Contact us at: sooddram@gmail.com

 

சாத்தன்களின் இருப்பிடம்

அமெரிக்காவில் நிலவும் வேலை யின்மை குறித்து அந்நாட்டின் தொழி லாளர் துறை அமைச்சகமும் உண்மை களை ஒப்புக்கொள்கிறது. ஏற்கெனவே நீண்ட காலமாக வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறாமல் கொந்தளிக்கும் பட்டாளத்தோடு, கடந்த 6 மாத காலமாக எவ்வித வேலைவாய்ப்பும், சிறு வரு மானமும் கூட இன்றி 57 லட்சம் தொழி லாளர்கள் வறுமையின் கோரப்பிடியில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது, தொழிலாளர் துறையின் அறிக்கையில் இருந்து தெரியவந்திருக்கிறது. இந்த அறிக்கையின்படி நவம்பர் மாத இறுதியில் வேலையில்லாதவர் களின் எண்ணிக்கை மொத்தம் 133 லட்சம் ஆகும். இவர்களில் பகுதி நேரம் மட்டுமே வேலை கிடைத்தவர்கள், 2 மணிநேரம் மட்டுமே வேலை கிடைத்த வர்கள், வாரத்தில் 1 நாள் அல்லது 2 நாள் மட்டுமே வேலை கிடைத்தவர்களின் எண்ணிக்கை அடங்காது. இவர்க ளையும் சேர்த்துக்கொண்டால், அமெ ரிக்காவில் இன்றைய நிலையில் முழு நேர வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறாதவர்களின் எண்ணிக்கை 244 லட்சம் ஆகும்.

இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த உழைப்புச்சக்தியில் 15.6 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கத்தொழிலாளர் துறையே இந்த தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும், நாள்தோறும் வேலைவாய்ப் புகளை உருவாக்கிக் கொண்டிருப்பதாக கதையளக்கும் ஜனாதிபதி ஒபாமா, கடந்த ஒரு மாத காலத்தில் தனது அரசு உருவாக்கியிருப்பதாகக் கூறும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வேலைவாய்ப்பு களும் தனியார் நிறுவனங்கள் அளித்த சிறு சிறு வேலைகளே; வெறும் அத்தக் கூலி வேலைகளே.

பொதுத்துறையில் பெரிய அளவிற்கு வேலைவாய்ப்பு எதுவும் உருவாக்கப் படவில்லை. மாறாக, மாநகர சமூக சேவைத்திட்டங்கள், சுகாதாரத்துறை, கல்வித்துறை, நூலகங்கள், தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல துறைகளிலிருந்து கடந்த ஓராண்டில் 2,78,000 ஊழியர்கள் வேலை பறிக்கப்பட்டு வெளியில் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

வேலைவாய்ப்புகள் வெகு வேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டி ருப்பது மட்டுமல்ல; ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களின் கூலியும் தொடர்ந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள், சலுகைகள் சரமாரியாக பறிக் கப்பட்டு வருகின்றன. வேலை நேரமும் வீழ்ந்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் அமெரிக்கத் தொழிலாளர்கள் பெறுகிற வாராந்திர கூலியில் 69 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் சராசரியாக கூலி உயர்வு என்பது வெறும் 1.8 சதவீதம் அளவிற்கே அதிகரித்துள்ளது. மாறாக, உணவுப்பொருட்களின் விலைகளும் இதர பொருட்களின் விலை களும் மிகக்கடுமையாக அதிகரித்திருப்பதால் ஒட்டுமொத்த பண வீக்கம் 3.6 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. விலைவாசி அதிக ரித்துள்ளது; கூலி குறைந்துள்ளது; மொத்தத்தில் அமெரிக்க உழைப் பாளி மக்களின் உழைப்பு மிகக்கடுமையான முறையில் சுரண்டப் பட்டு வருகிறது.

இதுதொடர்பாக ஒபாமாவின் வெள்ளை மாளிகை நாள்தோறும் புதிய, புதிய அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் நேரத் தில், வாஷிங்டனை மையமாகக் கொண்டு செயல்படும்பொருளா தாரக் கொள்கை கல்வி நிறுவனம்ஒபாமா நிர்வாகத்திற்கு அபாயச் சங்கினை ஊதியிருக்கிறது. இன்றைக்குள்ள இதே நிலைமை தொடரு மானால், பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய நிலையை மீண்டும் எட்டுவதற்கு இன்னும் 20 ஆண்டுகாலம் அமெரிக்கா காத்திருக்க நேரிடும் என்றும், அது வரையில் அமெரிக்க மக்கள் மிகமிகக் கடு மையான நெருக்கடியை அனுபவிக்க நேரிடும் என்றும் இந்நிறு வனத்தின் அறிக்கை எச்சரிக்கிறது.

2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்கப் பொருளாதார நெருக் கடி துவங்கிய காலகட்டம் முதல் இன்றுவரையில் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்ப சுமார் 110 லட்சம் பேருக்கான வேலைவாய்ப் புகளை உடனடியாக உருவாக்கியாக வேண்டும்; அதன் பின்னர் ஒவ் வொரு மாதமும் 2 லட்சத்து 75 ஆயிரம் வேலைவாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்கியாக வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஆனால் இதற்கான நடவடிக்கைகள் எதையும் ஒபாமா அரசு மேற்கொள்வதாக தெரியவில்லை. மறுபுறத்தில் தனியார் பெரு முதலாளிகளின் கம்பெனிகளுக்கு அரசுப்பணத்திலிருந்து கோடிக் கணக்கான டாலர்களை தொடர்ந்து வாரி வழங்குகிறது இந்த அரசு. இதனால் தவிர்க்கவே முடியாதபடி, மீண்டும் கொந்தளித்து எழுகிறது அமெரிக்க தொழிலாளி வர்க்கம்.

பொருளாதார நெருக்கடியின் அடிஆழத்தை நோக்கி வேகமாக பயணித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க முதலாளித்துவம் மீண்டு எழுகிற வாய்ப்பு கண்ணுக்கு எட்டாத தூரத்திலேயே இருக்கிறது. அந்நாட்டில் பொருளாதார சுழற்சியை சரி செய்ய வேண்டுமானால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியே தீரவேண்டு மென்பது விதி. ஆனால் அது நடக்கவில்லை என்பதை, டிசம்பர் மாத துவக்கத்தில் வெளியிடப்பட்ட நவம்பர் மாத வேலையின்மை அறிக்கை பளிச்செனக் காட்டுகிறது.

வேலைவாய்ப்பை பெருக்கி வருவதாக ஜனாதிபதி ஒபாமா திருப்தி தெரிவித்தாலும் உண்மை நிலைமை மேலும் மேலும் மோசமடைந்து கொண்டே செல்கிறது என்பதை அமெரிக்க முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.

கடந்த மாதத்தில் நாடு முழுவதிலும் மொத்தம் 1 லட்சத்து 20 ஆயி ரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை, முந்தைய செப்டம்பர், அக் டோபர் மாதங்களில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண் ணிக்கையைவிட மிகமிகக் குறைவு என்பதையும் அது ஒப்புக் கொண்டிருக்கிறது.

வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டவர்களும், ஏற்கெனவே வேலை யிலிருந்து தூக்கியெறியப்பட்டவர்களும் பல மாத காலமாக வேலை தேடித்தேடிச் சோர்ந்துபோய் போராட்டக்களத்தில் குதித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்யாத இளைஞர் களின் எண்ணிக்கை 66 லட்சத்தை தாண்டும் என்ற புதிய மதிப்பீடும் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் அமெரிக்காவில் கடந்த வாரம் வரையில் சுமார் 140 லட்சம் பேர் வேலைவாய்ப்பு ஏதும் இல்லாத வர்களாக இருக்கிறார்கள். இது கடந்த ஆண்டைவிட 7 லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, மாதந்தோறும் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டிருப்பதாக ஒபாமா அரசு திருப்திப்பட்டுக் கொண்டாலும் உண்மையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் மட்டுமின்றி ஏற்கெனவே வேலையில் இருந்து நெருக்கடியின் காரணமாக வெளியேற்றப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கும் எந்த ஒரு வேலைவாய்ப்பையும் உருவாக்குகிற நிலையில் இந்த அரசு இல்லை என்பதே உண்மை.

இந்த உண்மை, அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் தீவிரப்படுத்தி யுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com