Contact us at: sooddram@gmail.com

 

'பார்வையில் தொடங்கி பாதியிலே முடிந்த என் முதல் காதல்'

கொழும்பு கதிரேசன் வீதியில்தான் நான் பிறந்தேன். எங்கள் வீடு பெரிய விசாலமான வீடு. எங்கள் வீட்டுக்கு முன் வீடுதான் கலைஞர் விஜயராஜாவின் வீடு. அதற்கு அடுத்தவீடு பழம்பெரும் கலைஞர் பிச்சையப்பாவின் வீடு. ஸ்ரீதர் பிச்சையாப்பாவும் இங்கு தான் பிறந்தார். பக்கத்தில் கலைஞர் சற்குருநாதன் வீடு. கொஞ்சம் தள்ளி வானொலி அறிவிப்பாளர் கலைஞர் சீதாராமன் வீடு. மற்றும் கலைஞர் எம். வி. எட்வட், ஹிலேரியன் பர்னாண்டோ என்று எல்லாக் கலைஞர்களும் பக்கத்திலேயே இருந்தார்கள்.

என்னோடு பிறந்தவர்கள் மொத்தம் நான்கு பேர். ஸ்ரீகதிரேசன் வீதியில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் செறிந்து வாழ்ந்தார்கள். அவர்களோடு யாழ்ப்பாண தமிழர்களும் வாழ்ந்தார்கள்.

யாழ்ப்பாணத்து சுருட்டு கம்பெனிகளும் சோற்றுக் கடைகளுமாக குட்டி யாழ்ப்பாணம் போன்ற ஒரு பகுதியும் இருந்தது. அம்மா பெரியம்மாவு டன் சண்டை பிடித்துக் கொண்டு யாழ்ப்பாணத் தார் இருந்த பகுதிக்கு குடிவந்துவிட்டார்.

அப் போது எனக்கு 4 வயது இருக்கும். நாங்கள் வாழ்ந்த பகுதி யாழ்ப்பாணம் என்றால் அடுத்த பகுதி கோடம்பாக்கம் பாட்டு நாடகம் சினிமா தியே ட்டர் நாடக ஒத்திகை மண்டபம் நடுப்பகுதியில் பழைய திரைப்படங்கள் வெளியிடும் புகழ்பெற்ற மைலன் தியேட்டர். எம். ஜி. ஆர், சிவாஜி படம் போட்டால் ரெளடிகளின் கலாட்டா சண்டைகள் போத்தல் வீச்சு கைக்குண்டு வீச்சு, வாள் வெட்டு என்று மொத்த ரெளடியீசத்தின் கோட்டை அது. 24 மணி நேரமும் ஆள் நடமாட்டம் உள்ள இடம் அது.

நான் இருந்த இடம் தொழிற் பேட்டையாக இருந்தபடியினாலும் யாழ்ப்பாணத்தவர்களுடனான சமூகச் சூழலில் உணவு பேச்சு வழக்கு அந்யோன்யம் இருந்ததினால் மற்றைய புறச் சூழல்களால் நான் பாதிப்படையவில்லை.

இன்றும் என்னால் தனித்துவமாக செயல்பட முடிவதற்கு இதுவும் ஒரு காரணம் தான்.

எனது இளமைக் கல்வி கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரியில் தொடங்கப்பட்டது. இங்கு நான் 5ம் ஆண்டு படிக்கும் பொழுது மட்டக்களப்பைச் சேர்ந்த தம்பிராஜா மாஸ்டர் பள்ளிக்கூட கலை விழாவிற்காக ஒரு பாடலை தெரிவு செய்து என்னை பாடச்சொல்லி மாட்டு வண்டில்காரனாக நடிக்க வைத்தார். என் கூட நடித்தவர் எனது அருமை நண்பன். யாழ். கச்சேரி நல்லூரைச் சேர்ந்த புஷ்பராசன். இப்போது அமரத்துவம் அடைந்து விட்டார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டனான அவர் எனக்கு அரசியல், கம்யூனிஷம், இலக்கியம், நாடகம், பாட்டு, புத்தகம், எழுத்தாளர், கலைஞர் என மிகச் சரியான தேர்வுகளை நுகரச் செய்து எனது விழிகளைத் திறந்தவர்.

அவனால் எனக்கு மாவோ, இன்குலாப், பகத்சிங், சரத் சக்ரர், பட்டுக்கோட்டை புதுமைப்பித்தன், ரா. சு. நல்லபெருமாள், காண்டேகர் ஜெயகாந்தன் பற்றியெல்லாம் எனக்கு பாடம் சொன்னவர். அவரை மறக்க முடியாது.

எனது பாடசாலைக்கருகில் ஒரு இளைஞன் கலையமுதன் என்ற பத்திரிகை வெளியிட்டார் அவர் சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற தலைவர் ஏ. ஆர். மொஹமட் ஒரு சந்திப்பில் அவர் உறவுக்கு ஒருவன் என்ற நாடகத்தை 1977ல் கொழும்பு வீ. ணி. கி. தி. அரங்கில் மேடையேற்றினார்.

அதில் நான் பிரதான வில்லன் பாத்திரம். அவர்தான் சிவசுப்பிரமணியம் என்கிற எனது இயற் பெயரை சிவா பிரதீபன் என விளம்பர துண்டு பிரசுரத்தில் வெளியிட்டார். ஏ. எஸ். பிலிப் (முத்துராமன் ரசிகர் மன்றத் தலைவர்) அவர் தனது மெளன ராகங்கள் மேடை நாடகம் மூலம் என்னை கதாநாயகன் ஆக்கினார்.

இந்நாடகம் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நவரசத் திலகம் முத்துராமன் தலைமையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பிறகு நான் நாயகனாகிவிட்டேன். அச்சாணி, முள்வேலி, இருட்டிலே தேடாதீங்க, லவ் பண்ணத் தோணலயா, ஜூலியஸ் சீசர், உள்ளிட்ட நாடகங்களிலும் இலங்கை தமிழ், சிங்கள திரைப்படங்களிலும் நடித்திருப்பதாக கூறுகிறார் சிவா பிரதீபன்.

உங்களின் கலை வளர்ச்சிக்கு தங்களின் குடும்பத்தின் ஆதரவு எப்படி? என்று கேட்டபோது,

எனது நடிப்புக் கலைக்கு எனது வீட்டாரிடம் ஆதரவு இல்லை. எதிர்ப்பும் இல்லை. வெளிப்படையாகச் சொல்வதானால் எனது நாடகத்தை நடிப்பை எனது தாய், தந்தையர் உட்பட குடும்பத்தார் யாருமே இதுவரை பார்த்ததும் இல்லை. நான் அழைத்ததும் இல்லை.

நேர்த்திக்கு விடப்பட்ட கோயில் காளையாக விடப்பட்டேன். தந்தை மட்டும் கவலைப்படுவார். மகன் எங்கே நாடகம், சினிமா என்று குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிந்து போவானோ என்று. அம்மாவிற்கு தெய்வ பக்தி அதிகம் விதிப்படி நடக்கட்டும் சிவனே என்று விட்டுவிடுவார்.

அப்புறம் கால்பந்தாட்டம், மல்யுத்தம், விளையாட்டு பயிற்சிகள், பின் அரச தபால் தந்தி தொடர்பு திணைக்களத்தில் புக்கிங் கவுண்டரில் அரசாங்க வேலை. என்று என் பயணம் தொடர்ந்தது.

காதல் பற்றி சிவா இப்படி சொல்கிறார்

எனது வீட்டுக்குப் பக்கத்திலேயே எனது முதற் காதல். அழகும் குணமும் கொண்ட அமைதியான பெண் அவள். பயந்த சுபாவம், கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டது போல் எனது இளம் பருவத்து முதற் காதல் என்னை சிறிது கூட தேகவெறிக்கு தூண்டவில்லை. எங்களுக்குள் இரகசிய சந்திப்போ சரசமோ ஏன் வாய் வார்த்தை கூட கிடையாது. எங்கள் சரீரங்கள் சேர்ந்ததில்லை.

இதழ்கள் இணைந்ததில்லை. ஆரம்பத்திலிருந்து அந்தக் காதல் பார்வையிலேயே தொடர்ந்து பிரிவிலேயே முடிந்தது. அவள் பேரழகி அல்ல.

பின்னாளில் அவளைவிட பேரழிகிகளை நான் சந்தித்து இருக்கிறேன். எப்படி எனில் கப்பலில் தி, கி வேலைக்கு சேர்ந்து பல நாடுகளைப் பார்க்க முடிந்ததால் அது சாத்தியமாயிற்று.

அதற்கு பிறகு இந்தியாவில் மதுரையில் நாடக எழுத்தாளர், இயக்குனர் அரசடி பரட்டையரிடம் பல்வேறு நாடக நுணுக்கங்களை அறிந்தேன். அவரதுநடிக்க நாடகம் எழுதுவது எப்படிஎன்கிற நூல் இப்போதும் சென்னை லயலோ காலேஜில் லைப்ரரியை அலங்கரிக்கிறது.

மும்பை தமிழ்ச் சங்கத்தினரால் கோமல் சுவாமிநாதனின் 3 நாடகம் மேடையேற்றப்பட்ட போது கோமல் சுவாமி நாதனை பார்க்க நேரிட்டது. அறிமுகம் ஆனேன் பிறிதொரு தினத்தில் தமிழ்நாடு விழுப்புரம் கம்யூனிச மாநாடு முடிந்து செண்ணை செல்லும் ரயிலில் விழுப்புரம் ஸ்ரேஷன் மாஸ்ரர் நண்பர் ராஜாங்கம் என்னை கோமல் சுவாமிநாதனின் பெட்டி அறையில் பயணிக்க வைத்தார்.

நாடகம் பற்றிய பயனுள்ள தகவல்களை எனக்கு பரிமாற்றம் செய்தார் கோமல் சுவாமிநாதன். என்ற சிவாவிடம் திருமணம் பற்றிக் கேட்டோம்.

மதுரையில் எனக்கு மீனாட்சி அம் மன் கோயிலில் திருமணம் நடந்தது.

லதா எனக்கு வாழ்க்கை துணைவியானாள். தெலுங்கு கெளரவ நாயக்கர் இனத்தைச் சேர்ந்த பெண்மணி அவள். எங்கள் திருமண வாழ்க்கை மிக இனிமையானது. அதன் பலன் ஜீவா என்கிற ஆண்மகனும் லத்திகா, லைலா பாப்பா என்கிற விஜிதா என்ற மகளும் உண்டு.

மறக்கமுடியாத நபர்கள்?

நவரசத் திலகம் முத்துராமன் தான் எந்நேரம் வாய்விட்டு சிரித்த முகம். நங்கூரம் படப்பிடிப்புக்கு வந்த அவர் நான் நடித்த நாடகத்துக்கு தலைமை தாங்கி, மேடையிலேயே எனது நடிப்பை வெகுவாக பாராட்டி தனது கழுத்தில் உள்ள பூமாலையை கழற்றி எனது கழுத்தில் போட்டு எனது கலையுலக வாழ்க்கையை ஊக்குவித்தார்.

மற்றும் என்னை அறிமுகப்படுத்திய பைன் ஆர்ட்ஸ் ஏ. ஆர். மொகமட் கலைஞர் சத்யன், என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய நண்பரும், இயக்குநருமான ஏ. எஸ். பிலிப், கலையுலகில் சிறு சிறு வேடங்கள் தாங்கியும் நாடகம் இசை நிகழ்ச்சி என்று வலம் வந்த வீ. கே. டி. பாலன் நான் இயக்கி தயாரித்த முள்வேலி நாடகத்தில் கதாநாயகனாக நடித்தார்.

அவரை முதன் முதலாக கதாநாயகனாக்கிய பெருமை எனக்கே இருக்கிறது என்று பெருமிதம் கொள்ளும் சிவா பிரதீபன், நண்பர் அன்பழகன், சற்குருநாதன், சோமசுந்தரம் உள்ளிட்ட பலரையும் என்னால் மறக்க முடியாது. என்றவரிடம் ம்... அது ஒரு காலம் என்று ஏங்குவது பற்றி வினவிய போது.

நான் வாழ்ந்த அந்த கதிரேசன் வீதியை இன்று கடக்கும் போது எதையோ தொலைத்துவிட்ட சோகம் என் தொண்டையை அடைத்துக் கொள்கிறது. அந்த காலத்தில் பெரிய கட்டடங்கள் எதுவுமே கதிரேசன் வீதியில் இல்லை. எல்லாமே சின்னஞ் சிறிய வீடுகள்தான்.

அந்த தெருக்களில் நான் பந்து விளையாடியது. அந்த தெருவில் உள்ள திண்ணைகளில் படுத்து உறங்கியது. அந்த புழுதிபடிந்த தெருக்களில் உருண்டது நினைத்துப் பார்க்கும் போது ரொம்பவும் இனிமையாக இருக்கிறது என்றவரிடம் கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றிக் கேட்டோம்.

அந்தக் காலத்தில் சினிமா பார்ப்பதென்றால் தியேட்டருக்கு போவோம் அது ஒரு திருவிழா மாதிரி இருக்கும். இப்போ அப்படியா? வீட்டுக்குள்ளேயேடி.விரேடியோ என்று எல்லாமே கைக்கெட்டிய தூரத்திற்குள் வந்து விட்டது. அதனால் பழைய இனிமை தொலைந்து போய்விட்டது.

இன்றைய வாழ்க்கை வசதியானதுதான் ஆனால் இனிமையானதல்ல என்று தனது பேட்டியை சிவாபிரதீபன் நிறைவு செய்தார்.

(மணி சிறீக்காந்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com