Contact us at: sooddram@gmail.com

 

கிடைக்கும் உதவிகளைக் கொண்டு வன்னி நிலம் அபிவிருத்தியடைகிறது

(வி. மிதிலா)

வன்னியில் புதுப் பொலி வுடனும் சுறுசுறுப்புடனும் வெற்றிநடை போடுகின்றார்கள் மக்கள். தம் வழிகாட்டல்களில் மறுபடியும் கால் பதித்து வெற்றியின் பாதையில் செல்கிறார்கள் வன்னி மக்கள். முதியவர்கள், பெற்றோர்கள், உழவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மீண்டும் வன்னியைச் செழிப்பாக வைத்திருப்பதற்கு பாடுபடுகின்றார்கள். தஞ்சம் புகுந்த மக்களை அரசு கைவிடவில்லை, கைகொடுத்து எழு ப்பியுள்ளது. மக்களுக்கான வீடுகளை தற்காலிக வீட்டுத் திட்டம், நிரந்தர வீட்டுத் திட்டம், பழைய வீடுகளைப் புனரமைத்தல் என்று முதல் கட்ட செயற்திட்டங்களாகச் செய்து வருகின்றது. இதைவிட மக்களுக்குத் தேவையான விவசாய உபகரணங்கள், வீட்டு உபகரணங்கள் என அனைத்துப் பொருட்களையும் வழங்குகின்றது. துன்பப்பட்டு வந்த மக்களுக்கு அரசு மட்டுமன்றி, வெளிநாட்டு நிறுவனங்களும் துணை புரிகின்றன.

கூதலுடன் குந்தியிருந்த கிழவனும்

கூச்சமிட்டு குதித்து நிற்கின்றான்

வயலில் கலப்பையுடன்

இவ்வாறு மக்களுக்கு புத்துணர்வு ஊட்டி ஓர் விவசாயிக்கு தேவையான உபகரணங்கள் மானியங்கள் அனைத்தையும் வழங்கி உற்சாகப்படுத்துகிறது அரசு.

வன்னியில் வறண்டு கிடந்த வயல் நிலங்கள் செழிப்பாக காட்சி தருகின்றன. அனைத்து மனிதர்களும் சுறுசுறுப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மழைக்காலத்தில் அதிகாலையில் வயலில் மண்வெட்டியுடன் நிற்கின்றார்கள் வன்னி விவசாயிகள்.

இதை விட வேலை வாய்ப்பு இன்றி வீட்டில் முடங்கியிருந்தவர்கள் இப்போது எந்த தொழிலைச் செய்வதென்றறியாமல் நிற்கின்றார்கள். மேசன், தச்சு வேலைகள், வயல் வேலைகள் கைத்தொழில்கள் என பலதரப்பட்ட தொழில் வாய்ப்புகள் உள்ளன. இளைஞர்களுக்கான தொழிற் பயிற்சி நிறுவனங்களான தையல் பயிற்சி, கணனிப் பயிற்சி நிறுவனங்கள், தச்சு, மேசன், பயிற்சி நிறுவனங்கள் போன்றவை தொழிற் பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளன.

பல வகையான பயன்களைப் பெறுவதற்கு இளைஞர்கள் கலந்து பயிற்சி பெறுகின்றார்கள்.

மாணவர்களும் கணனி அறிவைப் பெறுவதில் ஆர்வமாக உள்ளார்கள். பாடசாலைகளை மீண்டும் புனரமைப்புச் செய்து தேவையான தளபாடங்கள், கற்றல் உபகரணங்கள் மற்றும் மாணவர்களுக்கான புத்தகங்கள், துவிச்சக்கர வண்டி, புத்தகப்பை, என ஓர் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் தேவையான உதவிகளை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் புரிந்து வருகின்றன.

இந்த வகையான உதவிகளை மாணவர்கள் பெற்று உற்சாகத்துடனும், போட்டியுடனும் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். பல கலை நிகழ்வுகளில் மாணவர்கள் முன்மாதிரியாக செயற்படுகின்றார்கள். முத்தமிழ் விழா என்னும் நிகழ்வு மிகவும் கோலாகலமாக கிளி/ இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இது பாரம்பாரிய தமிழ் பண்பாட்டு நடைமுறையிலும் தற்காலக் கலை, கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.

வைத்தியசாலைகளில் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் பணியாளர்கள் அதிகளவில் அமர்த்தப்பட்டு மக்கள் சிரமம் இன்றியும் சினம் இன்றியும் நோயினால் வாடி வரும் மக்களை பராமரித்து வருகிறார்கள்.

கைகால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்கள் மற்றும் கைகள் பொருத்தப்படுகின்றன. அங்கவீனர்கள் நன்றாகக் கவனிக்கப்படுகிறார்கள். உளப் பாதிப்புக்குள்ளானோருக்குத் தேவையான உளநல ஆலோசனைகளையும் வழங்கி இவ்வாறு மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

பல இடங்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசி வசதிகள் மற்றும் இணைய வசதிகளும் காணப்படுகின்றன. மொத்த விற்பனைக் கடைகள் கூட்டுறவுச் சங்கங்கள், சந்தை மற்றும் வங்கிகள் என அனைத்து அமைப்புக்களும் வெற்றிகரமாக இயங்கத் தொடங்கிவிட்டன.

அனைத்து வகையான வங்கிகளும் தமது செயற்பாடுகளை மக்களுக்கு ஏற்ற வகையில் அவர்களுக்குத் தேவையான கடன் வசதிகளான வீட்டுக் கடன், விவசாயக் கடன், மற்றும் பல்கலைக்கழகம் சென்று பயி லும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு வசதிகள் என உதவி புரிந்து வருகின்றன. மற்றும் உழவு இயந்திரங்களை கடன் உதவி மூலம் வழங்குகின்றன.

இதைவிட மக்கள் யுத்தம் நடைபெறுவதற்கு முன் அடகு வைத்த நகைகளை மீண்டும் நகைகளாகவும் இல்லாவிட்டால் நகைக்கான பெறுமதியைப் பணமாகவும் வழங்குகின்றார்கள். இவ்வாறு வன்னியை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் வங்கிகள் செயற்பட்டு வருகின்றன.

எல்லா வகையிலும் உதவிகளை பெற்று வரும் வன்னி மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கவில்லை. மீண்டும் தாம் தமது வளங்களைக் கொண்டு உழைக்க வேண்டும் என்ற உற்சாகத்துடன் செயற்பட்டு வருகின்றார்கள்.

பச்சைப் பசேல் என மிளிர்ந்து நிற்கும் நெல் வயல்கள் வைரம் போல் இறுக்கமடைந்திருந்த உடல் நரம்புகளுடன் உழவர்கள் சலசலத் துக்கொண்டிருக்கும் வாய்க்கால்கள் என மிளிர்கிறது வன்னி.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com