Contact us at: sooddram@gmail.com

 

நவநீதம்பிள்ளை

உடைந்துபோன விம்பம்

பல மாதங்களாக பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின், இலங்கைப் பயணம் முதற்கட்டத்தை நிறைவு செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வந்த நவநீதம்பிள்ளை, கொழும்பில் ஒரு சுற்றுச் சந்திப்புக்களை நடத்தி விட்டு, நேற்றுடன் வடபகுதிக்கான பயணத்தையும் முடித்துள்ளார். நேற்று முன்தினமிரவே திருகோணமலை வந்தடைந்த அவர், இன்று கிழக்கில் பயணங்களை மேற்கொண்ட பின்னர், கொழும்பு திரும்பி, அரசாங்கத் தரப்புடனும், எதிர்க்கட்சிகளுடனும், அடுத்த கட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

நவநீதம்பிள்ளை இலங்கையில் கால் வைக்க முடியாது, தமது பிணங்களின் மீது தான் அது நடக்கும் என்று மிரட்டி வந்த சிங்கள அரசியல்வாதிகள் எவருமே, இப்போது வாய்திறக்காமல் மௌனமாக இருப்பதைக் காணமுடிகிறது. விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்ற அமைச்சர்களே கடந்த காலங்களில் நவநீதம்பிள்ளை இலங்கை வந்து நிலைமைகளைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படக் கூடாது என்று எச்சரித்து வந்தனர்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், கடந்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் இதுபோன்ற எத்தனையோ மிரட்டல்களை விடுத்திருந்த போதிலும், நவநீதம்பிள்ளை கொழும்பில் கால் வைத்த போது எல்லோருமே பெட்டிப் பாம்பாக அடங்கி விட்டார்கள். நவநீதம்பிள்ளை கொழும்பு வந்ததும், பெரியளவில் அவருக்கு எதிரான போராட்டங்களை நடத்தப் போவதாக எச்சரித்த எவருமே இதுவரை அவ்வாறான போராட்டங்களை கொழும்பில் நடத்தவில்லை.

கடந்த திங்கட்கிழமை, ராவண பலய அமைப்பு மட்டும் ஒரு போராட்டத்தை கொழுமுபிலுள்ள இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதியின் செயலகம் முன்பாக நடத்தியிருந்தது. அதில் கூட, வழக்கமாக, சிங்களத் தேசியவாத அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்கும் அளவுக்கு பெருமளவிலானோர் பங்கேற்கவில்லை.

சுமார் 100இற்கும் குறைவானோரே அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை விட பலமடங்கு அதிகமான பொலிசாரே அங்கு பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தனர். சிங்களத் தேசியவாதத் தலைவர்களும் அமைப்புகளும்,  நவநீதம்பிள்ளையின் வருகையை விரும்பாது போனாலும், இத்தகைய கட்டத்தில் சகித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. சர்வதேச அமைப்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கொடுத்த பொறுப்பை நிறைவேற்றவே, நவநீதம்பிள்ளை இலங்கை வந்துள்ளார். அவரது பயணத்தைக் குழப்பும் வகையில் மேற்கொள்ளக் கூடிய எந்த நடவடிக்கையும் இலங்கைக்கு மேலும் சிக்கலையே கொண்டு வரும் என்ற யதார்த்தத்தை சிங்களத் தேசியவாத தலைமைகள் ஓரளவுக்குப் புரிந்து கொண்டுள்ளன என்பது முதல் காரணம்.

அதற்காக, நவநீதம்பிள்ளையின் வருகையை அவர்கள் ஏற்றுக் கொள்வதாக கருத முடியாது. நவநீதம்பிள்ளையின் பயணத்துக்கு அவர்கள் ஒத்துழைக்காது போனாலும், வேறுவழியின்றி அமைதியாக இருந்து கொள்கிறார்கள்.

அடுத்து, போருக்குப் பிந்திய மனித உரிமை மீறல்கள் தெற்கிலுள்ள மக்களுக்கும் பல உண்மைகளை புரிய வைத்துள்ளது. குறிப்பாக அண்மையில் வெலிவேரியவில் நடந்த தாக்குதல் சம்பவம், போரின் போது என்ன நடந்திருக்கும் என்று சிங்கள மக்களை சிறியளவிலேனும் யோசிக்க வைத்துள்ளது.

இதனால், நவநீதம்பிள்ளையின் வருகை இலங்கைக்குப் பாதகமானது என்ற கருத்து, தெற்கில் வலுக் குறைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலைமைக்குக் காரணம், அரசாங்கமும், இராணுவமும் தான் என்பதில் சந்தேகமில்லை.

ஒருவகையில், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இது கைகொடுக்கும் ஒன்றாகவும் கருதலாம். போர் முடிவுக்கு வந்த பின்னர், போர்க் குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, தெற்கில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

போரில் வெற்றியை ஈட்டிக் கொடுத்த படையினரை, குற்றக் கூண்டில் நிறுத்த விடமாட்டோம் என்று அரசாங்கமே, குரல் எழுப்பி தெற்கிலுள்ள மக்களை தூண்டிவிட்டது. ஆனால், போரில் போது நடந்த மீறல்களுக்கு பொறுப்புக்கூறியே ஆக வேண்டிய சூழல் மெல்ல மெல்ல உருவாகி வருவதை அண்மைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

உலக நாடுகள் இதனை வலியுறுத்திய போதெல்லாம், அதற்கு எதிராக குரல் கொடுத்த அரசாங்கம், சர்வதேச அழுத்தங்களைத் தவிர்ப்பதற்காக மெல்ல மெல்ல தனது பிடியைத் தளர்த்த வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது, திருகோணமலை மாணவர்கள் கொலை தொடர்பான விசாரணை உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் தனது இறுக்கமான பிடியைத் தளர்த்தியுள்ளது.

இவை தொடர்பாக முற்றிலும் சுதந்திரமானதாகவோ, நடுநிலையானதாகவோ விசாரணைகளை மேற்கொள்ளத்தக்க பொறிமுறைகளை அரசாங்கம் உருவாக்காது விட்டாலும், ஓரளவுக்கேனும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய விசாரணைகளில் விளைவாக, படையினர் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டால் கூட, அதற்கு தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புக் கிளம்பப் போவதில்லை என்பதை, நவநீதம்பிள்ளையின் பயணம் பெரும்பாலும் சுமுகமாகவே இடம்பெறுவதைக் கொண்டு உணர முடிகிறது.

நவநீதம்பிள்ளையையும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையையும், இலங்கைத் தீவையே விழுங்கப் போகும் பெரிய பூதமாகக் காண்பித்து, தெற்கிலுள்ள மக்களை மிரட்டி வந்த அரசாங்கத்துக்கும் சரி, சிங்களத் தேசியவாத சக்திகளுக்கும் சரி, இனிமேல் அத்தகைய விம்பத்தை காட்ட முடியாது. மிரட்ட முடியாது.

அதுபோலவே, தமது பிணங்களில் மீது கால்வைத்து தான் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வரமுடியும் என்று மிரட்டியவர்களாலும் இனிமேல் அத்தகைய மிரட்டல்களை விடுக்க முடியாது.

(சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com