Contact us at: sooddram@gmail.com

 

சுயமரியாதைத் திருமணம் என்பது... 

பிறப்பால் பிராமணரான ஒருவருக்கும் தேவதாசி தாய்க்கும் பிறந்த ஒரு பெண் ணுக்கும் திருமணம் என்றால் அதுவும் 1925ஆம் ஆண்டு நடந்ததென்றால் அது சாதாரணச் செய்தி அல்ல. அந்தச் செய்தி அந்தந்த சாதிக்குள்ளும் ஒட்டுமொத்த சமூகத்துக்குள்ளும் எவ்விதமான எதிர் வினைகளை தோற்றுவித்திருக்கும் என் பதை கூறவும் வேண்டுமோ? இதுதான் முதல் சுயமரியாதைத் திருமணம் என்று முனைவர் பி.எஸ். சந்திரபாபு தன் ஆய் வேட்டில் அடிக்கோடிட்டுப் பதிவு செய் துள்ளார். சுயமரியாதைத் திருமணம் என்றால் என்ன? இக்கேள்விக்கு வெ. ஆனை முத்து கூறுகிறார்.இது பிராமணக் குருக்களை அழைக்காமல், அர்த்தமற்ற பழக்க வழக்கங்கள், சடங்குகள், எதையும் செய்யாமல் மூடப்பழக்கங்க ளை மேற்கொள்ளாமல் நடத்தப்படுகிற ஒரு சீர்திருத்த முறையிலான திருமணத் தின் சிறப்பு வகையாகும். மேலும் தேவை யற்ற வீணான செலவுகள் இல்லாத ஒரு எளிய முறைத் திருமணமாகும்”.

இந்தக் கருத்து ஆரம்பத்தில் இதே அளவில் உருப்பெறவில்லை. மாறாக பிராமணக் குருக்களுக்கு பதிலாக தமிழ்ப் பண்டிதர்களை வைத்து; சமஸ் கிருத மந்திரங்களுக்கு பதிலாக தமிழில் மந்திரங்கள் ஓதி திருமணம் நடத்து வதை சுயமரியாதை இயக்கம் துவக்கு வதற்கு முன்பே பெரியார் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். குறிப்பாக கைவல்யம் சுவாமியார் என்பவர் பிராமண மந்திரங் களை விமர்சித்தும் தமிழ் மந்திரங் களை உயர்த்திப் பிடித்தும் தமிழ்த் திருமண முறை ஒன்றை முன்னிறுத்தியும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். அத்தகைய திருமணங்களை நடத்தியும் வைத்தார். அப்போது குழந்தைத் திரு மணம் வழக்கில் இருந்தது. எனவே திரு மண வயதாக 16 வயதை நிர்ணயிக்கவும் அவர் வற்புறுத்தினார். இதனை பெரியா ரும் ஆதரித்தார்.

திருச்சியில் எஸ்.எம். பரமசிவத்தைச் செயலாளராகக் கொண்ட புரோகித எதிர்ப்பு லீக் இத்தகைய சுயமரியாதைத் திருமணத்தை பிரச்சாரம் செய்தது. ஆயினும் மக்களிடம் விரைவாக போய்ச் சேரவில்லை. இந்த சூழலில்தான் சுய மரியாதை இயக்கம் தோன்றியது தொட்டு சுய மரியாதைத் திருமணத்தை பிரச் சாரம் செய்யலானது. 1927ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் நாள் திருச்சியில்சுயமரியாதை அல்லது மூன்று நண்பர் கள்என்ற நாடகம் அரங் கேற்றப்பட்டது. கி.ஆ.பெ. விஸ்வநாதம் இந்த நாடகத்தை பொறுப் பேற்று நடத்தினார். கலப்புத் திருமணம், விதவை மறுமணம், இவை குறித்து இந்நாடகத்தின் பாத் திரங்கள் வலியுறுத்தின. மத புரோகி தர்கள் இல்லாமல் திருமணங்கள் நடத்தப் பட வேண்டுமென இந்நாடகம் பேசியது’. ஆக பிராமண புரோகிதர்களுக்கு பதிலாக தமிழ்ப் பண்டிதர்கள் நடத்தும் திருமணம் என்ற முந்தைய நிலையை விட மேலும் ஒரு படி முன்னேற காரண மான திருமண முறையாக இது முன் மொழியப் பட்டது.

இந்தச் சூழலில்தான் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அத் திருமணம் புதிய வரையறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்ட முதல் சுயமரியாதைத் திருமணம் என வரலாற்று ஏட்டில் பதிவா னது. குடியரசு ஏட்டின் துணை ஆசிரிய ரான சாரநாதன் என்ற பிராமணருக்கும் (பின்னர் பிராமண எதிர்ப்பில் அதி தீவிரம் காட்டிய குடியரசு ஏட்டின் துணை ஆசிரி யராக ஒரு பிராமணரே செயல்பட்டுள் ளார் என்பதை கவனிக்க வேண்டும்) பாலக்காட் டைச் சேர்ந்த தேவதாசிக்குப் பிறந்த லட்சுமிக்கும் இத்திருமணம் நடை பெற்றது. இதனை பெரியார் முன் னின்று நடத்தினார். இதில் எந்தச் சடங்குகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதைத் தொடர்ந்து காரைக் குடியில் முருகப்பா என்ற நாட்டுக் கோட்டை சமூகத்தைச் சேர்ந்தவருக்கும் மரகத வல்லி என்ற பொற்கொல்லர் சமூகத் தைச் சேர்ந்த ஒரு விதவைப் பெண்ணுக் கும் சுயமரியாதை செயல் வீரர் மூவலூர் ராமாமிர்தம் அம் மாள் முன்னிலையில் நடைபெற்ற திருமணம் இரண்டாவது சுயமரியாதைத் திருமணம் என வர லாற்று ஆசிரியர்கள் குறிக்கிறார்கள்.

சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியான பிரச்சாரம் காரணமாக இத்தகைய சுயமரியாதைத் திருமணங் கள் பெருக ஆரம்பித்தன. இதற்கு முன்பே சென்னையில் சமூகப்பணியாள ரான சின்னைய்யா செட்டியாரை செய லாளராகக் கொண்டுவிதவை மறுமண சங்கம்செயல்பட்டது என்பது ஆச்சரிய மான உண்மை. இன்றும் பெரும் பாலோர் தயங்குகிற ஒரு செயலில் 90 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அமைப்பே செயல்பட்டது என்றால் தமிழ கம் சமூக சீர்திருத்தத்தில் இயல்பாகக் கொண்டிருந்த அக்கறை புலனாகும். ராஜாஜி போன்ற பிராமண சாதியில் பிறந்த தலைவர்களும், ஹிந்து நாளேட் டின் ஆசிரியராக இருந்த சுப்பிரமணிய அய்யர் போன்றவர்களும் சமூக சீர்திருத் தத் திருமணங்களை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல சென்னையில் செயல் பட்ட தென்னிந்திய புத்த சங்கம் சார்பில் லட்சுமிநரசுவின் முன் முயற்சியால் சுயமரியாதை வகையிலான சீர்திருத் தங்கள் சில நடந்தன. திருமணம் செய்து கொண்டவர்கள் புத்த மதத்தைச் சார்ந் தவர்களாகவே இருந்தனர். எண்ணிக்கை அளவில் குறைவாக இருப்பினும் இத்த கைய திருமணங்கள் சமூக சீர்திருத்த இயக்கத்திற்கு வலுவூட்டுபவையாகவே அமைந்தன.

ஆரம்ப கட்டத்தில் நடைபெற்ற ஒரு சீர்திருத்த திருமணத்தில் அக்காள் தங்கை இருவருக்கும் ஒருவர் சடங்குகள் இல்லாமல் தாலி கட்டினார் என்பதும் இதில் பெரியார் கலந்துகொண்டார் என்பதும் பேராசிரியர் கேசவன் தருகிற செய்தி. ஆயினும் உள்ளடக்க ரீதியாக அதை முதல் சமூக சீர்திருத்த திருமண மாக ஏனைய வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்கவில்லை.

மேலும் ஆரம்பகட்ட இத்தகையத் திருமணங்களில் தாலி மறுப்பு இடம் பெறவில்லை. மங்கலநாண் அணிவிப் பது அப்போது விமர் சிக்கப்படவில்லை. மாறாக அதுவும் சுயமரியாதைத் திரும ணங்களின் ஒரு கூறாகவே இடம் பெற்றது.

1932ஆம் ஆண்டு நெ.து. சுந்தர வடி வேலு - டி.எஸ். காந்தம் திருமணம் தாலி இல்லாமல் நடைபெற்றது. திருமணம் பதிவு செய்யப்பட் டது. ஆயினும் 1967ல் அண்ணா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இன்றைய சுயமரியாதைத் திருமண சட் டம் அன்று இல்லாததால் அமலிலிருந்த சட்டத்திற்குள் அது பதிவு செய்யப்பட் டது.

மத புரோகிதச் சடங்குகள் மறுப்பு சாதி மறுப்பு, தாலி மறுப்பு, என படிப் படியாக முன்னேறியபோதும்; எளிமை யான திருமணம், ஆடம்பரம் இல்லாத திருமணம் என்பவை வலியுறுத்தப்பட்ட போதும்; வரதட்சணை இல்லாத் திரும ணங்கள் நடத்தப்பட்டதா என்பதை உறு தியாகக் கூற இயலவில்லை.

பெண்களுக்கு சொத்தில் சமபங்கு வழங்கும் சட்டம் அன்று இல்லை. ஆகவே அன்றையச் சூழலில் வரதட் சணை என்பதும் மறைமுகமாக சொத் தில் பங்குபெறுவதாகவே அமைந்தி ருக்கக் கூடுமோ அல்லது இக்காரணத் தால் இவ்விஷயம் பேசப்படாமல் போயி ருக்குமோ? அது மட்டுமின்றி அடித்தட்டு மக்களிடையேயும் உழைக்கும் மக்க ளிடையேயும் பிராமணரல்லாத பெரும் பாலான சாதியினரிடத்தும் அன்று வரதட்சணை பழக்கம் வழக்கத்தில் இல்லை. மாறாக ஆண்தான் பெண் ணுக்கு பரிசம் போட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த பண் பாடும் சமூகத்தில் ஒரு பகுதியினரி டத்தில் இருந்தது. பிராமணர் மற்றும் மேல்சாதியினரிடம்தான் வரதட்சணை என்கிற கொடிய தொற்றுநோய் இருந்தது. பின்னர் காலப்போக்கில் இது அனைத்து சாதியினரையும் தொற்றிக்கொண்டது.

சுயமரியாதைத் திருமணங்கள் பொதுவுடைமை இயக்கத்தினரால் மிகப் பெருமளவில் செய்யப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் சாதியை மீறிய காதல் திருமணங்களையும் கலப்புத் திரு மணங்களையும் பொதுவுடைமை இயக் கம் வலுவாக ஆதரித்தது. பொதுவு டைமை இயக்கத்தின் மூத்த தலைவர் கள் பி. ராமமூர்த்தி, என். சங்கரய்யா, கே.ரமணி, ஜீவானந்தம், ஆர். உமாநாத், என். வரத ராஜன், கே.டி.கே. தங்கமணி, ஆர். நல் லக்கண்ணு, கே.முத்தையா உட்பட ஏராளமான முன்னணி கம்யூனிஸ்ட் தலைவர்கள் சொந்த வாழ்வில் மற்ற வர்களுக்கு வழிகாட்டியாக சுயமரி யாதை திருமணம், சாதியை மீறிய கலப் புத் திருமணம் செய்துகொண்டனர்.

சுயமரியாதைத் திருமணங்களுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்த போதிலும் பின்னர் ஆதரவும் பெருக ஆரம்பித்தது. இத்திருமணங்களின் தன்மைக்குறித்து பெரியார் சொல்லுகிறபோது, இத்திரும ணங்களுக்கு 1950ஆம் ஆண்டு திரும ணம் மாதிரி, 1960ஆம் ஆண்டு திரும ணம் மாதிரி என்று சொல்லுங்களேன் என்று கூட ஒருகட்டத்தில் கூற ஆரம்பித்தார். காரணம் சாதி மறுப்பு, சடங்கு மறுப்பு மட்டுமல்ல, முழுமையான பெண்சமத் துவம் நோக்கி படிப்படியாக உயர்ந்த கட் டத்திற்கு இத்திருமண முறை பரிணாம வளர்ச்சிப் பெறவேண்டும் என விரும் பினார். அதையே வலியுறுத்தவும் செய் தார். இன்றைக்கு வாழ்க்கைத்துணைஎன்று கூறுகிற நிலைமை மாறிஇணைஎன்று கூறுகிற போக்கு ஒரு பக்கம் வளர்ந்துள்ளது.

மறுபக்கம், ஆடம்பரத் திருமணங்க ளும் லட்சக்கணக்கில் பணபேரங்களும் மிகுந்த திருமணங்களை ஒரு தலைவர் தலைமை தாங்கி நடத்துவதாலேயே அவை சுயமரியாதைத் திருமணங்களா கவோ முற்போக்குத் திருமணங்களா கவோ மாறிவிடுமோ? உண்மையில் சாதி-மத வேறுபாடு பார்க்காமல், சமூக அந்தஸ்து பார்க்காமல் பணச் செல் வாக்கு பார்க்காமல், வரதட்சணை வாங் காமல், பணபேரம் நடத்தாமல், மதச் சடங் குகள் இல்லாமல் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக ஆணும் பெண்ணும் காத லித்து கைப்பிடிக்கும் இனிய நாளே உண்மையான சுயமரியாதைத் திரு மணத்தின் துவக்கமாகும். அதை நோக் கிய பயணத்திற்கு 1920களில் போடப் பட்ட விதை எந்த அளவு பலன் தந்திருக் கிறது? இன்னும் பயணம் போகவேண்டி யது எவ்வளவு தூரம்?

(தீக்கதிர்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com