Contact us at: sooddram@gmail.com

 

விழலுக்கிறைத்த நீரான தமிழ்மொழி மாநாடுகள்

முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடு என நாம் 1934ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மாநாட்டைக் கூறலாம். இம் மாநாட்டின் நோக்கம், விஞ்ஞானத்தைப் போதிப்பதற்கு இங்கிலீஸ் சொற்களுக்குப் பதிலாக தமிழ் விஞ்ஞானக் கலைச் சொற்களை உண்டாக்குவது என்பதாகும். இம் மாநாட்டின் கருவாக இலங்கையைச் சேர்ந்த விபுலானந்த அடிகளார் இருந்தார். இம்மாநாட்டின் தீர்மானப்படி 1936ஆம் ஆண்டும் விஞ்ஞான சொற்களுக்கான தமிழ்க் கலைச் சொற்கள் உண்டாக்கப்பட்டன. ஆனால் இது பிரயோகத்தின்போது பிரயோசனமற்றதாக தோல்வியடைந்தது எனலாம். தமிழ் பேசும் எல்லா நாடுகளிலும் இதனை அமுல்படுத்த முடியாமற் போனது தோல்விக்கு மிகப் பிரதான காரணமாகும்.

அத்தோடு உண்டாக்கப்பட்ட விஞ்ஞானத் தமிழாக்க கலைச் சொற்கள் இங்கிலீஸ் மொழிச் சொற்களின் கருத்துப் புறப்பாட்டைக் கொடுக்காது அங்குமிங்கும் நெளியும் சொற்களாகவும்; கேலிக்கிடமான சொற்களாகவும் காணப்பட்டன. தமிழிலே விஞ்ஞானம் படிக்கும் மாணவர்களுக்கு விஞ்ஞான தமிழ்க் கலைச் சொற்களைவிட; விஞ்ஞான; இங்கிலீஸ் சொற்கள் மனத்தில் பதியவைக்க இலகுவாக இருப்பதாக மாணவர்களே கூறத் தொடங்கி இங்கிலீஸ் சொற்களையே கற்கலாயினர்.

இதனாலும் இம்முயற்சி தோல்வி கண்டது எனலாம். இரண்டாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1942ஆம் ஆண்டு மதுரையிலே நடைபெற்றது. இதற்கும் விபுலானந்த அடிகளே காரணமாக இருந்தார். மூன்றாவது மாநாடு 1968ஆம் ஆண்டு சென்னையில் அறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றது. இம்மாநாடு மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

நான்காவது மாநாடு 1970இல் பரிசில் நடைபெற்றது.

ஐந்தாவது மாநாடு யாழ்ப்பாணத்தில் 1973ல் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் வெளிநாட்டவர்கள் கலந்து கொள்ளவில்லையென்றே கூறலாம். இரண்டொருவரைத் தவிர. மாநாடு கடைசியில் துப்பாக்கிப் பிரயோகத்தோடு கலைந்தது. இம்மாநாடுகளில் ஆக்கபூர்வமாக எதுவும் நடைபெறவில்லை.

ஆறாவது மாநாடு எம். ஜீ. ஆர். தலைமையில் 1981ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சில எழுத்துச் சீர்திருத்தங்கள் நடைபெற்றன. ஏழாவது மாநாடு மலேசியாவில் கோலாலம்பூரில் 1989ம் ஆண்டு நடைபெற்றது.

(1989 நவம்பர் 15 – 19ஆம் திகதிகளில்)

எட்டாவது மாநாடு 1989 டிசம்பர் 3ஆம் திகதி மொறிசியஸ் தீவில் நடைபெற்றது.

ஒன்பதாவது மாநாடு 1993 ஆம் ஆண்டு தஞ்சையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ஆக்க பூர்வமான சில விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதாவது, முத்தமிழோடு அறிவியல் தமிழும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

ஆனால் பின் வந்தவர்கள் அதனைச் சரியான முறையில் அமுல்படுத்தவில்லை எனலாம். மேற்கூறப்பட்ட ஒன்பது மாநாடுகளிலும் செலவு செய்யப்பட்ட பணத்தோடு ஒப்புநோக்கில் பார்த்தால் மாநாடுகள் வீண் விரயம் என்றே சொல்ல வேண்டும். இனி பத்தாவது கோவை செம்மொழி மாநாட்டை தனியே எடுத்து நோக்குவோம்.

சிந்துவெளி நாகரிகமும் ஆய்வாளர்களின் அங்கலாய்ப்பும்

நடந்து முடிந்த மாநாடுகளில் கோவைச் செம்மொழி மாநாட்டை 10வது மாநாடாகச் சொல்லலாம்.

ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் தமிழ் மீது பற்றுக்கொண்டோ அல்லது தமிழ் வளர வேண்டும் என்ற அவாக் கொண்டோ இம்மாநாடு நடைபெற்றதாகக் கூற முடியாது. இம்மாநாட்டின் பின்னணியில் பல அரசியல் காரணிகளும் பல சமூகவியல் காரணிகளும் இருந்தன எனலாம்.

ஆரம்பத்திலேயே சிந்துவெளி நாகரிகத்தைஇந்து வெளிநாகரிகம் என அழைக்கத் தலைப்பட்டனர்.சிஎன்பதற்குப் பதிலாக ‘இ’ எழுத்தினை பயன்படுத்தி இலேசாக மாற்றியமைக்க முயன்ற போது, இதன் பின்விளைவு எமக்குச் சாதகமாக அமையாது எனக் கண்ட திராவிட கழகத்தினர், இதை இலேசாக யாருக்கும் தெரியாமல் கைவிட்டுவிட்டனர்.

அதாவதுஇந்துவெளி நாகரிகம்என்றால் திராவிடருக்குச் சொந்தமல்லாது ஆரியருக்குச் சொந்தமாகிவிடும் என்ற பயம் (இது நியாயமான பயமே) கைவிடக் காரணமாகியது. ஆரிய மதமே இந்துமதம்.

பின் திராவிடருடைய நாகரிகம் என்று நிறுவ மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கத் தொடங்கினர்.

ஆப்பெழுத்து, பின் வட்டெழுத்து, பின் மீன் சித்திரங்கள் என நான்கடி ஏறி மூன்றடி சறுக்கும் நிலையில் இருந்து விடுபட ஐரோப்பிய மொழி ஆய்வாளர்களின் உதவியை நாடினர். இவர்கள் நாடிய ஐரோப்பிய ஆய்வாளர்களுள் முதன்மையானவர்அங்கோ பார்போலா’வைக் குறிப்பிடலாம்.

இவர் ஆரம்பத்தில் சிந்துவெளி நாகரிகத்தில் இரண்டொரு சின்ன விடயங்களே திராவிடர் நாகரிகம் என்று கூறுவதற்குரியதாக உள்ளது எனக் கூறினார்.

ஆனால் செம்மொழி மாநாட்டில் சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே எனக் கூறி 30 இலட்சம் பரிசு பெற்றுக்கொண்டார். 30 இலட்சம் பரிசு (இலங்கைப் பெறுமானம்) சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே எனச் சொல்லுமாறு கொடுக்கப்பட்டதே.

அடுத்தவர்ஜோஜ்ஹாட்என்பவராகும். இவர் அமெரிக்க மொழியியலாளர்.

இவர்தான் இந்திய அரசை முதல் முதல் தமிழையும் செம்மொழியாகக் கருதவேண்டும். அங்கீகரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டவர். இவரை நாம் பிழையானவர் என எண்ண முடியாது. தமிழ் மொழி அப்படியான அந்தஸ்திற்குரியதே.

இவரை அடுத்துஅலெக்சாண்டர் எம். டு, பியான்ஸ்கி போன்றவர்கள் இவர்கள் ரஷ்ய மொழியியலாளர்.

தஞ்சை மாநாட்டின் பின் அதாவது, 1995க்குப் 15 வருடங்களின் பின்பே செம்மொழி மாநாடு ஆரம்பமாகியது.

செம்மொழி மாநாட்டிற்கு 330 கோடி ரூபா செலவாகியதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இம்மாநாடு நடத்தப்படுவதற்கு காரணம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் உயர் ஜாதியினரான பிராமணர்கள் மற்றும் சமஸ்கிருதம் கற்றறிந்த மதவாதிகள். தொன்மை வாய்ந்த மொழி தமிழ் அல்ல சமஸ்கிருதமே. இதன் இலக்கியத்தில் இருந்து களவாடப்பட்ட இலக்கியங்களே தமிழ் இலக்கியங்கள் என உரத்துக் கூறி வந்தனர். இதனை அடக்கவே செம்மொழி மாநாடு என்றால் மிகையாகாது.

உண்மையில் சமஸ்கிருதத்தை விடப் பழமையான மொழி தமிழே, ஆனால் இதோடு சேர்த்து சிந்துவெளியைத் திராவிட நாகரிகம் எனக் கூற வைத்தது பிழையான நடவடிக்கை எனலாம். பிராமணர்கள்பைசாத் தமிழ்என்று கேலியாகக் கூறி வந்ததை அடக்க முயற்சி எடுத்தது பாராட்டிற்குரியதே. ஆனால் அதற்கு 350 கோடி செலவு செய்தது கண்டிக்கத்தக்கது. தமிழை வளர்க்க 350 கோடி செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. தமிழ் உலகில் முதல் தோன்றிய மொழி. முதல் நாகரிகத்திற்குரிய மொழி. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியல்ல என்ற மனப்பாங்கு ஏற்பட்டாலே போதுமா தாகும்.

இதே வேளைபைசாத் தமிழ்என பிராமணர்கள் கேலி செய்த போது தமிழை மணக்கச்செய்த பெருமை தி. மு. கழகத்தினருக்கு உண்டு எனச் சொல்லித்தான் ஆக வேண்டும். இதே வேளை டில்லியில் நடைபெற்ற கீழ்த்திசை மொழிகள் மாநாடு (Congress of Oriantalists) அமர்விலே சமஸ்கிருதம் சார்ந்த மொழிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

திராவிட மொழிகளுக்கு இடமளிக்கப்படவில்லை. தனிநாயகம் அடிகளுக்கு இது மன வேதனையை கொடுத்தது. அதனால் அவர் ஒரு அமைப்பினை உருவாக்கி தமிழை உயர்த்த வேண்டுமெனக் கருதினார்.

இதனை மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் அறிஞர்களுக்கும் எத்தி வைத்தார். 1929இல் ஜோன் மார்சல் சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் அல்ல. அது தமிழர் நாகரிகம் என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஜோன் மார்சலுக்கும் தமிழர் யார், திராவிடர் யார் என்பது விளங்கவில்லை என்பது புரிகின்றது. திராவிடர் என்பவர் அனுமான், வாலி, சுக்கிரீவன் போன்றோரின் பிற்சந்ததியினர் (இந்தியாவில்)

இராவணனும், அவனது தம்பிகளான விபூசணன், கும்பகர்ணன் போன்றோர் தமிழர்களல்ல திராவிடர்களே. (இங்கையில்)

பார்போலோசிந்துவெளி மக்கள் முருகனை வழிபட்டுள்ளனர்எனக் கூறுகின்றார். அதனால் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் எனக் கூறுகின்றார் என்பது பொருள். பாரசீக மொழியிலும் முர்க்கா என்றால் சேவல் என்பது பொருள். முருகனின் வாகனம் சேவல். வங்காள மொழியிலும் சேவலைமுர்க்காஎன்றே அழைக்கிறார்கள்.

(ஆதாரம : மங்கை ஜுலை இதழ் 91, அவளுக்காக ஒரு பாடல்

முருகனும் சேவலும் ஏன் பாரசீகத்தில் இருந்து சிந்துவெளிக்கு வந்திருக்க முடியாது.

சிந்துவெளி நாகரிக எழுத்துக்கள் ஆப்பெழுத்து என்கிறார்அங்கோ பார்போலா’. ஆனால் 2004ஆம் ஆண்டு அமெரிக்க ஆய்வாளர் மூவர் இந்த எழுத்துக்களை ஆராய்ந்து விட்டு இவைகள் வெறும் அடையாளக் குறியீடுகளேஎனக் கூறியுள்ளனர்.

இதனை எழுத்தெனக் கொண்டால், இதனை அராபிய எழுத்தை வாசிப்பதைப் போன்று வலமிருந்து இடமாக வாசிக்க வேண்டும் என்கிறார்கள் அந்த அமெரிக்கர்கள்.

ஆனால் அங்கோபார்போலா வலமிருந்து இடமாக வாசிக்க வேண்டும் என்கிறார். அப்பொழுதுதான் சிந்துவெளி எழுத்துக்கள் திராவிட மொழி எழுத்தின் பூர்வீகம் என்றாகும் என்பதனால், இதே வேளை அண்மையில் முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைக்கும் முயச்சி நடைபெற்றுள்ளது.

அதாவது, சிந்து வெளி நாகரிகத்தின் 1/4 பகுதியே பாகிஸ்தானில் உள்ளது என்றும் மற்றைய 3/4 பகுதி இந்தியாவில் உண்டு எனக் கூறியுள்ளார்.

இது சிந்துவெளி நாகரிகம், ஹரப்பா மொகஞ்சதாரோவில் மட்டும் அடங்கிவிடவில்லை. இந்தியாவிற்குள்ளும் உண்டு என்று கூறி சிந்துவெளி நாகரிகத்தை தென் இந்தியத் திராவிடர்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் முயற்சியே இது எனலாம்.

அத்தோடு அங்கோபார்போலா இன்னுமொரு கருத்தையும் சொல்லியுள்ளார். அதாவது, சிந்துவெளி இலக்கங்கள் இடமிருந்து வலமாக எழுதும் வழக்கமுடையது எனக் கூறி 236, 367, 1433 போன்ற இலக்கங்களை கூறுவதோடு இவைகள் அராபிய இலக்கமல்ல என்றும் கூறியுள்ளார்.

தனித்தனியே இலக்கமாக எடுத்துப் பார்த்தால் அவை அரேபிய இலக்கமெனத் தெரியவரும்.

இதனை அங்கோபார்போலா மறந்துவிட்டார் போலும். இதே வேளை அரபிய இலக்கங்களையும் இன்றைய எல்லார்க்கும் பொதுவான இலக்கங்களான 1, 2, 3, 5, 5, 6, 7, 8, 9, என்பவற்றையும் ஒப்பு நோக்கி பார்த்தால் இது விளங்கும்.

அட்டை 1 ஆரம்ப கால எண் குறியீடு

அட்டை 2 சுராய எண் குறியீடும்

இன்றைய எண் குறியீடும்

அட்டை 3 வேறுசில எண் குறியீடுகள்

அட்டை 4 சில நாடுகளின் பழைய எண் குறியீடுகள்

அட்டை 5 மிகப் பிற்பட்ட கால தமிழ் எழுத்து எண் குறியீடு

இடமிருந்து வலமாக ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம் எனச் சொல்வதை நாம் அவதானிக்க வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com