Contact us at: sooddram@gmail.com

 

பலஸ்தீன கைதிகள் விடுதலை

ஸ்லாமிய - அரபு உலகின் அரசியல் கடந்த வாரம் இரண்டு முக்கியமான சம்பவங்களை கண்டது. இவை இரண்டும் சில வருடங்களுக்கு தொடரக் கூடிய சிக்கலான விடயங்கள். மதங்களும் அரசியலும் சங்கமித்துள்ள விடயம் இவை பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவு காண வேண்டியுள்ள விடயங்களாகும். இஸ்ரேலுடன் இஸ்லாமிய உலகம் கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு முடிவு காண்பது கஷ்டமான விடயமாக இதுவரைக்கும் இருந்து வருகின்றது. இருந்த போதிலும் கூட சில முக்கியமான பிரச்சினைகளுக்கு சமீபத்தில் முடிவு காணப்பட்டது ஒரு நல்ல அறிகுறியை காட்டுகின்றது. தலைநகர் டெல் அவிவ் பலஸ்தீனியர்களை வைத்திருந்த சிறைச்சாலையான அயலோனில் இருந்து வெகு தூரத்தில் இல்லை. பயங்கரவாதிகள் என்று இஸ்ரேல் கூறும் பல பலஸ்தீனியர்கள் இந்த சிறைச்சாலையில் பல வருடங்களாக கைதிகளாக உள்ளனர். சிலர் வாழ் நாள் பூராகவும் இருந்துள்ளனர். இன்னும் சிலர் இருக்கவுள்ளனர்.

பலஸ்தீனியர்கள் இந்தப் போராளிகளை பெரிதும் கெளரவிக்கின்றனர். நாட்டுக்காகவும் பலஸ்தீனியர்களின் விடுதலைக்காகவும் தங்கள் உயிர்களை தியாகம் செய்து போராடுபவர்கள் என்றும் இவர்களது இந்த தியாகச் செயல் புனிதமானது என்றும் கூறிவருகின்றனர்.

எதிர்வரும் ஒன்பது மாதங்களில் 104 கைதிகளை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரேல் பிரதமர் பென்ஜமீன் நெதன்யாஹ¥ கூறியுள்ளார். இவர்களில் 26 பேர் ஒரு சில தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த விடுவிக்கப்பட்ட தினத்திலேயே மூன்று வருட காலம் முடங்கிக் கிடந்த இஸ்ரேல் - பலஸ்தீனிய இரு தரப்பு பேச்சு வார்த்தைகளும் அமெரிக்காவின் பங்கேற்புடன் ஜெருஸலத்தில் நேருக்கு நேர் ஆரம்பிக்கப்பட்டன. எனவே இதனை மூன்று தரப்பு பேச்சுவார்த்தைகள் என்று கூட கூறலாம்.

பேச்சுவார்த்தைகள் முன்வரும் ஒன்பது மாதங்கள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளின் வெற்றியினையும் முன்னேற்றத்தையும் பொறுத்தே நான்கு வெவ்வேறான கட்டங்களில் மிஞ்சியுள்ள ஏனைய கைதிகளும்அயலோன்சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டவர் என பிரதமர் பென்ஜமீன் நெதன்யாஹுவின் அலுவலகம் அறிவித்துள்ளது.

சிறைக்கைதிகளை விடுதலை செய்ததையும் முன்வரும் காலங்களில் விடுதலை செய்யப் போவதனையும் எதிர்த்தும் ஆதரித்தும் இரு தரப்பினர் இடையே இருந்தும் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு எடுத்த இந்த முடிவை எதிர்த்து அவரது ஆளும் கட்சியானலிக்வுடகுள்ளேயே வாதப்பிரதிவாதங்கள் தோன்றியுள்ளன. சிலர்- அமைச்சர்கள் பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சில அமைச்சர்கள் பகிரங்கமாக தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

இதே அரசியல் நிலைமையினை பலஸ்தீனிய தரப்பினர் இடமிருந்தும் காணக்கூடியதாகவுள்ளது. விடு விக்கப்பட்டுள்ள கைதிகள் எல்லோருடைய விதிக்கப்பட்ட தண்டணைக்கு காலக்கெடு காலவதியாகும் அல்லது முடிவடையும் தறுவாயிலே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே இதனை விடுதலையாக கருதமுடியாது என சில பலஸ்தீனய அரசியல் பிரிவுகள் கூறுகின்றன. இதே நேரம் யாரை - எவரை விடுவிப்பது என்பது சம்பந்தமாக பலஸ்தீன உயர் அதிகாரிகளை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு கட்டாயமாக ஏற்கனவே எப்போதோ விடுவிக்கப்படவேண்டி இருந்தவர்கள் தொடர்ந்தும் பல காலம் இஸ்ரேலிய சிறைகளில் காலத்தை கழிக்க வேண்டியிருப்பர் எனவும் பலஸ்தீனிய அரசியல் குழுக்கள் கூறுகின்றன. இது எப்படியாக இருந்தாலும் சில கைதிகள் விடுவிக்கப்பட்டு தங்களது குடும்பங்களுடன் இணைந்து கொண்டது வரவேற்கப்படவேண்டிய ஒரு சந்தோஷமாகும். இவர்கள் போராளிகள் என்றும் தியாகிகள் எனவும் பாராட்டப்படுகின்றனர். இவர்களை பலஸ்தீன் பிரதமர் மஹ்மூத் அப்பாஸ் பெரும் கெளரவத்துடனும் மகிழ்ச்சியாகவும் நேரடியாக வரவேற்றார்.

இந்த விடுவிக்கப்பட்ட போராளிகளின் மறுபக்கத்தை நாம் பார்த்தால் இவர்கள் உண்மையிலேயே கொலையாளிகள். இவர்களின் கைகளில் இன்னும் இரத்தம் இருப்பதாக சில இஸ்ரேலிய அமைச்சர்களும் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் கூறுகின்றனர். மேற்படி கொலைகள் சம்பந்தமாக உண்மையாகவும் தத்ரூபமாகவும் கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள் இந்த பலஸ்தீனியர்கள் செய்த செயல்களை விளக்குகின்றன.

இந்த சிறைக்கைதிகளை விடுவிக்கும் விஷயத்தில் சில விடயங்களை பலஸ்தீன் விட்டுக்கொடுத்தது எனலாம். இது மறுபக்கத்தில் மறைமுகமாக திட்டமிடப்பட்டு இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட செயலாகும். முன்வரும் இஸ்ரேல் - பலஸ்தீன் பேச்சுவார்த்தைகளின் போது பலஸ்தீன் நாட்டின் எல்லை அல்லது வரைபடம், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் தற்போது குடியமர்த்தப்பட்டு வசித்து வரும் சுமார் 500,000 அதிகமான இஸ்ரேலியர்களை அகற்றுவது ஆகியன எடுத்துக்கொள்ளப்படமாட்டது எனவும் இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த நிபந்தனை இஸ்ரேலுக்கு சாதகமானதாகும். இதே நேரம் அகதிகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மற்றும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இடங்களில் வாழும் பலஸ்தினியர்களின் விவகாரங்களும் முன்வரும் ஒன்பது மாதகால பேச்சுவார்த்தைகளில் இடம் பெறமாட்டாது எனவும் இவை பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில்இருக்க கூடாது எனவும் இஸ்ரேல் திட்டவட்டமாக கூறியுள்ளது.

பலரது கவனத்திற்கும் அப்பாற்பட்டுள்ள ஒரு ஆச்சரியமான ஒரு இஸ்ரேல் சட்டம் உள்ளது. இதனை விளக்கி கூற பலஸ்தீனியர்களும் ஆதரவாக குரல் கொடுக்கும் எவரும் முன்வருவதாக இல்லை. 1980ம் ஆண்டின் இஸ்ரேலின் அடிப்படை சட்டத்தின் பிரகாரம் ஜெருஸலம் முழுமையானதாகவும் ஐக்கியப்பட்டதாகவும் இஸ்ரேலின் தலைநகரமாக இருக்கும் என்பதேயாகும். இது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரு விடயமாக இருக்கமுடியாது. இதே நேரம் கிழக்கு ஜெருஸலத்தில் அமைந்துள்ள இஸ்லாமியர்களின் மூன்றாவது முக்கிய புனிதமான இடமாக கருதப்படும் அல்- அக்ஸா பள்ளிவாசலை விடுவிக்க முடியாது எனவும் இஸ்ரேல் கூறுகின்றது.

மூஸா என்ற இறைத்தூதரின் சமூகமான இந்த இஸ்ரேல் சமூகத்தினர் அந்த மண்ணில் வாழ்த்தது உண்மை என்றாலும் இவர்கள் இந்த மண்ணை விட்டுச் சென்று பல நீண்ட காலங்களுக்கு பின்னர் செயற்கையாக உருவாக்கப்பட்டஇஸ்ரேலில்திரும்பவும் நாட்டப்பட்டவர்கள்.

ஐக்கிய நாடுகளை சபை இஸ்ரேல் நாட்டை உருவாக்க பல இடங்களில் முயற்சி செய்தனர். அமெரிக்காவில் உள்ள நாடான உகண்டா அடையாளம் காணப்பட்டது. சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் இஸ்ரேலை ஸ்தாபிக்க ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. இறுதியாக முக்கிய பாங்கினை ஐநா சபையில் வகிக்கும் ஐந்து நாடுகளும் கூட்டாக பலஸ்தீனிய மண்ணில் இஸ்ரேல் உருவாக்கப்பட தகுந்த காரணங்களை காட்டி உலக வரைபடத்தில் தொந்தரவுகளை கொண்டு வரக்கூடிய இஸ்ரேலை புகுந்தின.

நடைபெறவுள்ள பேச்சு வார்த்தைகளில் இஸ்ரேல் அரசுதரப்பில் முன்னாள் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய நிதிசட்டத்துறை அமைச்சருமான kப்பீய் லீவீயனிய் அம்மையார் மற்றும் பிரதமரின் உதவியாள இஸாக் முல்ஷோ பங்கெடுப்பர். பலஸ்தீன் சார்பில் மூத்த அரசியல் வாதியான சமீத் அர்காத் அவர்களும்பத்தாஹ்அஸட் சேர்ந்த முஹம்மத் ஷெய்கிய்யாஹ்வும் கலந்துகொள்வர்.

இதே நேரம் அமெரிக்காவின் சார்பில் ராஜதந்திரியும் முன்னாள் இஸ்ரேலுக்கான தூதுவருமான இன்டியக்,அவரத உதவியாளர் லோவென்ஸ்டன் ஆகியோர் பங்கெடுக்கின்றனர்.

நடத்தப்படவுள்ள பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் இரண்டு நாடுகளும் அக்கம் பக்கத்தில் எந்தவிதமான அச்சமும் பயமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதேயாகும். இஸ்ரேல் நாட்டை பலஸ்தீன் அங்கீகரிக்கவேண்டும் இதேநேரம் பலஸ்தீனை இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும். இதுவே நடக்கவுள்ள பேச்சுவார்த்தைகளின் இலட்சியமும் இறுதிக்குறிக்கோளுமாகும். இரு நாட்டுத் தலைவர்களும் இந்த விடயத்தில் இது வரைக்கும் கொள்கையில் இணங்கியுள்ளமை நல்ல முடிவுகளை தரக்கூடியது என எதிர்பார்க்கலாம்.

(நன்றி: தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com