Contact us at: sooddram@gmail.com

 

"ஜனாதிபதியின் லண்டன் விஜயம்'' பயங்கரவாதம் தொடர்பான பிரிட்டனின் இரட்டை வேடம்

(சுஐப் எம். காசிம்)

சுதேசிகளுக்கும் நாய்களுக்கும் அனுமதி இல்லை

(Natives and Dogs not allowed) வெள்ளைக்காரர்கள் மட்டுமே செல்லக்கூடிய கிளப் ஒன்றுக்கு வெளியே இந்த ஆங்கில வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. எங்கே பிரிட்டனிலா என்று கேட்டுவிடாதீர்கள். எல்லாம் இலங்கையில்தான். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றது. இதன் பின்னரும் இந்த வாசகம் தாங்கிய பலகையுடன் கிளப் ஒன்று கொழும்பில் செயற்பட்டுக்கொண்டிருந்தது. வெள்ளையர்களுக்கு மட்டுமேயான பல கிளப்புகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் எமது நாட்டை கட்டியாண்ட காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்திருக்கின்றன. ஆனால் மேற்கூறப்பட்ட கிளப் கொழும்பில் மட்டுமே இருந்தது. 1961 ஆம் ஆண்டு அன்றைய சிறிமா அரசாங்கம் விடுத்த உத்தரவின் பேரில் இந்த வாசகம் அப்புறப்படுத்தப்பட்டது.

இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட சுதந்திர நாடு இலங்கை. இருந்தும் இன்றும் அதே ஏகாதிபத்திய மனோபாவத்துடன் பிரிட்டன் இலங்கையைப் பார்க்கிறதா? அண்மையில் லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு எதிர்கொண்ட சம்பவங்களைப் பார்க்கும் போது இப்படித்தான் கேட்கத் தோன்றுகின்றது. ஒக்ஸ்போட் பல்கலைக்கழக யூனியனின் அழைப்பின் பேரில் லண்டன் சென்றிருந்தார் ஜனாதிபதி. அந்த யூனியனில் உரையாற்றுவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். இது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அழைப்பல்ல. எனவே, பிரிட்டிஷ் அரசாங்கம் கூறுவது போல தனிப்பட்ட விஜயம்தான். அதனால்தானோ என்னவோ ஹீத்ரோ விமான நிலையத்தில் புலிக்கொடிகள் ஜனாதிபதியை வரவேற்றன. தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்பப்பட்டனவாம். பிரிட்டிஷ் தமிழர் பேரவை என்ற அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்ததாக கூறப்படுகின்றது.

பிரிட்டனில் பயங்கரவாத அமைப்பு எனத் தடைசெய்யப்பட்டதே புலிகள் இயக்கம். பிரிட்டனில் மட்டுல்ல ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் விகிக்கும் 27 நாடுகளிலும் புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, மலேசியா, அமெரிக்கா உட்பட மொத்தம் 32 நாடுகளில் புலிகளுக்குத் தடை இப்போதும் இருக்கின்றது. இருந்தும் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியைத் தாங்கி ஆர்ப்பாட்டம் நடத்த பிரிட்டிஷ் அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதன் எதிரொலியாக பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி ஒக்ஸ்போட் யூனியன் ஜனாதிபதியின் உரை நிகழ்ச்சியை ரத்துச் செய்திருக்கின்றது. பிரிட்டிஷ் பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்கத்தக்கதாகவே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கும், ஒக்ஸ்போட் யூனியன் உரை ரத்துச் செய்யப்பட்டமைக்கும், தமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று பிரிட்டிஷ் அரசு கையை விரித்திருக்கின்றது. பேச்சுச் சுதந்திரம் உள்ளதாக தம்பட்டம் அடிக்கும் பிரிட்டனில் இலங்கை ஜனாதிபதி பேசுவதற்கு சுதந்திரம் இல்லாமல் போனமை வேடிக்கையானது. அல்-குவைதாவுக்கும் தலிபான்களுக்கும் ஆதரவாக லண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்த முடியுமா? அதனை பிரிட்டிஷ் அரசு கைகட்டி பார்த்துக்கொண்டிருக்குமா?

இலங்கையைப் போன்று பிரிட்டனும் பயங்கரவாத நடவடிக்கைக்கு முகம் கொடுத்த ஒரு நாடு. பல ஆண்டுகளாக அயர்லாந்தில் நிலவிய பிரிட்டிஷ் கத்தோலிக்க மக்களின் பிரச்சினை ஆயுதப் போராட்டமாக வெடித்து பயங்கரவாத முகம் காட்டியது. 1969 இல் தோற்றம் பெற்ற ஐரிஸ் குடியரசு இராணுவம் (ஐ.ஆர்.ஏ.) ஆயுதங்களுடன் அரசியல் அரங்கிற்கு வந்தது. 1970களில் வருடா வருடம் அயர்லாந்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பொலிஸார், இராணுவம், பொது மக்களை இலக்கு வைத்து குண்டு வெடிப்புகளையும் தாக்குதல்களையும் ஐ.ஆர்.ஏ. நடத்தியது. 1990 களின் மத்தியில் லண்டன் வீதிகளில் பாரிய தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன. 1984 ஆம் ஆண்டு லண்டன் பிரைட்டன் ஹோட்டலில் நடைபெற்ற கன்சவேர்டிவ் கட்சி மாநாட்டில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் மார்கிரட் தச்சரும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர்களும் மயிரிழையில் உயிர் தப்பினர். ஐ.ஆர்.ஏ. 1998 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுடன் சமாதான ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. பெரிய வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் என்று இது அழைக்கப்படுகின்றது. 1998 இல் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டாலும், 2005 ஆம் ஆண்டு வரை இழுபறி நிலையே காணப்பட்டது. இருந்தும் ஐ.ஆர்.ஏ. இல் இருந்து பிரிந்து சென்ற றியல் ஐ.ஆர்.ஏ., கொன்ரினியூட்டி ஐ.ஆர்.ஏ. போன்ற உதிரிக்குழுக்கள் தொடர்ந்தும் தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கின்றன.

இலங்கையிலும் 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 3000க்கும் மேற்பட்ட ஒப்பந்த மீறல்களில் புலிகள் ஈடுபட்டனர். அந்த சமாதான காலத்தை புலிகள் ஆயுதக் கடத்தலுக்குப் பயன்படுத்தினர். சமாதானம் என்று கூறிக்கொண்டு பொலிஸார், இராணுவத்தினர், பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தினர். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கூட சினைப்பர் தாக்குதலில் கொல்லப்பட்டார். புலிகளின் திலீபனைப் போல ஐ.ஆர்.ஏ. போராளி பொபி சான்ட்ஸ்சும் உண்ணாவிரதம் இருந்து இறந்தார். இரண்டுமே சமாதான காலத்துக்கு முன்னர் இடம் பெற்றவை. ஆனால் ஒரு வித்தியாசம், திலீபன் யாழ்ப்பாண நல்லூர் கோவில் முன்றலில் உண்ணாவிரதம் இருந்தார். பொபி சான்ட்ஸ் சிறைக்குள்ளேயே உண்ணாவிரதம் இருந்தார்.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இரண்டு நாடுகளுமே முகம் கொடுத்திருக்கின்றன. ஐ.ஆர்.ஏ. ஐ விட மிகவும் பலம் பொருந்தியது புலிகள் அமைப்பு. கெரில்லா அணி, விமான அணி, கடற்படை, தரைப்படை என்று பல பிரிவுகளைக் கொண்டிருந்தது. தற்கொலைத் தாக்குதல்கள் குறித்து ஏனைய பயங்கரவாத அமைப்புகளுக்கு வழிகாட்டிக் கொடுத்ததும் புலிகள்தான். உலகிலேயே மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பென்று புலிகளுக்கு அமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் பிரிவு முத்திரை குத்தி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பலம் பொருந்திய அமைப்பை ஒரு சிறிய நாடான இலங்கை முடிவுக்கு கொண்டு வந்ததென்றால் அது ஓர் இமாலய சாதனையே. முள்ளிவாய்க்காலுக்குள் புலிகள் இறுதி மூச்சை விடப்போகிறார்கள் என்ற நிலை வந்தபோது, “யுத்தத்தை நிறுத்துங்கள்என்று இலங்கை அரசுக்கு மேற்கு நாடுகள் அழுத்தம் கொடுத்தன. அன்றைய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்டும், பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர் பேர்னாட் குச்னரும் கொழும்புக்கு ஓடோடி வந்தனர். யுத்தத்தை நிறுத்துங்கள் என்று ஜனாதிபதியின் காலில் விழுந்து கேட்டனர். அமெரிக்க கப்பல் ஒன்று புலித்தலைமையைக் காப்பாற்றுவதற்காக இலங்கை கடல் எல்லைக்கு அப்பால் தரித்து நின்ற தகவலும் கசிந்து வெளியே வந்தது. இருந்தும் கூட எதற்கும் மசிந்து கொடுக்காமல் பயங்கரவாதத்துக்கு ஜனாதிபதி முடிவு கட்டியமை பாராட்டுக்குரியதே.

யுத்த விதிமுறைகள், வரைமுறைகள் தொடர் பான ஜெனீவா ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது. இது 1948 இல் செய்து கொள்ளப்பட்டது. எந்த நாடுமே ஜெனீவா ஒப்பந்தத்தை கையில் வைத்துக் கொண்டு யுத்தம் செய்வதில்லை. பயங்கரவாத அமைப்புகளை ஜெனீவா ஒப்பந் தம் கட்டுப்படுத்துவதில்லை, கட்டுப்படுத்த வும் முடியாது. இருந்தும் யுத்தம் பொது மக்களை காவு கொள்ளக் கூடாது என்ற விதி நியாயமானதே.

முன்னாள் யூகோஸ்லாவிய அதிபர் ஸ்லோபோடன் மிலோசோவிச் யுத்தக் குற்றச்சாட்டின் பேரில் லண்டனில் வைத்தே கைது செய்யப்பட்டார். இதே போன்ற முயற்சியை லண்டனில் மேற்கொள்வதற்காக புலிச்சார்பு புலம்பெயர் அமைப்புகள் திட்டமிட்டிருந்தன. அது புஷ்வாணமாகிப் போய்விட்டது. சுமார் இரண்டு இலட்சம் இலங்கை வம்சாவளி புலம்பெயர் தமிழர்கள் பிரிட்டனில் வாழ்கின்றனர். அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் லண்டன் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். டிக்கட் மற்றும் பல்வேறு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தும், சுமார் 500 பேர் கூட ஆர்ப்பாட்டத்தில் தேறவில்லை.

இருந்தாலும் பயங்கரவாதம் தொடர்பாக இரட்டை நிலைப்பாடுகளை பிரிட்டன் போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகள் கொண்டிருக்கக் கூடாது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க ஆக்கிரமிப்புக்குத் துணை போன பிரிட்டன் இலங்கை போன்ற நாடுகளுக்கு மனித உரிமை பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கையானதுதான். முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப். எம்.பி. சாம் தம்பி முத்துவின் மனைவியையும் மகனையும் இலங்கையில் புலிகள் கடத்தி வைத்திருந்த போது, அவரை விடுதலை செய்யாவிடின்நாடு கடத்துவோம்என்று புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தை அப்போது எச்சரித்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு தற்போது ஜனாதிபதிக்கெதிராக தனது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?

எமது ஜனாதிபதியின் அண்மைய லண்டன் விஜயம் பயங்கரவாதம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக மேற்கு நாடுகள் கொண்டிருக்கும் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றது. அந்த வகையில் இதுவும் இலங்கைக்கு ஒரு வெற்றிதான்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com