Contact us at: sooddram@gmail.com

 

மாணவனுக்கு ஆசிரியர் வழங்கும் தண்டனை மனோநிலையை பாதித்து விடலாகாது!

ஆழ் மனதில் எதிரான பதிவுகள் ஆபத்தானவை

(மருதமுனை ஏ. ஆர். ஆப்துல் ஹமீட் உளவளத்துணையாளர்)

பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களால் தண்டிக்கப்படலாமா?’ என்பது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இன்று எல்லா இடங்களிலும் - மட்டங்களிலும் இடம்பெறுகின்றன.

இன, மத, மொழி வேறுபாடுகள் எதுவுமே இல்லாமல் எல்லோருக்கும் பொதுவான பிரச்சினையென்பதே இதன் பிரசித்தம். சமூகக் கட்டமைப்பில் முக்கியத்துவம் பெறுகின்ற மாணவர் குழுக்கள் தொடர்பான இந்த விவகாரம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உட்பட எல்லோரினதும் கவனத்தை ஈர்ப்பதில் ஆச்சரியம் ஒன்றுமேயில்லை.

மாணவர்களை எப்படியும் தண்டிக்கலாம்என்று அடம்பிடிக்கும் ஆசிரியர்கள் ஒரு பக்கம்’, ‘அதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லைஎன்று ஆர்ப்பரிக்கும் அரச அமைப்புக்கள் மறுபக்கம்.

இந்த இரண்டு பக்கங்களுக்கும் இடையில் தடுமாறிய பெற்றோர், ஊடகங்கள் ஏற்படுத்திய அறிவூட்டலில் விழித்து, ‘எங்கே போய் என்ன செய்ய வேண்டுமென்றுபுரிந்து கொண்டார்கள். அண்மைக்கால பத்திரிகை செய்திகளை சற்று புரட்டிப்பாருங்கள்.... ஆசிரியர்களின் தண்டனைக்கு எதிரான முறைப்பாடுகளுடன் பெற்றோர் சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, பொலிஸ் நிலையம் போன்ற காரியாலயங்களை நாடுகின்றனர். நாட்டின் நடப்புக்கள் அப்படி!

பாடசாலைகளில் ஆசிரியர் மட்டத்தில் இடம்பெறுகின்றபாலியல் துஷ்பிரயோகம்தொடர்பாக பெற்றோர் இந்தக் காரியாலயங்களை நாடுவது வேறு, ‘ஆசிரியர்களின் தண்டனைகாரணமாக இதே காரியாலயங்களை அவர்கள் நாடுவது வேறு. இந்த இரண்டு நாடல்களும் வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்டவை என்பதை எல்லோருமே புரிந்துகொள்ள வேண்டும். முந்திய அழுத்தம் கூடியதொரு வாழ்க்கைப் பிரச்சினை. பிந்திய அழுத்தம் குறைந்தவொரு தற்காலிகப் பிரச்சினை!

கற்றல்என்ற தேவையை அடைந்துகொள்ள ஏற்படுத்தப்பட்ட அமைப்பே பாடசாலைகள். கற்றல் என்பது நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தும் அனுபவங்கள் என்பதை ஆசிரியர்கள் உட்பட எல்லா அறிஞர்களும் ஏற்றுக்கொள்வார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால் அடைந்துகொள்ளும் அனுபவங்கள் நேரான நடத்தை மாற்றங்களையும் (Postive Behavioral Changes)  எதிரான நடத்தை மாற்றங்களையும் (Negative Behavioral Changes  ஏற்படுத்தும் என்பதே. இது சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும், சம்பந்தப்படுகின்றவர்களின் ஆளுமையிலும் (Personality) தங்கியுள்ளது.

தண்டனை பெறுகின்ற மாணவனின் மனோநிலை (Attitude) வேறு, தண்டிப்பவரின் மனோநிலை வேறு. இந்த இரு தரப்பினரதும் மனோநிலைகள் ஒன்றுபோலிருக்க நியாயமேயில்லை. மாணவன் குற்றம் புரிந்த மனோநிலையிலும், ஆசிரியர் அந்த மாணவனை திருத்தும் மனோநிலையிலும் காணப்படுவர்.

இவ்விடத்தில் இலகுவான தண்டனைகள் (Light beating) வழங்கப்படுவதில் யாருக்கும் ஆட்சேபனைகள் இல்லை. ஆசிரியர் வீட்டு வேலைகள் (Home Work) கொடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் ஆர்வம் காட்டாத மாணவர்களை ஆசிரியர் தட்டிக்கேட்பது நியாயமும்தான். தர்மமும்தான்!

ஆனால் மாணவர்களுக்கு மனவழுத்தம் (Stress)  ஏற்படுத்தக்கூடியதும் கடுமையான காயங்களை விளைவிக்கக்கூடிய உடல் ரீதியான தண்டனைகளும் Physical Punishment  இந்த சாதாரணவீட்டு வேலை செய்யாமைபோன்ற விடயத்தில் பொருத்தமில்லை என்பதே முன்வைக்கப்படும் விவாதம்.

தண்டிப்பவரினதும், தண்டனை பெறுபவரினதும் மனோநிலைகள் (Attitude), மனோவெழுச்சிகளாக (Emotions) மாற்றடையும்போது அங்கே முரண்பாடுகள் ஆரம்பமாகும். இதுவொரு ஆபத்தான கட்டமாகும்.

குற்றவுணர்வில் (Quilty feeling) தண்டனைக்கு தயாரான மாணவனுக்கு கடுமையான உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படும்போது அவனுக்கு கோபம், கவலை, அவமானம், பழிக்குப்பழி, வெறுப்பு போன்ற உடனடி மனோவெழுச்சிகள் ஏற்பட சாத்தியமுண்டு.

அதேபோன்று மாணவன் வேதனையில் எதிர்ப்பைக் காட்டும்போதும், தண்டிக்கும் ஆசிரியருக்கு கடும் ஆத்திரம் ஏற்படவும் வாய்ப்புண்டு. இங்கே நோக்கங்கள் சிதறுகின்றன. இங்குதான் பிரச்சினை ஆரம்பம். இதுவேசிறுவர் நலங்கள்தொடர்பான அமைப்புக்களின் வாதம்!

இவ்வாறு எல்லை கடந்து உள-உடல் தண்டனைகள் வழங்கப்படும்போது மாணவர்களுக்கு மாத்திரமல்ல எவருக்குமேநனவிலி மனதில்’ (Unconscious Mind), எதிரான பதிவுகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக எதிரான எண்ணங்கள் (Negative Thoughts) அவர்களுக்கு அடிக்கடி ஏற்படுவதாகவும் பல்வேறு முரண்பாடுகளை அவர்களது நடத்தைகள் வெளிப்படுத்துவதாகவும் பிரபல உளவியல் அறிஞர் (Sigmund froud) அவரது உளப்பகுப்பாய்வு கோட்பாட்டில் (Psycho Analytical Theory)  ெரிவித்துள்ளார்.

இரண்டு மாணவர்கள் வகுப்பில் சண்டைபோட்டால், பாரபட்சம் இல்லாத உடனடி விசாரணைகளும், இலகுவான தண்டனைகளும் அவசியம். காரணம் பாதிக்கப்பட்டவனின் துக்கம், ஆத்திரம், அவமானம், பழிவாங்கல் போன்ற மனோவெழுச்சிகள் அகற்றப்பட்டு (Emotional Ventilation) அவனது உணர்வுகள் (Feelings) சமநிலைப்படல் வேண்டும்.

அதாவது மாணவர்களதுநனவிலிமனங்களில் எதிரான பதிவுகள் ஏற்பட இடமளிக்கப்படக் கூடாது. அதற்கான உடனடி முயற்சிகளையே ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டுமே தவிர கையில் கிடைத்ததைக்கொண்டு கடின பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உடல் ரீதியான தண்டனைகளை இரு தரப்பு மாணவர்களுக்கும் வழங்க முயலக்கூடாது.

இந்த விடயத்தில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, பொலிஸ் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்களின் தலையீட்டை நியாயப்படுத்தும் மேலே விபரிக்கப்பட்ட சில காரணங்களை பெற்றோர்களும் மற்றவர்களும் அறிந்திருப்பது நல்லது.

சமூகக் கட்டமைப்பில் ஒவ்வொரு குழுவினர்க்கும் தனித்தனி உரிமைகள் உள்ளன. அந்த வகையில் மாணவர்களுக்கும் சில குறிப்பிட்ட உரிமைகள் பேணப்படுகின்றன. எமது நாட்டை பொறுத்தவரையில் இலவச சுகாதார சேவை, இலவச கல்வி ‘@!}ி(ரி மாணவர்களின் முக்கிய உரிமைகளாகப் பேணப்படுகின்றன. மற்றவர்களுக்குள்ள எல்லா உரிமைகளும் அவர்களுக்குமுண்டு.

வெறுமனே இலவசப் புத்தகங்களை வழங்குவதோ, அல்லது அரச ஊதியத்தில் ஆசிரியர்களை நியமிப்பதோ மாத்திரம் இலவசக் கல்வியல்ல. அவர்களது மனோநிலைகள் பாதிக்கப்படாமல் அவர்களுக்கு கல்வியூட்டப்படலும் அந்த உரிமையின் நிபந்தனையாகும். இந்த நிபந்தனைகள் பாடசாலையில் மாத்திரமல்ல, அவர்களது வீடுகளிலும் பேணப்படல் வேண்டும்.

கடுமையான உடல் ரீதியான தண்ட னைகள் (Physical Punishment) ஏற்படுத்தும் சில உளத்தாக்கங்கள்

1. தண்டனைகளின் உளத்தாக்கத்தினால் மாணவர்களதுசுய அடைவு’ (Self esteem) பாதிக்கப்பட்டு அவர்கள் தன்னம்பிக்கை (Self Confidence) இழத்தல்.

2. தண்டனைகளின்போது ஏற்பட்ட மனோவெழுச்சிகளின்நனவிலி’ (Unconscious Mind), மனப்பதிவுகளினால் அவர்கள் எதிரான சிந்தனைகளுக்கு (Negative Thoughts) ஆட்பட்டு மனச்சோர்வடைதல் (Depression)

3. இந்த மனச்சோர்வினால் தண்டிக்கப்பட்டவர் ஒதுங்கூக்கமடைதல் (lsolation).

4. இந்த ஒதுங்கூக்கல் காரணமாக அவருக்கு இதன் பின்னர் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் தப்பியோடும் (Escaping) இயல்பு ஏற்படல்.

5. தன் வயதுக் குழுக்களில் தங்கியிருக்கும் இயல்புகள் அதிகரிப்பதால் சுயமாக கருமமாற்றல் (Performance) வீழ்ச்சியடைதல்.

6. தன்சக மாணவர்களின் முன்னிலையில் அல்லது அவர்களது அறிவுக்கெட்டியவரையில் அவமானம் அடைந்ததால் தண்டித்தவரை பழிவாங்கும் (Reveng) மனோபாவம் மேலோங்குதல்.

இரண்டாம் மகா யுத்தத்தின்போது சர்வாதிகாரி ஹிட்லர் இலட்சக்கணக்கான யூதர்களை படுகொலை செய்தமை, அவனது சிறுவயதில்நனவிலி’ (Unconscious Mind) மனதில் ஏற்பட்ட சிறிய எதிரான பதிவின் காரணமே என்பது அவனது நாட்குறிப்புகளை ஆராய்ந்த உளவியலாளர்களினால் நிரூபிக்கப்பட்டது.

செருப்பு திருத்துவதை தொழிலாகக்கொண்ட அவனது தந்தை யூதனொருவனிடம் பெற்ற கடனையும், அதற்கான வட்டியையும் திருப்பிக்கொடுக்க முடியாமல் அல்லல்பட்டபோது அந்த யூதன் தன் தாயை தூசிப்பதையும், அதைத்தட்டிக் கேட்க தைரியமில்லாமல் தந்தை தலை குனிந்திருப்பதையும், அருகில் இருந்து அவதானித்த ஹிட்லரின் பிஞ்சுமனம்பழிக்குப் பழியைஉள்வாங்கிக் கொண்டது. அதுவே பிற்காலத்தில் வெளிப்பட்டது.ஆழ் மனதில் எதிரான பதிவுகள் ஆபத்தானவை’!

இக்கட்டுரையில் விபரிக்கப்படும் கடுமையான உடல் ரீதியான தண்டனைகளைப் (Physical Punishment) பெற்றுக்கொண்ட மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளில் பரிதாபம் கொண்டு மேற்கொள்ளும் அரச நிறுவனங்கள் ஊடான நடவடிக்கைகள் அப்பாடசாலையின் ஆசிரியர் சமூகத்தில் ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்களையும் சற்று ஆராய்தல் நலம். இவற்றையும் பெற்றோர்களும் மற்றவர்களும் அறிந்திருப்பதும் அவசியம்.

எடுத்ததற்கெல்லாம் அரச நிறுவனங்களைப் பெற்றோர் நாடுதல் தங்கள் பிள்ளைகளுக்கு பாடசாலை மட்டத்தில் எதிரான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் ஒருவகையில் யதார்த்தமே. வெறுப் படைந்த ஒருசில ஆசிரியர்களின் உதாசீன அபிப்பிராயம், அந்த மாணவனுக்கு எத்தனை பாதிப்பை உண்டாக்கக் கூடியது என்பது யாரும் விளங்கிக்கொள்ள கடினமானதல்ல.

இதுபோன்ற ஆசிரிய உதாசீனங்களை சந்தித்து பாடசாலை சமூகத்திற்கு முகங்கொடுக்க முடியாமல் வேறு பாடசாலைளை நாடியவர்களும், படிப்பை கைவிட்டு வீதிகளில் அலைந்தவர்களும் ஆயிரம் ஆயிரம், இதெல்லாம் சமூக உளவியலின் மறுபக்கங்கள். எங்கும், எதிலும் எப்போதும் எப்படியும் நேரான எதிரான தாக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும்.

நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது பூகோள மயமாக்கப்பட்ட (Globalization) ஒரு சமூக அமைப்பில் என்பதை எல்லோரும் குறிப்பாக ஆசிரியர்கள் மறக்கவே கூடாது. உங்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தலைமுறை இடைவெளிகளை (Generation gab)  உங்களது அறிவு மட்டத்திற்கும் அனுபவ மட்டத்திற்கும் உடனடியாக நிரப்பிக்கொள்ள ஒருபோதும் முயலக்கூடாது. அது எவருக்கும் சாத்தியப்படாது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com