Contact us at: sooddram@gmail.com

 

'மில்ல சொயா' மெய்மை குன்றாத கலைப்படைப்பு

நல்ல சினமாவுக்கான ஒரு தேடல்

(ஜி. ரி. கேதாரநாதன்)

மில்ல சொயாதிரைப்படத்தின் கதைக்களம் நீர்கொழும்புக்குப் போகும் வழியில் அருகிலுள்ளகரையோர சிங்களக் கிராமத்தில் ஆரம்பிக்கிறது.

தந்தையரோ அல்லது குடும்பத் தலைவர்களாக இருப்போரே துருப்பிடித்த என்ஜின்கள் கொண்டவள்ளங்களுடன் மல்லுக்கட்ட தாய்மார் வேறு வழியின்றி வருமானத்திற்காக (சட்ட விரோதமாக) கசிப்புக் காய்ச்ச வேண்டிய நிர்ப்பந்தம்.

தொழிலின்மையும் வறுமையும் இதனால் வன்முறை கோலோச்சும் ஒரு கரையோரக் கிராமம். அன்றாட வாழ்க்கைக்கே பெரும் போராட்டமாக இருக்கிறது. சராசரி நடுத்தர வர்க்கத்தினராக இருந்து ஓரளவு விளிப்பு நிலைக்கு வந்துவிட்டவர்கள்.

கிளர்ச்சி காலகட்டத்தில் சிறுவர்களாக இருந்தோர் வளர்ந்து, யுத்தம் தொடரும் காலகட்டத்தில் இளைஞர்களாயிருக்கின்றனர். நிரந்தர தொழிலற்ற இவர்களுக்கு ஒன்றில் இராணுவத்தில் சேரலாம். இல்லையேல்கிரிமினல்வாழ்க்கை. இவையிரண்டும் இல்லையென்றால் எஞ்சியிருப்பது ஒன்றேயொன்றுதான்.

காணியை ஈடுவைத்தாவது எவ்விதத்திலும் வெளிநாடு சென்று உழைப்பது. ஒருவகையில் இலங்கையின் இருண்ட காலப் பகுதி இளைஞர்கள் இவர்கள்.

உள் நாட்டில் நிரந்தரத் தொழிலின்றி சமூக மற்றும் குடும்ப மட்டங்களில் பல உக்கிரமான நிலைமைகளுக்குத் தாக்குப்பிடிக்க இயலாமல், இத்தாலி செல்லும் கனவுகளில் தஞ்சமடைகின்றனர். இத்திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரமான பிரதீப்பும் (மகேந்திர பெரோ) இவனது நண்பர்களும்.

சுருக்கமாகத் திரைக்கதையின் ஆரம்பப் பின்னணி இதுதான். இந்த அடிப்படையில் இடப்படும் கட்டமைப்பிலிருந்தே பல அடுக்குகளிலும் வரக்கூடிய கிளைக்கதைக் கூறுகள் தீர்க்கமாக உருவாகின்றன.

இந்த வகையில் ஒரு நல்ல அல்லது வலுவான திரைக்கதைப் பிரதியின் உருவாக்கம் இயல்பாக நிகழ்வதற்கு இதுவே அடையாளமும் ஆரம்பமும் என நான் நினைக்கிறேன்.

இவ்வாறே புத்திகீர்த்திசேனவின் திரைப்பட ஊடகத்தின் மூலமான உண்மைத் தேடல் பயணம் தொடங்குகிறது. திரை மொழியின் அர்த்தங்கூடிய நீட்சியாக, கலையாக்கத்தின் அடிப்படைத்தன்மை குலையாமல் நாம் வாழும் காலகட்டம் எவ்வாறு உக்கிரமமான வன்முறையால் சகல விதங்களிலும் சூழப்பட்டிருக்கிறது என்பதை மெய்மை குன்றாமல், கலாபூர்வமாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் திரைக்கதையினை எழுதியவரும் நெறியாளுகை செய்தவருமான புத்திகீர்த்திசேன. கதை சொல்வதில் நெறியாளருக்குரிய தேர்ச்சியை எம்மால் உணர முடிகிறது. இடைவேளைக்கு சற்று முன்னதாகத் திரைப்படத்தின் களம் இத்தாலிக்கு மாறிவிடுகிறது.

இடையில் பிரதீப்பும் நண்பர்களும் பல்கேரியாவில் கைவிடப்படுகிறார்கள். அவர்களை இலங்கையில் இருந்து கூட்டிச்சென்றஏஜன்ட்பெருந்தொகைப் பணத்தைக் கையாடிக்கொண்டு தலைமறைவாகிவிட, காசின்றி இத்தாலிக்குப் போக முடியாது பிரதீப்பும் நண்பர்களும் தவிக்கிறார்கள்.

அங்கிருந்து ஊரிலுள்ள நண்பனொருவனுடன் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு பிரதீப் பண உதவி பெறுகிறான். இதன் பின்னர் சட்ட விரோதமாக இத்தாலிக்குள் நுழைய பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஒருவனுக்கு பணம் கொடுத்து முயற்சிக்கிறார்கள்.

இதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களும் இழப்புகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களின் வாழ்வா அல்லது சாவா போராட்டம் மிகப் பயங்கரமானது.

மலைத் தொடர்களுக்கு அடியிலும் சதுப்பி நிலங்களிலும், கடும் குளிரில் பனிப்படலங்களின் மீதும் மற்றும் நீண்ட பஸ் போன்ற வாகனங்களது பொதிகள் அடைக்கப்படும் இடுக்குகளுக்குள் மறைந்திருந்தும் அவர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் மிகக் கடினமானவை.

சிலர் சுவாசிக்க முடியாது முர்ச்சையாகி இறக்க நேரிடுகிறது. ஒருசிலர் பொலிஸாரிடம் பிடிபடுகிறார்கள். இடைவழியில் பிரதீப் பின் அருமை நண்பன் சாந்த மூர்ச்சையடைந்து இறக்கிறான். (உண்மையில் இவன் சட்ட விரோதமாக கடத்தும் பல்கரியன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்படுகிறான்).

தொடரும் கடினபயணத்திற்கு லாயக்கற்று சுருண்டு போனதால் குரூரமாக அவன் சுட்டுக் கொல்லப்படுகிறான். சாந்தவின் மரணத்தின் முன் பிரதீப் கொண்டிருந்த இத்தாலியக் கனவின் பாதிநொறுங்கிப் போய்விடுகிறது. பயணத்தைத் தொடர முடியாமல் தடுமாறுகிறான்.

இறுதியில் கனவுகள், வசீகரங்கள் மறைய வாழ்வின் சாரங்கள் நீங்கிய மனிதச் சக்கைகளாக, ஒருவகை நடைப்பிணங்களாக இத்தாலிக்குள் பிரவேசிக்கின்றனர், பிரதீப்பும் அவனது எஞ்சிய நண்பர்களும்.

நண்பர்களில் பலர் இத்தாலிக்கு இசைவாக்கம் பெற்றுவிட பிரதீப் தனியனாகிறான். இடையில் ஊர்திரும்பிய போது ஊரே மாறிவிட்டது. நண்பர்கள் மாறி விட்டனர். இறுதி வரை மாறாமலிருப்பவர்கள் பிரதீப்பும் கிராமத்து முட்டாளுந்தான்.

வன்முறையின் சகல விதமான கூறுகளின் மீதும், சமூக, அரசியல், பொருளாதார மற்றும் தனிப்பட்ட மனிதர்களுக்கிடையிலான உறவுகள், முரண்பாடுகளின் பின்னணியில் எத்தகைய மிகைப்பாடுமின்றி, யதார்த்தபூர்வமாகவும் சமநிலை குலையாமலும் மிக ஆழமான பார்வையை இத்திரைப்படம் செலுத்தியிருக்கிறது.

அத்தகைய காட்சிகள் கூட எத்தகைய திணிப்புமின்றி மிக இயல்பாக பின்னொதுங்கியும், வெளிப்படையாக வும், உள்ளிடுக்குகளில் மறைந்திருந்தும் அழுத்தமான காட்சிப் படிமங்களாக வெளிப்பட்டு, எமக்கு அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.

வன்முறை எங்கும் வியாபகமான காலகட்டத்திலிருக்கிறோம். நாம் வாழும் கால கட்டத்தை நிலைநிறுத்த இது ஒரு முக்கியமான அம்சமாகும். இதனால் தானோ என்னவோ உரையாடல்களில் கூட வன்முறை தெறிக்கின்றது.

வணிக நோக்கில் ஒரேயடியாகச் சறுக்கிவிடாமலிருக்க திரைப்படத்தில் சமரசங்கள் செய்யப்பட்டிருப்பினும் மாறுதலான புதிய அலை திரைப்படங்கள் வரிசையில் சேர்க்கக் கூடிய ஒரு திரைப்படமாக மில்லசொயா உள்ளது.

கலைப்படங்களுக்கு பரிச்சயமற்றவர்கள் வழமையாக, முன்வைக்கும்அவை மெதுவாக ஊர்கின்றனஎன்ற குற்றச்சாட்டை மறுதலிக்கக் கூடிய வகையில் விரைவுத்தன்மையுடன் கூடிய உள்ளடக்கம், பாணி மற்றும் பார்வை என்பவற்றிலும் புதிய தெம்பினை ஏற்படுத்துகிறது.

மில்லசொயா படைப்பின் அர்த்தப்பாடு திரைமொழியின் கூறுகளில் நெறியாளர் திட்டமிட்ட அல்லது எண்ணிய அதேவிதத்தில் பார்வையாளனிடம் கொண்டு செல்லப்பட்டிருப்பது நெறியாளரின் பிரக்ஞைபூர்வமான கட்டுப்பாட்டினையும் அவரது முதிர்ச்சியினையும் நன்கு வெளிப்படுத்துவதாயுள்ளது.

இதற்கு நிச்சயமாக துணைபோகும் அம்சங்களாக ஒளிப்பதிவு, இசை மற்றும் படத் தொகுப்பு ஆகியனவும் சிறப்பான தரத்தில் அவற்றிற்குரிய தனித்துவமான

பிரதான கதாபாத்திரமான பிரதீப்பாக மகேந்திர பெரேரா வருகிறார். மிகத் துல்லியமாக, மன ஆழத்திலிருந்து உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். இவர் பெரிய நட்சத்திர நடிகர் அல்ல.

மிகச் சிறிய பாத்திரங்களை ஏற்ற ஏனையவர்களும் மிக இயல்பாக நடித்துள்ளனர். இங்கு சிறிய பாத்திரங்கள் பலவற்றுக்கும் பிரபல்யம்வாய்ந்த நட்சத்திர நடிகர்களைப் பயன்படுத்தியிருப்பது நெறியாளர் நன்கு தெரிந்து கொண்டு செய்த சமரசமென நாம் கருத வேண்டியுள்ளது.

எனினும் இவர்கள் மீது கூட நெறியாளர் தமக்குரிய கட்டுப்பாட்டினை இழக்காததால், நட்சத்திர நடிகர்களாக பாத்திரங்கள் விழுங்கப்படவில்லை. மாறாக, பாத்திரங்கள் மேலும் உயிர்ப்படைந்துள்ளன. இதற்கு பாத்திரங்களை முன்னிறுத்தும் நடிகர்களாக அவர்கள் இருந்ததும், பாத்திரங்கள் அதே வேளை, அவ்வாறு அழுத்தம் பெற்றிருந்தும் மற்றும் உண்மைச் சம்பவங்களை அடியொற்றியதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்ததும் காரணங்களாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com