகாரங்களை வழங்க வேண்டும். அவர் சுதந்திரமாக பொலிஸ் சேவையொன்றை வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்.

அதேவேளை மத்திய அரசின் அதிகாரத்தின் கீழும் ஒரு பொலிஸ் சேவை இருக்கவேண்டும். அவர்கள் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டால் மத்திய அரசாங்கம் மாகாண நிர்வாகத்தை இரத்துச் செய்ய வேண்டும்.

நெடுமாறன், வைகோ போன்றவர்கள் இன்னும் தமிbழ கோரிக்கைகளை எழுப்பி வருவது பற்றி?”

எல். டி.டி.ஈ யினர் மீதான தடையை நீடிக்கக் கூடாதென்று வைகோ கூச்சலிட்டுக் கொண்டு இருந்தார். ஆனால் தடை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டது. நளினி விடுதலை செய்யப்படவேண்டுமென்று அவர் சொல்லிக்கொண்டு இருந்தார். அதுவும் நடக்கவில்லை. எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் என்று நம்பப்படும் ஓர் அரசாங்கம் ஐக்கிய இலங்கையை மேலும் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு நல்கும்.

தமிழ் நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் பற்றி சுவாமி கூறியதாவது, தமிழ் நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் எல்லோரும் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கே விரும்புகின்றனர். இந்த விடயத்தில் சந்திரஹாசன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். இதுதான் தருணமென்று நான் நினைக்கிறேன்.

- ஆர். ராஜலிங்கம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com