Contact us at: sooddram@gmail.com

 

அகதிகளை வரவேற்கிறதா ஆஸ்திரேலியா?

தப்ப முயன்ற ஈழத் தமிழர்கள்

சொந்த நாட்டை, வீட்டை, உறவுகளை இழந்து உயிருக்குப் பயந்து ஓடிவந்த இலங்கை அகதிகளின் வாழ்க்கை, எத்தனை மோசமாக இருக்கிறது என்று வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது சமீபத்திய சம்பவம்

கடந்த 17-ம் தேதி, சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் மூன்று வேன்களில் சென்ற 61 ஈழத் தமிழர்களை வளைத்துப் பிடித்திருக்கிறார்கள், கியூ பிராஞ்ச் போலீஸார். இவர்கள் அனைவரும் தமிழத்தில் உள்ள பல்வேறு இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர்கள். புரோக்கர்கள் கொடுத்த நம்பிக்கையில், திருட்டுத்தனமாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற நேரத்தில்தான் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்களை அங்கு கொண்டு போய்ச் சேர்ப்பதாகக் கூறி, பணம் வசூல் செய்த நான்கு புரோக்கர்களையும் கைது செய்துள்ளது போலீஸ்.

இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்து சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கும்மிடிப்பூண்டி, ஈரோடு, புதுவை, கரூர், திருச்சி எனப் பல்வேறு இடங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு அரசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சில வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன. திறந்தவெளி முகாம் எனப்படும் இந்த முகாமில் இருப்பவர்கள், வேலைக்குச் செல்லவும் பிற இடங் களுக்குச் சென்று வரவும் அனுமதி தரப்பட்டு உள்ளது. இவர்களில் வழக்குகளில் சிக்கி உள்ள சிலர் மட்டும் சிறைக்கு நிகரான கட்டுப்பாடுகள் கொண்ட பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளளர்.

இப்போது போலீஸிடம் சிக்கி இருக்கும் 61 பேரும் பல்வேறு திறந்தவெளி முகாம்களில் தங்கி இருந்தவர்கள்தான். ''இவர்கள் முகாம் அதிகாரிகளின் அனுமதி இன்றி கடந்த 17-ம் தேதி அன்று முகாம்களில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சுற்றுலா செல்வது போல் கிளம்பி இருக்கிறார்கள். புரோக்கர்களிடம் முன்னரே பேசி வைத்தபடி இரண்டு குழுவாக வேளாங்கண்ணி மற்றும் கன்னியாகுமரி சென்று அங்கிருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டம் போட்டு இருந்தனர். எங் களுக்குத் தகவல் கிடைத்ததன் அடிப்படையில் ஊரப்பாக்கம் அருகே வேன்களில் வந்தவர்களை வழிமறித்துப் பிடித்து, அனைவரையும் எங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டோம்'' என்றனர் போலீஸார்.

காஞ்சிபுரம் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு இருந்த ஈழத் தமிழர்களைச் சந்தித்தோம். ''எங்களை போட்டோ பிடிச்சுப் போட்டு என்னப் செய்யப்போறீங்க... நாளைக்கு காலையில் எங்களுக்கு சுதந்திரம் கிடைச்சிடுமா?'' என்று விரக்தியுடன் பேச மறுத்தனர். போலீஸில் பிடிபட்ட அவமானத்தில் பலரும் முகத்தைக் காட்ட விரும்பாமல் திருப்பிக்கொண்டனர்.

ஆஸ்திரேலியா கொண்டு சேர்ப்பதாகச் சொல்லி இவர்களிடம் பணம் கறந்த பாமினி என்ற நகுலன், சின்னத்தம்பி, சசிகுமார், வின்சென்ட் என்ற நான்கு ஏஜென்ட்களையும் கைது செய்திருக்கிறது காவல் துறை. இவர்களுக்கு மூளையாகச் செயல்பட்ட காளிதாஸ் என்பவரைத் தேடி வருகிறார்கள். விசாரணை செய்த போலீஸார், ஆவணங்களை சரிபார்த்த பிறகு அகதிகளை மீண்டும் அவர்களது முகாம்களுக்கே திருப்பி அனுப்பி உள்ளனர்.

''கைது செய்யப்பட்ட நால்வரும் அகதி முகாம்களைச் சேர்ந்தவங்கதான். பல இடங்களிலும் இருக்கிற அகதிகளிடம் பேசி, பழக்கத்தை ஏற்படுத்திக்கிட்டு,  'ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிப் போனா நிம்மதியா வாழலாம்’னு கேன்வாஸ் செய்து இருக்காங்க. ஆஸ்திரேலியாவுக்கு அழைச்சுட்டுப் போறதுக்காக பணம் வசூல் செஞ்சு இருக்காங்க. 17-ம் தேதி தப்பிச் செல்வதற்கு நாளும் குறிச்சி இருக்காங்க. இந்த விவரங்கள் எப்படியோ கசியவே, மேல்அதிகாரிகள் எங்களை அலெர்ட் செஞ்சாங்க. வண்டலூரில் இருந்து கூடுவாஞ்சேரி போற வழியில் எல்லா வாகனங்களையும் நிதானமாக சோதனை செய்தோம். தப்பிக்க முடியாமல் மாட்டிக்கிட்டாங்க. நாங்க கைது செய்யாமல் இருந்திருந்தால், நிச்சயமாக இவர்கள் ஏமாந்துதான் போயிருப்பார்கள். திருட்டுத் தோணியில் ஏறிப்போய் நடுவழியில் உயிரை விட்டிருப்பார்கள். இப்போது, ஆஸ்திரேலியாவிலும் அதிகமான கட்டுப்பாடுகள் இருப்பதால், ஈழத் தமிழர்கள் தப்பி ஓட முயற்சிப்பது நல்லதல்ல'' என்றார் அகதிகளைப் பிடித்த தனிப்படையைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர்.

அகதிகள் முகாமில் இருப்பவர்கள் திருட்டுத்தனமாக ஆஸ்திரேலியாவுக்குச் தப்பிச் செல்ல முயற்சிக்கிறார்கள் என்றால், இங்கே அவர்களுக்கு அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளும் கொடுமையும் இருப்பதாகத்தானே அர்த்தம்? கொடுமை தாங்காமல் இலங்கையில் இருந்து அபயம் கேட்டு வந்தவர்களைத் தமிழ்நாடும் வஞ்சிக்கக் கூடாது. ஆஸ்திரேலியாவில் அவர்கள் எதிர்பார்க்கும் சுதந்திரத்தையும், நிம்மதியையும் தமிழகம் தர வேண்டும்.

- எஸ்.கிருபாகரன்

(நன்றி: விகடன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com