Contact us at: sooddram@gmail.com

 

பகுத்தறிவு பாடல்கள் பாடுவதில் திறமை பெற்ற பட்டுக்கோட்டையார்

பாட்டுக் கட்டிப் பாடுவதே அவரது பணி. சிந்தனையைத் தூண்டும் தத்துவப் பாடல்கள் எழுதி, திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள செங்கல்பத்தான்காடு என்னும் கிராமத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 13.04.1930ல் பிறந்தார்.  தந்தை பெயர் அருணாசலக் கவிராயர். தாயார் விசாலாட்சி. இந்த தம்பதிகளுக்கு 6 குழந்தைகள். இவர்களில் 4வதாகப் பிறந்தவர் கல்யாண சுந்தரம். மூத்தவர் கணபதி சுந்தரம். உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அண்ணன் கணபதி சுந்தரத்துடன் கல்யாண சுந்தரம் அரிச்சுவடி பயின்றார். அதோடு பள்ளிப்படிப்பு முடிந்தது. 2 ஆம் வகுப்புக்கு பிறகு பள்ளிக்கு போகவில்லை. அண்ணனிடமே சில ஆண்டுகள் அடிப்படைக் கல்வியையும், நாட்டு நடப்புகளையும் கற்றார்.

தந்தை அருணாசல கவிராயர் கவிதை எழுதும் ஆற்றல் உடையவர். தந்தையைப் போலவே கணபதிசுந்தரமும் கவிதை பாடுவதில் வல்லவர். சிறந்த ஓவியராகவும் விளங்கினார். அத்தகைய அண்ணனின் அரவணைப்பில் வளர்ந்த கல்யாண சுந்தரம் தினமும் கவிதை புனையும் ஆற்றல் இயல்பாகவே அமைந்துவிட்டது.

இளம் வயதிலேயே, பாடல்களைப் பாடுவதில் கல்யாணசுந்தரம் ஆர்வமாக இருந்தார். நாடகம் பார்ப்பது, சினிமா பார்ப்பது, பிறகு பார்த்துவிட்டு வந்தவற்றில் கேட்ட பாடல்களை வரி பிசகாமல் பாடிக்கொண்டிருப்பது கல்யாண சுந்தரத்தின் விருப்பமான பொழுது போக்காக இருந்தது. பொது நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தார்.

பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளும் கம்யூனிசக் கொள்கைகளும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. இதனைத் தொடர்ந்து இளம் வயதிலேயே மேடைப் பாடகரானார். கம்யூனிஸ்டு கட்சி கூட்டங்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும் பாட்டுக்கட்டிப் பாடுவது அவரது பணிகள்.

நல்லதைச் சொன்னா நாத்திகனா?’ இதுதான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் முதல் பாடலாகும். இதை எழுதி அண்ணன் கணபதி சுந்தரத்திடம் காட்டி அவரது பாராட்டை பெற்றார். பகுத்தறிவு பாடல்களை பாடுவதில் திறமை பெற்றிருந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அதிராம்பட்டணத்தில் தி. மு. க. மேடையில் ஏறி பாடி இருக்கிறார்.

சினிமா சிந்தனை மேலோங்க கல்யாணசுந்தரம் கிளம்பி சென்னைக்கு வந்தார். அக்காலத்தில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த டி. எஸ். துரைராஜ் சேலம் மாடர்ன் தியேட்டர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். நாங்கள் எல்லாம் நாடகத்தில் நடித்துவிட்டுத்தான் சினிமாவுக்கு வந்தோம். நீயும் முதலில் நாடகம் நடித்துவிட்டுப் பின்பு சினிமாவுக்கு வருவதுதான் சிறந்ததுஎன்று டி. எஸ். துரைராஜ் ஆலோசனை கூறியதோடு சிபாரிசு கடிதம் கொடுத்து சக்தி நாடக சபாவுக்கு அனுப்பி வைத்தார்.

முதலில் நாடகத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு தரவில்லை. நாடக சபாவுக்கான ஆயத்த வேலைகளையே செய்துவந்தார். பின்னர் அவரது குட்டிக் கதைகளையும், பாடல் திறமையையும் அறிந்ததால், நடிக்க வாய்ப்பு கொடுத்தனர். என் தங்கை’, ‘கவியின் கனவுஆகிய நாடகங்களில் நடித்தார்.

கவியின் கனவுநாடகத்தில் முக்கியமான ராஜகுரு வேடமேற்கு நடித்து வந்த எம். என். நம்பியார் சபாவில் இருந்து விலகி விட்டதால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கல்யாணசுந்தரத்துக்கு கிடைத்தது. அந்த கதாபாத்திரம் அவருக்கு புகழைத் தேடிக்கொடுத்தது. அப்போது ‘ஏ. கே. சுந்தரம்என்றே அழைக்கப்பட்டார்.

1954 ஆம் ஆண்டில் டி. கே. பாலசந்திரன் தயாரித்தகண்ணின் மணிகள்என்ற நாடகத்தில் கல்யாணசுந்தரம் பொலிஸ்காரர் வேடமேற்று நடித்தார். அந்த நாடகத்தில் அவர் எழுதிய, ‘தேனாறு பாயுது.

செங்கதிரும் சாயுது - ஆனால் மக்கள் வயிறு காயுதுஎன்ற பாடல் பிரபலமானது. இந்த பாட்டுத்தான் பின்னர் சில புதிய கருத்துக்களோடுஒன்றுபட்டால் உண்டு வாழ்வுசினிமாப் படத்திலும் இடம்பெற்றது.

பிறகு புதுச்சேரி சென்று தனது மானசீக குருவான பாரதிதாசனை சந்தித்தார். ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்த கல்யாண சுந்தரத்தை அவர் தன்னுடன் தங்கி இருந்துகுயில்ஏட்டை வெளியிடும் பணியில் ஈடுபடுமாறு கூறினார். அதன்படியே பாரதிதாசனின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

அந்த சமயத்தில் பாரதிதாசன் எழுதும் கவிதைகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சமூகப் பார்வையை கூர்மைப்படுத்தியது எனலாம். பாரதிதாசனிடம் மாணவராக இருந்து கவிதை இலக்கணங்களை கற்றுக்கொண்டார். பல நல்ல கவிதைகளை எழுதி பாராட்டும் பெற்றார். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திற்கு வசனம், பாடல் எழுதும் பணியில் பாரதிதாசன் ஈடுபட்டிருந்தார். கல்யாண சுந்தரத்தையும் பாட்டு எழுதுவதற்காக அங்கு அழைத்துச் சென்றார்.

அந்த சந்தர்ப்பத்தில் மாடர்ன் தியேட்டர்சாருடன், பாரதிதாசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு திரும்பினார். உடனே அவரோடு கல்யாணசுந்தரமும் புறப்பட்டார். ஆனால் பாரதிதாசன், கல்யாணசுந்தரத்தை தட்டிக்கொடுத்துநீ முன்னேற வேண்டியவன் பொறுத்துக்கொண்டு இங்கேயே இருஎன்று சொல்லிவிட்டு போனார். குருவின் கட்டளையை ஏற்று கல்யாணசுந்தரம் சேலத்திலேயே தங்கி இருந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமா படங்களுக்கு பாடல் எழுதினார்.

இப்படி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதை வளர்ச்சிக்கும், திரைப்பட உலக பிரவேசத்துக்கும் துணையாக பாரதிதாசன் விளங்கியதால் தன்னுடைய கவிதை, கடிதம் எதுவாக இருந்தாலும் முதலில்பாரதிதாசன் துணைஎன்று எழுதும் வழக்கத்தை கையாண்டார். சில பாடல் எழுதும் போதுவாழ்க பாரதிதாசன்என்றும் எழுதி இருக்கிறார். 1950 ஆம் ஆண்டுவாக்கில் சினிமாவுக்கு பாட்டெழுதுவதில் கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயணகவி போன்றோர் பிரபலமாக இருந்தார்கள்.

அந்த காலகட்டத்திலேயே கல்யாண சுந்தரமும் நுழைந்தார். 1954ல் கல்யாணசுந்தரம்படித்த பெண்என்றனது. இதனால் அவர் பாடல் எழுதி முதலில் வெளிவந்த படம்மகேஸ்வரிஎன்பதாகும். இந்தப் படம் 13.11.1955ல் வெளிவந்தது. அதற்கு அடுத்து 20.04.1956ல் ‘படித்த பெண்வெளிவந்தது. மகேஸ்வரி படத்தில் கல்யாண சுந்தரம் எழுதிய பாடல்:

அறம்காத்த தேவியே, குலம் காத்த தேவியே! நல் அறிவின் உருவமான சோதியே கண் பார்த்து அருள்வாயே அன்னையே! அன்னையே! என்பதாகும். 1956 ஆம் ஆண்டில் வெளிவந்தபாசவலை’, ‘ரங்கோன் ராதா’, ‘மர்மவீரன்போன்ற படங்களுக்கு பாடல் எழுதினார். பின்னர் 1957, 58 ஆம் ஆண்டுகளில் எம். ஜி. ஆர்., சிவாஜிகணேசன் நடித்த படங்களிலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் இடம்பெறத் தொடங்கின. சுமார் 6 ஆண்டு காலத்தில் 57 சினிமாப் படங்களுக்கு 186 பாடல்களை எழுதினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com