Contact us at: sooddram@gmail.com

 

இன முரண்பாடுகளைக் களையும் பணியில்
தமிழ், சிங்கள தரப்புகளுக்கு சமபங்கு உண்டு

கெளரவ சபாநாயகர் அவர்களே!

அடுத்த ஆண்டுக்கான முக்கியத்துவம் வாய்ந்த வரவு செலவுத் திட்டம்..... சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றும்போது, நாட்டின் அபிவிருத்தியையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தையும் அடிப்படையாகக் கொண்டதாக இந்த வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த வகையில், இந்த வரவு செலவுத் திட்டமானது எம்முடைய எதிர்காலத்தை ஸ்திர மாக்கும் அடிப்படைகளைக் கொண்டதாக அமையவேண்டும் என விரும்புகிறேன். மாகாண மட்டத்திலான அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் பிரதான விடயங்களாக உள்ளடக் கப்பட்டமையானது அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படைகளை வெளிக்கொண்டு வருவதாகவுள்ளது.

இது பாராட்டுதற்குரியது. நடைமுறைச் சாத்தியமான வழிகளின் ஊடே அதிகாரப் பரவலாக்கம் என்பதை நிரூபித்துச் செல்லும் செயற்பாடாக இது அமைகிறதென நம்புகிறேன்.

ஆனால், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் ஒரு வரவு செலவுத் திட்டம் முதன்மை யளித்திருக்குமானால் அது வரவேற் கப்பட்ட வேண்டியதாகும். அதேவேளை நாட்டின் பாதுகாப்பையும் அதனுடைய அபிவிருத்தியையும் அதனுடைய முன்னேற்றத்தையும் அது சமநிலையில் பேணுவதாக இருந்தால் அந்த வரவு செலவுத் திட்டத்தை நிச்சயமாக எவரும் வரவேற்க முடியும்.

நாடு இப்போதுதான் போரிலிருந்து மீண்டிருக்கிறது. ஆனால், அது இன்னும் முழுமையான இயல்பு நிலைக்கு வந்துவிடவில்லை. முப்பது ஆண்டுகாலப் போரின் பாதிப்புகள் என்பது சாதாரணமானதல்ல. ஆகவே அதை மாற்ற வேண்டிய பொறுப் பையும் கடமையையும் இந்த வரவு செலவுத் திட்டமும் இந்த மன்றும் கொண்டிருக்கின்றன. இதை இங்கே நான் அழுத்தத்துடன் வலியுறுத்த விரும்புகிறேன்.

வடக்கு கிழக்கின் நிலைமைகள் என்பது இந்த நாட்டின் ஒரு பகுதியினுடைய நிலைமைகளேயாகும். அது இந்த நாட்டின் யதார்த்தத்தையும் முழுமையையும் பிரதிபலிப்பதாகவும் இருக்கும். அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் எல்லாவற்றிலும் சமநிலைத்தன்மை பேணப்படும்போதே முழு நாட்டினதும் அபிவிருத்தியும் முன்னேற்றமும் சாத்தியமாகும். வடக்குக் கிழக்கில் போரின் பாதிப்புகளை நிவர்த்திக்கும் பணி மிக முக்கியமானதாக இருக்கிறது.

இதற்காக அரசாங்கம் வடக்கின் வசந்தம் திட்டம், மற்றும் மீள் குடியேற்ற அமைச்சு ஆகியவற்றைக் கரிசனையோடு உருவாக்கியிருப்பதையும் இங்கே நான் கவனப்படுத்த விரும்புகிறேன். ஆனால், வடக்கின் வசந்தம் துரித அபிவிருத்திப் பணிகளுக்கும் மீள்குடியேற்ற அமைச்சின் நடவடிக்கைக ளுக்கும் ஒரு கால எல் லையை நிர்ணயம் செய்து போரினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கின் நிலை மைகளை மீளமைப்பதுடன் அந்த மக்களைப் பூரணமான இயல்புவாழ்க்கையில் ஈடுபடுத்தவும் வேண்டும்.

இதற்கு இந்த இரண்டு தரப்புகளின் செயற் பாடுகளையும் ஒருங்கிணை த்து, தேசிய அபிவிருத்தியின் சமநிலைக்கேற்ப அவற்றின் செயற்பாடுகளை வழி காட்டுவதற்கு பாராளுமன்றக் குழுவொன்றை அந்தப் பிரதேசங்களில் அமைக்க வேண்டும் எனவும் கேட் டுக்கொள்கிறேன். இதன் மூலம் இந்த மக்களின் நடைமுறைப் பிரச்சினை களுக்கான தீர்வுகளை உடனடியாகக் காணக் கூடியதாக இருக்கும். அத்துடன் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த மக்கள் தங்களின் பாதிப்புகளிலிருந்து விரைவாகவே மீளக்கூடிய வாய்ப்பும் உருவாகும்.

மக்களுக்கான வரவு செலவுத் திட்டத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமானால், இன முரணையும் சமூக முரண்களையும் களையவேண்டும். இன முரணையும் சமூக முரண் களையும் களைய வேண்டிய பொறுப்பு சிங்களத்தரப்பிற்கும் தமிழ்த் தரப்பிற்கும் சமவிகிதத்தில் உண்டு.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் கெளரவமான வாழ்வு, சுத்தமான சுற்றாடல், பிள்ளைகளின் சிறந்த வாழ்க்கை என்பவற்றை இந்த அரசு வழங்கும் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் எம்மைத் தெரிவு செய்துள்ளனர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விருப்பத் தையே தமிழ்பேசும் மக்களும் கொண்டிருக்கின்றனர். இந்த அடிப்படையில் யுத்தத்தால் பாதிக் கப்பட்ட மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளையும் இந்தச் சபைக்குக் கொண்டு வரவேண்டியது அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எனது கடமையாகிறது.

வறுமையை ஒழிப்பது இந்த வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய இலக்காக முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடைவதற்கான மார்க் கங்களாக விவசாயமும் கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தியும் கடற்றொழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு நாட்டில் இவ்வாறான அபிவிருத்திக்கு நுண்நிதிக் கடன் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றமை உலகப் பொருளாதாரக் கோட்பாடாகியுள்ளது.

இந்த அடிப்படையில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வடக்கின் வசந்தம் கடன் திட்டம் இந்த அரசினால் உருவாக்கப்பட்டது. எனினும் போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மக்கள் இதன் பயனை அடைய முடியாத நிலைமை குறித்து என்னுடைய கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் 100 க்கும் குறைவானவர்களே இந்தத் திட்டத்தின் பயனை அடைந்துள்ளனர். எனவே இந்த வசந்தம் திட்டத்தை போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்குக் கிடைக்கக்கூடிய வகையில் மேலும்நிதி ஒதுக்கீடொன்றைச் செய்து தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கெளரவ சபாநாயகர் அவர்களே:-

மீள் குடியமர்ந்துள்ள மக்கள் தமது இயல்பு வாழ்க்கைக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் திரும்பும் வகையில் விவசாயத்திலும் கடற்றொழிலிலும் பல்வேறு வகையான உதவித் திட்டங்களை பெற்றுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு, மிகப் பெரிய பரப்பளவில்- அதாவது 54, 889 ஏக்கர் நெற் செய்கையை மேற்கொள்ளக்கூடிய ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எமது அரசினுடைய சாதனையாகவே கருதுகிறேன். இதற்குப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ காட்டிவரும் அக்கறைகள் முக்கியமானதாகும். எனினும் இந்தப் பயிர்ச் செய்கையின் விளைவுகளை உரிய முறையில் சந்தைப்படுத்தி அவர்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவவேண்டியதும் எமது கடமையாகிறது.

இந்த அடிப்படையில் இந்த மாவட்டங்களிலுள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களை நிதி ரீதியாகப் பலப்படுத்தி இவர்களுக்கான நெற்களஞ்சியங்களையும் அரிசி ஆலைகளையும் உருவாக்க உதவ வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கு உள்ளது.

இதற்காக ஒவ்வொரு சங்கமும் தலா 20 மில்லியன் ரூபாவை மதிப்பீடு செய்துள்ளன. இந்த நிதியை குறைந்த வட்டியில் நீண்டகால அடிப்படையில் ஏற்பாடு செய்து வழங்கப்படவேண்டும் என இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

இதேபோன்று பால் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றுக்கான அபிவிருத்திக்குரிய உதவிகளையும் மீன்பிடிக்கான உதவிகளையும் வாழ்வாதாரத்துக்காக இந்த மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவற்றையும் கூட்டுறவுக்கு ஊடான உதவிகளாக மதிப்பீடுகளின் அடிப்படையில் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் தேசத்திற்காக தம்மை அர்ப்பணித்த படை வீரர்களுக்கான சிறப்பான செயற்திட்டங்கள் உள்வாங்கப் பட்டுள்ளமையைப் போன்று போரினால் பாதிக்கப்பட்ட உடல் ஊனமுற்றவர்களுக்கும் அநாதரவாக்கப்பட்ட சிறுவர்களுக்கும் துணைவரை இழந்த பெண்களுக்கும் சிறப்பான செயற்திட்டங்கள் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள் கிறேன். வறுமையை ஒழித்தல் என்ற இலக்கு நோக்கிய எமது தேசத்தின் பயணத்தில் பல்வேறு வகையான தடைகளைக் கடக்கவேண்டியுள்ளது.

குறிப்பாக இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப் பட்டதன் பின்பும் தமது வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்வதற்கான அடிப்படைகளை இன்னும் பெற்றுக்கொள்ளாத புறச்சூழ்நிலைகளையும் இந்த மன்றின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டியுள்ளது.

தற்போது போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங் களின் சிறுவர்கள், இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலம் குறித்த அக்கறையுடன் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களும், நாமல் ராஜபக்ஷ அவர்களும் செயற்பட்டு வருகின்றனர்.

நேரடியாக பாடசாலைகளுக்கு வருகைதந்து அவர்களின் குறைகளைத் தீர்ப்பதில் அவர்கள் காட்டும் அக்கறை நன்றிக்குரியதாகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புக்காக நாம் விடுத்த வேண்டுகோளை அடுத்து பல்வேறு உதவித் திட்டங்களோடு, 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு இந்தியா உதவ முன்வந்திருப்பதை இங்கு நன்றியோடு பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.

இப்போது உருவாகியிருக்கும் யுத்தமற்ற சூழ்நிலையானது, நாட்டையும் மக்களையும் புதியதொரு வாழ்க்கைச் சூழலுக்குள் பிரவேசிக்க வைக்க வேண்டும். நாடு இன்னொரு இருண்ட யுகத்தினுள் எக்காரணம் கொண்டும் சிக்கமுடியாது.

இதற்கு முரண்பாடுகளைக் களைய வேண்டும். முரண்பாடுகளைக் களைவதும் பகையை மறப்பதும் சமாதானத்துக்கான அடி வைப்பாகும் என உலகம் வலியுறுத்தி வருகிறது. இது ஒரு அடிப்படையான உண் மையாகும். பகையை வளர்ப்பது குறுகிய அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படலாம். ஆனால் அது நிச்சயமாக நாட்டையும் சமூகங்களையும் பேரழிவிற்கே கொண்டு செல்லும். நடந்த பேரழிவுகள் இலங்கைத் தீவில் இருக்கும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் பாடங்களாகும்.

ஆகவே அமைதிக்கான வழி முறைகளைப் பற்றிச் சிந்திக்கும்போது முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான அவசியமும் அதற்கான அரசியற் தீர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. வரவு செலவுத் திட்டத்தின் அடிப்படையில் இந்த நாட்டின் முரண்பாடுகளுக்கான தீர்வும் அமைதியும் இணைந்திருக் கின்றன. நிரந்தர அமைதியிலும் பாரபட்சமற்ற நடைமுறைகளிலும் தான் ஒரு நாட்டின் அபிவிருத்தியும் எதிர்காலமும் தங்கியிருக்கின்றன என்பதை தெளிவுபடுத்தி அமர்கிறேன்.
நன்றி.

சந்திரகுமார் (ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com