Contact us at: sooddram@gmail.com

 

வன்னியில் களமிறங்கியுள்ள இளம் தலைவர்கள்

யுத்தம் முடிவடைந்த பின்னர் தற்போது முழுமையான அரசாங்கத்தின் நிர்வாகத்தில் இருந்து வரும் வன்னிப் பிரதேச மக்கள் தமது எதிர்காலம் குறித்த சிந்தனையில் ஆழ்ந்துள்ளனர். இறுதி யுத்தத்தின் தாக்கம் இன்னமும் இவர்களது மனதை விட்டகலவில்லை. இருந்தும் தாம் இனிமே லும் பழையவற்றை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்பதையும் இய ல்பு வாழ்வுக்கு முழுமையாகத் திரும்ப வேண்டும் என்பதையும் இவர்களுடன் உரையாடும்போது யாருமே உணரலாம்.

வன்னிப் பிரதேசத்திற்கு அடிக்கடி விஜயம் செய்துவரும் ஜனாதிபதியின் புதல்வரும், அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமாகிய நாமல் ராஜபக்ஷவும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறு ப்பினர் ஜெ. ஸ்ரீரங்காவும் அப்பகுதியில் மக்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளத் தம்மாலான பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீ ரங்காவும், நாமலும் அப்பகுதிகளுக்குச் செல்லும் வேளைகளில் அந்தப் பாதிக்கப்பட்ட மக்கள் தமது மனக்குறைகளை மனம் விட்டுப் பேசுவதைக் காணக் கூடியதாகவுள்ளது. தம்மில் ஒருவராக எண் ணியே அம்மக்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். அத்துடன் வருவது, பார்ப்பது, செல்வது என் றில்லாது அம்மக்களுடன் ஒன்றைக் கலந்து அவர்களது துயரத்தில் இவர்கள் பங்குகொள்வதே இதற் குப் பிரதான காரணமாகவுள்ளது.

இந்தப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்து வந்தாலும் நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீ ரங்கா ஆகியோர் இம் மக்களைச் சந்திக்கும்போது தமது நேரத்தையும் பொருட்படுத்தாது அவர்களுடன் கலந்துரையாடி வருவது அம்மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளையும், எதிர்கால உதவித் திட்டங்களையும் இவர்கள் எடுத்துக் கூறும் விதம் துயரத்திலிருக்கும் அம்மக்களுக்குப் பெரும் ஆறுதலாகவே உள்ளது.

விடுதலைப் புலிகள் வன்னி மக்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது அந்த நிலைமையை வைத்து அரசியல் நடத்திய சில தமிழ்க் கட்சிகள் தற்போது விடுதலைப் புலிகள் முற்றாக இல்லை என்றதும் சிக்குண்டு மீண்டிருக்கும் மக்களைப் பெரிதாகக் கண்டு கொள்வதே இல்லை என்பது கவ லைக்குரிய விடயமே. சில தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயரளவில் இப்பகுதிக்கு வந்து சென்றாலும் ஒன்றுமே நடக்கவில்லை என்று இந்த மக்கள் ஆதங்கப்பட்டனர்.

ஆனால் ஸ்ரீரங்கா மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் உரிய அதிகாரிகளோடு சென்று பிரச்சினைகளை நேரடியாகவே கேட்டறிவதுடன் பெரும்பாலான விடயங்களுக்கு உடனடித் தீர்வையும் பெற்றுக் கொடுக்கிறார்கள். பாதிக்கப்பட்டு தற்போது தமது சொந்த இருப்பிடங்களுக்குச் சென்று மீளக் குடி யேறியுள்ள மக்களுக்குரிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வருகின்றனர்.

பிற மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் பங்குகொள்வது மட்டுமல்லாது சேவையையும் செய்து வரும் நிலையில் சில தமிழ்க் கட்சிகள் இன்னமும் விதண்டா வாத அரசியல் பேசிக்கொண்டு காலத்தைக் கடத்துவதில் அர்த்தமில்லை. யுத்த காலத்தில் வன்னி மக்கள் பட்ட அவலநிலை முழு உலகத்திற்குமே தெரியும். இப்போது அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்வுக்கு வர நினைக்கும் அம்மக்களுக்கு நாம் உதவ வேண்டும். இம்மக்களை மீண்டும் அவர்க ளது பழைய வாழ்வுக்குக் கொண்டு வரவேண்டுமாயின் நிச்சயம் அதற்கு அரசாங்கத்தின் உதவி அவசியம். எமது மக்கள் எனும் அக்கறை இருந்தால் அரசாங்கத்துடன் இணைந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இந்த அப்பாவி மக்களை வைத்து இனியும் அரசியல் நடத்த முற்படக் கூடாது.

அரசியல் தீர்வு, திட்டமிட்ட குடியேற்றங்கள் என்பவற்றைப் பற்றியும் பேசத்தான் வேண்டும். ஆனால் இன்றைய அவசரத் தேவையானது பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பு வதே. இம்மக்களுக்கு இன்று பசிக்கும்போது உணவு கொடுக்க வேண்டும். அத்திவாரம் மட்டுமே தெரியும் அவர்களது அழிந்த வீடுகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும். தொழில் பறிபோயுள்ளவர்களு க்கு அவர்களுக்குரிய உபகரணங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்குத் தேவை யானவற்றை வழங்க வேண்டும். மீன்பிடி உபகரணங்கள் இல்லாது தவிக்கும் மீனவர்களுக்கு உபகர ணங்களை வழங்க வேண்டும். கணவனை மற்றும் உறவுகளை இழந்தவர்களுக்கு நஷ்ட ஈடுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இவைதான் இன்று அம்மக்கள் முன்னுள்ள உடனடித் தேவையாக உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அண்மையில் நாமலும், ஸ்ரீரங்காவும் சென்றபோது அப்பகுதி மக்கள் அவர்களை அன்புடன் வரவேற்றுள்ளனர். தமது பகுதிக்கு வருகை தந்த முதலா வது பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பெருமையுடன் தெரிவித்து தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர். அதற்குக் காரணம் அவர்கள் பின்பற்றி வரும் கொள்கையே, அவர்கள் வன்னிக்கு விஜயம் செய்யும் போதெல்லாம் அப்பகுதியிலுள்ள படித்த மற்றும் பாமர மக்கள், அரசாங்க உத்தி யோகத்தர்கள், இளைஞர்கள் எனப் பலரும் ஸ்ரீரங்காவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரி வித்து வருகின்றனர்.

சில தமிழ்க் கட்சிகள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதிலேயே இன்னமும் தமது முழுக் கவ னத்தையும் செலுத்தியுள்ளது. இது கிடைப்பதையும் கிடைக்கவிடாமல் செய்யும் செயலாகவே அப்ப குதி மக்கள் கருதுகின்றனர். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களது அவசியத் தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். அத்துடன் அரசாங் கம் வழங்க நினைப்பதை விடவும் மேலதிகமாகப் பெற்று மக்களுக்கு உதவ முடியும் என ஸ்ரீரங்கா தெரிவித்த கருத்தை வன்னியிலுள்ள மக்களில் பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களது துயர் துடைக்க வன்னியில் புதிதாகக் களமிறங்கியுள்ள புதிய இளம் அரசியல்வாதிகளான நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜெ. ஸ்ரீரங்கா ஆகியோருக்கு நாம் பக்கபலமாக இருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com