Contact us at: sooddram@gmail.com

 

கொழும்பு, காங்கேசன்துறை ரயில் சேவை 2014 ஏப்ரல் மாதம் ஆரம்பமாகும்

1987ம் ஆண்டில் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதை அடுத்து, இலங்கையில் வெடித்த எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளின் வன்முறைகளை அடுத்து வட பகுதிக்கான ரயில்சேவை முற்றாக இடைநிறுத்தப்பட்டது. ரயில் சேவை இடைநிறுத்தப்பட்ட வுடன் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் தண்டவாளங்களையும், ரயில் கட்டைகளையும் எடுத்துச் சென்று தங்கள் முகாம்களுக்கு அருகிலும், கேந்திர நிலையங்களுக்கு அருகிலும் ரயில்கட்டைகளை பயன்படுத்தி, பாதுகாப்பு பங்கர்களை அமைத்தார்கள். இதையடுத்து, ரயில்வே இரும்பு பாதைகளை கழற்றிச் சென்று எல்.ரி.ரி.ஈ.யினர் ஆயுதங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தினார்கள்.

யுத்தம் முடிவடைந்ததை அடுத்து ஜனாதிபதி அவர்கள் இந்திய அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்தியா தங்கள் சொந்த பணத்தில் ரயில் பாதையை புனர்நிர்மாணம் செய்வதற்கு உடன்பட்டது. ரயில்பாதை வவுனியாவில் இருந்து முதலில் ஓமந்தைக்கும் கண்ணி வெடிகளை அகற்றிய பின்னர் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. மன்னார் பாதையில் இப்போது மடு தேவாலயம் வரையில் ரயில் பாதை புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. ஓமந்தையில் இருந்து மிக விரைவில் கிளிநொச்சிக்கான ரயில்பாதையின் புனர்நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கான ரயில்பாதை புனர்நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர இலங்கையில் வட பகுதிக்கான ரயில் சேவையை இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு கூடுதலான வருமானத்தைப் பெற்றுக் கொடுத்தது. அப்போது நாளொன்றுக்கு 5 ரயில் சேவைகள் இரு திசைகளிலும் நடத்தப்பட்டன.

அன்று யாழ்ப்பாணத்து மக்கள் வெள்ளிக்கிழமை இரவு வடபகுதிக்கு பயணித்து திங்கட்கிழமை காலை கொழும்பு திரும்பி வேலைக்கு சென்றுவிடுவார்கள். அந்தளவுக்கு அன்று ரயில்சேவை தமிழ்மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று விளங்கியது. அப்போது ஓரிரு பஸ்களே கொழும்பில் இருந்து வடபகுதிக்கு சென்று திரும்பின.

இந்த சந்தர்ப்பத்தில் நாம் இலங்கையின் ரயில்சேவையின் பண்டைய வரலாற்றை சிறு தகவல்களை இதில் இணைத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும். ரயில்வே திணைக்களம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் 1864ம் ஆண்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இலங்கையின் காசுப்பயிர்களான தேயிலையையும், கோப்பியையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெருமளவு செல்வத்தை சம்பாதிக்கும் எண்ணத்துடன் மலைநாட்டில் இருந்து அவற்றை காலதாமதமின்றி கொழும்புக்கு தருவிப்பதற்காக அவ்வாண்டில் கொழும்பு மாநகரையும், அம்பேபுஸ்ஸவையும் இணைக்கும் 54 கிலோ மீற்றர் நீளமான ரயில் பாதையை அமைத்து ரயில் சேவையை முதன் முதலில் ஆரம்பித்தார்கள். இலங்கை ரயில்வே திணைக்களத்தின் முதலாவது பிரதம பொறியியலாளராக இருந்த சேர்.கில்போர்ட் லின்சே மோல்ஸ்வர்த் பின்னர் இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றார்.

அன்று இலங்கை மக்கள் ரயில் வண்டிகளைப் பார்த்து அங்குரு கக்கா வத்துற பிபி துவன யக்கட யக்கா. அதாவது, நிலக்கரியை உண்டு தண்ணீரைக் குடித்து ரயில் பாதையில் ஓடும் இரும்பு பேய் என்று அதனை பார்த்து பயபக்தியுடன் அழைத்தார்கள்.

ரயில் சேவை பின்னர் 1867ல் கண்டி வரையிலும் 1874ல் நாவலப்பிட்டி வரையிலும் 1885ல் நானுஓயா வரையிலும் 1894ல் பண்டாரவளை வரையிலும் 1924ல் பதுளை வரையிலும் நீடிக்கப்பட்டது. 1880ல் மாத்தளை வரையிலும் 1895ல் கரையோர ரயில் பாதையும் 1905ல் காங்கேசன்துறை வரையிலும் 1914ல் மன்னார் வரையிலும் நீடிக்கப்பட்டது. 1919ம் ஆண்டில் களனிவெளிக்கு சிறிய ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1926ல் புத்தளம் வரையில் ரயில் பாதை ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு, திருகோணமலைக்கு 1928ம் ஆண்டில் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொற்காலம் என்று கூறுமளவுக்கு சிறப்புற்று விளங்கிய காலம் 1955ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலமாகும். அப்போது ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளராக இருந்தவர் பீ.டி.ரம்பால என்ற திறமைமிக்க பொறியியலாளராவார். இவரது காலத்திலேயே நிலக்கரியைப் பயன்படுத்தும் நீராவி என்ஜின்களுக்கு பதிலாக டீசல் மூலம் ஓடும் என்ஜின்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இவ்விதம் சிறப்புற்று விளங்கிய ரயில்சேவை 1980ம் ஆண்டில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தினால் சீர்குலைந்து போனது. அன்று ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜயவர்தன தனது அடக்குமுறை கொள்கையின் மூலம் பொது வேலை நிறுத்தத்தை சீர்குலைத்து அதில் சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கா னோரை பதவி நீக்கம் செய்தார். இதனால், ரயில்வே திணைக்களமே மிகவும் பாதிப்புக்குள்ளானது. ரயில்வே திணைக்களத்தில் இருந்து நூற்றுக்கணக்கான திறமைமிக்க ரயில்வே நடத்துனர்கள், புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள், என்ஜின் சாரதிகள் மற்றும் பொறியியலாளர்கள் ஆகியோர் பதவிநீக்கம் செய்யப்பட்டு வீசியெறியப்பட்டனர்.

அப்போது ரயில்வே சேவைக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் பொரளை வனாத்தமுல்லையில் இருந்த படிப்பற்றவர்களை நூற்றுக்கணக்கில் ரயில்வே ஊழியர்களாக சேர்த்துக் கொண்டார்.

ரயில் சேவையில் இருந்துவந்த நல்லொழுக்கம் இந்த புதிய ஊழியர்கள் சேவையில் சேர்க்கப்பட்டதையடுத்து சீர்குலைந்து போயிற்று. இதனால், எதற்கெடுத்தாலும் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம், அடையாள வேலைநிறுத்தம் போன்றவற்றில் ஈடுபட்டார்களே ஒழிய ரயில் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்கும் எண்ணம் இருக்கவில்லை.

காங்கேசன்துறைக்கான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மீண்டும் ரயில்வே திணைக்களத் தின் வருமானம் பழைய நிலைக்கு அதிகரித்து எங்கள் நாட்டின் ரயில்சேவையில் மறுமலர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கை எல்லோர் மனதிலும் வலுவூன்றி வருகிறது.

(எஸ். தில்லைநாதன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com