Contact us at: sooddram@gmail.com

 

எல்லோருக்கும் பல்கலைக்கழக பட்டதாரிகளாகும் வாய்ப்பு கிடைக்கும்

இலங்கையில் கடந்த 60 ஆண்டு காலமாக இருந்து வரும் இலவச கல்வியை மேலும் மேம்படுத்தும் முகமாக, அரசாங்கம் இப் போது நாடெங்கிலும் உள்ள 340 தேசிய பாடசாலைகளில் சீர்த்திருத்தங்களை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்பாடசாலைகளில் தொடர்ந்தும் 8 வருட காலம் பணியாற்றிவரும் ஆசிரியர்களை அடுத்த ஜனவரி மாதம் முதல் இடமாற்றம் செய்யப் போவதாக கல்வியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஒரே ஆசிரியர் ஒரே பாடசாலையில் அதிக காலம் கடமையாற்றினால், அவர் மாற்றங்கள் ஏற்படுத்துவதை விரும்பமாட்டார் என்பதற்காகவும், புதிதாக பட்டம் பெற்று வெளியேறும் திறமை மிக்க இளைஞர்களையும், யுவதி களையும் இப்பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிப்பதற்கும் கல்வியமை ச்சர் பந்துல குணவர்தன இந்த தீர்மானத்தை எடுத்திருக்கிறார்.

தேசிய பாடசாலைகள் இலவச கல்வியின் சின்னங்களாக விளங் குகின்ற போதிலும், அவற்றில் பெரும் குறைபாடுகள் இருக்கின்றன. ஆசிரியர் பற்றாக்குறை, வசதியான கட்டடங்கள் இன்மை, தள பாடங்கள் போதி யளவு இல்லாதிருத்தல் ஆகியன கல்விகற்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு பெரும் பின்தங்கலை ஏற்படுத்துகிறது என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

நகரப்புறங்களிலுள்ள தேசிய பாடசாலைகள் ஓரளவு வசதியான கட்டடங்களையும், போதியளவு தளபாடங்களையும், ஆசிரியர் பற்றாக்குறையுமின்றி இருக்கின்ற போதிலும் கதிர்காமம் போன்ற பின்தங்கிய பிரதேசங் களிலுள்ள தேசிய பாடசாலைகள் எவ்வித வசதிகளுமின்றி, படுமோசமான நிலையில் இன்றும் கூட இருந்து வருவது மன வேதனையை அளிப்பதாக இருக்கின்றது.

இத்தகைய குறைபாடுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைப்பதற் காக, அமைச்சர் பெருமளவு பணத்தை செலவிட்டு, சகல தேசிய பாட சாலைகளையும் புனரமைப்பு செய்து, அவற்றிற்கு புதிய அதிபர் களை நியமிப்பதற்கும் தீர்மானித்திருக்கிறார். இத்துடன், 10 தேசிய பாடசாலைகளுக்கு ஒரு கல்வி பணிப்பாளரை பொறுப்பாக நியமித்து, அப்பாடசாலைகளின் கல்வித் தரத்தையும் ஏனைய வசதிகளையும் பராமரிப்பதற்கும் கல்வியமைச்சர் முடிவெடுத்துகிறார்.

இதேவேளையில், கல்வியமைச்சு, நாடெங்கிலும் உள்ள பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி, மாணவ, மாணவிக ளுக்கு கணனி பயிற்சியை வழங்கும் திட்டத் தையும் பாரிய அடிப்ப டையில் இப்போது எடுத்து வருகிறது. இன்று, தகவல் தொழில்நுட்பத்தில் இலங்கையர் சராசரியாக 24 சதவீதமே தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். இந்த எண் ணிக்கை அரசாங்கம் 2015 ம் ஆண்டளவில், 75 சதவீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.

இலங்கையின் இலவசக் கல்வி பாலர் வகுப்பு முதல் க.பொ.த. உயர்தர வகுப்பு வரையில் இன்று நல்ல தரத்தில் இருக்கின்றன. ஆயினும் க.பொ.த. சாதாரண, உயர்தர பரீட்சைகளில் சிறப்பு சித்திய டைந்தவர்கள் பின்னர், தங்கள் உயர்தர கல்வியை பெறுவதற்கு இருக்கும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.

பல்லாயிரக் கணக்கானோர் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து, உயர்கல்வியை பல்கலைக்கழகங்களுக்கு சென்று கற்றுக் கொள் ளும் தகுதியை பெற்றிருந்தாலும், அவர்களுக்கு இலங்கையில் இப்போது உள்ள பல்கலைக்கழகங்களில் போதியளவு வெற்றி டங்கள் இருப்ப தில்லை. இதனால், சுமார் 15 முதல் 20 ஆயிரம் மாணவ, மாணவிகளே வருடா வருடம் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

பல்கலைக்கழகத்திற்கு செல்லும் கல்வித் தகுதி இருந்தும், பல்கலைக்கழகங்க ளுக்கு செல்ல முடியாத நிலையிருக்கும் மாணவ, மாணவிகள் விரக்தி அடைந்து, வேறு தொழில்களை தேடிச் செல்ல வேண்டிய அவலநிலையும் இன்று, இருந்து வருகிறது. இதனால், சிறந்த வைத்தியர் களாகவும் பொறியலாளர்களாகவும், கல்விமான்களாகவும், விஞ்ஞானி களாகவும் எதிர்காலத்தில் வரவேண்டிய இளைஞர்களும், யுவதிகளும் தங்கள் எதிர்பார்ப்புக்களை அடைய முடியாத நிலை தோன்றியுள்ளது.

இவர்களில், சற்ற வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் பெற் றோர், தங்கள் வீடு, வாசல்களை விற்று அல்லது அடைமானம் வைத்து, இந்த பிள்ளைகளை வெளிநாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பி, கல்வியை தொடர வைக்கிறார்கள். ஆனால், இவ்விதம் வெளிநாடு செல்லும் எல்லோருமே கல்வியை தொடர்கிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. இவர்களில் பெரும்பாலானோர் அங்கு வேறு தொழில்களை பெற்று, பெற் றோரின் பணத்தை வீண்விரயம் செய்யும் எத்தனையோ சம்ப வங்கள் நாளாந்தம் எற்பட்ட வண்ணம் இருக்கின்றன.

எமது நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு உயர்கல்வியை பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் எண்ணத்துடன் உயர்கல்வியமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, இப்போது சுமார் 15 வெளிநாட்டு தனியார் பல்கலைக் கழகங்களுக்கு இலங்கையில் கல்வி வளாகங்களை திறந்து எமது மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியை ஓரளவு பணத்தை செலுத்தி, பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு வசதிகளை செய்து கொடுப்பத ற்கு தீர்மானித்துள்ளார்.

பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழகங்கள் இங்கு தங்கள் வளாகங்களை திறந்து, விரைவில் எமது நாட்டில் உயர்கல்வியை பெறுவதற்கு விரும்பும் மாணவ, மாணவிக ளுக்கு அந்த வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் இப்போது துரித கதியில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com