Contact us at: sooddram@gmail.com

 

ஈழத்துப் பெண் கவிஞர்களின் தொகுப்புகள் 

(ந. முருகேசபாண்டியன்)

யாழ்ப்பாணம் பெண்கள் ஆய்வு வட்டம் சார் பில் வெளியானசொல்லாத சேதிகள்தான் தமி ழில் வெளியான முதல் பெண் கவிதைத் தொகுப்பு. எட்டுப் பெண் கவிஞர்களின் இருபத்து மூன்று கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. அதே நூல் சிறிய திருத்தமுடன் 1987ஆம் ஆண்டு சிலிக்குயில் பதிப்பகத்தினரால் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில் இடம் பெற்ற சிவரமணியும் செல்வியும் உலகிலிருந்து அகற்றப் படவில்லை. ஏனையோர் வெவ்வேறு இடங்க ளில் உறைந்துள்ளனர். சிங்கள ராணுவத்துடன் முரண்பட்டுப் போராடும் சூழலில், அகப் போராளி இயக்கத்தினருடன் முரண்பாடு நிற்கும் நிலையைசொல்லாத சேதிகள்சொல்ல முயன்றுள்ளன.

இடைவெளிகவிதையில் அ. சங்கரி, தனக் கும் தனது ஆண் நண்பருக்குமான இடைவெளி யைக் காட்சிப்படுத்தியுள்ளார். வழமையான பெண் மனத்திலிருந்து தன்னை விலக்கிப் பார்க்கும் சங்கரியின் குரல் தனித்துவமானது.

என்னை / மேகத்திற்குள்ளும் / மண்ணிற் குள்ளும் / மறைக்க எண்ணிய வேளையில் / வெளிச்சம் போட்டுப் பார்த்தனர் / அவர்களின் / குரோதம் நிறைந்த பார்வையும் / வஞ்சகம் நிறைந்த பார்வையும் / என்னை சுட்டெரித்தன

- என எழுதிய சிவரமணி, அரசியல் நெருக் கடி காரணமாக 1991ல் தற்கொலை செய்து கொண்டார்.

போராட்டத்தில் வீரத்துடன் போராடி ஆண் கள் இறந்து போகின்றனர். அத்துடன் அவர்களு டன் துயரம் நீங்குகின்றது. வீட்டில் குழந்தைகளு டன் காத்திருக்கும்கணவனை இழந்த இளம் பெண்ணுக்கு ஒவ்வொரு நாளும் துயரம் தான். இராணுவத்தினரின் வன்புணர்ச்சிக்குள்ளாகும் பெண்ணுடல்கள் எதிர்கொள்ளும் வதைகள் வேறு. பெண்ணின் இருப்பே போராட்டமயமாகும் சூழலில், இதுவரை தமிழ்ச் சமூகம் புனைந்தி ருந்த பெண் பற்றிய பிம்பம் சிதிலமடைகின்றது. மாறிவரும் புதிய சமூகத்தை வரவேற்பதாகப் பெண் கவிஞர்களின் கவிதைகள் உள்ளன.

இயற்கைக் காட்சிகளைச் சித்தரிக்கும் ஊர்வசியின் கவிதைகள் வாசிப்பில் அதிர்வை ஏற்படுத்தக் கூடியன. அளவில் சிறியது எனினும்சொல்லாத சேதிகள்தொகுப்பு, தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதை வரலாற்றில் தனித்து விளங்குகிறது.

பெயல் மணக்கும் பொழுதுஎன்ற தலைப் பில் அ.மங்கை தொகுத்த ஈழப் பெண் கவிஞர்க ளின் கவிதைகள் 2007 இல் வெளியாகியுள்ளது. தொண்ணூற்று மூன்று பெண் கவிஞர்களின் கவி தைகள் அடங்கிய பெரிய தொகுப்பு. இத்தனை பெண் கள் கவிதை எழுதுகின்றனரா என்ற வியப்பை ஏற்படுத்துகின்றது. ஈழப்போராட்டத்தில் போராளி கள் ஆயுதமேந்திய போது வெளிப்பட்ட பெண் கவி தைகள், கடந்த இருபதாண்டுகளில் அடைந் துள்ள வளர்ச்சி நிலையை இத்தொகுப்பில் காணவியலும். போரினால் ஏற்படும் இழப்பு ஒருபுறமும், புலம்பெயர்ந்த தேசத்தில் வாழும் அவலநிலை என இருவேறு போக்குகளும் பெண் எழுத்தில் பதிவாகியுள்ளன. தமிழ்ப் பெண் என இதுவரை மரபுரீதியாகப் புனையப் பட்டுள்ள பிம்பங்களைத் தகர்த்துவிட்டுப் பெண் தனக்கான புழங்கு வெளியை உருவாக் கிக் கொள்வதை இத்தொகுப்பின் மூலம் அறிய முடிகின்றது.

ஈழத்து எழுத்தாளர் சித்ரலோகா, தமிழகத் தைச் சார்ந்த வ.கீதா, தொகுப்பாளர் அ. மங்கை ஆகியோர்பெயல் மணக்கும் பொழுதுநூலின் தேவை பற்றியும், இத் தொகுப்பிலுள்ள கவிதைகள் பற்றியும் கருத் துரைத்துள்ளனர்.

சங்கரியின்உயிர்வெளிமாறுபட்ட தொனி யில் பெண் மனத்தினையும் உடலையும் பதி வாக்கியுள்ளது. நள்ளிரவில் வானத்தைப் பார்த்தபடி புல்தரையில் கவிதை சொல்லி படுத்துள்ளார். தொலைவில் மத்தள ஒலியும் துப்பாக்கி வெடியொலியும், இந்நிலையில் பாடல் வரிகள்.

தென்றல் தடவும் / எனது தலைமயிரில் / காதின் மடலில் / காலின் பெருவிரலில் / மார்பகத்தின் மேட்டில் / இன்பம் கொப்பளிக்கும் / எனதுயிரும் / எனதுடலும் / இவ்விரவின் தேன் பருகும்.

இயற்கைப் பரப்பில் தன்னையிழந்து துயர் மறக்கும் சங்கரியின் மனம் காற்றில் மிதக்கிறது.

ஆண்குறி இருப்பதனால் ஆணாகச் சிலாகிக்கப்படுகிறவனைப் பற்றிய கல்யாணி யின் கவிதை, ஆண் மேலாதிக்கச் சூழலை நுட்பமாகப் பதிவாக்கியுள்ளது.

முத்தங்களாகிய கலவியில் மயங்கி

இறுக அணைத்து வியர்வையில் ஒட்டி

கரைந்து போகும் அடுத்த நிமிடமே

நீ ஆணாகி விடுகிறாய்

- என்ற ரஞ்சனியின்புரிதல் அவலம்கவிதை, நவீனப் பெண் மனம் பற்றிய நுண் பதிவு.

லுணுகலை ஹஸீனா புஹார் என்ற பெண் கவிஞர் எழுதிய அம்மா வந்துவிட் டேன்கவிதை, தாயைப் பிரிந்த இளம் பெண் ணின் மனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட ரசனை மட்டங்கள் போன்ற வற்றை இதுபோன்ற தொகுதிக்குள் கொண்டு வர நான் விரும்பவில்லை. வாழ்வா சாவா என்ற போராட்டத்தில், மூச்சு விடத் திணறும் சூழலில் வெளிவரும் இக்கவிதைகளைக் கூறுபோட்டு கூவி விற்க நான் தயாராக இல்லை. அதற்கான
மனம் என்னிடம் இல்லைஎன்று தொகுப்பாளர் அ. மங்கை நூலின் பதிப் புரையில் குறிப்பிட்டிருப்பது வாசிப்பில் பதற் றத்தை ஏற்படுத்துகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com