Contact us at: sooddram@gmail.com

 

EPRLF புறக்கணிக்கப் பட்டது அனைத்து புத்திஜீவிகள் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட மாகாண சபைத் தேர்தலில் பல அதிர்ச்சிகரமான அறுவை சிகிச்சைகளும், புறக்கணிப்புக்களும், வெளியேற்றங்களும், உள்நுழைவுகளும் அரங்கேறியுள்ளன. அவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதன்மை வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனின் தெரிவு மிகப் பொருத்தமானதாகவும், தமிழ் மக்களுக்கு வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ள அதேவேளையில் இலங்கை அரசிற்கு மீளமுடியாத மின்சார அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயம் கூட்டமைப்பு எனக் கூறிக் கொள்ளும் குழுக்களுக்கு ஜீரணிக்க முடியா விட்டாலும் கூட எதிர்க்க திரணியற்ற நிலையில் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் பட்டனர் என்று தான் கூற வேண்டும்.

இதைவிட ஒவ்வொரு கட்சியின் உள்ளேயும் வேட்பாளர் தெரிவில் பலத்த முரண்பாடுகளும், சர்ச்சைகளும் ஏற்பட்டிருந்தன. இவற்றின் பிரதிபலிப்பாக உண்ணாவிரதப் போராட்டங்கள் வரை இவை நீண்டு சென்றிருந்தன.

இவை பெரும்பாலான கட்சித் தலைமையும் தமது உறுப்பினர்களோடு கலந்துரையாடாமல் தன்னிச்சையான முடிவை எடுத்ததன் விளைவையே வெளிப்படுத்தி நிற்கின்றன.

இவை ஒரு புறமிருக்க கூட்டமைப்போடு அனைத்து நிகழ்வுகள், போராட்டங்கள் என்பவற்றில் அன்னியோன்னியமாக செயற்பட்டு வந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணி கூட்டமைப்போடு இணைந்து செயற்பட தயாராக இருந்த நிலையிலும் எவ்வித காரணமும் இன்றி புறக்கணிக்கப் பட்டது அனைத்து புத்திஜீவிகள் மத்தியிலும  ிசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களுக்கு ஐக்கியத்தையும், வடகிழக்கு இணைப்பையும், சுயநிர்ணயம், போன்ற பதங்களோடு ஒன்றுபட்ட தமிழ்த் தேசியம் என்ற நோக்கிலே செயற்படுவதாக கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகுதி நிறைந்த தமிழ் கட்சிகளை இணைப்பதற்கான நிலையை தொடர்ந்தும் புறக்கணித்து வருவதன் உள்நோக்கம், பின்னணி என்ன? என்ற வினா எழுவது இயல்பானதே. ஆகவே இதன் பின்னணி பற்றி ஆராய்வது இன்றியமையாததாகும்.

ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணியைப் பொறுத்தவரை இந்திய இராணுவம் வெளியேறியது முதல் அரசியல் நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலம் இடைநிறுத்தி இருந்தது. இதற்கு புலிகளின் தாக்குதல்களும், சுரேஷ் அணியினரோடு ஏற்பட்ட கட்சி முரண்பாடும், சுரேஷ் அணியினரின் கொலைபோக்கும் காரணமாக அமைந்தது எனவும் கூறலாம்.

ஆயினும் குறிப்பிட்ட காலங்களின் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணி தனது அரசியல் செயற்பாட்டை ஆரம்பித்திருந்தது. இந்த அணியில் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தகுதி நிறைந்தவர்களாக விளங்கியமையை அனைவரும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். ஆயினும் சுரேஷ் குழுவினரின் வஞ்சகமான அரசியல் நகர்விற்கு முன் அவர்களால் முன்நகர முடியவில்லை.

உண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணி ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒப்பு நோக்கின் பத்மநாபா அணியினர் எந்தவேளையிலும் சோரம் போகாத அணியினர் என்பது அனைவருக்குமே வெளிச்சம்.

சுரேஷ் அணியினரைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கத்தோடும் இணைந்தும், மண்டயன் குழுவாக, விடுதலைப் புலிகளை எதிர்த்து பின்னர், இயலாத நிலையில் விடுதலைப் புலிகளின் காலடியிலும் மண்டியிட்டும் தமது நிலையற்ற தன்மையினையும், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறும் நிலையையும் வெளிப் படுத்தியிருந்தனர்.

இத்தகைய பண்புகளில் மட்டுமன்றி கல்வித் தராதரங்களிலும் சுரேஷ் பிரேமச்சந்திரனை விட வரதராஜப் பெருமாள் உயர்வானவராக காணப்படுவதோடு, பத்மநாபா அணி உறுப்பினர்களும், சுரேஷ் அணியினரை விட திறமை நிறைந்தவர்களாக காணப்படுவதும் சுரேஸ் பிரமச்சந்திரனுக்கு வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருக்கின்றது.

ஆகவே தான் ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியினர் கூட்டமைப்பிற்குள் எந்த வகையிலும் உட்பிரவேசித்து விடக்கூடாது என்பதில் சுரேஷ் கண்கொத்திப் பாம்பாக உள்ளார்.

இதனால் தான் ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணிச் செயலாளர் சிறிதரன் கூட்டமைப்புத் தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோரை சந்தித்து பலமுறை கலந்துரையாடிய போதும் அம்முயற்சி சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஆதிக்கத்தாலும், மிரட்டலாலும் கைகூடாமற் போனது.

அத்துடன் ஏனைய பங்காளிக் கட்சிகளான புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவை, ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணியினரை கூட்டமைப்பில் இணைப்பதற்கு விருப்பம் தெரிவித்ததாகவும், அம் முயற்சி  ுரேஷ் பிரேமச்சந்திரனின் அழுத்தம் காரணமாக கைவிடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

அதேபோன்று மாகாண சபைத் தேர்தலில் தமக்கு வழங்கப்பட்ட ஆசனங்களில் ஒன்றை ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணியினருக்கு வழங்க இவர்கள் முன்வந்த போதும் அம் முயற்சியும  ுரேஷ் பிரேமச்சந்திரனின் அழுத்தம் காரணமாக கைவிடப்பட்டதாகவும் அண்மைக்கால செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயினும் இத  பங்காளிக் கட்சிகளான புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சிகளின் இயலாமையையும், தம் மீது குற்றச்சாட்டுக்கள் வந்துவிடக் கூடாது என்பதற்காக வெளிவந்த வெறும் வாய் வார்த்தைகளாகவே இவற்றை கொள்ள வேண்டியுள்ளது.

இந் நிலையிலே தான் இறுதி நிலையில் ஈ.பி.டி.பி. வேட்பாளர்களோடு தமது வேட்பாளர்களை இணைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணி தள்ளப்பட்டது.

எது, எவ்வாறு, எப்படி இருப்பினும் தமிழ் மக்களின் ஒரு பிரதிநிதித்துவம் கூட்டமைப்பு எனக் கூறிக் கொள்பவர்களால் திசைமாறி திருப்பி விடப்பட்டுள்ளது. ஆயினும் சில இணையங்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபாஅணி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு இணைந்த  ிட்டதாக குறிப்பிட்டு வருகின்றன.

உண்மையில் ஈ.பி.டி.பி.கட்சிக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப் பட்ட ஆசனங்களில் ஓர் ஆசனத்தைத் தான் பத்மநாபா அணியினருக்கு ஈ.பி.டி.பி. வழங்கியுள்ளது என்பதே உண்மையாகும். எனினும் இவ் விடயம் சம்பந்தமாக ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தவோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபாஅணிச் செயலாளர் சிறிதரனோ (சுகுத்தோழர்) இதுவரை எந்த விடயங்களையும் பகிரங்கமாக பகிர்ந்து கொள்ளவில்லை.

முகநூல் பதிவுகளில் பெண்ணியவாதியாகவும், சமுக சேவையாளராகவும் மட்டுமே வெளிப்படுத்தப் பட்டாலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியின் செயலாளர் சிறிதரன் (சுகுத்தோழர்) அவர்களின் துணைவியாரான திருமதி.ஞானசக்தி (ஞானா) சிறிதரன் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த விடயமாகும். ஆயினும் இரண்டு அணியினரும  இத வெளிப்படுத்தாமல் பூசி மெழுகுவதற்கான காரணம் எதுவென அறிய முடியவில்லை.

எதுஎப்படி இருப்பினும், இம் மாற்றத்திற்கு சுரேஷ் முதற்காரணமாக இருந்தாலும் கிழக்கு மாகாணங்களில் சம்பந்தருக்கும் இடையூறாக வரலாம் என்ற நிலை தமிழரசுக் கட்சிக்கும் இருந்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியே ஆக வேண்டும்.

ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் சம்பந்தரின் செல்வாக்கும் குறைவடைந்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.கடந்த தேர்தலில் முன்றாவது நபராக வெற்றி ஈட்டிய அவருக்கு அண்மைக் காலங்களில் தனது இருப்பும் பறிபோய் விடுமோ என்ற அச்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாததே. எனவே சம்பந்தனுக்கும் பத்மநாபா அணியினர் கூட்டமைப்பினுள் உள்ளே பிரவேசிப்பது வேப்பங்காயாய் கசத்திருக்கவும் வாய்ப்புண்டு.

எனவே இரண்டு சாராருமே பத்மநாபா அணியை உள்ளே அனுமதிக்காமல் தடை போட்டு தமது இருப்பை தக்க வைக்க முயன்றிருக்கின்றார்கள் என்பது வெளிப் படையாகவே அனைவருக்கும் புலப்படுகின்றது. இச் செயற்பாடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மேலும் பலவீனப் படுத்துவதாகவே அமைய வாய்ப்புண்டு.

ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி ஆகிய அணிகளை புறக்கணிப்பதன் ஊடாக யாழ்ப்பாண, கிளிநொச்சி மாவட்டங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்க வேண்டிய பல ஆசனங்கள் பறிபோகப் போகின்றன.

இதை முற் கூட்டியே உணர்ந்திருந்தும் தமது சுயநலப் போக்கிற்கும், பதவி மீதுள்ள அளவு கடந்த ஆசையினாலும், இரண்டு கட்சிகளையும் புறந்தள்ள முற்பட்டுள்ளமையை எந்த தமிழ்மகன் தான் ஏற்றுக் கொள்வான்.

செய்வதையும் செய்து விட்டு தாம் தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று பறைசாற்றி தமது குற்றத்தை மறைக்க முற்படுவதுமுழுப் பூசணிக்காயை சோற்றிலே மறைப்பதை ஒப்பதாகவேகாணப்படுகின்றது.

இது இவ்வாறு இருக்க ஈ.பி.டி.பி கட்சி, பத்மநாபா அணியை ஒரு பிரசாரக்கருவியாகவே பாவிக்க முனையும். அத்துடன் தம்மை ஒரு ஜனநாயக சக்தியாகவும் வெளிப்படுத்திக் கொள்ளவும் பத்மநாபா அணியை கையாண்டாலும், பத்மநாபா அணியின் வெற்றிக்கு வழி விட்டுக் கொடுக்கும் என்பது சாத்தியமான விடயமாக அமையாது.

முடிந்தவரை தமது நற்பெயரை வலுப் படுத்திக் கொள்வதோடு தமது ஆதிக்கத்தை முடிந்தவரை தக்க வைக்கவே முயலும். அதற்காக பத்மநாபா அணியின் வெற்றியை வேரோடு பறித்தெடுக்கவே ஈ.பி.டி.பி கட்சி முயலும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

எனவே வெறுமனே தமிழ்த் தேசியம், கூட்டமைப்பு என்று கூறி தொடர்ந்தும் ஒரு குழுவினர  மட்டும் மக்களது பிரதிநிதிகளாக ஏமாற்றுவதை விடுத்தும், கூட்டு கட்சிகளிடையே விரோத உணர்வோடு செயற்படும் நிலையை கைவிட்டும், அனைத்து தகுதியுள்ள, தமிழ் கட்சிகளையும் இணைத்து ஒன்றுபட்டு தமிழ் மக்களுக்கான அரசியல் விடியலை நோக்கிப் பயணிப்பதே தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களுக்கும், இழந்தஉயிர்கள், உடைமைகள், உரிமைகளுக்கு ஒரு மதிப்பளிக்கின்ற செயலாகவும் அமையும்.

அந்த வகையில் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபாஅணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணி ஆகிய கட்சிகளையும் இணைப்பதன் ஊடாக வடக்கில் முழுமையான ஆதிக்க நிலையை ஏற்படுத்திக் கொள்வதோடு கிழக்கு மாகாணத்திலும் தமது பிரதி நிதித்துவத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.

அதை விடுத்து பல்வேறு நொண்டி சாட்டுக்களை நியாயப்படுத்திபாட்டி வடை சுட்ட கதை”யையே திரும்ப திரும்ப கூறி பழமையை பேசிக் கொண்டிருக்காமல் தற்கால அரசியல் நிலையை உணர்ந்து அனைவரும் ஒன்றுபட்டு தமிழ் தேசியம் என்ற நிலையை பேணி தமிழ்மக்களுக்கு உரிய நியாயமானதும் கௌரவமானதுமான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ள முனைவதே பொருத்தமானதாகும்!!.

(நன்றி: அதிரடி இணையம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com