Contact us at: sooddram@gmail.com

 

விக்னேஸ்வரன் நியமனம் குறித்தும் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்தும் தாயக மக்களின் நம்பிக்கைகள்

புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக நின்று தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டி வருவதையும் சிங்கள தேசத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குள் சிக்கி எம்மக்கள் அழிந்து வருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டு வருவதையும் சிங்களப் பேரினவாதத்தால் சகிக்கமுடியவில்லை. எனவேதான் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை உடைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட சிங்களப் பேரினவாதம் தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்த அநியாயத்திற்குச் சில உலக நாடுகளும் துணைபோகின்றன

கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் ஆற்றிய மாவீரர் தின உரையில் இவ்வாறு தெரிவித்திருந்தார். புலம்பெயர் தமிழ் மக்கள் என்றுமே சிங்கள அரசாங்கங்களுக்குச் சிம்ம சொப்பனமாகவே தென்பட்டார்கள். தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டு சிங்களம் எவ்வாறு பயந்ததோ அவ்வாறே புலம்பெயர் தமிழர்களைக் கண்டும் சிங்கள அரசாங்கங்கள் அச்சமடைந்தன. அந்த அச்சம் யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்தை விட தற்போது சிங்கள அரசாங்கங்களுக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் தலைவரின் சிந்தனைகளை நெஞ்சில் சுமந்து, புலிகளின் செயல்களை கையில் சுமந்து தமது வேலைகளையும் மறந்து தாயகத்திலுள்ள தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அவர்கள் இன்றுவரை குரல்கொடுத்துக் கொண்டிருப்பது சிங்களத்தை கடும் சினமடைய வைத்திருக்கின்றது. இதனால் தமிழீழத் தேசியத் தலைவர் 2007 இல் கூறியதைப் போன்று புலம்பெயர் தமிழ் மக்களையும் தாயக மக்களையும் பிரித்துவிட்டால் எல்லாமே முடிந்துவிடும் என்று மகிந்த கனவு காண்கின்றார். அவரின் கனவிற்கு வடிவம் கொடுப்பதற்கு இன்று ஒரு நல்ல துரோகக் கும்பல் கிடைத்திருக்கிறது. அந்தக் கும்பலை வைத்து காரியம் சாதிக்க மகிந்த கூட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த கூட்டம்தான் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் தற்போதைய வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகியோர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது தமிழ் மக்களின் எந்தவொரு பிரதிநிதிகளோ இதுவரை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பில் கூறாத கருத்தை நேற்றுப் பெய்த அரசியல் மழையில் இன்று முளைத்த அரசியல் காளான் போன்று இருக்கின்ற விக்னேஸ்வரன் கூறிவருகின்றமை தமிழ் மக்களைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது.

இந்த விக்னேஸ்வரன் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு வரதராஜப்பெருமாளாக மாறமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று இப்போதே தமிழ் மக்கள் கேள்வியெழுப்பத் தொடங்கிவிட்டனர். மகிந்த இதுவரை செய்ய நினைத்து முடியாதவற்றை விக்னேஸ்வரன் ஊடாகச் செய்வதற்கு முயற்சியெடுக்கப்பட்டிருக்கின்றது. இதுவரை அடக்கி வாசித்த விக்னேஸ்வரன் இப்போது முதலமைச்சர் வேட்பாளர் என்ற கிரீடத்தை தலையில் சுமந்தபடி புலம்பெயர் தமிழ் மக்களைத் தவிர்த்துவிட்டு தமிழ் மக்களின் வரலாற்றை எழுத முடியும் என்று விக்னேஸ்வரன் கனவு காண்பது அவரின் முட்டாள்தனமே அன்றி வேறில்லை. அவர்களை அடங்கியிருக்கச் சொல்வதற்கு விக்னேஸ்வரனுக்கு என்ன உரிமை இருக்கின்றது என்று யாழ்.குடாநாட்டு மக்கள் மற்றவர்களின் காதுகளுக்கு கேட்கவே கதைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

காலத்திற்குப் பொருத்தமானது என்பதால் குடாநாட்டு மக்களில் சிலருடன் உரையாடிய விடயங்களை இங்கு பதிவு செய்வது அவசியமானதென்று கருதுகின்றேன்.

கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஊடக இல்லத்தின் சில செய்தியாளர்களுடன் வடமராட்சிப் பகுதிக்குச் சென்றோம். அங்கு பருத்தித்துறை நகரில் சில நிமிடங்களைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்போது அங்கிருந்த நடுத்தர வயதுடைய ஒருவர் யாழ்.குடாநாட்டிலிருந்து வெளிவருகின்ற தினக்குரல் பத்திரிகையை வாசித்துக்கொண்டிருந்தார். ஏதுமறியாதவர்கள் போன்று அவருக்கு அருகில் சென்று ஐயா, என்ன புதினம் என்று கேட்டோம். அதற்கு அவர் தினக்குரல் பத்திரிகையின் முதற்பக்கத் தலைப்புச் செய்தியைக் காட்டினார்.

வெளிநாடுகளிலிருந்து ஆதரவுக் குரல் கொடுப்போருக்கு நீதியரசர் விக்னேஸ்வரன் விடுக்கும் வேண்டுகோள்என்றிருந்தது. அவர் உள்ளே முழுவதும் வாசித்திருந்தார். புலம்பெயர் தமிழ் மக்களைப் பற்றிக் கதைப்பதற்கு இவருக்கு என்ன அருகதையுள்ளது. அவங்கள் அங்க கத்துறதாலைதான் நாங்கள் இஞ்சை வாழுறம். இல்லாட்டி சிங்களவன் எங்கட வீட்டு முற்றத்தில வந்து காம்ப் அடிப்பான். எங்கட எத்தினை பிள்ளைகளைக் கடத்திக்கொண்ட கற்பழித்துவிட்டு தாட்டுப்போட்டாங்கள். எத்தனையோ பேரைக் கொண்டுட்டாங்கள். இதையெல்லாம் சர்வதேசத்தின்ர காதுகளுக்கு கொண்டுவர அதுகள் அங்க இருந்து அன்னந்தண்ணி இல்லாமல் போராடுதுகள்.

ஆனால், இஞ்சை இவர் என்னெண்டால் அவையளை அமைதியா இருக்கச் சொல்லுறார். தன்ரை ஒரு பெட்டையை சிங்களவன் கற்பழித்தால் அல்லது ஒரு பெடியனை சிங்களவன் சித்திரவதை செய்தால் தானே அவருக்கு நிலமை புரியும். கொழும்பில இருந்தோண்டு இப்பிடி புலம்பெயர் தமிழ் மக்களை அமைதியாக இருக்கச் சொல்லுறார்என்று அந்த நகரில் நின்றவாறு அந்தப் பெரியவர் கூறியது எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஏனென்றால் நகரில் நின்றவாறு எங்களை யாரென்று தெரியாத நிலையிலும் அவர் தனது மன உணர்வை எங்களிடம் வெளிப்படுத்தினார். நல்ல வேளை விக்னேஸ்வரனின் பிள்ளைகள் சிங்களவர்களைத் திருமணம் செய்த விடயம் அவருக்கு தெரியாமல் போய்விட்டது. பின்னர் நாங்கள் விசாரித்தபோது தனது பெயர் தர்மலிங்கம் என்றும் வரணியைச் சேர்ந்தவர் என்றும் கூறினார்.

பின்னர் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து சில தெரிந்த முகங்களுடன் உரையாடினோம். வேலணையைச் சேர்ந்த சா.தில்லைநாதன் என்பவர் விக்னேஸ்வரனைக் கண்டபடி திட்டினார். தங்கள் சகோதரி இத்தாலியில் இருப்பதாகவும் அவர் ஒரு தமிழ்த் தேசியவாதியென்றும் வெளிப்படையாகவே கூறிய தில்லைநாதன், மகிந்தவின் திட்டத்தை விக்னேஸ்வரனூடாக நிறைவேற்ற திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்று தனது சகோதரி கூறியதாக தெரிவித்தார். எந்தவொரு தேர்தலிலும் தாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு யாருக்கும் புள்ளடி போடுவதில்லை என்று கூறிய அவர், இந்த வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்புக்கு புள்ளடி போட முடியாது என்று திட்டவட்டமாகவே தெரிவித்தார்.

அப்படியாயின் வேறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இல்லையே, நீங்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறீர்கள் என்று கேட்டபோது எனது வாக்குச் சீட்டைக் கிழித்து எறிய முடியும் தானே என்று பதிலளித்தார். இதேபோன்று கிளிநொச்சி பன்னங்கண்டியைச் சேர்ந்த எஸ்.தியாகராஜா என்ற குடும்பஸ்தருடன் உரையாடியபோது அவர் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தவராக இருந்தார். தனது குடும்பத்தில் இருவர் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் பலியாகிவிட்டனர் என்று கூறிய அவர், இதுவரை அரசாங்கம் எந்தவித நட்டஈடும் தரவில்லை என்றும் தற்போது தனது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் கூறினார்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அமைதியாக இருந்தால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லையென்றே சர்வதேசம் கருதும் என்று அவர் கூறினார். வன்னியில் கடுமையான யுத்தம் நடைபெற்ற போது தாங்கள் முள்ளிவாய்க்கால் வரை சென்று திரும்பியதாக கூறிய அவர், அங்கு நடந்தது பேரழிவு என்று வர்ணித்தார். இந்தப் பேரழிவை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றவர்கள் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் என்று அவர் கூறியதுடன், புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பில் உரையாடும் போது உரிமையுடனேயே விழித்துக் கதைத்தார்.

அவர்கள் இல்லாவிட்டால் இன்று தங்களை மகிந்த அரசாங்கம் மீள்குடியேற்றம் செய்திருக்க மாட்டாது என்பதை அவர் மனம்விட்டுக் கூறினார். மேலும், ஒரு வயதானவர் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார், விக்னேஸ்வரன் புலம்பெயர் தமிழ் மக்களைப் பற்றிக் கதைப்பதற்கு அருகதையற்றவர். இனிமேல் அவர் இவ்வாறு கதைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார். வழமையாக கூட்டமைப்பு தவறுகளைச் செய்யும். ஆனால், முக்கியமான ஒரு தேர்தலுக்காக கூட்டமைப்பு தரமற்ற ஒரு வேட்பாளரைத் தெரிவுசெய்துவிட்டது என்றார். கூட்டமைப்பில் தனது உறவினர் ஒருவர் அங்கம் வகிப்பதால் அவர் தனது பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு பல பேருடன் உரையாடியபோது அவர்கள் அனைவரின் கருத்தும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பால் அக்கறையும் நம்பிக்கையும் வைத்திருந்ததை உணர முடிந்தது. இதிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மட்டும் தான் தாயக மக்களில் அக்கறை வைத்திருக்கிறார்கள், தாயக மக்கள் அவர்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை என்ற கருத்து உடைத்தெறியப்பட்டிருக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பில் தாயகத்திலுள்ள மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். அவர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுமுழுதாக ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.

ஆனால், சந்தித்து உரையாடிய அனைவரும் விக்னேஸ்வரனுக்குக் கடும் கண்டன மழை பொழிந்ததையும் நாம் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்த விடயங்களிலிருந்து விக்னேஸ்வரன் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியத் தமிழ் உறவுகளிலிருந்தும் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகளிலிருந்தும் தாயகத் தமிழ் மக்களை ஒருபோதும் பிரிக்க முடியாது. மகிந்த ராஜபக்சவை தமிழ் மக்கள் மாமன்னராக பார்க்கவில்லை. சிறீலங்காவை ஆட்சி செய்த அத்தனை ஜனாதிபதிகளுக்குள்ளும் படு கேவலமான அசுரனாகவே தமிழ் மக்கள் மகிந்தவைப் பார்க்கின்றனர்.

எனவே, தாயக மக்களையும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களையும் பிரித்துப் பார்க்கின்ற செயற்பாட்டை விக்னேஸ்வரன் இனிமேலாவது கைவிட வேண்டும். இதுவரை இருக்கின்ற மரியாதையைப் பாதுகாப்பதற்கு இதுவே சிறந்த வழி. இந்த விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் ஒரு விடயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் பங்களிப்பு இல்லாமல் தமிழர் தாயகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. இனப்பிரச்சினைக்கான தீர்வாக இருந்தாலும் அது உங்களைத் தவிர்த்து எடுக்க முடியாது. விக்னேஸ்வரன் நினைப்பது போன்று உங்கள் சக்தி சாதாரணமானதல்ல. உங்களை அமைதியாக இருக்குமாறு விக்னேஸ்வரன் கூறி வருகின்றமை தொடர்பில் தாயகத்திலுள்ள மக்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர் என்பதை நாம் எமது கண்கூடாக பார்த்து வருகின்றோம். காதுகளால் கேட்டுவருகின்றோம்.

எனவே, உங்களிடம் தமிழீழத் தேசியத் தலைவர் ஒப்படைத்த பணியை நீங்கள் செவ்வனே செய்யுங்கள். மகிந்தவும் அதன் படைகளும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய அழிவையும் செய்த துரோகத்தையும் நீங்கள் தொடர்ந்து வெளியுலகத்திற்கு பறை சாற்றுங்கள். மகிந்தவையும் அந்த அரக்கனின் உறவுகள், சுற்றத்தாரையும் போர்க்குற்றவாளியாக்கி கூண்டில் நிறுத்த தொடர்ந்து பாடுபடுங்கள். தமிழ் மக்கள் இழந்தவைகளுக்கு நிகரான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் வரை உங்கள் குரல் ஓய்ந்துவிடக்கூடாது. இலட்சிய வீரர்கள் வீழ்வதுமில்லை. புலம்பெயர் தமிழர்கள் ஓய்வதுமில்லை.

- தாயகத்தில் இருந்து வீரமணி 

நன்றி: ஈழமுரசு

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com