Contact us at: sooddram@gmail.com

 

தேசத்துரோகிகளை மக்கள் தண்டிப்பார்கள்

லங்கை ஜனாதிபதி பதவியை வகித்து வரும் மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி யாக இருந்து தனது நல்லாட்சியை கட்சி சார்பற்ற முறையில் மேற்கொண்டு வருகிறார். இவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாத்திரம் சொந்தமானவர் அல்லர். இந்நாட்டில் உள்ள சகல மக்களுக்கும் சொந்தமானவரே நாட்டின் ஜனாதிபதி ஆவார்.

உள்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல்கள் தோன்றும் போது, அரசாங்கத்தின் தலைவராக இருக்கும் ஜனாதி பதியை பொதுவாக கண்டித்து பேசுவது, ஜனநாயக பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு ஏற்புடைய ஒரு விடயமாகும்.

இன்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்றத்தில் அதிக ஆசனங் களை பெற்று அதிகாரத்தில் வீற்றிருக்கும் போது, ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர் தப்பித்தவறி எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் கூடுதலான ஆசனங்களை கைப்பற்றி அரசாங்க நிர்வாகத்தை பொறுப்பேற்றாலும், இதே ஜனாதிபதியே அடுத்து ஆறாண்டு காலத்திற்கும் ஜனாதிபதியாக இருப்பார்.

இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், சுயநல நோக்கத்துடன் அரசியல் லாபத்தை தேட எத்தனிக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில துஷ்ட சக்திகள் ஜனாதிபதிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக் கூடிய வகையில் வெளிநாடுகளில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் சக்திகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இத்தகைய தீயசக்திகள் தாங்கள் தங்கள் தாய்நாட்டிற்கே துரோகம் இழைக்கிறார்கள் என்ற தத்துவத்தை மறந்து செயற்படுவது உண்மை யிலேயே வேதனைக்குரிய விடயமாகும். இவ்விதம் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன ஒரு மன்னிக்க முடியாத குற்றத்தை இழைத்திருக்கிறார்.

இவர், ஜனாதிபதி லண்டன் செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே அங்கு சென்று பயங்கர வாதிகளை ஆதரிக்கும் ஒரு சிலரை சந்தித்து, ஜனாதிபதிக்கு எதிரான பிரசாரங்களை அங்கு முடுக்கி விட்டார் என்பதற்கான ஆதாரங்கள் இப்போது அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளன.

இலங்கையின் அரசியல் சாசனத்திற்கு அமைய பாராளுமன்றத்திற்கு உறுப்பினராக தெரிவு செய்யப்படும் ஒருவர், நான் இலங்கையின் இறைமைக்கும், தேசிய பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கக் கூடிய வகையில் பிரிவினைவாத பயங்கரவாத சக்திகளுடன் இணைந்து செயற்பட மாட்டேன் என்று, உறுதிப்பிரமாணம் எடுப்பார்.

ஜயலத் ஜயவர்தன, இந்த உறுதிப்பிரமாணத்தை மீறி லண்டன் மாநகரில் பிரிவினைவாத பயங்கரவாத சக்திகளுடன் இணைந்து செயற்பட்டதன் மூலம், தேசத் துரோகத்தை இழைத்து விட்டமைக் காக, இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் எல்லோருடைய பெரும் மதிப்பை பெற்றிருக்கும் அமைச்சர் தினேஷ் குணவர்தன திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். இதற்கமைய, தக்க ஒழுங்கு நடவடிக்கைகள் அவருக்கு எதிராக எடுக்கப்படும் என்றும் நாம் நம்புகிறோம்.

சில தீயசக்திகள் ஜனாதிபதியை வெளிநாட்டில் அவமதிக்கும் வகையில் செயற்பட்டாலும், பொதுமக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷயை மனப்பூர்வமாக ஆதரித்து வருகிறார்கள்.

ஜனாதிபதி லண்டனிலிருந்து தாய்நாடு திரும்பிய போது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குழுமியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் வெள்ளம், ஜனாதிபதிக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்துவதற்காக கோஷங்களை எழுப்பிய நிகழ்வு, பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

ஜனாதிபதியின் சிறந்த, நேர்மையான, நடுநிலையான ஆளுமையைக் கண்டு, பொறாமைப்படுபவர்களின் இத்தகைய தேசத்துரோக நடவடிக்கைகளைப் பார்த்து, ஜனாதிபதி சிறிதேனும் கவலைப்படாமல் தொடர்ந்து தனது நல்லாட்சியை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு எல்லாம்வல்ல இறைவனின் நல்லாசி என்றும் இருக்கும் என்பதையும் நாம் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

ஐக்கிய தேசிய கட்சியின் இரு சிரேஷ்ட அங்கத்தவர்கள், இலங்கையின் ஜனாதிபதியை வெளிநாடு ஒன்றில் வைத்து அவமதிப்புக்குட்படுத்திய செயல் தவறானது என்று, பகிரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளனர். இதேவேளையில், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல், ஜனாதிபதி ராஜபக்ஷ ஒக்ஸ்வோட் மாணவ மன்றத்தில் உரையாற்றுவதற்கு முடியாமல் போனமை கண்டனத்திற்குரிய செயல் என்று தெரிவித்திருக்கிறார்.

வடபகுதியில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட பல இடங்களில் பொதுமக்கள் சுலோகங்களை ஏந்தியவாறு ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து, லண்டனில் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துரோகச் செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருப்பது சிறுபான்மை மக்களின் பூரண ஆதரவு ஜனாதிபதிக்கு இருந்து வருகிறது என்பதற்கு சான்று பகர்கின்றன.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com