Contact us at: sooddram@gmail.com

 

ஆரோக்கியமான உடல் என்பது மனம் தங்கும் மாளிகை

நமது உடலை ஆரோக் கியமாய் வைத்திருக்க வேண்டியது நமது முதன்மையான வேலை. இல்லை யேல் நமது மனம் வலுவாகவும், தெளிவாகவும் இருக்காதுஎன்கிறார் புத்தர். உடலும் மனமும் எதிரெதிர் துருவங்களல்ல. ஒன்றின் ஆரோக்கியமும், பலவீன மும் அடுத்ததைப் பாதிக்கும் என்பதே புத்தர் சொல்லும் அறிவியல் உண்மையாகும்.  உலக அளவில் நடத்தப்படும் ஆய்வுகளும், இந்திய அளவில் நடத்தப்படும் ஆய்வுகளும் அச்சத்துடன் தெரிவிக்கும் விடயம்இன்றைய இளம் தலைமுறை யினர் ஆரோக்கியமில்லாமல் இருக்கிறார்கள்என்பதுதான் அதற்குக் காரணம். இளம் வயதினரின் ஏனோதானோ மனநிலை என்று சொல்வதில் தப்பில்லை என நினைக்கிறேன். ஒப்சிடிஎனப்படும் அதீத உடல் பருமன் பிரச்சினை இன்று பரவலாய் எல்லா இடங்களிலும் தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது. பீட்சா’, ‘பர்கர்’, ‘ஃபாஸ்ட் புட்போன்ற ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை பலரும் ஆர்வத்துடன் அரவணைத்துக் கொள்கிறார்கள். ஊடகங்கள் கூவி விற்கும் சிப்ஸ், குளிர்பானங்கள் போன்றவையும் அவற்றுடன் சேர்ந்து கொள்ள அதீத உடல் பருமன் பிரச்சினை ஆக்கிரமித்துக் கொண்டு விடுகிறது.

டெய்லி நினைப்பேன், ஆனா உடற் பயிற்சி செய்ய நேரமே கிடைக்கிறதில்லைஎன புலம்பும் பலரையும் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறோம். அவசர உலகில் நமக்கு எதற்குமே நேரமில்லை. அந்தப் பட்டியலின் கடைசியில்தான் உடற் பயிற்சி எப்போதும் வந்து தொற்றிக் கொள்கிறது.

உண்மையில் உடற் பயிற்சி நமது பட்டியலின் கடைசி இடத்துக்கானதுதானா?

நமக்கு நோய் ஏதும் வந்ததில்லை என்பதற்காக நாம் ஆரோக்கியமாய் இருக்கிறோம் என்றும் அர்த்த மில்லைஎன்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

எதிர்காலத்துக்காக நாம் ஓய்வூ திய திட்டம், காப்புறுதி, நீண்ட கால சேமிப்பு அது இது என ஏகப்பட்ட விடயங்களில் கவனம் செலுத்துகிறோம். உண்மையில் நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான சேமிப்பு உடல் ஆரோக்கியம்தான். இளமையில் ஆரோக்கியமாய் இருந்தால் முது மையில் நல்ல நினைவு சக்தியுடன் வாழலாம் என்கிறது மருத்துவம்.

இன்றைய இளைஞர்கள் முன்னால் பல இலட்சியங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போட்டி மிகுந்த உலகில் எப்படியேனும் முன் வரவேண்டும் எனும் ஆர்வ மும், கட்டாயமும் அவர்களுக்கு உண்டு. வேலை கிடைக்கும் வரை புத்தகப் பூச்சிகளாகவும், வேலை கிடைத்த பின் இரவிலும் வேலை செய்யும் ஆந்தைகளாகவும் இருக்க வேண்டிய சூழல் அவர்களுக்கு.

இதனாலேயே உடற் பயிற்சி எண்ணத்தைக் கட்டிப் பரணில் போட்டுவிடுகின்றனர். ஆனால் ஆராய்ச்சிகள் என்ன சொல்கின் றன தெரியுமா?

சீரான உடற் பயிற்சி செய்பவர் களுக்குத்தான் மூளை சுறுசுறுப்பாக இருக்குமாம். மூளையில் புதிய கலங்கள் உருவாக உடற் பயிற்சி தூண்டுதலாய் இருக்கும். இதனால் நினைவாற்றல், படிப்பு, முடிவெ டுக்கும் திறன் என பல விடயங்களிலும் அதிக திறமை இருக்கும் என்கின்றனர்.

குறிப்பாக தாய்வானிலுள்ள தேசிய செங் குங் மருத்துவக் கல்லூரி இதை விரிவான ஒரு ஆய்வு மூலம் சமீபத்தில் உறுதி செய்திருக்கிறது.

ஆரோக்கியமான உடல் என்பது மனம் தங்கும் மாளிகை. பலவீனமான உடல் என்பது மனம் அடைபடும் சிறைஎன்கிறார் பிரான்சிஸ் பேகான்.

நமது உற்சாகமான மனதுக்கு ஆரோக்கியமான உடல் உறுதுணையாய் இருக்கிறது. உடலில் உயிர்வளி அதிகமாய் உலவவும், சீரான இரத்த ஓட்டம் இருக்கவும் உடற் பயிற்சி உதவுகிறது என்பது நமக்குத் தெரிந்ததே. அதெல்லாம் நமது மனதுக்கும் மிகவும் நல்லது என்பதுதான் சிறப்பாகக் கவனிக் கப்பட வேண்டிய விடயம்.

மருத்துவ மொழியில் சொல்ல வேண்டுமெனில் உடற் பயிற்சியின் போது உடலின் என்டோர்பின்கள் அதிகமாகச் சுரக்கின்றன. என்டோர்பின்கள் நமக்கு அமைதியையும் ஆனந்தத் தையும் தரும் வல்லமை கொண்டவை. நீங்கள் உடற் பயிற்சி செய்து முடிந்ததும் உங்களுடைய மன இறுக்கும், கோபம், சோகம் எல்லாம் காணாமல் போவதன் காரணம் இதுதான்.

உடலை ஆரோக் கியமாக வைத்திருப்பது உங்களுடைய ஆயுள் காலத்தை நீட்டிக்கவும் உதவுகிறது. சுவீடனிலுள்ள ஒஸ்ட்ரா பல்கலைக்கழக இருபதாண்டு ஆய்வு இதை தெரிவித்திருந்தது. திடீரென நோய் வந்தோ, மாரடைப்பு வந்தோ மரணம் சம்பவிக்காமல் இருக்க சீரான உடற் பயிற்சி உதவுகிறது.

பலரும் உடல் ஆரோக்கி யத்திற்கும் மனதுக்கும் தொடர்பு இல்லை என நினைக்கிறார்கள். அது மிகத் தவறான அப்பிராயம். உடலின் ஆரோக்கியமே மனதின் ஆரோக்கியத்தை யும் பாதுகாக்கிறது. அதே போல மனம் உற்சாகமாய் இருக்கும் போது உடலும் ஆரோக்கியமாய் நடைபோடுகிறது.

எனவே உடலைப் பராமரிக்க வேண்டியது அதி முக்கியமான தாகிப் போகிறது. மன அழுத்தத் தையும் ஆரோக்கியமான உடல் விரட்டி அடிக்கிறது! இதை பல்வேறு ஆராய்ச்சிகள் உறுதி செய்திருக்கின்றன.

குறிப்பாக அமெரிக்காவின் தர்ஹம் பல்கலைக்கழகம் இது குறித்து சிறப்பான சில ஆராய்ச்சி களை மேற்கொண்டது. அதில் உடல் ஆரோக்கியம் மன அழுத் தத்தை எதிர்க்கிறது எனும் அழுத்த மான முடிவு கிடைத்தது. மன அழுத்தம் பல்வேறு நோய்களை யும் தன்னோடு இழுத்து வரும்.

அழுத்தமற்ற மனம் இருந்தால் நோயற்ற உடல் சாத்தியமாகிறது. அது நமது இலக்கை நோக்கிப் பயணிக்கும் உத்வேகத்தையும், வலிமையையும் நமக்குத் தருகி றது. அதனால் தான்சேமிக்க வேண்டியது பொன்னையோ வெள்ளியையோ அல்ல. உடல் ஆரோக்கியத்தையேஎன்றார் மகாத்மா காந்தி.

உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க மருத்துவம் சில எளிய வழிகளை மருத்துவக் காரணங்க ளோடு சொல்கிறது. முதலாவது சரியான உணவுகளைச் சாப்பிடு வது. நாவின் சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து சகட்டு மேனிக்கு எதையாவது உள்ளே தள்ளினால் நடு வயதுக்குப் பின் ஆரோக்கியம் படு பலவீனமாகி விடும்.

இளமைக் காலத்திலேயே காய்கறிகள், பழங்கள், தானியங் கள் என சரியான உணவுகளைப் பயன்படுத்த வேண்டும். 80 சத வீதம் ஆரோக்கியமான உணவு 20 சதவீதம் குறைந்த ஆரோக்கிய உணவு எனும் 80-20 என்பதை கடைப்பிடிக்க மருத்துவம் அறிவுறுத்துகிறது.

நான் காலை உணவு சாப்பிடு வதில்லை, அதற்கெல்லாம் நேரம் இல்லைஎன சலித்துக் கொள்ப வர்களுக்கும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். காலை உணவு சாப்பிடாமல் ஓடுபவர்கள் உடலில் அதிக கொழுப்பு சேரும் என்கின்றனர் அவர்கள்.

மிக எளிதாக கிடைக்கும் விடயங்களை நாம் பொருட்படுத் துவதில்லை என்பது துயரமான உண்மை. அதில் மிக மிக முக்கியமானது தண்ணீர். நமது உடல் 60 சதவீதம் தண்ணீரால் ஆனது.

நமது உடலின் சீரான ஆரோக்கியத்துக்கும், இயக்கத்துக் கும் தண்ணீர் மிக மிக முக்கியம். இருபது கிலோ உடல் எடைக்கு ஒரு லீற்றர் எனுமளவில் தினமும் தண்ணீர் குடிப்பது மிக நல்லது என்கிறது மருத்துவம்.

இன்றைய இளைஞர்கள் கவனக்குறைவாக விட்டு விடும் இன்னொரு விடயம்தூக்கம்’. இரவில் வெகுநேரம் விழித்திருப் பதும் மிக தாமதமாகத் தூங்கு வதும் உடல் நலத்தின் மிகப்பெரிய எதிரிகள். மறுநாள் முழுவதும் சோர்வாகவும், உற்சாக மின்றியும் உடல் தடுமாறும். மூளைக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வும், உயிர் வழியும் கிடைக்காமல் மூளை உற்சாகமிழக்கும். எனவே தூக்கம் என்பது முக்கியமான ஒரு வேலையே எனும் சிந்தனையில் அணுகுங்கள்.

புகை, மது போன்ற பழக்கங்களை முற்றிலுமாக விட்டு விட வேண்டியது மிக முக்கியம் என் பதை சொல்லத் தேவையில்லை. புகை பிடித்தலினால் வரும் நோய்களையும், உடல் பலவீனங்களையும் பற்றிப் பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருக்க லாம். அது குறித்து ஆய்வுகள் பல நூறு வந்திருக்கின்றன.

புகையை விட்டு விட்டாலே உடலின் ஆராக்கியம் சீரான முன்னேற்றத்தை அடையும் என்பது சர்வ நிச்சயம். மனிதனுடைய நோய் அவனுடைய தனிப்பட்ட சொத்துஎன்கிறார் அலொன்சோ கிளார்க். ஒருவருடைய நோயை இன்னொ ருவர் சுமக்க முடியாது என்பதே அவர் சொல்லும் செய்தி.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை நமது உடலின் ஒட்சிசன் அளவைக் குறைத்து விடும். நமது மூச்சுக்காற்றிலுள்ள ஒட்சிசனில் 80 சதவீதம் நமது மூளைக்குச் செல்கிறது. நாம் எவ்வளவு சுத்தமான தூய்மையான காற்றை உள்ளிழுக்கிறோமோ அதில் 80 சதவீதம் பிராண வாயுவை மூளை தனக்காய்ப் பயன்படுத்திக் கொள்கிறது.

அதனால் தான் மூச்சுப் பயிற்சி யோகா போன்றவற்றை அனுபவ சாலிகள் முன்மொழிகிறார்கள். எதுவும் தெரியாவிட்டாலும் கூட மூச்சை அடிக்கடி ஆழமாய், மெதுவாய் உள்ளிழுத்து வெளிவிடு வதே கூட உங்கள் மூளையை சுறுசுறுப்பாய் வைத்திருக்க உதவும்.

முக்கியமாக உங்கள் மனதை இலகுவாக வைத்திருங்கள். மன்னிக்கும் மனப்பான்மையைக் கொண்டிருங்கள். கோபம், எரிச்சல், பொறாமை, குறை சொல்லிக் கொண்டே இருப்பது போன்ற வையெல்லாம் நமக்கெதற்கு. வாழ்க்கை அழகானது. அதை ஆனந்தமாய் எதிர்கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உடல் தன்னம் பிக்கையின் அச்சாணி! நமக்கும் நம் உடலுக்கும் இடையே யான பந்தத்தைச் சொல்வது தான் உடல் நலம். அந்த பந்தம் நீண்டகால பந்தமாய் நிலைக்கட்டும்.

இளமையைப் பேணுவோம், வளமையைக் காணுவோம்!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com