Contact us at: sooddram@gmail.com

 

மானிடராய் பிறத்தல் அரிதா?

காற்றும், நீரும், வானும். நெருப்பும் பொதுவில் இருக்கின்றன. மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்கிறது என்று ஒரு கவிஞன் கூறியது போல இன்று பூமியை பிரித்து உனக்கு எனக்கு என்று சொந்தம் கொண்டு பாவங்களை செய்யும் இந்த பிறவி ஓர் அரிய பிறவியா? பெற்ற தாயை வீதியில் விட்டுவிட்டு அனாதை என்ற பட்டம் கொடுத்து முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் இந்தப் பிறவி ஓர் அரிய பிறவியா? தேவைக்கு அதிகமாக வைத்துக் கொண்டு தவறு செய்வதும். செய்த தவறை பிறர் கண்டு கொள்ளாமல் இருக்க பிறரையும் தவறு செய்ய சொல்லும் இந்த பிறவி ஓர் அரிய பிறவியா? கால்நடைகள் நடக்கும் பாதையில் புல் பூண்டுகள் வளர்வதையும் மனிதன் தடம் பதித்த பாதையில் புல் பூண்டு ஒழிவதையும் கண்டிருப்போம். பணம் என்கின்ற உயிறற்ற பொருளைப் பற்றி, மனம் என்கின்ற பொக்கிஷத்தை உதறும் இப்பிறவி ஓர் அரிய பிறவியா? காற்றும் நீரும் மாசுபடுத்தி ஓசோன் படலத்தில் ஓட்டை உண்டாக்கிய இப்பிறவி ஓர் அரிய பிறவியா?

அடுத்தவன் வயிற்றுக்குள் ஊண் உணவு இல்லை, இளைத்தவன் பசித்து இருந்தா் இந்த பூமி தாங்காது என்கின்ற தத்துவத்தை மறந்து மனிதனை மனிதன் நசுக்கி தன் சுயலாபத்திற்காக கபட வேலைகளைச் செய்யும் இந்த பிறவி ஓர் அரிய பிறவியா?

கா காஎன இன்னும் படைக் கப்பட்ட நாள் முதல் இன்று வரை உணவை காட்டி தன் சகாக்களை கூவி அழைக்கும் காக்கையை போன்ற பட்சியை பார்த்து பட்சி ஜாதி நீங்கள் எங்கள் பகுதித்தறிவா ளரை பார்க்காதீர்கள். பத்திரமாக இருங்கள், பகுந்துண்டு வாழுகிற பழக்கத்தை மாற்றாதீர்கள் என்று பட்சி ஜாதிகளுக்கும் கீழாக வர்ணிக்கும் இப்பிறவி ஓர் அரிய பிறவியா?

இயற்கைக்கு மனிதன் நண்பனாக வாழ வேண்டும். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களை வைப்போம் என்று எத்தனையோ காட்டுக் கத்தல் கத்தினாலும் மனிதன் அவைகளை அழித்து விற்கத்தான் தலைப்படுகி றானே தவிர இயற்கையை காப் பாற்றுவதாக தெரியவில்லை. விளை நிலங்களின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. சனத்தொகை பெருகிக் கொண்டே செல்கிறது. பிறகு ஏன் பஞ்சம், பணவீக்கம் போன்றவை வராது?

பத்து தலைமுறைக்குச் சொத்து சேர்க்க துடிக்கும் மனிதனே! உன் ஆயுட்காலத்தை உன்னால் கணிக்க முடியுமா? உன் சந்ததி வசதியாக வாழ இயற்கையை அழிக்க நீ யார்? நீயும் ஒரு இயற்கை பிறவி என்பதை ஏன் மறந்தாய்? போன்ற பகுத்தறிவு விடயங்களை தன் சித்த அறிவில் பகுதிதறிந்தும் மறந்து போவது ஏன்? நிம்மதி என்கின்ற சொல் மனிதனின் வாழ்க்கையில் அரிதாகி போனது ஏன்? மனதில் போராட்டம், வாழ்க்கையில் போரா ட்டம் ஏன்? ஆறாவது அறிவை கட்டவிழ்த்து விட்டு அது செல்லும் வழிக்கெல்லாம் நாம் செயலை செய்ய முற்படுவதன் விளைவுதானோ இதுபோன்ற சங்கடங்களையும், சச்ரவுகளையும் விளைவிக்கும் காரணிகளாக போனது. இதைத்தான் பேராசை பேரழிவு என்கின்றனறோ?

மூப்பைத் தடுக்க முடியாத, நரை திரையை விலக்க முடியாத மனிதன் ஏழு உலகத்தை ஆள முடியுமா? இப்படியெல்லாம் ஒரு சாரார் கேட்கின்றனர். இவையெல்லாம் இயற்கை பிறக்கும் போதே உருவாக்கப்பட்ட உடல் நிலை மாற்றங்கள்.

நாங்கள் பேசுவது தன்னாய்வுத் திறன், புத்திசாலித்தனம் போன்றவைகளால் மனிதன் ஆளப்பிறந்தவன் என்பது மறுசாராரின் பதிலாகிப் போகிறது. ஆக கலாசாரம், மனிதப் பண்புகள் என மனிதனே வகுத்து அதை மனிதனே மீறுகிறான்.

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் உள்ளே மிருகம் வெளியே கடவுள் விளங்க முடியாத கவிதை நான்.

மிருகம் தின்று உணவாய் கொண்டு கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்.

ஆனால் கடவுளைக் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே!

இது ஒரு கவிஞனின் கூற்று. இந்த காலத்து மனிதனைப் பார்த்து ஏதாவது ஒரு பழக்கத்தை பழகி அதிலிருந்து வெளிவர நினைக்கும் ஒவ்வொரு மனிதனின் போராட்டமும் இப்படித்தான் நல்லது கெட்டது என்று இரண்டும் சேர்ந்த கலவையாக மனம் இருக்க இதில் நல்லதை மட்டுமே பெரிதாக்கி கெட்டதை சிறிதாக்கி வாழ முயற்சி செய்ய முற்படும் போது எது நெடுநாள் வளர்ந்து போனதோ அது பெரிதாகவே வளர்க்கப்படுகிறது. இதுதான் உண்மை. இதே வரிகளை கண்ணதாசன் முன்பு இப்படி எழுதினார்.

பாதி மனதில் தெய்வம் இருந்து
பார்த்து கொண்டதடா!
மீதி மனதில் மிருகம் இருந்து
ஆட்டி வைத்ததடா!
ஆட்டி வைத்த மிருகம் இன்று
அடங்கிவிட்டதடா!
அமைதி தெய்வம் முழு மனதில்
கோயில் கொண்டதடா!

என்ற இதே கருத்து பக்குவமடைந்த மனிதன் மூலமாக இன்னது சரி என்று தெளிவு பெற்றபின்பு வாழ்க்கை என்பது ஒரு நாடகம் இதில் கடைசி கட்டத்தை அடையும் போதாவது இந்த மிருக சமாச்சாரத்தை அடக்கி தெய்வ சமாச்சாரத்தை வியாபிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்வது போலவும், தானாகவே பட்டுத் தெரி ந்த ஞானிகளுக்கு இந்த நிலை சாதா ரணம் என்பது போலவும் கூறப் பட்டவை கண்ணதாசனின் வரிகள்!

இன்று வியாபாரம், தொழில் ஆகியன எப்படி நடக்கின்றன? இறை பக்தியுடன், தர்ம சிந்த னையுடனும் தான் நடக்கின்றனவா? எத்தனை கலப்படங்கள், பித்த லாட்டங்களை நாம் அன்றாடம் தினசரியில் படிக்கிறோம். பார்க்கி றோம். இது போன்ற நடவடிக்கைகள் தனி மனிதன் சுகமாக வாழ பிறரை ஏமாற்றுவது தான் பகுத்தறிவா? மனிதனுக்கு, இவன் இந்த அரிய பிறவிக்கு அளிக்கப்பட்ட திறமையா?

தர்மம் என்ற சொல்லை தர்மத்துக்குக் கூடப் பார்க்க முடியாத கால நிலை எல்லாவிடயத்திலேயும் எப்படி வந்தது. படித்தவர்கள் அதிகமாகி, பாமரத்தனம் குறைந்த இந்த காலத்தில் தானே! பகுத்தறிவால் உலகத்தை பார்த்து மார்தட்டும் இன்றைய மனிதன் வளர்ந்த இந்த காலத்தில் எத்தனை அத்துமீறல்கள், அநியாயங்கள்? இப்பூவுலகில் இது போன்ற விடயங்களை வேறு எந்த ஜீவராசிகளாவது அரங்கேற்ற முடியுமா? போராட்டமே வாழ்க்கை என்ற நிலை இருப்பது எதனால்? இதற்கு படைப்பில் ஏற்பட்ட கோளாறு என்பதும், விதி என்று சொல்லும் பதிலும் விடையாகிப் போவது கூட ஒரு வகை பகுத்தறிவுச் சிந்தனை தான் போலும்.

எமது சமூகத்தில்,
இணக்கம் மறந்து பிணக்கு வருவது
இன்பம் என்ற உருவில் துன்பம் வருவது
பொதுநலம் செத்து சுயநலம் வந்தது
கல்லாமை, இல்லாமை, பொறாமை, இயலாமை போன்ற
ஆமைகள்புகுந்த கதையாகி போனதே!
இதற்கு காரணம் யார்?
மனிதனே படைக்கப்படாத உலகில்

இது போன்ற பாட்டுகள் இருக்காது என்று உறுதியாக கூற எத்தனிக்கும் அளவிற்கு நம் கண் முன் காணுகின்ற அவலங்கள் தான் எத்தனை?

இப்படியும் புலம்புகின்றனர் ஒரு சாரார்.

அதெல்லாம் கிடையாது. மனிதன் மட்டும் தான் இது போன்ற இயற்கை அழிவிற்கு காரணம் என்று சொல்லக்கூடாது. விலங் குகளுக்குள்ளும் இது போன்ற சண்டை நிலப் பிரச்சினை எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. படைக் கப்பட்ட எல்லா ஜீவராசிகளுக்கும் இருக்கும் இது போன்ற குணங்கள் இயற்கையே.

இதைப் பெரிதாக பூதக்கண்ணாடி போட்டு பார்த்து மனிதனை அரிய பிறவி அல்ல! என்று சொல்வது தவறு. மனிதன் மட்டும் பிறக்காமல் இருந்து இரு ந்தால் இந்த பிரபஞ்சத்தில் இயக்கமே இல்லாமல் போயிருக்கும். இன்றையவிஞ்ஞான உலகம்இத்தனை கண்டுபிடிப்புகள் படைத்த உலகை வலம் வரும் மனிதனின் ஆற்றல், உலகத்தை தன் சந்ததிகளுக்கு சுவைக்கக் கொடுத்த பல அரிய கண்டுபிடிப்புக்கள், தொலைக்காட்சி முதல் கைத்தொலைபேசி வரை என்று மனிதன் பிற தேசங்களையும் ஏன் ரொக்கெட் மூலம் பறந்து இன்னொரு உலகத்தையே அளந் தறியும் ஆற்றல் படைத்தவனாக வாழ்கின்றான். இந்த ஆற்றல் அறிவுப்புலம் எந்த பிறவிக்கு உண்டு? ஆற்றலை வளர்த்து ஆர்ப்பரிக்கும் இந்த மனிதப் பிறவி ஓர் அரிய பிறவிதான்.

நன்றி: இணையம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com