Contact us at: sooddram@gmail.com

 

எகிப்திய அரசியல் நிலவரம் கொந்தளிப்பில்

(பஸ்லி எம். அவ்ஃபு)(எம . ஏ . மொஸ்கோ)

தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் எகிப்திய ஜனாதிபதி முர்ஸி தேர்தலின் போது கிடைத்த வாக்குகள் 51 சதவீதத்தை யாவது அடையவில்லை. எவ்வாறான போதிலும் கூட எப்படியோ இவர் ஜனாதிபதியாக ஒருவருட காலம் செயல்பட அதிகாரிகள் அதிகாரம் வழங்கினர். இதன் மறுபக்கம் சரியாக எகிப்து நாட்டு வாக் காளர்களில் பாதிப்பேர் அல்லது அரைவாசி சனத்தொகையே முர்ஸிக்கு வாக்களிக்கவில்லை என்பதனை காட்டுகின்றது. அல்லது தமது ஆதரவை வழங்காமல் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புக்கு எதிர்ப்பை காட்டினார்கள் என்ற முடிவுக்கு வரலாம். முப்பது வருடகால முபாறக் அரசினை கவிழ்ப்பது முர்ஸிக்கும் அவரது அமைப்புக்கும் மக்களுடன் சேர்ந்த இராணுவ ஆதரவை வழங்கியது.

ஜனாதிபதியாக முர்ஸி நியமிக்கப்படு வதற்கும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு நிதியும் சுதந்திரமும் என்ற தனது அரசியல் கட்சியினை ஆட்சிக்கு கொண்டுவரவும் முழு ஆதரவையுமே இராணுவம் அன்று முர்ஸிக்கு வழங்கியது.

நாட்டு மக்களின் பொதுவான கோரிக்கைகளு க்கு மதிப்பு அளிக்கும் நோக்கிலேயே இறுதிக் கட்டத்தில் இராணுவம் நாட்டு மக்களுடன் சேர்ந்து கொண்டது.

திடீரென முர்ஸியை ஆட்சியில் இருந்து வீழ்த்தும் நோக்கத்துடன் இராணுவம் செயல்படவில்லை. இக்கட்டான ஒரு நிலைக்கு நாடு செல்வதனை நன்றாக உணர்ந்த இராணுவம் அதன் பாரதூரமான விளைவுகளை கருத்திற்கொண்டே இந்த திட்டத்தினை அமுல்படுத்தியது.

முர்ஸியின் கவனமும் நோக்கமும் வேறு ஒரு திசையினை நோக்கிச் சென்றன. இஸ்லாமிய அரசியல் கலாசாரத்தையும் பிராந்தியத்தில் ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கு முன்மாதிரி ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் செயல்பட்டதால் இந்த இக்கட்டான நிலைமை உருவாகியது.

குறிப்பாக இவரும் ஏனைய அரசியல் கட்சி களின் தலைவர்களை போன்று தமது ஆதரவாளர் களுக்கே சலுகைகளை வழங்கினார். இதனாலும் மக்கள் கோபப்பட்டனர்.

நாட்டு சனத்தொகையில் பத்து சதவீதத்தினை கொண்டுள்ள கிறிஸ்தவர்கள் கவனிக்கப்படவில்லை. மாறாக முர்ஸி ஜனாதிபதி யாக இருந்தபோதே எகிப்தில் பல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு நாசம் விளைவிக்கப்பட்டது. இஸ்லாமிய சமூகத்து அமைப்பு நடந்த இந்த விடயங்கள் தொடர்பாக எந்த கருத்துக்களையும் கூறவில்லை.

கடந்த வாரங்களில் நடந்த படுகொலைக்கு இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பே காரணம் என்று கூறவேண்டும். இதில் அதிகளவில் கொல்லப்பட்டவர்களும் காயமுற்றவர்களும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் அங்கத்தவர்களாவர்.

இடைக்கால அரசுக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் ரமழான் மாதம் பூராகவும் அதனைத் தொடர்ந் தும் சில நாட்கள் நீடித்தன.

இராணுவம் இந்தக் காலம் பூராகவும் பொறுமையுடனும் அமைதியுடனும் இருந்து இவர்களுக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவிக்க இடம் வழங்கியது இராணுவத்தின் இந்த ஜனநாயக நடவடிக்கையின் காரண மாக அது மக்களுக்கு எதிராக போராடக் கூடிய சக்தியினை இழந்துவிட்டது என முர்ஸி ஆதரவாளர்கள் தப்புக் கணக்கு போட்டனர்.

காலப்போக்கில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிலும் புது சிந்தனைகள் உண்டாகின. இவை ஸ்தாபகர் ஹஸ்னுல் பன்னாவின் கொள்கைகளுக்கு மாற்றமாக இருக்க வும் கூடும்.

எப்படியும் இவை அரசியல் கலாசாரத்தில் இயற்கையாக ஏற்படக் கூடிய விடயங்கள் என்பதினால் இவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

முர்ஸி தனித் தீர்மானம் எடுக்க கூடியவர் அல்ல. இவர் ஒரு அமைப்புக்கு தலைவர். அறிவாளிகள் கூட்டமும் கொள்கையினும் - மார்க்க விசுவாசத்தினால் நம்பியவர்களும் ஒன்று சேர்ந்த ஒரு இயக்கமாகவே இறுதியில் இந்த அமைப்பு வடிவம் பெற்றது.

அடிமட்டத்தில் படிக்காத தனது அங்கத்தவர் களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இஹ்வானால் முஸ்லிமீன் என்ற இந்த அமைப்பு போதித்தது வேறு. படித்தவர்களுக்கும் வெளியுலக மக்களுக் கும் இவர்கள் போதித்தது ஒன்று.

எனவே வன்முறைகளை தேவைப்படும் போது உண்டாக் கவும் பின்னர் கலவரங்களை பரவச் செய்யவும் ஒரு கூட்டம் இதில் இருந்து செயல்பட்டன. இதற்கான முயற்சியினை காலப்போக்கில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு ஏற்படுத்த வேண்டிய நிலைமையினை உண்டாக்கி கொண்டது எனலாம்.

முர்ஸியின் ஒரு வருடகால நிருவாகத்தில் எகிப்தியர்கள் எதனையும் பெரிதாக இவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. இந்த ஒரு வருட காலத்திற்குள் செய்ய முடிந்ததனை மாத்திரமே அவர்கள் எதிர்பார்த்தனர்; முர்ஸி அரசிடம் கேட்டனர்.

இதனால் ஆத்திரமும் கோபமும் அடைந்த முர்ஸி நிருவாக அமைச்சர்கள் முப்பதுவருட கால பிரச்சினைகளுக்கு ஒரு வருட காலத்துக்குள் தீர்வு கேட்கின்றனர் என்று கூறி தீர்க்க கூடியதாக இருந்த பிரச்சினைகளை மூடி மறைத்துவிட்டனர்.

இராணுவம் ஒரு வருட காலத்துக்குள் நாட்டில் தேர்தல்கள் நடைபெறும் எனவும் அதில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பும் பங்கெடுக்க முடியும் எனவும் கூறியது.

இதனை யும் ஏற்றுக்கொள்ள முர்ஸி ஆதரவாளர்கள் மறுத்தனர். எனவே இராணுவத்துடன் எல்லா விடயங்களிலும் முரண்பாடாகவும் எதிர்ப்புடனேயே இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு நடந்து கொண்டது.

தனக்கு சவால் விடுப்பதனை விரும்பாத இராணுவம் தொடர்ந்து இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் அங்கத்தவர்களை கைது செய்து வருகின்றது. முக்கியமான மூவர் இன்று இராணுவத்தினால் பாதுகாப்பான இடங்களில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தலைவர் புதிய சில தினங்களுக்கு முன்னர் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார். பிரபல வர்த்தகரான இவர் பெரும் செல்வந்தரும்கூட. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு வழிகாட்டி யாகவும் பணம் செலவு செய்பவராகவும் இவர் உள்ளார்.

இவரது இந்த கைது தொடர்ந்தும் இராணுவம் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பில் கடுமையாக இருக்கும் என்பதனை தெளிவாக காட்டியுள்ளது. இன்று தலைவர் பதவியின் வெற்றிடத்தினை ஈடு செய்ய பலர் ஆசைப்பட்டுள்ளனர். இது இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல்களை ஏற்படுத்த கூடும்.

எகிப்து விவகாரத்தில் அமெரிக்கா இன்னமும் மிகவும் கவனமாக நடந்துவருகிறது. உயர் அதிகாரிகள் பலர் கெய்ரோவுக்கு விஜயம் செய்துள்ளனர். பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதுவரைக்கும் நல்ல முடிவுகள் வெளிவருவதாக இல்லை.

எகிப்திய பொருளாதாரத்தில் சுமார் முப்பது சதவீதத்தினை செல்வாக்காக கொண்டுள்ள எகிப்திய இராணுவம் ஓர் அரசியல் சக்தியாகவே எகிப்து அரசியலில் சங்கமித்துள்ளது.

ஒருமாதம் நடைபெறும்போது அங்கு வாழ்ந்த மக்களுக்கு இது அவர்களது இயல்பு வாழ்வுக்கு பல கஷ்டங்களை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து பேசுவது இவர்களால் முடியாத காரியமாக இருந்தது.

இவர்களது வீடுகளுக்கு செல்லும் பாதைகள் இந்த போராட்டக்காரர்களினால் நிரம்பி வழிந்தன. அவசர அவசிய தேவைகளு க்கு வாகனங்களை கொண்டுவருவது, கொண்டு செல்வது என்பன முடியாத காரியங்களாக இருந்தன. இதனால் கோபப்பட்ட இவர்கள் இராணுவத்துடன் கூட்டாக சேர்ந்து இவர்களை விரட்டியடிக்க ஆரம்பித்தனர்.

இன்று எகிப்தில் இடம்பெறும் விடயங்களில் மிகவும் குறைந்தளவிலான செய்திகளே எமக்கு கிடைக்கின்றன. இருதரப்பினரும் நாசகாரச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இது இன்று பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட் டுள்ளனர். கிராமப்புறங்களிலும் இந்த அரசியல் வேறு குழுக்களுக்கிடையே சச்சரவுகள் ஏற்படுத்தி யுள்ளது. ஆக இன்று உள்நாட்டுப் போர் நடை பெறும் நிலைமைக்கு இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு இன்றைய எகிப்தினை மாற்றியுள்ளது.

இடைக்கால அரசில் பங்குகொள்ளுமாறு இராணுவம் பல தடவை முர்ஸி ஆதரவாளர் களுக்கு அழைப்பு விடுத்தது. நாட்டில் சுமுக நிலையினை உருவாக்க ஜனநாயக ரீதியில் இராணுவம் தொடர்ந்தும் பல தடவைகள் விடுத்த கோரிக்கைகளை இஸ்லாமிய சகோதரத்துவம் ஏற்க மறுப்பு தெரிவித்து தட்டிக்கழித்தது. இது இன்றைய அரசியல் கொந்தளிப்புக்கு காரணமாகும்.

ஏனைய நாட்டு இராணுவங்களை போன்று எகிப்தில் இராணுவம் முர்ஸி அரசாங்கத்தினை கவிழ்த்ததன் பின்னர் தனது கைவசம் அரசை வைத்திருக்கவில்லை.

அடுத்த தினத்திலேயே உயர் நீதிபதி தலைமையில் இடைக்கால அரசாங்கத்தினை நிறுவி அரசை அவர்களிடம் கையளித்தது. இது எகிப்து நாட்டு இராணுவ தளபதி அல் பத்தாஹ் kப் ஸிய்யின் உயர் கலாசாரத்தை காட்டுவதாக உள்ளது. இராணுவம் ஆட்சியில் இருக்க வேண்டிய ஆசையில் முர்ஸியை அகற்றவில்லை என்பதனை இது எடுத்துக்காட்டுவதாகவுள்ளது.

எகிப்தின் சுயஸ் கால்வாய் அமெரிக்காவுக்கு அவசியமானதாகும். பாரiக வளைகுடாவுக்கு செல்லவும் இந்து சமுத்திர நாடுகளுக்கும், ஆப்கானிஸ்தானை அடையவும் இது முக்கியமானதாகும். எனவே இருதரப்பினருடனும் ராஜதந்திரத்துடன் நடந்துகொள்ள அது முயற்சி செய்யும்.

அரபு நாடுகளும் இஸ்லாமிய உலகமும் எகிப்திய விவகாரத்தில் இரண்டாக பிளவுபட்டுள் ளன. சவுதி அரேபியா தலைமையிலான ஒரு சில நாடுகள் இராணுவத்திற்கு ஆதரவு வழங்கவும் பெருமளவு பணத்தை வழங்கவும் தயார் நிலையில் உள்ளன. இதற்கு ஆதரவு தெரிவித்த ஐக்கிய அரபு எமிரெட்ஸ¤ம் உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

எகிப்திய விவகாரத்தில் இராணுவத் தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் k-ஸி மோஹலாய சாம்ராஜ்ய மன்னர் அக்பருக்கு அறிவுரை வழங்கிய சிந்தனையாளர் அபூ அல் பஸ்ல் அவர்கள் எழுதிய கதாபான அய்னிய் அக்பரிய் யின் அறிவுரைக்கு அமைய நடப்பவ ராக காணப்படுகிறார்.

தனது அய்னிய் அக்பரியில் அல்லது அக்பரின் சாம்ராஜ்ய நிறுவனங்கள் என்ற புத்தகத்தில் அபுல் பஸ்ல் இப்படியாக எழுதுகிறார்.

ஒரு சிறந்த நாட்டுத்தலைவன் எதிர்ப்புக்கான எல்லா காரணங்களையும் கண்டறிந்து அவற்றிற்கு நல்ல முறையில் சாதகமாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வன்முறை மூலமாக தீர்வு காண கூடாது என எச்சரித்துள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com