Contact us at: sooddram@gmail.com

 

தமிழை சாகாமல் காக்க...

யூப்பிரட்டீஸ், டைக்கிரடீஸ் நதிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த பபிலோனியாவைச் சேர்ந்த சுமேரியரே எண்களின் குறியீட்டு முறையைக் கண்டு பிடித்தனர். தசமான (Decimal)  ுறையில் ஆண்டினை 360 நாட்களாக வகுத்தனர். வட்டத்தை 360 பகைகளாகப் பிரித்தனர். ஆரையை நாணாகக் கொண்டு ஒரு வட்டத்தை ஆறு நாண்களாக வகுத்தனர். இதில் இருந்து ஒரு நாள் 24 மணிகளாகவும் ஒரு மணி 60 நிமிடங்களாகவும், 60 வினாடி ஒரு நிமிடமாவும் பிரித்துப் பார்த்தனர்.

கி. மு. 1760 இல் எகிப்தில் வாழ்ந்தஆமிஸ்என்பவர் 5000 ஆண்டிற்கு முன் பூமியின் அமைப்பு பரப்பைக் கணக்கிடல் போன்றவற்றைக் கண்டறிந்ததாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். இந்தியாவில் கி. பி. 500 இருந்து 1500 க்குள்ளேயே பல கணிதவியல் அறிஞர்கள் தோன்றியுள்ளனர். இலக்கங்களோடும் எழுத்தோடும் சிந்துவெளி நாகரிகத்தைத் தொடர்புபடுத்தி சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே எனக் கூலிக்கு மாரடிக்க எத்தனிப்போர்களில் முதல்வராகஅங்கோபார்போலாவைக் கொள்ள முடியும்.

இனி தமிழ் மொழியைச் செம்மொழியாக்க நாம் என்ன செய்ய வேண்டும். இஃதே வேளை தமிழ் மெல்லாச் சாகாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என ஆராய்வோம். தமிழைச் செம்மொழியாகக் கொள்ள வேண்டும் என இந்திய அரசை முதலில் கோரியவர் ஜோர்ஜ்ஹாட் என்ற அமெரிக்கரே. 1901 ஆம் ஆண்டு மதுரையில் நான்காவது சங்கம் என கருதத்தக்க அமைப்பொன்று இயங்கியது. இதில் அங்கம் வகித்த பரிதிமாக் கலைஞர் தமிழையும் செம்மொழியாக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இப்படியான பலரின் வேண்டுகோளின்படி இந்திய மத்திய அரசு 12.10.2004 அன்று பிறப்பித்த அரச ஆணையால் தமிழ் செம்மொழியானது எனச் சிலர் கூறுகிறார்கள். சரி அப்படியே வைத்துக் கொள்வோம்.

இந்த ஆணையில் நான்கு விடயங்கள் அடங்கியிருந்தன.

1. செம்மொழிகள் என ஒரு புதிய மொழிப்பகுப்பினை உருவாக்குவதென இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. (இதன்படி இதற்கு முன் அப்படி யொன்று இருக்க வில்லை என்பது பொருள்.)

2. ‘செம்மொழிவரிசைப் படுத்தலில் கருத்தில் கொள்ளப் படும் மொழிகளின் தகுதிப் பாட்டினை உறுதிசெய்ய பின்வரும் அளவைகள் (வழிகள்) பின்பற்றப்படும். இந்த இண்டாவது விடயத்திற்குள் பின்வரும் மூன்று விடயங்கள் அடங்கும்.

1. 500 – 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மிகவும் பழமைவாய்ந்த நூல்கள் மூலம் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு.

2. தலைமுறை தலைமுறையாக அதனைப் பேசுபவர்களால் மதிப்புயர்ந்தது எனக் கருதப்படும் ஒரு தொகுதி பண்டைய இலக்கிய நூல்கள்.

3. இன்னுமொரு மொழி பேசும் மக்கள் குழுவிடம் இருந்து கடன் பெற்றதாக அல்லாமல், தொடக்க முதலாக இருந்துவரும் இலக்கிய மரபு.

4. தமிழ் மொழி மேற்படி இரண்டாவது பந்தியில் பட்டியலிடப்பட்டுள்ள அமைப்புக்களுக்கு (அளவைகளுக்கு) ஏற்புடையதாக அமைவதால் இன்று முதல் தமிழ் மொழி செம்மொழியாக வகைப்படுத் தப்பட்டுள்ளது என அறிவிக்கப்படுகின்றது.

மேற்படி தீர்வுகளை நடைமுறைப்படுத்தவும் தொடர்பு நடவடிக்கைகளை பண்பாட்டு அமைச்சு மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவும் இந்தச் செம்மொழி அறிவிப்பினை இந்திய அரசு செய்வதற்கு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தென் இந்திய மாநில அரசு மேற்கொண்டு வந்தது எனலாம். உதாரணமாக,

1887இல் ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தது. இந்திய மத்திய சட்ட சபையில் சுதேச தாய்மொழிகளை எல்லாம் சர்வ கலாசாலைகளில் இருந்தும் நீக்கிவிட வேண்டும்என்ற பிரேரணையைக் கொண்டு வந்தது இதனை இராஜாங்கச் செயலாளர் சென்னைப் பல்கலைக் கழகங்களுக்கு அவர்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டு அனுப்பிவைத்தார்.

இதன் பின்பே வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகள் மு. கி. பூரணலிங்கம் பிள்ளையின் துணையுடன் பல சர்வகலாசாலை ஆசிரியர்களும் சேர்ந்தது தமிழ் மொழியும் செம்மொழியே என்று பிரகடனம் செய்து அதைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக்க வேண்டுமென்று வலியுறுத்தி சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு அறிவித்தனர்.

1887 ஆம் ஆண்டு பி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியின் செம்மொழிப் பிரகடனத்தின் பின்பே சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு இது ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது.

பலரும் இது பற்றிக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தனர்.

இதன் பின்னர் மத்திய அரசுடன் பலர் தொடர்பு கொண்டு தமிழைச் செம்மொழியாகக் கருத வேண்டும் என வற்புறுத்தினர்.

தென் இந்திய மாநில அரசின், பேராசிரியர்களான ச. அகத்தியலிங்கம், பொன் கோதண்டராமன், டாக்டர் வ. வெ. குழந்தைசாமி, டாக்டர் ஜோன் சாமுவேல், மணவை முஸ்தபா போன்றோர் கொண்ட குழு மத்திய அரசு தமிழை செம்மொழியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய பரிந்துரைகளைச் சிபாரிசு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதிலிருந்து தமிழை செம்மொழியாக ஏற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு வந்தது. இதன் பின்பே 12.10.2004ல் தமிழுக்கும் செம்மொழி அந்தஸ்துக் கிடைத்தது. இதுவே தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்து வரலாறு எனலாம்.

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்கப்பெற்றால் கிடைக்கும் இலாபம் என்ன?

1. உலகப் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் தமிழைக் கற்கும் வாய்ப்பு ஏற்படும்.

2. உலகப் பல்கலைக் கழகங்களிலும் இந்தியப் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் மொழிக்கான தவிசுகள் ஏற்படுத்தப்படலாம்.

3. ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு செம்மொழி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடான ஐந்து கோடி ரூபா தமிழுக்கு கிடைக்கும்.

4. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு கெளரவமும் தமிழ் மொழிக்கும் ஏற்படும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com