Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையில் விவசாய புரட்சி ஆரம்பமாகியுள்ளது

கடந்த 30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தத்தினால் சீர் குலைந்து போயிருக்கும் இலங்கையின் இயற்கை வளங்க ளான பாரிய வாவிகளையும் நீர்த் தேக்கங்களையும் கால் வாய்களையும் மீண்டும் புனரமைத்து, வடக்கு, கிழக்கு மாகாணங் கள் உட்பட, நாட்டின் நாலா பக்கங்களிலும் விவசாயத் துறையில் மீண்டும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, எங்கள் நாட்டின் பண்டைய பாரம்பரியத்திற்கு அமைய, ஆசியாவின் நெற்களஞ்சியம் என்ற பெருமையை இலங்கைக்கு மீண்டும் பெற்றுத் தருவதற்கு நீர்ப்பா சன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபாடி டி சில்வா இப்போது துரித கதியில் நடவடிக்கைகளை எடுத்து வரு கிறார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், மஹிந்த சிந்தனை எண்ணக்க ருவை சரியான முறையில் நிறைவேற்றும் முகமாக, இவ்வமைச்சு 2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட் டிருக்கும் 24,263 மில்லியன் ரூபாவை நேர்த்தியான முறையில் செலவிட்டு, வாவிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களை மட்டு மன்றி, பாரிய அணைகளையும் திருத்தும் பணிகளை மேற்கொள் ளவுள்ளது. 2010 ஆம் ஆண்டில், இத்தகைய பணிகளை நிறை வேற்றுவதற்காக 15,325 மில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஒம ஓயாவை திசை திருப்பும் அபிவிருத்தி திட்டத்திற்காக 5,450 மில் லியன் ரூபாவும், அணைகளை பாதுகாத்தல் மற்றும் நீர் வளங் களை திட்டமிட்டு செயற்படுத்துவதற்காக 2,755 மில்லியன் ரூபா வும், மகாவலி கி புனரமைப்பு திட்டத்திற்காக 500 மில்லியன் ரூபாவும், தெதுறு ஓயா அபிவிருத்தி திட்டத்திற்காக 2,170 மில்லி யன் ரூபாவும், ரம்பக்கன் ஓயா திட்டத்திற்காக 800 மில்லியன் ரூபாவும், அனுராதபுரம் குளங்கள், நீர்த்தேக்கங்களை புனரமைப்பு திட்டத்திற்காக 1,100 மில்லியன் ரூபாவும் அடுத்த ஆண்டில் செல விடப்படும்.

இவற்றை விட வடக்கில் உள்ள பாரிய விஸ்வமடுகுளம், மன்னார் பிர தேசத்தில் உள்ள கட்டுக்கரைக் குளம் உட்பட வட மாகாணத்தில் இருக்கும் சகல குளங்களையும், நீர்த்தேக்கங்களையும் புனரமை ப்பு செய்வதற்கு அரசாங்கம் இப்போது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த காலத்தில் நெற் செய்கைக்கு தேவையான நீரை இந்த நீர்த் தேக்கங்கள் ஏரிகள் மூலம் பெறுவதற்கு இருந்த வாய்ப்புக்கள் பய ங்கரவாத செயற்பாடுகள் உச்ச கட்டத்தில் இருந்த காரணத்தினால் சீர்குலைந்திருந்தன. வடக்கிலும், கிழக்கிலும் நெற்காணிகளில் பய ங்கரவாதிகளினால் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்ததனால் அப் பிரதேசங்களில் பல்லாண்டு காலம் நெற்செய்கை கைவிடப்பட்ட நிலையில் இருந்தது.

இப்போது, இராணுவத்தினரும், அரச சார்பற்ற சர்வதேச அமைப்புக் களும் சுமார் 80 சதவீதத்திற்கும் கூடுதலான கண்ணிவெடிகள் பாது காப்பாக அகற்றப்பட்டு, அங்கு மீண்டும் விவசாயம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அந்த நெற்காணிகளுக்கு தேவையான பாசன வசதி களை அரசாங்கம் இப்போது வழங்குவதற்கான வசதிகளை துரிதப் படுத்திய வண்ணம் இருப்பது, இந்நாட்டின் விவசாய பெருமக் களை பெரும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

அரசாங்கம் இப்போது நடைமுறைப்படுத்தி வரும் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நீர்ப்பாசன வசதி முக்கியத்துவம் பெறுகின்ற காரணத்தினால் அங்கு நீர்ப்பாசன வச திகளை செய்து கொடுப்பதுடன், பொருளாதார அபிவிருத்தி அமை ச்சர் பசில் ராஜபக்ஷ, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பாராளு மன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஆகியோரின் தலைமையில் விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளை பெற்று கொடுப்பதுடன், உழவு இயந்திரங்கள் நீர்ப்பாசனத்திற்கு தேவையான உரப்பசளை, விதை நெல் போன்றவற்றை சலுகை அடிப்படையில் வழங்கிக் கொடு ப்பதற்காக விசேட வங்கி கடன் திட்டங்களையும் அவர்களுக்காக இப்போதுபெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

இவ்விதம் நீர்ப்பாசன திட்டங்களை அபிவிருத்தி செய்து, விவசாயத் துறைக்கு புத்துயிர் அளிப்பதற்காக, உலக வங்கியும், சர்வதேச அபி விருத்தி ஸ்தாபனமும் இலங்கை அரசாங்கத்திற்கு 7 பில்லியன் ரூபாவை வட்டியில்லா கடனாக ஏற்கனவே வழங்கியிருக்கிறது. இதன் மூலம், நாட்டில் உள்ள 39 பாரிய நீர்த் தேக்கங்களையும், அணைகளையும் புனரமைப்பு செய்யும் பணி இப்போது ஆரம் பிக்கப்பட்டுள்ளது. பராக்கிராம சமுத்திரம், இன்கினிமிட்டிய நீர்த் தேக்கம் ஆகியவற்றை புனரமைக்கும் வேலைகள் 1.8 பில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வெற்றிகரமான முறையில் நிறைவேற்றப்பட்டவுடன், எங்கள் நாட்டு மக்கள் அனை வரும் உள்ளூரில் உற்பத்தியாகும். அரிசியை நியாய விலைக்கு பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம், பண் டைய காலத்தில் இருந்ததைப் போன்று நாம் மீண்டும் வெளி நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்து எங்கள் தேசிய வருமா னத்தை பெருக்கிக் கொள்வதற்கும் ஒரு சாதகமான சூழ்நிலை உருவாகுவது திண்ணம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com