Contact us at: sooddram@gmail.com

 

நல்லிணக்க ஆணைக்குழு கற்றுத்தரும் பாடங்கள்

அரசாங்கத்தினால் தனது எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆரோக்கியமான திட்டமொன்றை உருவாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வுகள் இப்போது நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகிறது. கடந்த கால, நிகழ் கால சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள், அரச அதிகாரிகள், குடும்பப் பெண்கள், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இந்த ஆணைக்குழு முன்னிலையில் தோன்றிச் சாட்சியளித்து வருகின்றனர்.

குறிப்பாக யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே பல சாட்சியங்கள் பதிவாகியுள்ளன. இருந்தும் பல மூத்த அரசியல் தலைவர்கள், முன்னாள் அரச உயரதிகாரிகள் பலரும் யுத்தம் தோன்றக் காரணமாகவிருந்த பல விடயங்களை வெளிக்கொண்டு வந்து அவற்றுக்குத் தீர்வு காண்பது அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.

உண்மையில் அரசாங்கம் இந்த ஆணைக்குழுவை அமைத்ததன் நோக்கம் நடந்து முடிந்த யுத்தத்திற்கு பரிகாரம் தேடுவதில்லை. இந்த யுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம் என்ன? இனியும் அவ்வாறாதொரு நிலையைத் தோற்றுவிக்காமல் தடுப்பது எப்படி? என்பது தொடர்பாக ஆராயவே. தமிழ்பேசும் மக்கள் பல வருடங்களாக எதிர்கொண்டிருந்த பிரச்சினைகள் பலவற்றுக்கும் தீர்வு காண இந்த ஆணைக்குழுவின் இறுதிப் பரிந்துரையானது மிக முக்கியமானதாகவுள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் மாறி மாறி ஆட்சிபுரிந்து வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் செவிமடுக்காது ஏனோதானோ என்றிருந்த நிலையினாலேயே பிரச்சினை இவ்வளவு தூரம் பூதாகாரமாக வெடித்து வன்னி யுத்தம் வரை சென்றது. ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. குறிப்பாக விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் நோக்கம் இந்த அரசுக்கு இருக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் புலிகளை எப்படியாவது பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒரு அரசியல் தீர்வினைக் காண்பதையே விரும்பினார். அதற்காக அவர் மிகவும் பொறுமையாகவும் செயற்பட்டார். புலிகள் பயங்கரவாதிகள், அவர்களுடன் என்ன பேச்சுவார்த்தை எனப் பலர் விமர்சித்தபோதிலும் அவர் பேச்சுவார்த்தைக்குப் பலமுறை புலிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவையும், சந்திரிகா அம்மையாரையும், ரணில் விக்கிரமசிங்கவையும், ஏமாற்றியது போலவே இவரையும் ஏமாற்றிக் காலத்தைக் கடத்தித் தமது காரியத்தைச் சாதிக்கலாம் எனப் புலிகள் திட்டமிட்டனர் என்பது அவர்களது அன்றைய செயற்பாடுகளில் தெளிவாகப் புரிந்தது. இறுதியில் இனியும் இவர்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள் எனக் கண்டறிந்த பின்னரே யுத்தம் மூலமாக புலிகளை ஒழித்துக் கட்ட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். அதன் விளைவாக இன்று மக்கள் சுதந்திரமாக நாட்டின் எப்பகுதிக்கும் சென்றுவரக் கூடியதாகவுள்ளது.

தற்போது யுத்தம் முடிவுற்றிருக்கும் நிலையில் அபிவிருத்திப் பணிகள் ஒருபுறம் நடைபெற அரசியல் ரீதியாக தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு தீர்வினைக் கண்டு அவர்களிடையே இதுவரை காலமும் நிலவிய எதிர்பார்ப்பை நிறைவேற்ற ஜனாதிபதி எண்ணியுள்ளார். இது இந்த ஆணைக்குழுவினால் பெற்றுக்கொள்ளப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படலாம். அல்லது அதிலிருந்து சில விடயங்களை உள்வாங்கியும் கொள்ளலாம்.

இதுவரை இடம்பெற்ற ஆணைக்குழுவின் அமர்வுகளில் பல ஆரோக்கியமான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது தவிரவும் இப்போது மாவட்ட ரீதியாக இடம்பெற்று வரும் அமர்வுகள் மக்களின் பல ஆதங்கங்களின் வெளிப்பாடுகளையும் கொண்டு வருகிறது. குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் இதன் அமர்வுகள் இடம்பெறும்போது மக்கள் பலர் முண்டியடித்துக்கொண்டு சாட்சியமளிக்க வருகின்றனர்.

அவற்றில் பெரும்பாலானவை காணாமல்போன தமது உறவுகளைக் கண்டு பிடித்துத் தருமாறு கோருவதாகவே உள்ளது. அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற ஆணைக்குழுவின் அமர்வில் பெண்கள் அதிகளவில் சாட்சியளிக்க முன்வந்ததைக் காணமுடிந்தது. அதிலும் பலர் இரகசியமாக சாட்சியளிக்க விருப்பம் தெரிவித்தனர். அதற்கான காரணத்தை அவர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்டபோது தமிழ்க் குழுக்களிடையே நிலவிய போட்டி காரணமாகக் காணாமல் போன தமது பிள்ளைகள் தொடர்பாகத் தெரிவிப்பதை நாம் எப்படி வெளியாருக்குக் கூற முடியும் எனத் தெரிவித்தனர்.

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவானது உண்மையில் சுதந்திரமாகச் செயற்படுவதுடன் சாட்சியமளிப்போர் எவ்விதமான பயமோ தயக்கமோ இன்றிச் சாட்சியமளிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரான காலம் மட்டுமல்ல அது ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்தபோது ஏற்பட்ட தவறுகள் அல்லது இன முரண்பாடுகள், பாகுபாடு என்பன குறித்தும் பலர் சாட்சியமளித்துள்ளனர்.

சாட்சியமளிப்போரின் நம்பகத்தன்மையான, ஆரோக்கியமான, ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துக்களையே ஆணைக்குழு பெரிதும் எதிர்பார்த்துள்ளது. இங்கு தனிப்பட்ட குரோதங்களையும், அரசியல் காய்நகர்த்தல்களையும் கச்சிதமாகச் செய்வோரும் வரத்தான் செய்கின்றனர். ஆனால், இன, மத, மொழி, அரசியல், பிரதேச வேறுபாடுகளைக் கடந்தே இந்த ஆணைக்குழு செயற்படுகின்றது. எனவே பெறுமதியான கருத்துக்களை முன்வைத்து எதிர்கால நல்லாட்சியில் நாமும் பங்காளிகளாக வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com