Contact us at: sooddram@gmail.com

 

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு

இன்று விஞ்ஞானத்திற்குச் சவால் விடும் கேள்வி இதுதான். இதற்கு விடை கிடைத்து விட்டால் நிச்சயமாக 60 ஆயிரம் கோடி ரூபாவில் தீபாவளி கொண்டாத் துணிய மாட்டார்கள்.

காலம் என்பது என்ன?

போன விநாடி, இந்த விநாடி அடுத்த விநாடி இப்படி தான் நாம் காலத்தை எதார்த்தமாக சொல்வோம். விஞ்ஞானிகள் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக அணுவுக்குள் அணுதுணிக்கைகளின் அலைவீச்சு அளவை வைத்து மிகச்சிறு விநாடிகளாக சொல்வார்கள்.

நாம் தனி ஊசலின் அளவை விநாடி என்கிறோம். அணுவியல் விஞ்ஞானிகள் அணுதுணிக்கை அலை வீச்சை விநாடி என்கிறார் கள் அளவு தான் வித்தியாசமே தவிர இயக்கம் ஒன்றுதான்.

சரி அலைவீச்சு தான் காலமா? இல்லை. அலைவீச்சு என்பது நமக்கு காலத்துக்கான ஒரு அளவீடு. அதாவது காலத்தை அளக்க அல்லது தெரிந்து கொள்ள நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒரு அளவீடு.

காலத்தை விநாடி, மைக்ரோ செக்கன், நனோ செக்கன் என்ற அளவீடுகளை வைத்து கணிக்கி றோம். அல்லது அடையாப்படுத் திக் கொள்கிறோம்.

காலத்தை அளக்கும் கருவிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட அலை வீச்சை வைத்தே இயங்குகின்றன. அதாவது காலத்தை அளவிடு கின்றன.

அலை வீச்சு என்பது என்ன எனப் பார்ப்போம்.

அலைவீச்சு என்பதை முதலில் குவாண்டம் தத்துவத்தில் பார்க்கலாம்.

ஒளியின் இயக்கத்தை தான் குவாண்டம் தத்துவத்தில் அலைவீச்சாக குறிப்பிடுகிறார்கள்.

ஒளி என்றால் துணிக்கையும் அலையும் மாறிமாறி வரும் ஒரு நிலை, கண்ணொளி, சூரிய ஒளி, மின்காந்த ஒளி இவையெல்லாம் ஒளியின் வகைகள் அதாவது துணிக்கையும் அலையும் மாறிமாறி வரும் நிலையின் வகைகள்.

துணிக்கையும் அலையும் மாறி மாறி வருவது அதாவது ஒன் (on), ஒஃப் off இதுதான் ஒளி. இதன் இயக்க வித்தியாசத்தையும் அறிவையும் பொறுத்து ஒளியின் வகைகள் மாறுபடும். அந்த மாறுபாடுகளை தான் நாம் இண் ஒளி, லேசர் ஒளி, எஃஸ் கதிர்கள், சூரிய ஒளி, கண்ணுரு ஒளி எனவெல்லாம் பெயரிட்டு அழைக்கிறோம்.

சரி அப்படி ஒன் (on) , ஒஃப் off ஆக மாறுவது எது என கேட்டால் இப்போதைக்கு பொருள் வெளி என எடுத்துக் கொள்ளுங்கள். பொருளாக இருப்பது என்ன என்பது குறித்து அறிவு விளக்கப் பகுதியில் பார்க்கலாம். பொருள் இருக்கிறது (on) , இல்லை
off இதுதான் ஒளி. இந்த இயக்கம் தான் மின்காந்த அலைகள், அணுக்கரு உட்பட எல்லா ஆற்றல்களிலும் இருக்கிறது. பொருள்களிலும் இருக்கிறது. இங்கு ஒளியின் இயக்கம் குறித்து ஒரு எதார்த்த ஐயம் வரலாம்.

ஒன் ஒஃப் தான் ஒளி என்பது சரி. ஆனால் எது எப்படி நகர்கிறது? ஒளியின் வேகம் என்றெல்லாம் சொல்கிறார்களே அது எப்படி இடம்பெயர்கிறது?

உதாரணத்தில் விளக்கலாம். நிலையாக இருக்கும் ஒரு கடுகை (துணிக்கை) நாம் கண்ணால் பார்க்கிறோம். அது நிலையாக இருக்கும் போது கடுகு பொருள். அதை சுற்றியுள்ள பகுதி வெளி, இங்கு இனி கடுகு திசைவேகத்தில் இயங்குவதாக எடுத்துக் கொள்வோம். கடுகு நகர்கிறது அப்போது நாம் மேல் சொன்ன தத்துவப்படி கடுகு மறைந்து அங்கு வெளி வரவேண்டும். வெளி மறைந்து கடுகு வர வேண்டும் கடுகு நகரக்கூடாது. தோன்றி மறைய வேண்டும் அப்படி தானே. ஆம் அது தான் அங்கும் நடக்கிறது.

கடுகு நகருகையில் நமது பார்வையும் நகர்கிறது. அப்போது கடுகு வெளியை விலக்கி செல்வதாக நாம் அறிகிறோம். ஆனால் அங்கு நமது பார்வை நகரவில்லை கடுகு மட்டும் நகர்வதாக வைத்துக் கொள்வோம். நாம் அறிவது என்ன? கடுகு மறைந்து விட்டது அவ்வளவு தான். நமது பார்வையும் நகர்வதால் கடுகு தோன்றி மறையாமல் நகர்வதாக நாம் அறிகிறோம்.

கணனி மொழி தெரிந்தவர்களுக்கு இது எளிதில் புரியும் கனணி வன்தட்டு அல்லது கைத்தொலைபேசியின் சிம், மெமரி காட்களில் இந்த இயக்கத்தை நேரடியாகவே புரிந்து கொள்ளலாம். ஒரு புள்ளி அணைந்து மறுபுள்ளி தோன்றுவதில் தான் கணனி மற்றும் மெமரிக்கார்டின் அடிப்படை மொழி (இயக்கம்) இருக்கிறது.

சரி அலைக்கு வருவோம், பொருள் துணிக்கை அணைந்து மறைந்து மற்ற துணிக்கைகள் வருகிறது. ஆனால் அது எப்படி நகர்கிறது? அங்கு தான் அலை தத்துவம் புரியக்கிடக்கிறது.

அலை என்றால் அதற்கு எல்லை கிடையாது அதே நேரத்தில் பொருளுக்கு எல்லையும் மையமும் இருக்கிறது. ஒரு பொருள் அலையாகும் போது அது தனது மையத்தையும் எல்லையையும் இழந்து விடுகிறது. மீண்டும் அது பொருளாகும் போது சூழலுக்கு ஏற்ப அதாவது வெளிக்கும் பொருளுக்கும் உள்ள அறிவுக்கு ஏற்ப மையத்தையும் எல்லையையும் நிர்ணயித்துக் கொள்கிறது.

உதாரணமாக ஒரு கல்லை கிழக்கு நோக்கி நாம் நகர்த்ததக்க ஆற்றலை கொடுக்கும் போது, அதன் இயக்கம் (வெளியாகி மீண்டும் பொருளாகுகையில்) கிழக்கு நோக்கி நகரக்கூடிய அறிவை கிரகித்தே கிழக்கில் மீண்டும் தன் மையத்தையும் எல்லையையும் நிர்ணயித்துக் கொள்கிறது. இது தான் அடிப் படை நகர்ச்சிக்கான தத்துவம்.

அடுத்து காலம் பற்றிய அடிப்படைக்கு போவோம்.

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. இது அல்லாமல் காலம் என எதுவும் இல்லை. காலம் என ஒன்று தனியே இல்லை. காலம் ஒரு மாயையே அல்லாமல் உண்மை அல்ல.

சரி உதாரணங்களுடன் பார்ப்போம்.

பொருளும் வெளியும் பரஸ்பரம் நிலைமாறுவது இயக்கம். இந்த இயக்கத்தின் படிப்படியான நிலைகளின் அளவீடை தான் காலம் என்கிறோம். இந்த அளவீடு என்பது அளக்கும் அல்லது அறியும் பொருளை பொறுத்தது. இதற்கு ஐஸ்ஸ்டீனின் சார்பியல் தத்துவமே மிகச்சிறந்த ஆதாரமாக இருக்கிறது.

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. அது அளக்கும் அல்லது அறியும் கருவியை (பொருளை) பொறுத்தது என்பது சரி.

ஆனால் நமக்குள் இங்கு எதார்த்தமாக எழும் ஐயம்.

ஒரு விதை செடியாகி மரமாகி பூவாகி காயாகி விதையாகிறது. இது ஒரு காலசுற்று ஆனால் உயிரற்ற பொருட்களின் அப்படி இல்லையே, கல் மண்ணாகிறதே தவிர மண் மீண்டும் கல்லாவதில்லையே.

இங்கு தான் அறிவு தேவைப்படுகிறது.

நம்முடைய (மனிதனுடைய, உயிரிகளுடைய) அறிவு வளர்ச்சிதைவோடு ஒத்துப்போய் விட்டது.

ஒரு திரைப்பட சுருளை பின்னோக்கி சுற்றினால் இயக்கங்கள் பின்னோக்கி வந்தவண்ணமே நகர்கிறது. ஆனால் நமது எதார்த்த வாழ்க்கையில் அது சாத்தியப்படுமா? அதாவது குழந்தை குமரனாகி கிழவனாது போல, அதே சீரோடு அச்சு பிழையாமல் கிழவன் குமரனாகி குழந்தையாக முடியுமா?

இது கொஞ்சம் அநாகரீகமான உதாரணம் தான். ஆனால் புரிந்து கொள்வதற்கு எளிதானது. நாம் காலையில் உண்ட உணவு கழிவாகிறது. அதை பின்னோக்கி இயக்கினால் அதே கழிவு சென்ற அதே பயணத்தில் பாதையில் மீண்டும் உணவாகுமா?

இதற்கு பதில் ஆம் என்பதுதான். அதாவது காலசக்கரத்தை பின்னோக்கி சுழற்ற முடியும் என்பது தான் பிரபஞ்ச ரகசியம்.

நம்முடைய அறிவின் பயணம் (இயக்கம்) முன்னோக்கி மட்டும் செல்வதால் நமக்கு காலமும் முன்னோக்கி செல்கிறது. அறிவை நீங்கள் எந்த திசையில் திருப்பினாலும் அதே திசையில் காலமும் இயக்கமும் இந்த பிரபஞ்சமும் திரும்பும்.

இந்த ரகசியத்தை தான் ஆன்மீகஞானிகள் நமக்கு மெய்ஞானமாக போதித்துள்ளார்கள்.

நன்றி: இணையம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com