Contact us at: sooddram@gmail.com

 

பாராளுமன்றத்தில்  இந்த வாரம் எம்.பீ பாடிய முதல் பாடல்

(விசு கருணாநிதி)

பாடகர் எம். பி. யாகலாம்! எம்.பி. பாடகராகலாம்! ஆனால், பாராளுமன்றத்தில் பாட்டுபாட முடியுமா?

முடியாது! என்கிறது நிலையியற் கட்டளை. ஐ.தே. க. எம்.பி தயாசிறி ஜயசேகர ஒரு சிறந்த பாடகர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தன் இனிமையான குரலில் ரசிகர்களை ஈர்ப்பவர். ஆனால், பாராளுன்றத்தில் அப்படி பாட்டு பாடி அசத்த முடியாது என்பது தெரிந்தோ, தெரியாமலோ, வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போது பாட்டுபாடி சபையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டார்.

குழுநிலை விவாதத்தின் இறுதிநாள் கடந்த வெள்ளிக்கிழமை. நவம்பர் 30 ஆம் திகதியிலிருந்து குழுநிலை விவாதம் ஆரம்பிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை நிறைவு செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் நடைபெறும்பொழுது அமைச்சுகளின், திணைக்களங்களின், கூட்டுத்தாபனங்களின் அதிகாரிகள் கதிகலங்கியே இருப்பார்கள். யார் எந்தக் குட்டையைக் கிளறி விடுகிறாரோ என்ற ஓர் எதிர்பார்ப்பு எல்லோரிடமும் குடிகொண்டிருக்கும். எனினும், இந்த முறை இரண்டாவது வாசிப்பு மீதும், குழுநிலையின்போதும் வரவு செலவுத் திட்டத்துடன் நேரடித் தொடர்பில்லாத விடயங்கள்தான் சர்ச்சையைக் கிளப்பின.

இவற்றுள், பிரிட்டன் ஆர்ப்பாட்டமும், கரு ஜயசூரிய மற்றும் ஜயலத் ஜயவர்தன விடயமும் முக்கிய இடம் வகித்தன. இந்தச் சர்ச்சை, விவாதத்தை ஓரிரண்டு நாள் இலகுவில் நகர்த்திச் சென்றது.

வியாழக்கிழமை பாலித ரங்கே பண்டார எம்.பியின் தேங்காய்ப் பாதிகள் சபையைக் கலகலப்பாக்கின. பாராளுமன்றத்திற்குள் செல்வோரை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், துலாவித் துலாவி சோதனையிட்டு அனுப்புகிறார்கள். ரங்கே பண்டார இரண்டு தேங்காய்ப் பாதிகளை எவ்வாறு சபைக்குக் கொண்டு வந்தார் என்பது உறுப்பினர்களை விழிபிதுங்கச் செய்தது!

பாராளுமன்றத்தில் முக்கியமான விடயங்களை முன்வைப்பதைவிடவும் வித்தியாசமான, விசித்திரமான செயல்கள் ஊடகங்களில் செல்வதால், குறித்த உறுப்பினர் நாடளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் செல்ல முடிகிறது. இந்த உத்தியை இப்போதெல்லாம் சில உறுப்பினர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.

வாசுதேவ நாணாயக்கார எம்.பி. ஒரு தடவை சபையில் செங்கோலைத் தூக்கியதால், தாக்கப்பட்ட சம்பவம் இன்னமும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இப்படி ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்தியலையும், நடப்பியலையும் கொண்டிருக்கிறார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், அப்போதும் இப்போதும் ஒழுங்குப் பிரச்சினை எழுப்புவதில் முதன்மை வகிப்பார். ஏனோ தெரியவில்லை. கடந்த இரண்டு தினங்களாக அவர் பொறுப்புகளில் மூழ்கியிருப்பதைக் காண முடிந்தது. அதனால், தயாசிறி எம்.பி. தப்பிப் பிழைத்தார் என்றுதான் சொல்லவேண்டும். இருந்திருந்தால், பாட்டு பாடியதற்கு அவர் தலை தப்பியிருக்காது. என்றாலும் பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன தக்க தருணத்தில் சபாபீடத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

தலைவர்கள் தப்பமுடியாது

வெள்ளிக்கிழமை குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர, பொது நிறுவனங்களுக்கான பாராளுமன்ற குழுவின் விசாரணைகளுக்கு லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்ட எதிரணி உறுப்பினர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியதாகப் பாராட்டினார். அரச நிறுவனங்களை ஏப்பம்விட்ட முன்னாள் தலைவர்களின் தலை இனித்தான் உருளப் போகிறது. அவர்களைப் பாராளுமன்ற குழு முன்னிலையில் அழைத்து விசாரணை நடத்தப் போகிறோம். 249 நிறுவனங்கள் தொடர்பான இடைக்கால அறிக்கையை ஜனவரி மாதம் சமர்ப்பிப்போம். அப்போது பலரது குட்டு அம்பலத்திற்கு வரும் என்றார் அமைச்சர் டியூ.

பாடல் கவிதையாகுமா?

அமைச்சர் டியூவைத் தொடர்ந்து ஐ.தே.க உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை உரையாற்ற அழைத்தார், குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார்.

சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகரவின் செயற்பாடுகள் போற்றத்தக்கவை. பாவம் அவர் தனது அமைச்சைப் பற்றிப் பேசுவதற்கு எதுவும் இல்லாததால், முழு நாட்டுக்கும் பொதுவான விடயங்களைப் பேசுகிறார். நான் ஓரு பாடலைப் பாடி உரையைத் தொடங்குகிறேன்என்றவர். பாடலின் பல்லவியையும் சரணத்தையும் பாடத் தொடங்கினார்.

உடனே எழுந்த பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, “ஒழுங்குப் பிரச்சினை! நிலையியற் கட்டளை 84 இன்படி சபையில் பாட்டுபாட முடியாதுஎன்று கூறும்போதே தயாசிறி தன் பாடலை பாடி முடித்துவிட்டார்.

உடனே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ‘தயாசிறி பாட்டு பாடவில்லை! கவிதையைத்தான் பாடினார். ஏன் பிரதமர் சபையில் கவிதை பாடவில்லையா?’ என்று வாதிட்டனர்.

சில கவிதைகள் பாடலாகும்! சில பாடல்கள் கவிதைகளாகும். தயாசிறியினதும் அவ்வாறுதான்.

நான் பாடியது கவிதைதான்என்று அந்தப் பாடலைக் கவிதை வடிவிலும் பாடிக்காட்டினார்.

கவிதை பாடுங்கள்! பாட்டு பாடாதீர்கள்!” என்று குழுக்களின் பிரதித் தலைவர் அறிவுறுத்தினார்.

தயாசிறி எம்.பியைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, பாடுவதில் தாமும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்து விட்டார்.

கோள் சொல்லி கட்சியைப் பிளந்தாலும், நான் தலைவர் பதவியை விட்டுப் போகமாட்டேன்என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தயாசிறியைப் பார்த்துப் பாடுவதைப்போல் பாடினார் அமைச்சர் பீலிக்ஸ்.

விடுவார்களா எதிர்த் தரப்பினர். தயாசிறியைக் கண்டித்தீர்கள். இவர் எப்படி பாடமுடியும்.

கோரஸாககுரல் கொடுத்தார்கள்.

நானும் கவிதைதான் பாடினேன்என்று அமைச்சரும் தன் பாடலைக் கவிதை வடிவிலும் பாடினார்.

வரவு- செலவுத் திட்டத்தை நிதியமைச்சரே சமர்ப்பிக்க வேண்டுமென்றும்- அவர் விவாதம் நிறைவுறும் வரை பாராளுமன்றத்தில் இருந்து, விவாதத்திற்குப் பதில் அளிக்கவேண்டுமென்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் அரியநேந்திரன், இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின்போது கூறியிருந்தார். எதிர்க் கட்சி உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார். ஜனாதிபதி நிதியமைச்சராக இருப்பதால், அவரை கேள்வி கேட்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், தாம் எந்தச் சவாலையும் ஏற்பதற்குத் தயங்கப்போவதில்லை என்பதை நிரூபித்து வருபவர் ஜனாதிபதி. வெள்ளிக்கிழமை குழுநிலை விவாதம் நிறைவுபெற ஒரு மணித்தியாலம் எஞ்சியிருக்கும் நிலையில், திடிரெனப் பாராளுமன்றம் வந்தார் ஜனாதிபதி.

எந்தவிதமான பரபரப்போ, பாதுகாப்பு கெடுபிடியோ இருக்கவில்லை. சரியாக மாலை 5 மணிக்குச் சபைக்கு வந்த ஜனாதிபதி 50 நிமிடங்கள் உரையாற்றி பதில் அளித்தார். உறுப்பினர்கள் சபையில் முன்வைத்த சகல விமர்சனங்களையும் அறிவதாகத் தெரிவித்த அவர், அவற்றுக்கு உரிய பதில்களையும் கூறினார். எதிரணி உறுப்பினர்கள் வாயடைத்துப் போகும் வகையில் ஜனாதிபதியின் உரை அமைந்திருந்தது.

மாலை ஆறு மணிக்கு வரவு செலவுத் திட்டத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இப்போதெல்லாம் சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வகிபாகத்தை ஜே.வி.பி. யினர் ஏற்றிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். முன்புடிவிஷன்’ (வாக்கெடுப்பு) வேண்டுமென்று சம்பந்தன் எம்.பி. கூறுவார். இப்போது அதனை ஜே.வி.பி.யின் அநுரகுமார திசாநாயக்க எம்.பி. செய்கிறார். அவரின் கோரிக்கைக்கு அமைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 156 வாக்குகள் ஆதரவாகவும் 40 எதிராகவும் அளிக்கப்பட்டன. 116 மேலதிக வாக்குகளால் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது.

பாராளுமன்றம் மீண்டும் ஜனவரி மாதம் நான்காம் திகதி கூடும். சபை ஒத்திவைப்பிற்கு முன்னதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, எதிர்க் கட்சி பிரதம கொறடா ஆகியோர் நன்றி தெரிவித்து உரையாற்றினர். இனி ஒரு மாதம் விடுமுறை. எம்.பி. மாருக்கு மட்டுமல்ல பாராளுமன்ற செய்தியாளர்களுக்கும் தான். என்றாலும் அவர்களால் எம்.பிமாரைப் போல் விடுமுறை கழிக்க முடியாது. அதனால் நேற்று (சனி 11) தென் பகுதிக்குச் சுற்றுலா புறப்பட்டிருக்கிறார்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com