Contact us at: sooddram@gmail.com

 

போராட்ட காலத்தில் பாராமுகம் அமைதி சூழலில் பதவி மோகம்

மூன்றாவது கட்டப் போராட்டம் நடக்கின்றது என்று வீரச் சூளுரைத்த முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் இப்போது பெட்டிப்பாம்பாக அடங்கியிருக்கிறார். ஜனநாயக வழிகளில் வந்த போராட்டம் முதலாவது கட்டமாம். ஆயுதப் போராட்டம் இரண்டாவது கட்டமாம். இப்போது நடப்பது மூன்றாவது கட்டமாம். தமிழ் மக்களின் போராட்டம் பற்றித் திரும்பியும் பார்க்காமல் தனது பதவியையும் பதவிசார் நலன்களையும் பாதுகாப்பதிலேயே அக்கறையாக இருந்தவர் இப்போது வடக்கில் கட்டங்கள் பிரித்துப் போதனை செய்கிறார். அதனை மக்கள் இரசித்து தன்னை அரியாசனம் ஏற்றுவர் எனப் பகல் கனவும் கண்டு வருகிறார். பதவிப் போட்டி காரணமாக ஒற்றுமை என்றால் என்ன என்பதை மறந்து நிற்கும் தமிழ்க் கூட்டமைப்பினரிடம் இவர் தோற்கடிக்கப்பட்டு விட்டார்.

இந்தக் கண்மூடி வித்தைக் கட்டங்கள் தான் தமிழ் மக்களின் இன்றைய நிலைக்குக் காரணம் என்பது படித்த நீதியரசருக்கு விளங்கவில்லை. தமிழசுக் கட்சியிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை பார்த்தால் தலைவர்களின் சுயநலத் தேவைகளுக்காகக் காலத்துக்குக் காலம் கொள்கைகளை மாற்றியதே வரலாறாக உள்ளது. இதில் இப்போது நீதியரசரும் இணைந்து கொண்டுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் தலைமையை கைப்பற்றுவதற்கான ஆயுதமாக சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்த தமிழரசுக் கட்சி அக்கோரிக்கையை வென்றெடுப்பதற்கான எவ்விதமான செயற்பாட்டையும் முன்னெடுக்கவில்லை. தமிழரசுக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி சமஷ்டியைக் கைவிட்டுத் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தது. பின்னர் மாவட்ட சபையை ஏற்பதற்காக அதைக் கைவிட்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அவதாரம் எடுத்ததும் பாராளுமன்றப் பதவிகளைப் பாதுகாப்பதற்காக மீண்டும் புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்பட்டார்கள். இப்போது எந்தக் கொள்கையும் இல்லாமல் தமது குடும்பங்கள் மற்றும் உறவினர்களுக்காக மட்டுமே செயற்படுகின்றார்கள்.

சுயநலத் தேவைகளுக்காக காலத்துக்குக் காலம் கொள்கையையும் போராட்ட வழிமுறையையும் மாற்றியதன் விளைவாகவே தமிழ் மக்கள் மோசமான அழிவுகளையும் இழப்புக்களையும் அனுபவிக்க நேர்ந்தது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் பேசுவதற்கு ஆள் தேவை என்று சம்பந்தன் கொண்டு வந்திருக்கும் நீதியரசருக்கு இந்தச் சின்ன விடயம் கூட விளங்காதிருப்பது வேதனை தருகிறது.

நீதியரசர் குறிப்பிட்ட மூன்று கட்டங்களிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரே விளைவு தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்ததுதான். இனப்பிரச்சினையின் முழுமையான தீர்வை நோக்கிய நகர்வுக்காகக் கிடைத்த சந்தர்ப்பங்களைத் தமிழரசுக் கட்சி பயன்படுத்தவில்லை. பண்டா - செல்வா ஒப்பந்தத்தின் சரத்துக்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கிடைத்த சந்தர்ப்பங்களை உதாரணமாகக் கூறலாம். தனிநாடு என்று தமிழ் மக்களுக்கு உசுப்பேற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்ததும் மாவட்ட சபையுடன் திருப்திப்பட்டார்கள்.

இரண்டாவது கட்டம் என்று நீதியரசர் கூறும் ஆயுதப் போராட்ட கட்டம் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் கறுப்பு அத்தியாயம் எனக் கூறலாம். இக்காலத்திலேயே தமிழ் மக்கள் இடம்பெயர நேர்ந்ததும் இக்காலத்திலேயே. இனப்பிரச்சினையின் தீர்வுக்கு நாட்டில் சாதகமற்ற சூழ்நிலை தோன்றியதற்கான பிரதான காரணம் இக்கால கட்ட செயற்பாடுகளே.

நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமை வகிக்கும் மூன்றாவது கட்டம் எந்தக் கொள்கையும் இல்லாமல் வாய்வீச்சின் மூலம் தமிழ் மக்களை வெறுமையை நோக்கி நடக்கின்றது. தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளுக்குக் கூட்டமைப்புத் தலைவர்களால் ஒரு தீர்ப்பை முன்வைக்க முடியவில்லை.

இத்தலைவர்கள் சுயமாகச் சிந்தித்து ஒரு தீர்மானத்துக்கு வர இயலாத அளவுக்குப் புலம் பெயர் அமைப்புக்களின் கட்டுப்பட்டுக்குள் வாழ்கின்றார்கள் புலம்பெயர் அமைப்புக்களின் கோரிக்கைகளை நிராகரிக்கும் நிலையில் தாங்கள் இல்லை என்பதைக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஒத்துக் கொள்கின்றார்கள். இவர்களை வழி நடத்தும் புலம்பெயர் அமைப்புகள் அரசியல் தீர்வை விரும்பவில்லையென்பதால் இவர்களும் அரசியல் தீர்வைத் தவிர்க்கும் வகையில் செயற்படுகின்றார்கள். இந்தத் துரோகத்தைத் தமிழ் மக்களிடமிருந்து மறைப்பதற்காகச் சர்வதேச சமூகம் என்ற வாய்ப்பாட்டை ஒப்புவிக்கின்றார்கள்.

சர்வதேச சமூகத்துக்கு ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பது இந்தத் தேர்தலில் இவர்களின் கோஷம். எதற்காகக ஒற்றுமையைக் காட்ட வேண்டும்? இனப்பிரச் சினைக்கான தீர்வுக்காகவா? அப்படியானால் எத்தகைய தீர்வு என்று மக்களுக்குத் தெரியப் படுத்துவதற்காகத் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமே. எந்தத் தீர்வாக இருந்தாலும் சர்வதேச சமூகம் பெற்றுத் தரட்டும் என்று கூறுகின்றார்களா? அது தான் கூட்டமைப்பின் நிலைப்பா டென்றால் எங்கள் தீர்வை நாங்கள் தீர்மானிக்க இடமளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் வேட்பாளர் தமிழக மக்களுக்குக் கூறியதன் அர்த்தம் என்ன? எல்லாமே பொய் தமிழரசுக் கட்சியில் சேர்ந்து கொண்ட ஒரு மாத காலத்தினுள்ளேயே பொய்கூறப் பழகிவிட்டார் நீதியரசர்.

சர்வதேச சமூகம் தீர்வுடன் தயாராக நிற்கின்றது என்றும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அடுத்த கணமே தீர்வுடன் வந்து இறங்கும் என்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் கதை அளந்தார்கள். தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்தார்கள். ஆனால், சர்வதேச சமூகம் திரும்பியும் பார்க்கவில்லை. இது கூட்டமைப்பினரது தேர்தல் கால நாடகம். மக்கள் இதனை நன்கு உணர்ந்துள் ளார்கள். அவர்களைத் தொடர்ந் தும் ஏமாற்ற முடியாது.

தனிநாட்டு மாயையிலிருந்து இன்னும் விடுபடாமலிருக்கும் புலம்பெயர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று அரசியல் தீர்வுக்குத் தடையாகச் செயற்படுவதைக் கூட்டமைப்பு தொடர்வது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற மிகப் பெரிய துரோகம். எதிர்காலத்தில் தமிழ்ச் சந்ததிக்கு இனப்பிரச் சினையை விட்டுச் செல்வ தற்கான முஸ்தீபு என்றே இதைக் கருத வேண்டும். தமிழ் மக்களின் நலனில் உண்மையாகவே கூட்டமைப் புக்கு அக்கறை உண்டென்றால் புலம்பெயர் அமைப்புகளின் பிடியிலிருந்து விடுபட்டு நடைமுறைச் சாத்தியமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும். அதுவரை இவர்கள் பாராளு மன்றக் கதிரைகளிலும் தங்கள் சொந்த சுகபோகங்களிலும் மாத்திரம் அக்கறை செலுத்தும் சுயநல அரசியல் வாதிகளாகவே இருப்பர்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு தேவை என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடு. ஆனால், புலம்பெயர் அமைப்புக்களின் தாளத்துக்கு ஆடும் கூட்டமைப்புத் தலைவர்கள் அரசியல் தீர்வைத் தவிர்ப்பது பற்றியே சிந்திக்கின்றார்கள். இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அடையக்கூடிய பாதையையே தமிழ் மக்கள் இன்றைய அரசாங்கத்தின் மூலமாகத் தேர்ந்தெடுப்பதே சிறந்த வழி. இதுபற்றியே தமிழ் மக்கள் சிந்தித்து தீர்மானமெடுத்துள்ளனர். அதற்கு இடையூறாக தமிழ்க் கூட்டமைப்பு ஒருபோதும் இருக்கக் கூடாது.

(சங்கன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com