Contact us at: sooddram@gmail.com

 

சிரியா

அஸாத்தின் ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி?

ஏறத்தாழ 17 மாதங்களுக்கு முன்னர் பஷீர் அல் அஸாத்தின் அரசுக் கெதிரான போராட்டங்கள் சிரியாவில் ஆரம்பித்திலி ருந்து, தினந்தோறும் செய்திகளை ஆக்கிரமித்தது சிரியா. ஒவ்வொரு நாளும் சிரியா பற்றிய செய்திகளை வாசிப்பவர்களுக்கும் இது எதில் போய் முடியப்போகின்றது என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியாது. சிரிய மோதல்களில் வெளித்தலையீடுகள் அவசியம் என்று மேற்குலக ஊடகங்கள் வலியுறுத்தி வருகின்ற வேளையில், வெளித் தலையீடுகள் சிரியர்களை பரம்பரை பரம்பரையாக இருண்டயுகத்துக்குள் தள்ளி விடும் என்று சர்வதேச அவதானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதல்கள் யுத்தமாக வெடிக்குமானால், அது சிரியாவுக்கு அப்பாலும் பரவும் ஆபத்திருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

17 மாதங்களுக்கு முன்னர் சிரியாவில் கிளர்ச்சிகள் வெடித்தபோது அது, சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கெதிரான உண்மையான போராட்டமாகவே ஆரம்பித்தது. இருப்பினும் அதன்பின்னரான மேற்குலக மற்றும் பிராந்திய தலையீடுகளால் அவை பாரிய மோதல்களாக வெடிக்க ஆரம்பித்தன. அதனால், சிரிய அரசுக்கெதிராகப் போராடும் போராளிகளுக்கு வெற்றிகளைக் குவித்ததோடல்லாமல், மனித உயிரிழப்புகளும் எண்ணிக்கையற்றுப் பெருக ஆரம்பித்தன. ஒபாமா அரசும்,வளைகுடா நாடுகளும் சிரிய அரச எதிர்ப்பாளர்களுக்கு பல வழிகளிலும் உதவி வருகின்றன. இவ்வுதவிகள் ஆரம்பத்தில் தங்களின் மக்களுக்காகப் போராட ஆரம்பித்தவர்கள , மேற்குலகநாடுகளின் கைக்கூலிகளாக மாற்றியுள்ளன.

சிரியாவில் உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டு அந்நாட்டில் உள்ள அரசுக்கு எதிரான ஆயுதக்குழுவினருக்கு அனைத்து வகைகளிலும் உதவி செய்ய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா ரகசிய உத்தரவிட்டிருப்பது அண்மையில் அம்பலமாகியிருக்கிறது. ரொய்ட்டஸ், ஏபிசி உட்பட பல்வேறு உலக செய்தி நிறுவனங்கள் வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவந்திருக்கும் தகவல் என்ற அடிப்படையில் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. இதன் மூலம் இதுவரை ரகசியமாக செய்த பல்வேறு சதிவேலைகள் வெளிப்படையாக தெரியவந்திருக்கிறது.

அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவில் மதச்சார்பற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் அமெரிக்காவின் எடுபிடிபோல் செயல்பட அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. இதையடுத்து சிரியா அதிபர் பசார் அல் அசாத்தை அதிபர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும். தனக்கு சாதகமான அதிபரை அதிகாரத்தில் அமர்த்த வேண்டும ;என அமெரிக்கா தொடர்ந்து முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிரியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. ஆனால் இந்த தீர்மானத்திற்கு எதிராக சீனாவும், ரஷ்யாவும் தங்களது ரத்து அதிகாரத்தை பயன்படுத்தின. இதனால் தீர்மானம் தோல்வியுற்றது.

தனது முதல் முயற்சி தோல்வியடைந்த உடன் ஓபாமா இவ்வாண்டின் ஆரம்பத்தில் சிரியாவில் அரசிற்கு எதிராக செயல்படும் ஆயுதக்குழுக்களுக்கு ஆயுத உதவி உட்பட அனைத்து உதவிகளையும் செய்து, அதன் மூலம் சிரியாவில் அரசு படைகளுக்கும், ஆயுதக்குழுக்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் போர் ஏற்பட்டு அமைதியற்ற சு+ழலை உருவாக்க வேண்டும் என அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இதற்கு உதவும் வகையில் துருக்கி, சவுதிஅரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளையும் இணைத்து சிரிய எல்லை பகுதிகளில் தகவல் பரிமாற்ற மையத்தோடு இணைந்த ரகசிய உத்தரவு மையத்தை அமைத்தது. அங்கிருந்து அரசு எதிர்ப்பு ஆயுதக் குழுவினருக்கு ராணுவபயிற்சி அளிப்பது, ஆயுதங்களை கொடுத்தனுப்புவது, சிரிய அரசு படைகள்

குறித்த தகவல்களை பரிமாறுவது உட்பட வேலைகள் நடைபெற்றிருக்கிறது.

இதே போல் அமெரிக்க விமானப்படை, ராணுவம் மற்றும் உளவு பிரிவு இணைந்து சிரியாவில் கலவரத்தை இயக்கும் நரம்பு மண்டலமாக தெற்கு துருக்கியில் உள்ள அடானா நகரில் ஒரு மையத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா, சிரிய அரசுக்கு எதிரான ஆயுத குழுவினருக்கு 250 லட்சம் அமெரிக்க டாலர்மதிப்பினலான பேரழிவை ஏற்படுத்தாத ஆயுதங்கள் வழங்கப்படும் வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. இதனையடுத்தே சிரியாவுடனான நிழல் யுத்தமொன்றை அமெரிக்h ஏறகனவே ஆரம்பித்து விட்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டன.

சிரியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என அமெரிக்கா இதுவரை மூன்று முறை ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறத . சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட 3 தீர்மானங்களை ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்து விட்டதால், அடுத்தகட்ட ஆலோசனையில் அமெரிக்கா இறங்கியது.இது குறித்து ஆராய்வதாகவே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலரியின் துருக்கி விஜயம் அமைந்திருந்தது.

சிரியாவில் கிளர்ச்சிப் படையிடமிருந்து வர்த்தக நகரமான அலெப்போவை மீட்பதற்காக் அசதின் அரசுப் படையினர் உக்கிரமான தாக்குதல் நடத்தி வந்தனர்;. இதனால் கடும் உயிர்சேதம் ஏற்பட்டது. இது மிகப்பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா. ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்கிடையே அங்கு அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் ஐ.நா.-அரபு நாடுகளின் சிறப்பு தூதர் கொபி அனான் ஈடுபட்டு வந்தார். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக புதிய திட்டத்தையும் அவர் வகுத்தார். ஆனால் அவரது திட்டத்தை இருதரப்பிலும் முழுமையாக பின்பற்றாததால் வன்முறை தொடர்கிறது. தனது முயற்சிக்கு உரிய பலன் கிடைக்காத நிலையில், கோபி அனான் தனது பதவியில் இருந்து விலகினார். கொபி அனானின் விலகல், அஸாத்தை சாத்வீகமான முறையில் பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதன் மூலம் ஜனாதிபதி அஸாத்தை சாத்வீகமானமுறையில் பதவி நீக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளும் முடிவுக்கு வந்தள்ளன. அனானின் பதவிக்காலம் இம்மாத இறுதியில் முடிவடையவுள்ள நிலையிலும், அவரது இடத்துக்கு புதிய தூவராக அல்ஜPரிய ராஜதந்திரி ப்ராஹிமி நியமிக்கப்பட்டுள்ள நிலையிலும் அனானின் ராஜpனாமா சிரிய சமாதான முயற்சிகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று பல ஊடகங்கள விமர்சிக்கின்றபோதும , சிரியாவில் இடம்பெற்று வரும் மோதல்கள் அதற்கப்பாலும் பரவும் அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதையே அண்மைய சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ராணுவ விமான தளத்தில் ராணுவத்தினருக்கும், அரசு எதிர்ப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை கடும் மோதல் ஏற்பட்டிருக்கிறது.நாட்டின் முக்கிய இடங்களிலும் இரு பிரிவினரும் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். பீரங்கி, ரொக்கெட் குண்டு வீச்சு, துப்பாக்கிச்சு+டு என உள்நாட்டுப் போர் மிகவும் உக்கிரமடைந்துள்ளது. சில இடங்களில் ஹெலிகாப்டரில் இருந்தும் குண்டுகள் வீசப்பட்டன.

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப்பின் ஏற்பட்ட மோதலில் மட்டும் சுமார் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் அப்பாவி பொதுமக்கள் பலரும் அடங்குவர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் போரிட்டு வரும் அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் விரைவில் ஒன்று திரண்டு, ஒட்டுமொத்தமாக டமாஸ்கஸ்ஸை தாக்க இருக்கின்றனர். எனவே இன்னும் சில தினங்களில் சிரியாவில் அஸாத்தின் ஆதிக்கம் முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

கடந்த 17 மாதங்களாக சிரியாவில் நிகழ்ந்து வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்

சிரியாவில் அஸாதின் ஆட்சி விரைவில் அகற்றப்படும் என்று பிரான்ஸ் மறைமுகமாகக் கூறியிருக்கிறது. எதிர்வரும் நாட்களில் சிரியாவில் மேலும் பல முக்கிய இடங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றுவர் என்றுமபல ஆச்சரியங்கள் காத்திருப்பதாகவும்; பிரான்ஸ் தெரிவித்திருகிறது.பிரான்ஸில் ஆட்சிமாற்றம் விரைவில் சாத்தியமாகுமா என்பதை வரும் வாரங்களில் தெரிய வரும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com