Contact us at: sooddram@gmail.com

 

இனியும் வேண்டாம் புலம்பெயர் தமிழர்களின் நீலிக்கண்ணீர்

(ஸாதிக் ஷிஹான்)

முப்பது வருடகால இருண்ட யுகத்தின் பின்னர் யுத்தம் ஒழிந்து நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர் வடபகுதி மக்கள். புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கைக்கு எதிராக முன்னெடுத்து வரும் செயற்பாடுகளை அவர்கள் வன்மையாகக் கண்டிக்கின்றனர். வட பகுதியிலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற பகுதிகளுக்குச் சென்ற எமக்கு அங்குள்ள மக்கள் ஏற்பாடு செய்த கண்டனப் பேரணிகள் ஊடாக வடபகுதி மக்கள் புலம் பெயர் தமிழர்கள் மீது கொண்டுள்ள எதிர்ப்பை காணக் கூடியதாக இருந்தது. இலங்கை வாழ் தமிழ் சமூகம் மீண்டும் ஒரு அழிவுக்கு முகம் கொடுக்க தயாரில்லை என்றும் பிரித்தானியாவில் ஜனாதிபதிக்கு புலம்பெயர் தமிழர்கள் காட்டிய எதிர்ப்பானது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் ஏற்பட்ட அவமான மும் தலைகுணிவும் என்று கருதுவ தாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி, ஒத்துழைப்புக்களை செய்யாவிடினும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும் என்றும் கோருகின்றனர்.

புலம் பெயர் தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தை கண்டித்து கடந்த 4 ஆம் திகதி கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்கள் மாபெரும் கண்டனப் பேரணிகளை நடத்தியதுடன் வர்த்தக நிலையங்களை முடியும், கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டும் வன்னி தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். “பயங்கரவாதம் வேண்டாம்”, “சமாதானத்தை குலைக்காதே”, “தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடு” போன்ற கோஷங்களை இந்த கண்டனப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் எழுப்பினர். வட பகுதியில் உள்ள ஒவ்வொரு அமைப்புக்களும் நாளாந்தம் கண்டனக் கூட்டங்களை நடத்தி வந்தன.

அதேபோல கடந்த 7ம் திகதி யாழ். குடாநாட்டு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்றை நடத்தினர்.

யாழ். நகரின் நாலாபாகங்களிலிருந்தும் பேரணியாக வந்த மக்கள் பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகில் ஒன்றுதிரண்டு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

“நாட்டின் பயங்கரவாதத்தை ஒழித்த ஜனாதிபதியை தூற்றாதே”

“ஐக்கிய இலங்கையின் தந்தையை அவமதிக்காதே”

“வடக்கின் ஒற்றுமையைக் குலைக்காதே”

“புலிகளின் ஆதரவாளர்களை ஒழிப்போம்”

ஐக்கிய தேசியக் கட்சி ஜயலத் ஜயவர்த்தனவின் செயற்பாட்டை கண்டிக்கின்றோம்”

“ஜனாதிபதிக்கு எமது ஒத்துழைப்புக்கள் உறுதி”

“பிரித்தானியாவில் புலிப் பயங்கரவாதிகளின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்”

“புலம் பெயர்ந்த தமிழா! உன் உறவுகளை நிம்மதியாக வாழ விடு”

போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்ட துடன் பதாகைகளும் தொங்கவிடப்பட் டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். பிரதம அமைப்பாளர் வி. தங்கராஜா, மாவட்ட அமைப்பாளர் ரங்க துசார உட்பட ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். அங்குள்ள நிலைமைகளை அறிய அங்கு சென்ற எமக்கு கோபாவேசத்துடன் அங்குள்ள மக்கள் சொன்ன கருத்துக்கள்,

தேவேந்திரன் கங்காதரன்

முள்ளியவளை - முல்லைத்தீவு

“நாங்கள் மீண் டும் ஒரு யுத்தத் தையோ, இன்னு மொரு அழிவையோ எதிர்பார்க்க வில்லை” யுத்தத்தின் இறுதி கட்டத்தை முழுமையாக அனுபவித்த நாம் மீண்டும் இது போன்ற அழிவுக்கோ, யுத்தத்திற்கோ முகம் கொடுக்க தயாராகவும் இல்லை.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் எமது சகோதரர்கள் தான். ஆனால் அவர்கள் சில நாடுகளின் அரசியல் நோக்கத்திற்காகவும், தங்களது சுய நலத்திற்காகவும் செய்யும் ஆர்ப்பாட்டங்களும், கண்டனங்களும் இலங்கை வாழ் மக்கள் எமக்கு ஒரு மீண்டும் ஒரு அழிவை, கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடாது.

எமது முல்லைத்தீவு பிரதேசத்தில் தற்பொழுது மக்கள் படிப்படியாக மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். பாதுகாப்புப் படையினரின் பூரண ஒத்துழைப்புடன் அரசாங்கம் தற்பொழுது எமது மக்களுக்காக பல்வேறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றனது.

வன்னி மக்களையும் இனியாவது நிம்மதியாக வாழ விடுங்கள் என்று புலம் பெயர்ந்து வாழும் சகோதரர்களிடம் கேட்டுக் கொள்கின் றேன்.” யாழ். கோப்பாய் ஆசிரியர் கல்லூரியின்

அதிபர் திருமதி எம். சின்னய்யா

இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு விடுதலையை பெற்றுக்கொடுத் தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவரின் ஆட்சியின் கீழ் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு வாழும் மக்கள் ஜனாதிப தியை விரும்பு கின்றனர்.

பிரித்தானியாவில் வாழும் புலம் பெயர் தமிழர்கள் நடந்து கொண்ட விதம் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக் கும் ஏற்பட்ட அவமானமாகவே வடபகுதி மக்களாகிய நாங்கள் கருதுகின்றோம்.

கிளிநொச்சி, மாணிக்கபுரத்தைச் சேர்ந்த

குமாரசுவாமி தனலட்சுமி

கிளிநொச்சி, மாணிக்கபுரத்திலுள்ள மிகவும் பின்தங்கிய கிராமமான ரெட்பான என்ற இடத்தில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். கிளிநொச்சி எமது சொந்த இட மாக இருந்தாலும் புலிகளின் செயற் பாடுகளால் கடந்த 30 வருடங்களாக நாம் எந்த வித நிம்மதியும் இன்றி வாழ்ந்து வந்தோம்.

யுத்தத்தில் கணவனையும், சொத்துக்களையும் இழந்த எனக்கு எனது பிள்ளைகள் மாத்திரமே எஞ்சியுள்ளனர். எனது கணவர் எனக்கு மீண்டும் கிடைக்கப் போவதில்லை. இனி நான் தான் என் பிள்ளைகளுக்காக வாழ வேண்டும். இனித்தான் எனது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும்.

நாங்கள் அனுபவித்த துன்பங்களும், பட்ட கஷ்டங்களும், வடித்த கண்ணீரும் போதும். இது போன்ற எந்த வித துன்பத்தையும் அனுபவிக்காது. கோட், சூட்டுடன் வாழும் புலம் பெயர் தமிழ் மக்கள் செய்யும் தேவையில்லாத நடவடிக்கைகள் எம்மை மீண்டும் கண்ணீர் வடிக்கச் செய்திட கூடாது.

நான் வடித்த கண்ணீரை எனது பிள்ளை குட்டிகளும் வடிக்க விடாதீர்கள். எம்மை போன்றவர்களுக்கு உதவி செய்வதை விட்டு விட்டு இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் தேவைதானா?

யாழ்ப்பாணம், சுவிற்றி தொழிலகத்தைச்

சேர்ந்த திருமதி வசுந்தரா வரபிரகாசம்

யுத்த காலத்தில் மிகவும் கஷ்டங் களுக்கு மத்தியில் நாம் எமது சுய தொழில் வியாபார த்தைக் கொண்டு சென்றோம். புலி கள் இந்த தொழிலை செய்வதற்கு அப்போது எமக்கு பல இடையூறுகளை செய்து வந்தனர். அப்போது எமக்கு வேறு ஏதும் செய்ய முடியாத நிலை இருந்தது. தற்பொழுது மிகவும் சுதந்திரமாக எமது செயற்பாடுகளை வியாபாரத்தை முன்னெடுத்து செல்கின்றோம்.

தற்பொழுது நெல்லிரசம் மற்றும் மரமுந்திரிகை வைன் போன்றன மாதமொன்றுக்கு ஐயாயிரம் போத்தல் தயாரித்து விநியோகிக்கின்றோம். இதற்கு காரணம் ஜனாதிபதியே, அவரால்தான் அச்சமின்றி வியாபாரத்தை முன்னெடுக்க முடிந்துள்ளது.

ஜனாதிபதி சமாதானத்தை ஏற்படுத்தித்தந்ததன் மூலம் இன்று ஒவ்வொரு மக்களும் நாளாந்தம் தமது வருமானத்திற்காக ஏதாவது ஒரு தொழிலை செய்ய முடிந்துள்ளது.

இந்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் செய்யும் வீணான ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புப் பேரணிகள் எமது இயல்பு வாழ்க்கையையும், சுயதொழில் நடவடிக்கைக்கும் பெரும் பாதிப்பாக அமையும். எம்மை சுயமாகவேனும் வாழ விடுங்கள் என்று கெஞ்சுகின்றோம் என்றார்.

யாழ்ப்பாணம் உரும்பிராய் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சீனியர் குணநாயகம்

யுத்தத்திற்குப் பின்னர் தற்பொழுது தான் எமது வியாபாரம் சிறந்த முறையில் நடை பெற்று வருகின்றது. இதற்காக நாங்கள் ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

சிறு வயது முதல் அரசியலில் ஈடுபாடுள்ள நான் 1974 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டு செயற்பட்டு வந்தேன். ஆனால் அந்த கட்சியின் ஊடாக மக்களுக்கு எந்தவித சேவைகளையோ, உதவிகளையோ செய்ய முடியவில்லை. ஐ.தே.க.வில் இருந்து மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாததை அடுத்து கம்யூனிஷ்ட் கட்சியில் இணைந்து கொண்டோம். தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை அடுத்து எமது பூரண ஒத்துழைப்பை அவருக்காக வழங்கி வருகின்றோம்.

1983 களுக்கு பிறகு இன விடுதலை என்ற பேரில் வடக்கு, கிழக்கில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் விடுதலை போராட்டத்தை நாங்கள் எதிர்த்து வந்தோம். ஏனெனில் அது எமது சமூகத்தை பாதித்தது.

வடபகுதி இளைஞர்கள் ஆரம்பகாலம் தொடக்கம் தவறான விதத்தில் வழி நடத்தப்பட்டுள்ளனர். இதற்கு பிரபாகரனுக்கு பாரிய பங்கு உண்டு.

ஜனாதிபதியின் செயற்பாடுகள், அபிவிருத்திப் பணிகள் தமிழ் மக்கள் மத்தியில் பெரு வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் மக்களுக்கு இப்போது தான் ஒரு விமோசனம் கிடைத்துள்ளது.

ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயமானது இலங்கை வாழ் தமிழ் மக்களின் நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்க கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகும். புலம் பெயர் தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தால் தமிழ் மக்களின் தேவைகளைச் சொல்ல இருந்த சந்தர்ப்பம் இல்லாமல் செய்யப்பட்டதாகவே கருதுகின்றோம்.

தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் அக்கறை கொண்டவர் ஜனாதிபதி.

சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபோடுகள் இல்லாமல் சகலருக்கும் சமமான சேவைகளை வழங்கும் “சமதர்ம வள்ளல்” மஹிந்த ராஜபக்ஷ என்றார்.

முல்லைத்தீவு, உடையார்கட்டு பிரதேசத்தைச்

சேர்ந்த கட்டுமான தொழில் புரியும் கோனேஷ்

யுத்தத்தினால் நாளுக்கு நாள் பல பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்த எமது மக்கள் இப்போது தான் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

தற்பொழுது மோசமான காலநிலை தொடர் மழை காரணமாக மீண்டும் ஒரு கஷ்டத்திற்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் உதவிகளை வழங்கி வரும் நிலையில் எமது மக்களுக்காக உதவ வேறு எவரும் தற்போது இல்லை.

இந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் எமது நிலைமைகளை நாம் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகளை அறியாமல் செய்யும் ஒவ்வொரு செயற்பாடுகளும் இங்கு வாழ்கின்ற தமிழ் மக்களையே பாதிக்கின்றது.

மீண்டும் தலை நிமிர ஆரம்பிக்க வுள்ள எம்மை பாதிக்கும் வகையில் எந்த ஒரு செயற்பாடுகளையும் நீங்கள் செய்ய வேண்டும். இதுதான் வெளி நாட்டு வாழ் தமிழ் மக்கள் எமக்கு செய்யும் பாரிய உதவியாக கருதுகின் றோம்.

உடுவில் கிழக்கு, சுன்னாகத்தைச் சேர்ந்த செல்லைய்யா வேதநாயகம்

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எமது கஷ்டம், நஷ்டங்களை தெரியாதவர்கள். அவர்களது ஆர்ப்பாட்டங்கள் எமக்கு நன்மையானவை அல்ல. எம்மை வாழ வைக்கக்கூடியவை அல்ல.

தற்பொழுது எனக்கு 68 வயது. எனது வாழ்க்கையின் பெரும் காலம் யுத்தத்துக்காக அஞ்சியே கழிந்தது. எனக்குள்ளது ஒரே ஒரு மகன் அவனை இங்கு நன்றாக படிக்க வைத்திருக்க முடியும்.

ஆனால், எனக்கிருந்த ஒரே ஒரு வாரிசையும் புலிகளுக்காக இழக்க நான் தயாரில்லை. அதனால் வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்துள்ளேன். ஏழு வருடங்களுக்கு பின்னர் இனிமேல் இலங்கை வரவுள்ளார். தற்போது நிலவும் சுமுக நிலைமை, சமாதானமே இதற்குக் காரணம் இதற்காக ஜனாதிபதிக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

கிளிநொச்சி முரசுமோட்டையைச் சேர்ந்த அழகேசன் சிறிதேவி

சிறுவயது முதல் மிகவும் அச்சத் துக்கு மத்தியில் வாழ்ந்து வந்தோம். தற்போது எல்லாரும் சந்தோசமாகவும், நிம்மதியாகவும்

வாழ ஆரம்பித் துள்ளோம். (தொடர் 14ம் பக்கம்)

புலிகளின் பிடியில் சிக்கிய எம்மை பாதுகாப்பாக மீட்டு எமக்கு தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் தற்பொழுது செய்து தந்துள்ளது. இன்னும் செய்த வண்ணம் உள்ளது.

பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் தங்களது நம்மைக்காக எம்மை ஆபத்துக்குள் தள்ளிவிட வேண்டாம். எமக்கு மீண்டும் துன்பத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம்.

சாவகச்சேரியைச் சேர்ந்த ஆ. ஜயபாலன்

நான் கிளிநொச்சி நகரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றேன். இப்போதுதான் இந்த மாவட் டத்தில் மீண்டும் இயல்பு வாழ்வு ஆரம்பித் துள்ளது. மக்கள் நிம்மதியாக நடமாடுகின்ற னர். சாவகச்சேரியில் இருந்து இங்கு வந்து தொழில் செய்ய முடிந்துள்ளது. இவற்றுக்கு ஜனாதிபதியே காரணம்.

இந்நிலையில் புலம் பெயர் தமிழர்கள் ஜனாதிபதியை அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

இயக்கச்சியைச் சேர்ந்த தங்கேஸ்வரி

நாம் கஷ்டப்பட்ட காலத்தில் எம்மை, கவனிக்காமல், எமக்காக குரல் கொடுக்காமல், எம்மை வந்து பார்க்காது இருந்த புலம் பெயர் தமிழ் மக்களுக்கு இப்போது மாத்திரம் ஏன் எம் மீது அக்கறை வந்துள்ளது.

எமக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்ய வேண்டாம்.

கிளிநொச்சி - செல்வநகரைச் சேர்ந்த முத்தைய்யா கஸ்பா

நான் சைக்கிளை பொருத்திக் கொடுத்து அதன் ஊடாக கிடைப்பதை வைத்து எனது அன்றாட செலவுகளை கவனித்து வருகின்றேன்.

யுத்தத்திற்கு பின்னர் தற்போதுதான் எமது பிரதேசம் அபிவிருத்தி அடைந்து வருகின் றது. கிளிநொச்சியில் பிறந்து வளர்ந்த எமக் குக் கூட சுதந்திரமாக ஒரு அடி எடுத்து வைக்க முடியாத நிலை கடந்த காலங்களில் காணப் பட்டது. தற்போது அந்த நிலை முற்றாக மாற்றப்பட் டுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டிலுள்ளவர் கள் இந்த நிலையை மீண்டும் குழப்ப முயற்சிக்கின்றனர்.

கிளிநொச்சி 55 ஆம் கட்டையைச் சேர்ந்த கஜன்

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் கடந்த காலங்களிலும் பல்வேறு போராட்டங்களை சில சில காரணங்களுக்காக நடத்தினர்.

அந்த போராட்டத்தினால் இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மைகளும் கிடைக்கவில்லை. இப்போதும் போராட்டங் களை நடத்தி வருகின்றனர். இது அவர்க ளுக்கு அன்றி எமக்கு எந்த நன்மைகளையும் தரப்போவதில்லை. புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்கள் ஈழத் தமிழர்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. அதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com