Contact us at: sooddram@gmail.com

 

இனப்பிரச்சினைக்கு வெளிநாட்டில் அல்லது இந்தியாவில் அல்லது ஐ.நாவிலிருந்து ஆலோசனைகள் அவசியமில்லை

இலங்கை மக்களே ஐக்கியமாக தீர்வொன்றை காணவேண்டும்

(டாக்டர் சுப்ரமணியம் சுவாமி)

ந்த யோசனைகளின் படி கிராம மட்டத்திலான 3,000 உள்ளூராட்சி மன்றங்களை ஏற்படுத்துதல் அவற்றுடன் மாவட்ட, மாகாண அடிப்படையில் இருந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்து பாராளுமன்றத்தில் 2வது பேரவைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்தல் போன்ற விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. இந்த 2வது சபையில் எல்லாமாக 75 அங்கத்தவர்கள் இருப்பார்கள் என்றும் இதில் 50 பேரை 25 மாவட்ட சபைகள் தெரிவு செய்யும் என்றும் எஞ்சிய 25 இடத்திற்கு ஜனாதிபதி உறுப்பினர்களை நியமிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆயினும் ஜே. ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தில் தமிழர்களுக்கு எதிரான கொள்கையை தீவிரமாகக் கடைப்பிடித்த சிறில் மத்தியூ இந்த யோசனையை பகிரங்கமாக எதிர்த்தார்.

இதனை பெளத்த பிக்குமாறும் எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இந்த யோசனைகளை நிராகரித்தது. தமிழர்களுக்கு பல சலுகைகளை நாம் வழங்கினாலும் எங்களுக்கு அதனால் எந்தப் பயனும் இல்லை என்று கூறி சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் இதனை நிராகரித்தனர்.

ஆயினும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தங்களுக்கு இந்த யோசனைகள் போதியளவு சலுகைகளைக் கொடுக்கவில்லை என்று கூறி இதில் சுயாதிபத்தியத்துக்கு இடமளிக்கப்படவில்லை என்று வாதாடினார்கள். ஆயினும் அவர்கள் இது தொடர்பான அடுத்த பேச்சு வார்த்தைகளில் பங்குகொள்ளப்போதில்லை என்று அறிவிக்கவில்லை.

1984ம் ஆண்டு டிசம்பர் 24ம் திகதியன்று ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன தமது அரசாங்கம் இந்த யோசனைகளை நிறைவேற்றுவதில்லை என்று தீர்மானித்திருப்பதாக அறிவித்தார். எதிர்காலத்தில் தான் என்ன யோசனைகளை எடுக்கப் போகிறேன் என்று ஜனாதிபதி உறுதிமொழி அளிக்க வில்லை.

இதனால் இந்தப் பிரச்சினைக்கு சமாதானப் பேச்சு வார்த்தை மூலம் சமாதானத் தீர்வை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பும் பறிபோனது. அன்றிலிருந்து இலங்கையில் வன்முறைகள் தலைதூக்கியது. இதனால் இரு சமூகங்களின் பொது மக்கள் உயிரிழக்க ஆரம்பித்தார்கள். நல்லிணக்கப்பாட்டுக்கான ஒரு யோசனை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னால் பல யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனவே அந்த யோசனைகள் பற்றி நான் மீண்டும் எடுத்துரைப்பது அவசியமல்ல. இரு சாராரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நல்லிணக்கப்பாட்டை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கும் தமிழ் சிறுபான்மை மக்களுக்கும் ஏற்படுத்த முடியுமா என்று ஆராய நான் விரும்புகிறேன்.

முதல் நடவடிக்கையாக நல்லிணக்கப்பாட்டுக்கான எந்த ஒரு யோசனையையும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டில் இருந்தோ, இந்தியாவில் இருந்தோ ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திடம் இருந்தோ அல்லது ஐரோப்பாவில் உள்ள பல்வேறு அமைப்புக்களிடம் இருந்தோ இலங்கை மீது புகுத்தி அழுத்தங்களைக் கொண்டுவர முடியாது.

இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஜனநாயக ரீதியில் கலந்துரையாடிய பின்னர் உள்ளூரில் இருந்தே இதற்கான தீர்வை ஏற்படுத்த வேண்டும். இதில் எவருக்கும் இந்தத் தீர்வுக்கு முரணாக செயற்பட முடியாதிருக்க வேண்டும். இந்தத் தீர்வை இலங்கைப் பாராளுமன்றம் ஒரு பிரேரணையாக அல்லது அரசியல் சாசனத்திற்கு ஒரு திருத்தமாகவோ கொண்டுவரலாம்.

இரண்டாவது செயற்பாடாக ஏற்கனவே பரந்த அடிப்படையில் இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கும் 13+ திருத்தத்தை ஒரு சித்தாந்தமாக வைத்து பாராளுமன்றத்தினால் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் முடியும். ஆயினும் இறுதியாக நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான யோசனைகள் மேலும் பல திருத்தங்களை ஏற்படுத்திய பின்னர் 13+ திருத்தத்திற்கு கூடுதலாக அல்லது குறைவாக ஏற்றுக்கொள்ளப்படலாம். மூன்றாவதாக அரசியல் சாசனத்திற்கான திருத்தத்தின் மூலம் இலங்கை பல மாநிலங்களைக் கொண்ட ஒன்றியமாக மாறி அதிகாரத்தை மாநிலங்களுக்கு பெற்றுக்கொடுக்கக் கூடிய செயற்பாட்டையும் கையாளலாம்.

நான்காவது நடவடிக்கையாக இலங்கையின் அரசியல் சாசனத்திற்கமைய இந்நாடு ஒற்றையாட்சியின் கீழ் ஆளப்படும் ஒரு நாடாக விளங்கும். இலங்கை பாராளுமன்றத்துக்கு அரசியல் சாசனத்திற்கு உள்ள அதிகாரத்துக்கு அமைய ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தைக் கலைத்துவிட அல்லது நிர்வாகத்தைப் பொறுப்பேற்கும் அதிகாரம் இருக்கும்.

ஐந்தாவது நடவடிக்கையாக நாட்டின் தலைவர் அல்லது மாகாண அரசாங்கம் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்காக மாநில பொலிஸ் படையின் மூலம் இப்பணியை நிறைவேற்ற முடியும். அதே வேளையில் நாட்டின் மத்திய அரசாங்கம் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் மற்றும் ஆயுதப்படையின் சேவையைப் பெற்ற ஜனாதிபதி ஒருவர் தீர்மானிக்கும் சந்தர்ப்பங்களில் அதன் மூலம் நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அதற்காக பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பின்னர் பெறமுடியும்.

ஆறாவது செயற்பாடாக பாராளுமன்றம் ஒரு திருத்தத்தை ஏற்படுத்தி அதன்மூலம் மத்திய அரசாங்கத்துக்கு விஷேட மாவட்ட நீதவான் நீதிமன்றங்களை அவசியம் ஏற்படும் போது ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த மாவட்ட நீதவான் நீதிமன்றங்களுக்கு இந்த மாநில நீதவான் நீதிமன்றங்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு எடுத்த அதிகாரங்களை விட கூடுதலான அதிகாரங்கள் கொடுக்கப்படும்.

ஏழாவது செயற்பாடாக இலங்கை அரசாங்கம் நிர்வாகத்தைப் பொறுத்தமட்டில் மத சார்பற்றதாக செயற்படும். கலாசார ரீதியில் இலங்கை ஒரு பெளத்த நாடாக இருந்தாலும் நிர்வாகம் மத சார்பற்றமுறையிலேயே இருக்கும். அதே நேரத்தில் இறைவனை அடையும் எண்ணத்துடன் இறைநம்பிக்கையை அளிக்கும் சகல மதங்களும் இது விடயத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.

எட்டாவது செயற்பாடாக அதிகாரப் பரவாலாக்களுக்குப் பின்னர் தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களும் ஒரே மரபியலைக் கொண்டவர்களாகவும் வரலாற்றில் ஐக்கியப்பட்டு கலாசாராத்திலும் சமஸ்கிருதம், பாளி போன்ற மொழிகளின் பாரம்பரியத்தை உள்ளடக்கியதாகவும் வரலாற்று நூல்களுடன் தமிழர் மற்றும் சிங்களவர்கள் அதிகமாக உள்ள பிரதேசங்களில் இரு மொழிகளைப் பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்கப்படுவதுடன் அப்பிரதேசங்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலமே இறுதியாக ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும்.

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com