Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் மொழியும் சீர்திருத்தங்களும்

இன்று இருக்கின்ற தமிழ் எழுத்து வட்டெழுத்து எனவும், இந்த வட்டெழுத்தின் ஆதிபிராமிஎழுத்தென்றும்,

பிராமி எழுத்து முறை சிந்துவெளி நாகரிக எழுத்தின் திருந்திய ஒரு வடிவம் என்றும் சிந்துவெளி நாகரிக எழுத்துஎதியோப்பிய மக்கள் (இன்றைய ஈராக்) எழுதிய எழுத்தில் இருந்து வந்தது என்றும், ஊகிக்க முடிகிறது.

இன்றைய மொழியியலாளர்கள் எழுத்து முறையை மூன்றாக வகுத்துப் பார்க்கின்றனர்.

1. ஐரோப்பிய மொழிகளின் எழுத்து வழக்கில் உள்ள மொழிகளான றோமன் எழுத்து முறை (இங்கிலிஸ் எழுத்தும் இதைச் சார்ந்ததே)

2. கிரேக்க எழுத்துமுறை

3. அரபு, ஹீப்ரு மொழிகளை உள்ளடக்கிய எழுத்துமுறை ஆகிய மூன்று முறைகளே அம்முறைகளாகும்.

(ஆதாரம : தமிழும் அயலும், சி. சிவசேகரன்)

இஃதேவேளை பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்கள் சிந்துவெளி நாகரிக எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே எனக் கூறியுள்ளார்.

சிந்துவெளி நாகரிக எழுத்துக்கள் தமிழ் எழுத்தென்றால் சிந்து வெளி நாகரிகம் திராவிட நாகரிம் அல்ல எனப் பொருள்படும்.

அத்தோடு சிந்துவெளி நாகரிகத்தின் எழுத்து தமிழ் எழுத்தென்றால் அது சுமேரிய நாகரிகத்தின் தொடர் என்பதுவும் நிரூபணமாகும்.

இஃதேவேளை தொல்காப்பியர் காலத்தில் இருந்த எழுத்துக்களல்ல இப்பொழுது தமிழ் மொழியில் இருக்கும் எழுத்துக்கள் என நாம் மனதில் கொள்ள வேண்டும்.

தொல்காப்பியர் காலத்தில் ஆய்த எழுத்து என்று ஒன்று இப்பொழுது இருக்கும்இந்த அமைப்பில் இருக்கவில்லை. குறியீடாகவே அப்பொழுது இருந்தது. எழுத்துக்கள் கூட முப்பது எழுத்துக்கள்தான் அப்பொழுது இருந்துள்ளன. இதற்கு தொல்காப்பிய சூத்திரங்கள் ஆதாரமாக உள்ளன.

உதாரணமாக தொல்காப்பியர்

எழுத்தெனப்படுவ

அகர முதல் னகர இறுவாய்

முப்பதென்ப

சார்ந்து வரல் மரபின் மூன்று

ஆலம் இடையே

அதாவது தொல்காப்பியர் சூத்திரப்படி உயிர் 12, மெய் 18, சார்பெழுத்து ஆதாவது குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆயுதக் குறியீடு ஒன்று எல்லாம் 33 எழுத்துக்களே இருந்துள்ளன. சார்பெழுத்துக்களில் ஒன்றாகவே ஆய்த எழுத்தும் கருதப்படுகின்றது.

இயல்பாகவே அரை மாத்திரை ஒலியளவு பெறும் ஆய்த எழுத்து ஓசை குறித்து கால் மாத்திரையாக ஒலிக்கும் பொழுது ஆய்தக் குறுக்கமாகி சார்பெழுத்தாகிறது எனலாம்.

காலப் போக்கில் தமிழ் வரி வடிவத்துக்குள் சுழிகளும், கொம்புகளும், வளைவுகளும் உருவாகி குழந்தைகள் எழுதுவதற்கும், நினைவில் வைத்துக் கொள்வதற்கும் கடினமானதாக அமைந்துவிட்டது எனலாம்.

றோமன் வரி வடிவத்தின் பெரிய எழுத்துக்களோடு ஒப்பிடும் போது எமது எழுத்தின் சிக்கல் நன்கு புலனாகும்.

தமிழ் மொழியில் நடைபெற்ற பிற்கால எழுத்துச் சீர்திருத்தத்தினை ஆண்டு வாரியாக இவ்வாறு கூற முடியும்.

1930 ஆம் ஆண்டு காரைக்குடியில் இருந்து வெளிவந்தகுமரன்இதழில் அதன் ஆசிரியர் திரு. முருகப்பா ஒரு கட்டுரை எழுதினார். அதில் ணா, றா, னா, னை, ணை, லை, ளை போன்ற எழுத்துக்களைப் பயன்படுத்தியே அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது.

1933 டிசம்பர் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்த தமிழன்பர் மாநாட்டில் 15வது சீர்திருத்தமாக எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்படடது.

1935 ல் பெரியாரின்எழுத்துஎன்ற கருத்தை வைத்து குடியரசு, விடுதலை போன்ற சஞ்சிகைகளில் கட்டுரைகள் எழுதப்பட்டன.

1941 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் 19 ஆம் திகதிகளில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

1948 பெப்ரவரி 14 ஆம் 15 ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெற்ற அகில தமிழர் மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1977ல் தி. மு. க. தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில்அறிஞர்களின் கருத்தை அறிந்து எல்லோரும் ஏற்கும் வகையில் எழுத்துச் சீர்திருத்தம்செய்வதாக அறிவித்தது. (ஆதாரம : தமிழ் எழுத்துச் சீரமைப்பு டாக்டர் வா. செ. குழந்தைசாமி)

இஃது இவ்வாறிருக்க, பனையோலையில் இரும்பு ஆணியால் எழுதுவதற்கு உதவியாக அமைக்கப்பட்ட பழங்கால எழுத்து வடிவங்களை இனியும் போற்றிக் கொண்டிருப்பதில் கருத்தில்லை என்பதனால் தட்டச்சு, அச்சு, கொம்பியூட்டர் போன்றவற்றிற்கு ஏற்ப எழுத்துக்களை மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.

அதனால் தமிழ் மொழியில் செய்யக்கூடிய பல சீர்திருத்தங்களை இங்கு எடுத்து நோக்குவோம். இச்சீர்திருத்தங்கள் உலகின் பிரபலமான மொழிகள் பலவற்றிலே நடைபெற்றுள்ளதையும் நாம் அவதானிக்கலாம்.

சீன மொழிக்கு இலக்கணமே இல்லை. இது பற்றி அவர்கள் கவலைப்படுவதுமில்லை.

ஜப்பான் மொழிக்கு 400 ஆண்டுகளுக்கு முன்தான் வரலாறு ஏற்பட்டது.

ஜப்பானியர்கள் மேலிருந்து கீழாக எழுதும் வழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள். இப்பொழுது இடமிருந்து வலமாக எழுதும் வழக்கத்திற்கு மாறிக் கொண்டார்கள். அத்தோடு, பிறமொழிகளில் உள்ள நல்ல அம்சங்களை தன்னுள்ளாக்கி உலகமெங்கும் சுற்றுலா வரும் அளவிற்கு பிரபலமடைந்து இருக்கிறார்கள். அதாவது மாற்றங்கள் பலவற்றை உள்வாங்கி வளர்ச்சியடைந்து வருகிறார்கள்.

ஜேர்மன் மொழிக்குகார்த்திக்என்ற எழுத்துவரி வடிவம் இருந்தது. சந்தடி செய்யாமல் ஜேர்மனியர்கள் றோமன் வரிவடிவத்திற்கு தங்கள் மொழியை மாற்றிக் கொண்டார்கள். ஆனால் தமிழ் மொழி நல்ல இலக்கிய வளமுடைய மொழியாக இருந்தும் வளர்ச்சியடைந்தது போதாது எனலாம்.

இதனால்தான் போலும், ஈ. வே. ரா. பெரியார் தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்றார்.

இது கொஞ்சம் அபத்தமான வார்த்தைகள்தான். தமிழ் மொழியை பல சீர்திருத்தங்களுக்காக்கி வளர்ச்சியடையச் செய்ய வேண்டியது எமது பொறுப்பாகும். ஏசிக் கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை.

இதனை இனி விரிவாக எடுத்து நோக்குவோம். தமிழ் மொழிச் சீர்திருத்தம் என வரும்போது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். இது சம்பந்தமாக நான் தினகரனில் இரண்டு கட்டுரைகளை எழுதியுள்ளதோடு, (26.1.90, 27.10.90) இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இரண்டு பேச்சுக்களையும் பேசியுள்ளேன்.

இதற்குச் சாதகமாகவும் பாதகமாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

இப்படியான மாற்றங்கள் தொல்காப்பியர், பவனந்தி முனிவர், வீரமாமுனிவர், ஆறுமுக நாவலர் போன்றோர் காலங்களிலும் நடைபெற்றே வந்துள்ளன. ஏன் நாமும் சீர்திருத்தங்களைச் செய்யக்கூடாது.

எனவே, இன்றைய எழுத்துச் சீர்திருத்தம் பின்வருமாறு அமைவது பொருத்தமுடையதாகும்.

அ) எழுத்துக் குறைப்பு

ஆ) தேவையான ஒலிகளுக்கு ஏற்ப எழுத்துக்களை உண்டாக்கல்

இ) வரிவடிவத்தில் மாற்றம் உண்டாக்கல்

ஈ) விஞ்ஞானத்தோடு இணைய சில ஆலோசனைகள்

என்றவாறு சீர்திருத்தங்கள் அமையலாம்.

முதலில் எழுத்துக் குறைப்புப் பற்றி எடுத்து நோக்குவோம்.

(அ) 247 எழுத்துக்களைக் கொண்ட எமது தமிழ் மொழியிலே பதின்மூன்று எழுத்துக்களில் மட்டுமே சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம். மேலும் இப்படிப் பல எழுத்துச் சீர்திருத்தங்களைச் செய்யலாம்.

எம்மிடம் அரவு (¡) என்ற குறியீடும் கொம்பரவு (¨) அல்லது மாடிகொம்பு எனும் குறியீடும் உண்டு. இதனைப் பிரயோகித்து இன்னும் பல எழுத்துச் சீர்திருத்தங்களைச் செய்ய முடியும்.

உதாரணமாக உயிர் எழுத்து எல்லா மொழிகளிலும் ஐந்து எழுத்துக்களே. அதாவது உயிர்ச் சத்தங்கள் ஐந்தே. A, E, I, O, U சத்தகங்களே அவை. ஆனால் தமிழ் மொழியில் 12 உயிர் எழுத்துக்கள் உண்டு. இதனைப் பின்வருமாறு மாற்ற முடியும்.

மருதூர் ஏ.மஜீத்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com