Contact us at: sooddram@gmail.com

 

வெலிவேரிய

முன்னை இட்ட தீ

(கே.சஞ்சயன்)

வெலிவேரியவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், உள்ளூரில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் அரசாங்கத்துக்கு எதிரான கண்டன அலைகளைத் தோற்றுவித்துள்ளன. இந்தத் தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில், அரசாங்கம் பல்வேறு காரணங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளது. வெலிவேரிய மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில், இறப்பர் கையுறைத் தொழிற்சாலைக் கழிவுகள், குடிநீரில் கலப்பது தொடர்பாக எழுந்த சர்ச்சை தான், அங்கு மூன்று பேரின் மரணத்துக்குக் காரணமாகியுள்ளது. அந்தப் பகுதி மக்கள் சுத்தமான குடிநீருக்காக போராடக் கிளம்பிய போது, அதை அடக்குவதற்கு கொமாண்டோக்களை உள்ளடக்கிய இராணுவ அணிகள் களமிறக்கப்பட்டது தான், பெரும் சர்சையாக வெடித்துள்ளது.

இத்தகையதொரு சம்பவத்தை தெற்கிலுள்ள மக்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை உணரமுடிகிறது. அதாவது இலங்கை இராணுவத்தினரே, தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள் என்று அங்குள்ள மக்கள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை. கடந்த காலங்களில் ஜேவிபி கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளின் போது, இராணுவத்தினர் தெற்கிலும் கூட பொதுமக்களுடன் கடும் போக்குடன் நடந்து கொண்டிருந்தாலும், அதற்குப் பிந்திய காலத்தில் நிலைமை முற்றிலும் மாறியிருந்தது.

விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான போர், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான போராகவே பெரும்பாலானவர்களால் பார்க்கப்பட்ட நிலையில், தெற்கிலுள்ள சிங்கள மக்கள் மத்தியில் இராணுவத்தினர் பெரிதும் கௌரவத்துக்குரியவர்களாக மாறினர். புலிகளுக்கு எதிரான போர், ஜேவிபி கால இராணுவத்தினரின் செயற்பாடுகளையெல்லாம் மறந்து, சிங்கள மக்கள் ஒன்றிணையக் காரணமாகியது. இராணுவத்துக்கும் தெற்கிலுள்ள மக்களுக்கும் இடையில் தோன்றியிருந்த இந்த இணக்கமான நிலை, வெலிவேரிய தாக்குதலால் உடைந்து போனது.

1971இலும், 1987-89 காலத்திலும், ஜேவிபி கிளர்ச்சியை முறியடிக்கும் நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அண்மையில், மாத்தளையில் இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் ஒரு பாரிய புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட போது கூட, அதன் உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் ஜேவிபியினர் அல்லது அவர்களைச் சார்ந்தவர்கள் தான்,அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஐதேக ஆட்சிக்காலத்தில் நடந்த படுகொலைகளாக இருந்தாலும், இப்போதைய அரசாங்கமும் கூட அதில் அக்கறை காட்டவில்லை. காணாமற்போனவர்களின் உறவினர்களே பெரியளவில் அதில் ஈடுபாடு காட்டவில்லை. ஏனென்றால், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரும், அதில் அவர்கள் ஈட்டிய வெற்றியும், இராணுவத்தினர் மீது குற்றம்சாட்ட இடமளிக்கவில்லை. கடந்த காலத்தை மறக்காது விட்டாலும், மன்னித்துக் கொள்ளும் அளவுக்கு சிங்கள மக்களில் அநேகரை கொண்டு சென்றிருந்தது.

ஆனால், வெலிவேரிய தாக்குதல் சம்பவம், இராணுவத்தினரை அவநம்பிக்கையோடு பார்க்கும் நிலையைவெறுப்போடு நோக்கும் நிலையை உருவாக்கி விட்டுள்ளது. வெலிவேரிய தாக்குதலை, புதுமாத்தளனுக்கும், முள்ளிவாய்காலுக்கும், வன்னிப் போருக்கும் ஒப்பிட்டு சிங்கள மக்கள் தெரிவிக்கும் கருத்துகளே இதற்குச் சாட்சி.

இராணுவத்தினர் இந்தளவுக்கு மோசமாகவும், இழிவாகவும் நடந்து கொள்வார்கள் என்று நினைக்கவில்லை என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரே கூறியுள்ளார் என்றால், இது தெற்கில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, பொதுமக்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக இராணுவத்தினர் மீது குற்றம்சாட்டப்பட்ட போதெல்லாம், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்று இராணுவத்தினரைக் காத்து நின்றவர்களில், அரசதரப்பைத் தவிர வேறு யாருமே, இப்போது அவர்களின சார்பில் பேசவில்லை.

எல்லோருமே ஒரே குரலில், வெல்வேரிய தாக்குதல் தவறானது என்கின்றனர், மோசமாக இராணுவத்தினர் நடந்து கொண்டதாக விமர்சிக்கின்றனர். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போன்ற இன்னும் சிலர், தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினரில் தவறில்லை என்றும், தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அரசாங்கமே அதற்குப் பொறுப்பு என்கின்றனர். எவ்வாறாயினும், அரசாங்கம் யார் தாக்குதலுக்கு உத்தரவிட்டது என்று வெளிப்படுத்தவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க உத்தரவிட்டுள்ள போதிலும், அது எந்தளவுக்கு நியாயமாக நடக்கும் என்பதில், நிறையவே சந்தேகங்கள் உள்ளன. இராணுவத்தின் இந்த உள்ளக விசாரணை குறித்து சந்தேகம் எழுப்புபவர்களும், தெற்கிலுள்ள அரசியல்வாதிகளும், கட்சிகளும் தான்.

ஆனால், இதே அரசியல்வாதிகளும், கட்சிகளும், இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து, இராணுவத்தரப்பு உள்ளக விசாரணை நடத்தியபோது, அது நியாயமாக நடக்காது என்று கூறவில்லை. அது குறித்து சந்தேகம் எழுப்பவில்லை. பொதுமக்களைக் குறிவைத்து, ஒருபோதும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தவேயில்லை என்று இராணுவ விசாரணை நீதிமன்றம் அறிக்கையைக் கொடுத்தபோது, அதை வாயாரப் பாராட்டியவர்கள் தான், இப்போது, இராணுவ விசாரணையில் நம்பிக்கையில்லை என்கின்றனர். தனக்குத் தனக்கென்றால் சுளகு படக்குப் படக்கென்று அடிக்குமாம் என்று தமிழில் உள்ள பழமொழியைத் தான் இது ஞாபகப்படுத்துகிறது.

அதுமட்டுமல்ல, வெலிவேரிய தாக்குதல் குறித்த உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையில்லை என்றும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஐதேகவே கோரியிருக்கிறது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான ஐதேக ஒரு போதுமே, வன்னிப் போரில் நடந்த மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணையைக் கோரியதும் இல்லை, அத்தகைய விசாரணைக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததும் இல்லை.

தாக்குதலில் ஈடுபட்ட படையினர், தாக்கப்பட்ட பொதுமக்கள் என்று முள்ளிவாய்க்காலுக்கும், வெலிவேரியவுக்கும் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. இரண்டிலுமே, மனிதஉரிமை மீறல் என்ற பொதுமையே இருந்தாலும், அது வடக்கில் நிகழ்ந்ததா, தெற்கில் நிகழ்ந்ததா - சிங்களவர் மீதா, தமிழர் மீதா, என்பதை அடிப்படையாக வைத்தே, அதன் பெறுமானம் கணிக்கப்படுகிறது. போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கழிந்தாலும், இந்தப் போக்கு மாறவில்லை.

ஒருவகையில், சிங்கள மக்கள், தமிழர்கள் மீதான மீறல்களைக் கண்டிக்காமல் ஊக்குவித்ததன் விளைவு என்று கூட இதனைக் குறிப்பிடலாம். இன்னொரு புறத்தில், வெலிவேரிய தாக்குதலை தமிழ்கட்சிகள் பெரியளவில் கண்டிக்கவில்லை என்பது தவறான அணுகுமுறையாகவே பார்க்க வேண்டும்.

தமிழர்களின் உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டன என்ற நியாயத்தை சிங்கள மக்கள் உணர முனையும் போது, அவர்களுடன் இணைந்து கைகோர்ப்பது தான் நியாயமானது, தமிழர்களின் பலத்தை அதிகரிக்கக் கூடியது. இந்த உண்மை, தமிழர் தலைமைகளால் உணரப்பட வேண்டும். சிங்களக் கட்சிகளும், தலைமைகளும் இழைத்த தவறை அவர்களும் இழைத்து விடக் கூடாது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com