Contact us at: sooddram@gmail.com

 

மனித உரிமை மீறல் -மறுசிந்தனை தேவை

(தே.லட்சுமணன்)

இக்வாஜா யூனூஸ் என்ற இஸ் லாமிய இளைஞன், ஒரு கம்ப்யூட்டர் இன் ஜினியர். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந் தவன். ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது காட்கோபார் குண்டு வெடிப்பில் குற்றவாளியாகக் கருதப்பட்டு சிறைபிடிக் கப்பட்டவன். 27 வயதான அந்த இளை ஞன் ஆயிஷா பேகம் என்ற தாய்க்கு ஒரே மகன். குண்டு வெடிப்பு குற்றவாளியாக மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால், வேதனை யோடு மனம் வெந்துக்கொண்டிருந்த தாய்க்கு மேலும் வேறொரு இடி. அதாவது சிறைபிடிக்கப்பட்ட சில நாட்களில் போலீஸ் காவலிலிருந்து அவன் தப்பி விட்டதாகவும், அவனை மீண்டும் கைது செய்ய போலீஸ் தீவிரமாக தேடுவதாகவும் தகவல். இந்தத் தகவல் தாய்க்குப் பிடிபடவில்லை. சந்தேகம் வலுத்தது. இது போலீஸ் பரப்பும் பொய்ச்செய்தி, ஏதோ என் மகனுக்கு போலீசாரால் அநீதி நடந்திருக்க வேண்டும் எனத் தாய் உறுதி யாக நம்பினார். தாயின் விடாமுயற்சியால் புகார் பட்டியல், நீதிமன்றம், விசாரணை என விஷயம் சூடுபிடித்துவிட்டது. மிகிர் தேசாய்எனும் வழக்குரைஞர் அந்தத் தாயின் வேகத்துக்கு ஒத்துழைத்து மிகவும் சிரமப்பட்டு வழக்குக்கும், விசாரணைக் கும் உதவினார்.

விசாரணையில் விபரீதம் வெளிச்சத் துக்கு வந்தது. யூனுசுடன் கைது செய்யப் பட்ட சக கைதி, மாட்டின் நீதிமன்றத்தில் தைரியமாக சாட்சி சொன்னான்.

போலீஸ்காரர்கள் மிகக் கடுமையாக அடித்து, உதைத்து சித்ரவதை செய்தார் கள்; அதன் விளைவாக போலீஸ் கஸ்டடி யிலேயே யூனூஸ் இறந்துபோனான் என்று சாட்சியம் அளித்தான். சாட்சியும் உறுதி யாக இருந்தது.

போலீஸ்தான் அவன் சடலத்தை ரக சியமாக வெளியில் கடத்தி ஒளித்து விட்டு, தப்பித்துப் போனதாக பொய்ப் பிரச் சாரம் செய்தது. இது பட்டவர்த்தனமாக நிரூபணமானது. தாய் ஆயிஷா பேகம் கொஞ்சம்கூட சலிப்பில்லாமல் நீதிமன் றத்தில் நியாயம் கிடைக்கின்ற வரையில் ஓயவில்லை.

மாநில அரசு, இஸ்லாமிய வாலிபன் இக்வாஜா யூனூஸ் காவல் நிலையத்தில் தான் இறந்துபோனான் என்பதை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து நடந்த வழக்கில் யூனூஸ் கொல்லப்பட்ட விஷயத்தை எட்டு ஆண்டுகள் வரை இழுத்தடித்த அரசு, 2008ஆம் ஆண்டு அவன் போலீசாரால் கொல்லப்பட்டு விட்டதை ஏற்றுக்கொண்டு, ரூ.3 லட்சம் நஷ்ட ஈடாக அந்தத் தாய்க்குத் தர ஒப்பியது.

மகனை இழந்த அந்தத் தாய் இந்த பிச்சை எனக்கு வேண்டாம் என மறுத் தார். ஆனால், மும்பை நீதிமன்றம் இந்த வழக்கின் துயரத்தை வேறுவகையான துலாக்கோல் வைத்து சீர்தூக்கிப் பார்த் தது.

தாய்க்கு இருந்தது ஒரே மகன். 27 வயதை முடித்தவன். மேலும் அவன் பெரும்பகுதி வாழ வேண்டியவன். அவன் இழப்பால் தாய்க்கு ஏற்பட்ட மன வேதனை மிகக் கொடுமையானது. மேலும் மகன் சித்ரவதை செய்து சாக டிக்கப்பட்டதும், மறைக்கப்பட்ட நிகழ்வு களும் வர்ணிக்க முடியாத துயரங்கள். எனவே அரசு கொடுக்க முன்வந்த நஷ்ட ஈடு ரூ.3 லட்சம் என்பது மிகக் குறைவு. ஆகவே ரூ.20 லட்சத்தை நஷ்ட ஈடாக எட்டு வாரத்திற்குள் அரசு தரவேண்டும் என தீர்ப்பு வழங்கியது. பத்தாண்டுகள் நடந்த தொடர்முயற்சியால் கிடைத்த நஷ்ட ஈடு இது.

ஆனால் தீர்ப்பு வந்து எட்டுவாரம் கழிந்த பின்னும் அரசு ரூ.20 லட்சம் நஷ்ட ஈட்டை தர முன்வரவில்லை. பலர் அந்தத் தாயை வற்புறுத்தியதின்பேரில் மீண்டும் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வில்லை என்று கூறி, தாய் நீதிமன்றம் ஏகி யுள்ளார். அரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாது காலத்தை ஓட்ட இய லாது. ஆனால் யூனூஸ் கொலையில் ஈடு பட்ட 10 பேர் மீது வழக்கு பதிவாகி இருந் தாலும் மாநில போலீஸ் அதிகாரி நான்கு பேரை மட்டும் கைது செய்ய உத்தரவு இட் டிருக்கிறார். அதில், இன்ஸ்பெக்டர்வாஸ்என்பவரும் அடங்குவார். இந்த விஷயத்தில் மராட்டிய மாநில போலீஸ் துறை ஆமைவேகத்தில் நகர்கிறது.

இந்தியாவில் மனித உரிமை மீறப்படு வது என்பது, குறிப்பாக இஸ்லாமியர்கள் மீது அத்துமீறியவகையில் மனிதஉரிமை மீறப்படுகிறது என்பது வெள்ளிடைமலை. மேலே குறிப்பிட்டுள்ள யூனூஸ் பற்றிய செய்தி நாட்டில் நடக்கும் அட்டூழியங் களில் சிறுதுளி.

இதே மராட்டிய மாநிலத்தில் உள்ள 15 சிறைச்சாலைகளில் அடைக்கப்பட் டுள்ள இஸ்லாமியர்கள் படும் இம்சை களை அறிகிறபோது மனம் பதைக்கிறது. நாம் பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள், அது பெரும்பான்மை பயங்கரவாதம் என் றாலும், சிறுபான்மை பயங்கரவாதம் என்றாலும் இரண்டையும் எதிர்க்கிறோம். ஆனால் இதை அணுகும் முறையில் ஒரு தலைப்பட்சமாக அரசு அணுகக் கூடாது. அதிகாரிகள் தவறக் கூடாது. காவல் துறை மீறக் கூடாது என்பதுதான்.

மகாராஷ்டிராவில் உள்ள 15 சிறைச் சாலைகளில் மொத்தம் 3000 இஸ்லாமி யர்கள் உள்ளார்கள். அவர்களில் 70 சத வீதம் பேர் விசாரணைக் கைதிகள், 30 சத வீதம் பேர் தண்டிக்கப்பட்டவர்கள். இஸ் லாமிய கைதிகளில் 52.8 சதவீதம் பேர் கொலை செய்தவர்கள், கொலைக்கு முயற்சித்தவர்கள், பாலியல் பலாத்காரத் தில் ஈடுபட்டவர்கள், ஆள் கடத்தியவர் கள், பிறரை தாக்கியவர்கள் என்றுதான் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. பாம்வைத்தவர்கள், பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் என்று இல்லை.

விசாரணைக் கைதிகளில் 47.4 சத வீதம் பேர் மீதுதான் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது. 3.8 சதவீதம் பேர் தீர்ப்பு வழங்கப்படும் நிலைக்கு நெருங்கியுள்ளார்கள். ஆகவே வழக்குகள் ஆமை வேகத்தில் நகர்கின்றன.

சச்சார் கமிட்டி அறிக்கையிலேயே கூட இதுபற்றி ஓர் அரிய தகவல் உண்டு. மகாராஷ்டிராவில் உள்ள இஸ்லாமிய மக்கள் தொகை 10.6 சதவீதம் என்றால், சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் 32.4 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் கூட சோக வர லாறு இதேபோலத்தான். இஸ்லாமிய மக் கள் தொகையைவிட சிறைச்சாலையில் அதிக சதவீதத்தில் இஸ்லாமியர்கள் உள் ளார்கள். (சிறைச்சாலைகளில் உள்ள மொத்த கைதிகளில்)

சச்சார் அறிக்கைப்படி கணக்கு எடுத்த 8 மாநிலங்களில் சிறையில் உள்ள மொத்த இஸ்லாமியர்கள் 23.4 சதவீதமாம். இவர்கள் எந்தெந்த குற்றங்களில் சிக்கி யுள்ளார்கள் என்று தெரியவில்லை என் றாலும், பெரும்பாலும் நிச்சயமாக பயங்கர வாத வழக்கில் சிக்கியவர்கள் அல்லர் என்று அடித்து பேசுகிறது.

மாநிலம்,  இஸ்லாமியர் மக்கள் தொகை,
சிறைச்சாலையில் உள்ள இஸ்லாமியர்கள்.

குஜராத்     10.6%                                      25%.

தமிழ்நாடு  5.6%                                         9.6%.
கர்நாடகா 12.23%                                      17.5%.

தில்லி       11.7%                                         29%.

அசாம்       30.9%                                         28%.

இஸ்லாமியர்களுக்கு சொந்தமாக நிலம் உள்ள சதவீதத்தைவிட, கல்வி அறிவுபெற்ற சதவீதத்தைவிட, வேலை பெற்றுள்ள சதவீதத்தைவிட, இதற்கு நேர் மாறாக சிறையில் உள்ள இஸ்லாமியர் களின் சதவீத எண்ணிக்கை அதிகமாக உள்ளது மிக மிக கொடிய நிலை.

அண்மையில் சென்னையில், நெல் லையில், கோவையில் இஸ்லாமிய சகோ தரிகள் அணிதிரண்டு, சிறையில் வாடும் இஸ்லாமிய இளைஞர்களை, குறிப்பாக 7 ஆண்டுகள் முடிந்து, சிறையிலிருக்கும் 49 இஸ்லாமியர்களை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யக் கோரி ஆர்ப் பாட்டம் நடத்தியுள்ளார்கள். தாய், மனைவி, சகோதரி என இஸ்லாமிய தாய் மார்கள், சிறைகளில் வாடும் முஸ்லிம் இளைஞர்களின் வாழ்நாள், எதிர்காலம், பிழைப்பு வீணாகிப் போகிறதே என ஏங்கு கிறார்கள்.

அண்ணாவின் நூற்றாண்டு நினைவு நாளில் 15.09.2009 அன்று தடை செய்யப் பட்ட அல்-உம்மா அமைப்பைச் சேர்ந்த 10 ஆண்டு சிறைவாழ்வை முடித்தவர் களை தமிழ்நாடு அரசு விடுதலை செய் தது நினைவுக்கு வருகிறது.

தமிழ்நாடு அரசு ஒரு ஆய்வுக்குழுவை அமைத்து, தமிழகத்தில் சிறைகளில் உள்ள இஸ்லாமியர்களின் வழக்கு ரீதி யான விவரங்களை எடுத்து ஆய்ந்து, வழக்குகளின் அடிப்படையில் வழக்கு களை விரைந்து நடத்துவது, பிற ஆதாரம் இல்லாத சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் இஸ்லாமியர்களை விடுதலை செய்வது என முடிவு எடுக்க வேண்டும்.

1998ஆம் ஆண்டில் கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் நாசர் மதானி 9 ஆண்டுகள் சிறையில் கிடந்தார். வயது முதிர்ந்தவர், நோயாளி, சர்க்கரை பாதிப் பில் ஒருகால் துண்டிக்கப்பட்டவர். கடை சியில் அவர் மீதுள்ள குற்றம் நிரூபணமா காதக் காரணத்தால் விடுதலை செய்யப் பட்டார். 9 ஆண்டுகள் சிறையில் அடைத்து வைத்தவர்கள் பொறுப்பேற்பார்களா? இந் தியாவில் இதுபோல் நிருபணமாகாமல் எத்தனையோ இஸ்லாமியர்கள் மாதக் கணக்கில், ஆண்டுக் கணக் கில் சிறை யில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள் ளார்கள். ஆனால் வினோதம் என்னவென் றால் 9 ஆண்டுகள் சிறையி லிருந்து விடு தலையான மதானி, மீண்டும் பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்படுத் தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். கடைசியாக சச்சார் கமிஷன் சொன்ன ஒரு சரியான மதிப்பீட்டை இங்கு குறிப் பிடுவது சாலவும் பொருந்தும்.

சிறுபான்மையினருக்கு தாங்கள் ஒடுக்கப்படுவதாகவே ஓர் எண்ணம் உள் ளது. அந்த
எண்ணம் மாற்றப்பட ஏற்பாடு இல்லையெனில் அவர்கள் தேசிய நீரோட் டத்தில் இணைவது சிரமமே!”

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com