Contact us at: sooddram@gmail.com

 

இயற்கையோடு இயைந்த தொழில்நுட்பம் தேவை

அது ஒரு குறிப்பிட்ட ஆதிக்கத்தின் கருவூலம் என்ற நிலை மாறி வளர்ந்த விஞ்ஞானம் ஐரோப்பாவில் 19 ஆம் நூற்றாண்டில் அரசியல் ஆதிக்கம் செய்த வணிக முதலாளிகளால் ஒரு பெரும் திருப்பத்தைச் சந்தித்தது. உற்பத்தியின் அடிப்படைக் குறிக்கோள் சமூகத் தேவை என்பது மாறி இலாப நோக்கமே அடிப்படையாகவும் தீர்மானிக்கும் கூறாகவும் மாறியது. நவீன விஞ்ஞானத்தின் உயர் தொழில்நுட்பமும் வணிகர்களின் கருவிகளாக மாற்றப்பட்டன. இத்தகு தொழில்நுட்பமே மக்களை அடிமைப்படுத்தவும் இயற்கைச் செல்வங்களைக் கொள்ளையடிக்கவும் பயன்படுத்தப்பட்டது.

டார்வின் கொள்கையையும் இன்றைய தொழில்நுட்பச் சமூகத்தின் கணித மயமாக்கலையும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக கூற இயலும். உலகை கணித மயமாக்குகிற முதன்மைப்படுத்துகிற விதியாகத் தெக்காட்டின் கார்ட்டிசீயப் பார்வை செயற்படுகிறது. இவ்விதியைத் திறம்படச் செய்யக்கூடிய கருவியாக கணிப்பொறி இயங்குகிறது என்றே கூறலாம். காட்டீசிய வரை கணிதக் கொள்கை

1. சந்தேகத்தைத் தவிர்க்க மனதிற்கு எது தெளிவாகத் தெரிகிறதோ அதை மட்டும் ஏற்றுக் கொள்வது

2. பெரிய சிக்கலைச் சிறிதாகப் பிரித்துப் பார்த்தல்

3. எளியவற்றிலிருந்து தொடங்கிச் சிக்கலைக் குறித்து விவாதித்தல் / வாதிடுதல்

4. ஒன்றைச் செய்தவுடன் அதனைச் சோதித்து சரிபார்த்தல் / தொழில்நுட்பச் சமூகத்தின் இக்கொள்கை பற்றி ஆராயும் முன் தொழில்நுட்பம் குறித்தத் தெளிவான சிந்தனை நமக்கு இருப்பது மிக அவசியம்.

தொழில்நுட்பம் என்பது விஞ்ஞானத்தின் பயன்பாடு என்ற கருத்தாக்கமே 19ஆம் நூற்றாண்டு வரை நிலவிய கருத்து. என்றாலும் தொழில்நுட்பம் வேறு, தொழில்நுட்பப் பார்வை வேறு தொழில்நுட்பம் இயந்திரங்களைச் சார்ந்ததாகப் பயன்பாடு கருதிய ஒன்று. ஆனால் தொழில்நுட்பப் பார்வை என்பது விதிமுறை என்றே சொல்ல வேண்டும். இதைப் பற்றி அறிஞர் ஜாக்வஸ் எலுவீ (Jacques Ellue) கருத்துரைக்கையில் தொழில்நுட்பப் பார்வையை மானுட இனத்தின் ஒரு மனநிலை, மனோபாவமாக எடுத்துரைக்கின்றார்.

தொழில்நுட்பப் பார்வை என்பது பழக்கத்தில் இருப்பது பற்றியது இல்லை. இயந்திரங்களை, கருவிகளைப் பயன்படுத்துவது அல்ல. இயந்திரங்களை இயக்குவதற்காக ஓர் அமைப்பாக வடிவம் கொடுக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்டு நியாயப்படுத்துவது என்ற குணமுடைய ஒன்று. சுருங்கக் கூறின் தொழில்நுட்பப் பார்வை என்பது திட்டமிட்ட இலக்கை அடையக்கூடிய பல முறைகளின் முழுமை.

ஆக தொழில்நுட்பப் பார்வை பற்றிய பிரச்சினை என்பது மனிதன் பற்றிய பிரச்சினையாகும். தொழில்நுட்பப் பார்வைதான் இயந்திரங்களை இணைப்பதிலும் உருவாக்குவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இயந்திரங்களைச் சமூகத்துடன் சேர்க்கிறது. நெறிப்படுத்துகிறது. ஒரு காலக்கட்டம் வரை தொழில்நுட்பத்திற்குப் பின் அறிவியல் வளர்ந்தது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அறிவியலுக்காகக் காத்திருந்தது.

ஆனால் இன்று தொழில்நுட்பப் பார்வை / தொழில்நுட்பத்தின் கையில் ஓர் கருவியாக விஞ்ஞானம் உள்ளது. மேற்கூறிய விளக்கங்களால் இன்றைய தொழில்நுட்பம் விஞ்ஞானத்தின் பயன்பாடு என்பது தவறு என்ற கருத்தினை உணர முடிகிறது. பெரும்பான்மையான அமைப்புகளிலும் நிறுவனங்களிலும் இத்தொழில்நுட்பப் பார்வையே செறிவாகச் செயற்படுகிறது. தொழில்நுட்பம், தொழில்நுட்பப் பார்வை வேறுபாடுகளாவன

1. முற்காலச் சமூகங்கள் கருவிகளின் பயன், கருவிகளை அபிவிருத்தி செய்தல் குறித்து கவனம் செலுத்தியது. இது கருவிகள் அதனளவில் கருவிகள் என்பதற்காக அல்ல.

2. கருவிகள் சிலவாகவும் கருவிகளைக் கையாள்பவர் திறன் அக்கருவிகளின் குறைகளை ஈடுசெய்யும் வகையில் இருந்தன. ஆகத் தொழில்நுட்பம் மனித வாழ்க்கைக் கலாசார அமைப்பு முறையில் பொதிந்த ஒரு கூறு. இன்றைய நிலை வேறு, கருவி கையாள்பவரின் திறனை விட மிக்கதாய் அவனைக் கட்டுப்படுத்துவதாய் உள்ளது.

3. மனிதனுக்கான தொழில்நுட்பக் கருவிகள் மாறுதல் அடைந்த நிலைமாறி தொழில்நுட்பக் கருவிகளுக்காக மனிதனும் அமைப்புகளும் தங்களை மாற்றிக் கொள்ளும் நிலை உள்ளது.

மேற்குறித்த வேறுபாடுகள் தொழில்நுட்பம் பற்றிய பிரச்சினை என்பது மனிதன் குறித்த பிரச்சினை என்பதை உறுதி செய்கின்றன. ஆதிக்கச் சக்திகளின் வெளிப்பாடாக இன்றைய தொழில்நுட்பம் உள்ளது. உயிர் அமைப்பு பற்றிய டார்வின் கொள்கை உரைத்தது என்ன? உயிரின் வாழ்க்கைப் போராட்டத்தில் வலிமை உள்ளதே வாழும்.

அவ்வாறு வலிமையில் வெற்றி பெற்ற உயிர் தான் வாழ இடம் போதவில்லை எனில் தம்மினத்துடன் புது இடத்தில் வாழலாம். அங்குள்ள புதிய கூறுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இக்கோட்பாட்டில் ஊடுருவி நிற்கும் கருத்தாக்கம் என்று உள்ளது. அது வன்முறையின் ஊடாக முன்னேற்றம் என்பதே, ஓர் உயிரானது வலிமை பெற்று விளங்க வேண்டுமெனில் பிற உயிர்களைத் தன் வலிமையால் வெல்ல வேண்டும்.

இந்தப் போட்டி வன்முறை தவிர்க்க முடியாதவை. வலிமையால் வென்று தம் கூறுகளை நம் வம்சத்திடம் ஒப்படைத்துக் கண்மூடும் போது அந்த இனம் நிச்சயமாக வளர்ந்த இனம் என்கிறது இக்கொள்கை. இச்சித்தாந்தத்தில் தொழில்நுட்பம் புகுந்ததன் விளைவு மரபணுக்கள் விதிப்படி அமையாது. சூழலுக்கு ஏற்ப எதிர்வினை புரிந்து தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் தன்மையுடையனவாய் அமைகிறது.

அதன்பின் தொடர்ந்து ஒருங்கி ணைப்பதன் மூலமே முழுமை பெறும் என்பது இன்றைய தொழில்நுட்பக் கணிப்பொறி யுகத்தின் விளைவாகும். அதாவது எல்லாமே தகவல்தான். மனிதன் உடலின் விரிவாகப் பார்க்கப்பட்ட இயற்கை மனித மனதின் விரிவாக இயற்கையை இன்று பார்க்கிற நிலை ஏற்பட்டுள்ளது. எல்லாமே தகவல் என்றால் உயிர் அமைப்பும் தகவல்தான். இவை குறிப்பிட்ட கால அளவில் தகவல்க ளைச் சேகரிக்கின்றன- பரிசீலித்து ஒழுங் கமைக்கின்றன. வெளிப்படுத்துகின்றன.

பரிணாமம் என்பது சில தகவல்களை மலர்த்துவதும் பிற தகவலை ஈர்ப்பதுமாக ஒரு நிகழ்முறை மட்டுமே உயிர் அமைப்பும் கணிப்பொறியும் ஒன்று என்ற கருத்து இன்று இணை க்கப்பட்டு உயிர்க் கணிப்பொறி உயிருள்ள கணிப்பொறி உருவாக்கப்படு கிறது. இரண்டுக்கும் ஒரு மொழி வந்துவிட்டது. இரண்டும் ஒன்றை ஒன்று வளர்த்துச் செல்கின்றன. ஆக இரண்டுக்கும் இடையே வேறுபாடு இல்லை.

உயிரற்ற பொருளும் மனி தனும் ஒன்று. எதையும் எதாகவும் மாற்றலாம். விஞ்ஞான தொழில்நுட்பம் புதுப்புதுப் பயன்பாடுகளைத் தந்து பெரும் வெற்றி தந்துள்ளது. எனினும் அதன் விளைவுகளைப் பட்டியலிடுகை யில் பாதகமானதாகவே அமைந்துள்ளன.

பசுமைப் புரட்சி என்ற பெயரில் பூர்வீகப் பயிரினங்கள் இருக்க வீரிய இனங்களாகத் திணித்து உரக் கம்பனிகள் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகள், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டு இருப்பது விளைவு, பயிர்கள் மரபு வழி வித்துக்களை இழந்தன.

சமூக நலக்காடுகளைப் பராமரிப்பு என்ற பெயரில் தேக்குக் கன்றுகள் யூக்கலிப்டஸ் மரக் கன்றுகளை வளர்த்தல் விளைவு நிலத்தடி நீர் குறைந்து நிலச் சரிவுகள் ஏற்பட்டன. காடுகளை அழித்ததால் மழை வளம் குறைந்தது. விளைவு ஆதிவாசிகள் அகதிகளாகினர்.

அணைத்திட்டம் - நீர்தேக்கி வைத்தல்பல நோய்கள் உருவாகின. நிலங்களில் உவர் தன்மை மிகுந்து வேளாண்மை பாதிக்கப்பட்டது. விளைவு விவசாயிகள் வயிற்றுப் பிழைப்பிற்காக இடம்பெயர்ந்தனர். எல்லை கடந்து பயன்படுத்திய புகைவடிவ எரிபொருட்கள் ஓசோன் படலத்தில் துளையை ஏற்படச் செய்தன. விளைவு பூமியின் மீது வெப்பம் அதிகமாகி அமில மழை கடல் பொங்கி வறட்சி அதிகமானது. பூகம்பம் தோன்றிற்று.

மருத்துவ முறைகள் பெரும்பான்மை அறுவைச் சிகிச்சை முறைகள் இயந்திரங்களைச் சார்ந்து அமைந்தன. விளைவு தேவையான மருந்துகள் கிடைக்காது பற்றாக்குறை பக்க விளைவுள்.

தொழில்நுட்ப ஊடுருவலில் கிராமங்களிலும் நகரங்களிலும் தோன்றியிருக்கும் நிதி அமைப்புகள் கிராம நகர்ப்புற உறவுகளில் சிதைவை ஏற்படுத்தியிருப்பதை உணர வேண்டும்.

உயிர்த்தொழில் நுட்பத்தில் ஓர் உச்ச நிலையாக எயிட்ஸ் நுண்ணுயிர்கள் உருவாக்கப்பட்டிருப்பது ஒரு காலத்தில் அமெரிக்க போர் முறையாக கையா ளப்பட்டது. ஆனால் அதிக அளவில் எயிட்ஸ் பரவியதற்கு பாலுணர்வு காரணமாக சுட்டப்படுகிறது.

அதே போன்று கால்நடைகளில் பரவவிட்ட நுண்ணுயிர்கள் (ஆந்ராக்ஸ்) வல்லரசு என்ற தகுதியைத் தக்க வைத்துக்கொள்ள ஒவ்வொரு நாடும் போர் முயற்சியில் இறங்குகிறது. விளைவு மனித இனம் அழியக்கூடிய அபாய நிலை. மனித உணர்வுகள் மறுக்கப்பட்டு மனித நேயம் சிதைந்து கொண்டிருக் கின்றது.

இன்றைய கணனி தொழில்நுட்பத் தில் மனிதன் கணனியின் ஒரு உறுப் பாக மாறி உள்ளான். இராணுவத்தின் இடங்களில் பயன்படுத்தப்படும் கணிதமும் விளையாட்டுக் கோட்பாடும் (Operation Research)  ஒவ்வொரு துறையிலும் செயற்படுத்தப்படுகிறது.

விண்வெளி ஏவுகணை முதல் குழந்தையின் வீடியோ விளையாட்டு வரை குழந்தைகள் இவ்விளையாட்டு முறை ஒரு விதத்தில் இராணுவச் சிந்தனையை ஊக்குவிக்கிறது. கணனி மயமாக்கல் வளர்ச்சி பெற்ற கார்டீசிய பார்வையை முன் வைக்கிறது. புதிய அறிவியல் தொழில்நுட்பம்

1. குறைந்த செலவினை முன்வைத்து மக்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய தொழில்திறனை படைப்பாற்றலை வளர்க்கக் கூடியதாய் அடிமைத்தனத்தை வளர்க்காத தொழில்நுட்பம் தேவை.

2. சுற்றுச் சூழலுக்கு பேரழிவு இல்லாது, மூலவளங்கள் இருக்கும் இடத்திலே இழப்பின்றி பயன்படுத்தக் கூடியதாய் அதிகாரப் பரவல் விஞ்ஞான தொழில்நுட்பம் தேவை.

3. இயற்கையோடு இயைந்த தொழில்நுட்பம் தேவை.

4. மனிதனின் முழு வளர்ச்சியையும் இலக்காகக் கொண்ட வணிக நோக்கமற்ற தொழில்நுட்பம் தேவை.

5. போருக்கான தொழில்நுட்பத்தை ஒதுக்கி அமைதிக்கான முன்னுரிமையை அளிக்கும் தொழில்நுட்பம் தேவை. கிராமங்களில் வாழும் மக்கள் உயிரற்ற இயந்திரங்களோடு போட்டி போட வேண்டியுள்ளது. மனித சக்தி போதிய அளவு கிடைக்காத சூழலில் இயந்திரங்கள் மனிதனுக்குத் துணை செய்ய வேண்டும்.

அடிப்படை இலாப நோக்கத்தின் விளைவு, சமூகத்தில் ஏற்றத்தாழ்வை உண்டு பண்ணும் உற்பத்தி பெருமளவில் இருக்க வேண்டும் என்று கருதக்கூடாது. மக்களுக்காக உற்பத்தி இருக்க வேண்டும் என்ற காந்தியின் கருத்து இங்கு நினைவுகூரப்படல் வேண்டும். இன்றைய விஞ்ஞானம் இயற்கையை வென்றடக்குவதாக இருக்கின்றது.

பசுமைப் புரட்சி, உயிர்த் தொழில் நுட்பம், தகவல் புரட்சி, கணனி என்ற வடிவங்களில் இன்று விஞ்ஞா னம் வளர்ச்சி பெற்று வந்தாலும் அதில் தாங்கியுள்ள அசுரத்தனமான ஆதிக் கங்களை தெளிவாக நாம் உணர்ந் திருப்பதுடன் ஆதிக்கங்களை யார் செலுத்துகிறார்கள் என்பதையும் தெரிந்தே இருக்கிறோம். இன்றைய மனிதன் இயற்கையுடன் அந்நியமாகி மனித நேயத்தை இழந்து கொண்டி ருக்கிறான் என்பதே உண்மை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com