Contact us at: sooddram@gmail.com

 

வளர்ந்து வரும் இனவாத வன்மம்!

னசாட்சியைத் தட்டி எழுப்பும் கேள்விகள் யாரிடம் இருந்து வேண்டுமானாலும் வரலாம். ''ஒரு மாதமாக அஸ்ஸாம் பற்றி எரிகிறது. கிராமங்கள் எல்லாம் சுடுகாடு ஆக்கப்பட்டு, நான்கு லட்சம் மக்கள் முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஏன் உங்கள் யாருக்கும் உறைக்கவில்லை'' என்று கேட்கிறார் வீரேந்தர். அஸ்ஸாம் கலவரத்தின் தொடர்ச்சியாக, வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று பரவிய வதந்தியால் அலறி அடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு ரயில் பிடித்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவர் வீரேந்தர். அஸ்ஸாமின் ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதியுமான பக்ருதீன் அஜ்மல் சொல்வதுபோல, ''அஸ்ஸாமில் என்ன நடக்கிறது என்றும், இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்றும் கவலைப்பட இந்தியா விரும்பவில்லை'' என்பதுதான் உண்மை

அஸ்ஸாமில் நடக்கும் இனக் கலவரங்கள்பற்றி பெரும்பான்மை இந்தியர்களின் கருத்து என்ன? ''அஸ்ஸாமில் கொல்லப்படுவது வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாகக் குடியேறும் முஸ்லிம்கள். இந்திய அரசும் அஸ்ஸாம் மாநில அரசும் ஓட்டு அரசியலுக்காக இந்தச் சட்ட விரோதக் குடியேற்றத்தை வேடிக்கை பார்த்தன. இப்போது மாநிலத்தில் கிட் டத்தட்ட 20 சதவிகிதத்தினர் என்ற அளவுக்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து, அரசியல் ரீதியாகவும் பலம் பெற்றுவிட்டனர். உள்ளூர் மக் களுக்கு அவர்கள் போட்டியாகிவிட்டதாலேயே, இந்த மோதல்கள் நடக்கின்றன.''

சரி, இங்கே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்வோம்... வங்கதேச முஸ்லிம்களின் சட்ட விரோதக் குடியேற்றம் தடுக்கப்பட வேண்டியது என்பது சரி. ஆனால், சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்பதாலேயே அவர்களைக் கொல்வது நியாயமாகி விடுமா? குடியேறிகளின் மீதான வன்முறைதான் இந்தப் பிரச்னைக்கான தீர்வா?

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய இனக்கலவரங்களில் ஒன்று இப்போது அஸ்ஸாமில் நடந்துகொண்டிருக்கும் கலவரம். இந்தக் கலவரங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முந்தைய கலவரங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கலாம். ஆனால், முந்தைய கலவரங்களின் நோக்கம் ஆட்களைக் கொல்வது. இந்தக் கலவரத்தின் நோக்கம் துரத்தி அடிப்பது. வீடுகளில் உள்ள பொருட்களைக் கொள்ளையடித்துவிட்டு, எரித்துவிட்டுச் செல்லும் உத்தியையே எல்லா இடங்களிலும் போடோக்கள் கையாள்கிறார்கள் என்கின்றனர் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள். 'கலவரத்தின்போது வெளியேறிய முஸ்லிம்கள் மீண்டும் குடியேற அனுமதிக்க மாட்டோம்என்ற போடோலாந்து பிரதேச ஆணையத்தின் துணைத் தலைவர் காம்பா போர்கோயுரியின் கொக்கரிப்பு இதை உறுதிசெய்கிறது.

அஸ்ஸாமில் வங்கதேச முஸ்லிம்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையேயான பகை இப்போது உருவானது அல்ல. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தில் இருந்தே அஸ்ஸாமில் முஸ்லிம்கள் குடியேற்றம் நடந்துகொண்டு இருக்கிறது. வங்கதேச சுதந்திரத்துக்குப் பின் அது அதிகமானது. 1980-களில் அஸ்ஸாம் மாணவர் சங்கம் அரசியல் ரீதியாக வலுவான அமைப்பாக உருவெடுத்ததற்கு முஸ்லிம்கள் மீதான உள்ளூர் மக்களின் எதிர்ப்பு உணர்வும் முக்கியமான காரணம். 1983 ஜூலை 18 அன்று நாகோவான் மாவட்டத்தில் நடந்த நெல்லிப் இனப்படுகொலையில் 6 மணி நேரத்துக்குள் 2,191 பேர் கொல்லப்பட்டதில் அஸ்ஸாம் மாணவர் சங்கத்துக்கு முக்கியப் பங்கு இருந்தது. பின்னாளில், ராஜீவ் காந்தி அரசு, கொலையாளிகள் தரப்போடு சமரசம் செய்துகொண்டது; நெல்லிப் படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. குற்றவாளிகள் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றினர். இப்போது இருபது ஆண்டுகளாகும் நிலையிலும், எந்தவிதமான மாற்றமும் முன்னேற்றமும் இல்லை என்பதற்கு அரசைத் தவிர வேறு யாரைக் குற்றம்சாட்ட முடியும்?

அஸ்ஸாம் கலவரங்கள் அஸ்ஸாமைத் தாண்டியும் இந்தியாவுக்கு உணர்த்தும் முக்கியமான இரு செய்திகள் உண்டு. ஒன்று, பிழைப்புக்காக நாட்டுக்குள்ளேயும் நாட்டுக்கு வெளியில் இருந்தும் நடக்கும் குடியேற்றங்கள் இனரீதியான வன்மத்தை நம் மக்களிடையே மௌனமாக வளர்த்துக் கொண்டிருப்பது. மற்றொன்று, இனக்கலவரங்களுக்கு இடையேதான் சுதந்திரம் கிடைத்தது என்பதாலேயோ என்னவோ, இனக்கலவரங்களை சர்வ சுதந்திரமாக நடத்த வாய்ப்புள்ள நாடாக இந்தியா தொடர்வது!

1969 அகமதாபாத் கலவரம், 1984 டெல்லி கலவரம், 1987 மலியானா கலவரம், 1989 பகல்பூர் கலவரம், 1990 மும்பை கலவரம், 1991 பெங்களூரு கலவரம், 2002 குஜராத் கலவரம், 2008 கந்தமால் கலவரம்...  படுகொலைகள் தொடர்கின்றன. ஆனால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே இல்லை. விசித்திரமாக, அவர்கள் பிரபலம் அடைந்து... மேலும் அதிகாரம் மிக்கவர்களாகி விடுகிறார்கள். இந்தியா ஒரு பாதுகாப்பான நாடு என்றும் இந்தியர்கள் நல்லிணக்கவாதிகள் என்றும் சொல்லிக்கொண்டே - இனப்படுகொலைகளின் நடுவே - நம்முடைய சுதந்திரத்தைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம் நாம்!

- சமஸ்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com