Contact us at: sooddram@gmail.com

 

மீண்டும் தலைதூக்கும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை

(கே.சஞ்சயன்)

சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் குறித்து மீண்டும் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது. பெரும்பாலும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அமர்வுகளை ஒட்டியே, இத்தகைய கோரிக்கைகளும், வாதப் பிரதிவாதங்களும் எழுவது இயல்பு. ஆனால், இப்போது எழுந்துள்ள இந்தக் கோரிக்கைக்கு முக்கியமான காரணம், வெலிவேரியவில் இடம்பெற்ற பொதுமக்கள் மீதான தாக்குதலேயாகும். அதற்கு அப்பால், இந்தமாத இறுதி வாரத்தில், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதும் இன்னொரு காரணமாக உள்ளது. 2009ஆம் அண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதில் இருந்து, அவ்வப்போது இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்துக் கொண்டு தான் இருக்கிறது. போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரால் இழைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து, நடுநிலையான - நம்பகமான - சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைகளையெல்லாம் இலங்கை அரசாங்கம் நிராகரித்து விட்டது.

இத்தகைய கோரிக்கைகள் ஐ.நா நிபுணர் குழுவினால் எழுப்பப்பட்ட போதிலும் கூட, அதைத் தட்டிக்கழித்து விடுவதில் இதுவரை இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்றே வந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தை, இந்த அரசாங்கம் இவ்வாறு தட்டிக்கழித்து விட்டது.

இதுவரை, போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு, தமிழர் தரப்பில் இருந்து தான் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால் இப்போது வெலிவேரிய தாக்குதலை அடுத்து, முள்ளிவாய்க்கால் போர்க்களம் எவ்வாறு இருந்திருக்கும் என்று சிங்கள மக்களும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். சர்வதேச விசாரணையை அவர்களில் ஒருபகுதியினரும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பேரழிவுகளுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் தரப்புகளின் கரங்களைப் பலப்படுத்தும் வகையிலேயே வெலிவேரிய தாக்குதல், இடம்பெற்றுள்ளது. அண்மையில் ஒரு பேட்டியில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ இந்த அச்சத்தை வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியுள்ளார்.

வெலிவேரிய தாக்குதல் சம்பவம், எத்தகைய சூழலில் நிகழ்த்தப்பட்டிருந்தாலும், அது அரசாங்கத்தையும் இராணுவத்தையும் பெரும் இக்கட்டான நிலைக்குள் தள்ளி விட்டுள்ளது. இது அரசதரப்பில் எவருமே எதிர்பாராத ஒரு பெரும் சிக்கல் என்றே குறிப்பிடலாம்.

பிரதான எதிர்க்கட்சியான ஐதேகவே சர்வதேச விசாரணையைக் கோரியுள்ள நிலையில், நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் சமாதான ஏற்பாட்டாளராக பணியாற்றியவருமான எரிக் சொல்ஹெய்மும் இதனை வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் யூ, இலங்கையில் நடப்பது இனஅழிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆக, சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்ற விடயத்தை மறக்கச் செய்வதற்கு அரசாங்கம் முயன்றாலும், உலகம் அதை முற்றாக மறந்து விடவில்லை என்பது உறுதியாகிறது. அதிலும் வெலிவேரிய தாக்குதலின் பின்னர், இராணுவத்தினர் போரின்போது எவ்வாறு நடந்து கொண்டிருந்திருப்பார்கள் என்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

ஒரு சாதாரணமான மக்கள் போராட்டத்தை அடக்குவதற்கு இந்தளவுக்குப் படைபலம் பிரயோகிக்கப்பட்ட சூழலை வைத்து கணக்கிடும் எவராலும், முள்ளிவாய்க்காலில் எத்தகைய நிலைமை இருந்திருக்கும் என்று புரிந்து கொள்வது ஒன்றும் கடினமான காரியமாக இருக்காது.

இத்தகைய சூழலில், அரசாங்கமும் படைத்தரப்பும் எப்போதும் கூறிவரும், பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படாமல் போர் நடத்தியதான கதை இனிமேலும் எடுபடப் போவதில்லை.

ஏனென்றால், நிராயுதபாணிகளான பொதுமக்களையே சேதங்கள் ஏற்படாமல் அடக்க முடியாத படையினரால், ஆயுதமோதல் நிகழ்ந்த பகுதியொன்றில் பொதுமக்களுக்கு சேதங்கள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதாக கூறுவது நம்புவதற்கு முடியாதது.

அதுவும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஒருவாரகாலம் உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் தான், வெலிவேரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இறுதிப் போரின்போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருபவர் தான் நவநீதம்பிள்ளை. அவரது வருகையை ஒட்டியே வெலிவேரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் துரதிர்ஷ்டம் என்றே கூறலாம்.

இறுதிப் போரின்போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தில், நம்பகமான உள்ளக விசாரணை நடத்தும்படி வலியுறுத்தப்பட்ட போதிலும், அத்தகைய எந்த விசாரணைகளையும் இலங்கை அரசாங்கம் நடத்தவில்லை. அதற்கான எந்த முயற்சிகளும் முன்னெடுக்கப்படவும் இல்லை.

இந்தநிலையில், போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக் கோரிக்கைகள் வரும் காலத்தில், மேலும் வலுப்பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

குறிப்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த இரண்டு கூட்டத் தொடர்களிலும், இலங்கை அரசாங்கம் இந்த விவகாரத்தில் கடுமையான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கக் கூடும். நவநீதம்பிள்ளை, கொழும்பில் இருந்து திரும்பிய அடுத்த வாரமே, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகப் போகிறது.

இதில், இலங்கை விவகாரம் குறித்த விவாதங்கள் இடம்பெறுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. என்றாலும், நவநீதம்பிள்ளை தனது பயணம் குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிக்கட்டப் போர் பற்றிய விசாரணைக் கோரிக்கை மட்டுமன்றி, வெலிவேரிய குறித்த விசாரணைக்கும், கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களைப் பின்பற்றுவோருக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறித்தும், நவநீதம்பிள்ளை தனது அறிக்கையில், குறிப்பிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இவற்றை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் மூலோபாயம் என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதேவேளை, கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானத்துக்கு அமைய, இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ளதா என்று அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள 25ஆவது அமர்விலும் ஆராயப்படும்.

இத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாம், சர்வதேச போரக்குற்ற விசாரணைகள் குறித்த கோரிக்கை மீண்டும் மேலேழும் வாயப்புகள் உள்ளன. இந்தநிலையில், சர்வதேச போர்க்குற்ற விசாரணை பற்றிய அழுத்தங்களில் இருந்து உலகின் கவனத்தை திருப்பி விடுவதில், அக்கறை செலுத்தி வந்த அரசாங்கத்துக்கு, வெலிவேரிய தாக்குதல் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.

சர்வதேச போர்க்குற்ற விசாரணை குறித்த அழுத்தங்கள் இப்போதைக்கு ஓயப் போவதில்லை என்பதையும், வரும் காலத்தில் அரசாங்கம் அதுதொடர்பான அதிகளவிலான அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலை உருவாகும் என்பதையுமே இப்போதைய நிலவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com