Contact us at: sooddram@gmail.com

 

இந்தியாவின் பிராந்திய நலன்களுடன் முரண்பட்டுக்கொண்டு ஈழத் தமிழ் அரசியல் சக்திகள் எதையும் சாதிக்க முடியாது

தமிழ்நாட்டில் இருந்து 'உலகத்தமிழ் இதழ்' என்ற விருது வாக்கியத்துடன் வெளியாகும் 'காலச்சுவடு' டிசம்பர் மாத இதழில் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான யதீந்திரா எழுதிய கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி எமது தளத்தில் மீள் பிரசுரம் செய்கிறோம்.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான சூழல் குறித்து எழுதவோ பேசவோ முயலும்போதெல்லாம், முதலில் சிறிய வயதில் படித்த சைவ சமயவழிக் கதையொன்று நினைவுக்கு வருவதுண்டு. அது உலகத்தை முதலில் சுற்றிவருபவர்கள் யார் என்ற போட்டி தொடர்பான கதை. இதில் தமிழர்களின் முழுமுதற் கடவுளென அறியப்படும் சிவபெருமானின் புதல்வர்களான முருகனும் தும்பிக்கையான் எனப்படும் விநாயகனுமே போட்டியாளர்கள். முருகன் தனது மயில் வாகனத்திலேறி உலகத்தைச் சுற்றிவரும் போட்டியில் களமிறங்க, தும்பிக்கையானோ நாரதரின் ஆலோசனையின்படி தன் பெற்றோரான சிவனையும் பார்வதியையும் சுற்றிவந்து ஞானப்பழத்தைப் பரிசாகப் பெற்றுக்கொள்வார். உலகிற்கே படியளக்கும் சிவனையும் பார்வதியையும் சுற்றிவந்தால் இவ்வுலகத்தைச் சுற்றியதற்குச் சமம் என்னும் நாரதர் ஆலோசனையின் சூட்சுமங்களை விளங்கிக்கொண்ட தும்பிக்கையான் போட்டியில் லகுவாக வெற்றிபெற்றான்.

உலகத்தையே சுற்றிவந்துவிட்டேன் என்னும் இறுமாப்பிலிருந்த முருகனுக்கோ பேரதிர்ச்சி காத்திருந்தது. இறுதியில் பெற்றோருடன் கோபித்துக்கொண்டு கோவணத்துடன் திரிந்தார் முருகன். இந்த நாட்களில் நாவல்மரமொன்றில் நின்றுகொண்டு, சமாதானம் பேச வந்த அவ்வையாரைப் பார்த்து 'உனக்குச் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா?' என்று வசனம் பேசுவதாக அந்தக் கதை செல்கிறது. கதையின்படி முருகனிடம் இருந்ததோ வீராவேசம் ஆனால் தும்பிக்கையானிடம் இருந்ததோ மதிநுட்பம். மதிநுட்பமே இறுதியில் வென்றது. மிகவும் பிரம்மாண்டமான தோற்றம் காட்டிய, பெரும் தியாகங்களைச் செய்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அதிர்ச்சியளிக்கத்தக்க வகையில் மூன்றே வருடங்களில் எவ்வாறு நிர்மூலமாக்கப்பட்டது? இது குறித்துச் சிந்திக்கும்போதெல்லாம் நான் இந்தக் கதையையே நினைத்துக்கொள்வதுண்டு. அப்போதெல்லாம் நான் புலிகளின் தலைவர் பிரபாகரனை முருகனின் இடத்திலும் மகிந்த ராஜபக்சவைத் தும்பிக்கையானின் இடத்திலும் வைத்துப் பார்ப்பதுண்டு. நாரதரின் இடத்தை யாருக்குக் கொடுக்கலாம்?

தமிழர் தரப்பின் நாரதர் இடத்தைப் புலிகளின் தத்துவ ஆசிரியர் அன்ரன் பாலசிங்கத்திற்குக் கொடுக்கலாம். ஆனால் மகிந்த ராஜபக்சவின் பக்கத்திலோ ஏராளமான நாரதர்கள் இருந்தனர்.

புலிகள் ஏன் இத்தகையதொரு முடிவைச் சந்திக்க நேர்ந்தது? இந்திய ஆய்வாளர் ஒருவர் சொல்வது போன்று அது அவமானகரமான முடிவு ஜஐபெடழசழைரள நனெஸ.

புலிகளின் தோல்விக்குப் பலரும் தங்களது இருப்பிடம் சார்ந்து பலவிதமான பதில்களைச் சொல்லக்கூடும். புலிகளின் ஆதரவாளர்களோ இந்தியாவே புலிகளை அழித்தது என்று வாதிடலாம் – அதற்கு அமெரிக்கா முண்டு கொடுத்தது என்றும் சொல்லலாம்.

புலி எதிர்ப்பாளர்களோ புலிகளை எவரும் அழிக்கவில்லை அவர்களது எதேச்சாதிகாரப் போக்கே இறுதியில் அவர்களின் கழுத்துக்குச் சுருக்குக் கயிறானதென்று கூறலாம்.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான அரசியல் உரையாடல்களைத் தொகுத்து நோக்கினால் அவற்றை மேற்படி இரு வகைப்படுத்தல்களுக்குள் அடக்க முடியும்.

ஆனால் இந்தக் கட்டுரையோ விடயங்களைப் பிறிதொரு தளத்தில் ஆராய விழைகிறது.

புலிகள் அதிக விலைகொடுத்துக் கைப்பற்றிய ஒவ்வொரு இடத்தையும் இழந்து, அழிந்துகொண்டிருந்தனர். புலிகளின் இறுதி நாள்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருந்தன. இந்தச் சூழலில் புலிகளை அழிவிலிருந்து காப்பாற்றக்கூடிய ஒரேயொரு சக்தியாகத் தமிழகமே இருந்தது.

ஆனால் முடிந்ததா? தமிழகத்தை எவ்வாறு அப்படிச் சொல்ல முடியுமென்ற கேள்வி எழலாம். அதற்கான பதிலை இந்தக் கட்டுரையின் பிற்பகுதியில் பார்ப்போம்.

இங்குதான் ஈழத்தமிழர் போராட்ட ஆதரவுச் சக்திகள் தங்களை சுயவிமர்சனத்திற்குள்ளாக்கிக்கொள்ள வேண்டியதன் அவசியம் உணரப்படுகிறது.

02.

ஒரு நேர்காணலிலிருந்து தொடங்கலாம் என எண்ணுகிறேன். அது நான் சமீபகாலத்தில் மிகவும் கருத்தூன்றிப் படித்த நேர்காணல்களில் ஒன்று.

தியாகு தனது நக்சலைட் அரசியல் குறித்து விமர்சனபூர்வமாகப் பேசியிருக்கிறார். 'வர்க்க எதிரியின் ரத்தத்தில் கைநனைக்காதவன் புரட்சியாளனே அல்ல' என்னும் சாரு மஜும்தாரின் புரட்சிகர அரசியல் நிலைப்பாட்டை இன்று திரும்பிப் பார்க்கும்போது அது எவ்வளவு குறைபாடுள்ளது என்பதைத் தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது எனக் குறிப்பிட்டிருக்கும் தியாகு முன்னர் அதைச் சரியென்று நம்பியவர், அதன் வழியில் வர்க்க எதிரியான பண்ணையார் ஒருவரின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக்காளாகிப் பின்னர் பொதுமன்னிப்பின் பேரில் விடுதலையானவர்.

தான் நம்பிய அரசியல் வழிமுறையைச் சுயவிமர்சனத்துடன் அணுகும்போது அதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதைத் தியாகுவால் கண்டுகொள்ள முடிந்திருக்கிறது.

இதே தியாகு பின்னர் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளராகவும் புலிகள் தலைமையிலான ஈழ விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளராகவும் செயற்பட்டவர். ஆனால் எவ்வளவு தூரம் தியாகு போன்றவர்களால் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான நிலைமைகளை சுயவிமர்சனத்துடன் அணுக முடிந்திருக்கிறது என்பது கேள்விக்குறியே!

எனது அவதானிப்பிற்கு உட்பட்டவகையில் ஈழப் போராட்டம் குறித்து சுயவிமர்சனத்துடன் கூடிய அரசியல் உரையாடல்கள் எவையும் தமிழகச் சூழலில் இடம்பெற்றதற்கான சான்றுகள் மிகவும் குறைவே.

புலிகள் பலமாக இருந்த காலத்தில் விமர்சனபூர்வமான பார்வைகள் எவையும் அவசியப்பட்டிருக்கவில்லை அல்லது அது அவசியமானதல்ல என்னும் கருத்துநிலையொன்று ஊடகமயப்படுத்தப்பட்டிருந்தது. அப்படியொரு வாதத்தை ஊடகமயப்படுத்தியவர்களில் நானும் ஒருவன் என்பதைச் சொல்லிக்கொள்வதில் எனக்குத் தயக்கங்கள் இல்லை. ஆனால் இப்போது நிலைமை வேறு. இப்போதாவது சில விடயங்கள் குறித்து நாம் ஆழமாகப் பேசியாக வேண்டியிருக்கிறது.

புலிகள் எதேச்சாதிகாரமாக நடந்துகொண்டனர், மாற்றுக் குரல்களை நசுக்கினர் என்ற விமர்சனங்கள் தவறானவை அல்ல. ஆனால் புலிகளின் வீழ்ச்சியில் இவையெல்லாம் பெரியளவில் செல்வாக்கு செலுத்தியிருக்கவில்லை.

2001 செப்டம்பர் 11இல் அமெரிக்காவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் உலகெங்கும் இயங்கிக்கொண்டிருந்த ஆயுதரீதியான விடுதலை இயக்கங்களுக்கான சாவுமணியாகவும் இருந்தது. இதன் முதல் பலிதான் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்.

உண்மையில் அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தப் பிரகடனம், ஜறுயச ழn வநசசழசஸ அமெரிக்க எதிர்நிலைப் போக்கைக் கொண்டிருந்த இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களைக் குறிவைத்திருந்ததே தவிர விடுதலைப்புலிகளைக் கருத்தில் கொண்டிருக்கவில்லை.

விடுதலைப்புலிகள் இயக்கமும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமெரிக்க நிகழ்நிரலுக்கு எதிரானவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டதும் இல்லை. ஆனால் அமெரிக்காவின் மேற்படி போர்ப் பிரகடனம் ஆயுதரீதியான அரசியல் அமைப்புகளை அழிப்பதற்கான சர்வதேச ஆதரவு வெளியை உருவாக்கியது. கொழும்பு மேற்படி ஆதரவு வெளியை மிகவும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கொண்டதன் விளைவாகப் புலிகள் மிகவும் மோசமாகத் தோற்கடிக்கப்பட்டனர்.

நான் மேலே குறிப்பிட்ட சாவுமணி எச்சரிக்கையானது, விடுதலைக்காகப் போராடும் இயக்கங்கள் பயங்கரவாத அமைப்புகளிலிருந்து – குறிப்பாக அமெரிக்க எதிர்ப்பு மதவாத அமைப்புகளிலிருந்து -தங்களை வேறுபடுத்திக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

இங்கு வேறுபடுத்திக்காட்டுவது என்பதன் பொருள் – ஒரு அமைப்பு தனது அரசியல் இலக்கை மறுவரையறை செய்வதிலிருந்து, தன்னையொரு அரசியல் பண்புநிலை மாற்றத்திற்குள்ளாக்கிக்கொள்வதாக அமைய வேண்டும்.

அந்தவகையில் விடுதலைப்புலிகளின் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தமும் சமாதானத்திற்கான விருப்பும் முன்னேறிய அரசியல் காய்நகர்த்தலாக அமைந்தது. ஆனால் அதைப் பொறுமையாகவும் பயங்கரவாதத்திற்கு எதிரான நிகழ்ச்சிநிரலுடன் முரண்படாத வகையிலும் முன்னெடுப்பதில்தான் புலிகளின் தலைமை சறுக்கியது. ஆனால் இங்கே பலரும் விமர்சிப்பது போன்று, புலிகள் விடயத்தில் மேற்கு நாடுகள் பெரிய இறுக்கத்தைக் கடைப்பிடித்திருக்கவில்லை.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டிருந்தபோதும் அவர்கள் எவரும் பிரபாகரனைப் பின்லேடனாகப் பார்த்திருக்கவில்லை. இதன் விளைவாகவே மேற்குலம் புலிகளை அரசியல் இணக்கப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் கரிசனை எடுத்துக்கொண்டது.

இந்த இடத்தில் மேற்கினது அனுசரனை எல்லையையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். சுருங்கச் சொன்னால், தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் பயங்கரவாத இயக்கத்தின் மீது படிந்துள்ள பயங்கரவாதமெனும் அழுக்கை அகற்றிச் சுத்தப்படுத்த மேற்குலம் முற்பட்டது.

இதை இன்னும் சற்று விரிவாகச் சொல்வதானால் – பிரபாகரனை ஒன்றில், மேற்கின் நவநாகரிக (கோட் வகை ஆடை) ஆடைக்கு மாற்றுவது அல்லது ஏற்கனவே ஈழத் தமிழ்ச் சூழலுக்குப் பரிச்சயமான வேட்டி சால்வைக்கு மாற்றுவது என்பதே மேற்கின் நிகழ்ச்சிநிரலாக இருந்தது. ஆனால் பிரபாகரன் இறுதிவரை சீருடை நீக்கத்திற்கு இணங்க மறுத்ததன் விளைவே புலிகளின் அவமானகரமான வீழ்ச்சி.

அதாவது, ஈழத்து அரசியல் சூழலில் சீருடைக்கான அவசியமே இல்லாமலாக்கப்பட்டு மீண்டும் முன்னைய 'வேட்டி சால்வை' அரசியலே ஒரேயொரு தெரிவாகப்பட்டுள்ளது.

ஈழத் தமிழரின் மிதவாத அரசியல் தலைமைகள் ஜஆழனநசயவந டுநயனநசளஸ தேர்தல் காலங்களில் மக்களை எதிர்கொள்ளும்போது, பொதுவாக வேட்டி சால்வையில் தோன்றுவதே வழக்கம் – இதைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே 'வேட்டி சால்வை அரசியல்' என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

03.

மேற்படி விடயங்களை உணர்ச்சிவசப்படாமல் கருத்தூன்றி நோக்குவோமாயின், புலிகளின் வீழ்ச்சியை விளங்கிக்கொள்வது கடினமானதல்ல.

நாங்கள் முன்னெடுக்கும் ஒரு விடயம் நீதியின்பாற்பட்டது என்று நாங்கள் நம்புவதன் காரணமாக மட்டுமே, அது வெற்றிபெற்றுவிடுமென்று எண்ணுவது அடிப்படையிலேயே உலக அரசியலைப் புரிந்துகொள்ள முடியாமையின் பலவீனமாகும். விடுதலைப்புலிகள் விடயத்திலும் இதுதான் நடந்தது.

இந்தக் கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது இலங்கையின் சமாதான முன்னெடுப்புகள் குறித்த நோர்வேயின் அறிக்கை வெளியாகியிருக்கிறது.

இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய சமாதான முன்னெடுப்புகளுக்கான சிறப்புத் தூதுவராகவும் செயற்பட்ட, நோர்வேயின் சுற்றாடல் மற்றும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் – இந்தியாவே போர்நிறுத்த உடன்பாட்டிற்குப் பின்னால் இருந்ததை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சுயுறு அதிகாரிகள் இந்த முயற்சியின் பின்னால் தாங்கள் இருந்ததைப் பகிரங்கப்படுத்த வேண்டாமென்று கோரியதால்தான் இந்தப் போர்நிறுத்த உடன்பாடு, நோர்வேயின் 'தனித்துவமான குழந்தை' போல் கருதப்பட்டது.

சமாதான முயற்சிகளில் 'பிரதான அனைத்துலக சக்தி' தொடர்புபடுவதை இந்தியா விரும்பியிருக்கவில்லையென்று குறிப்பிட்டிருக்கும் எரிக், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் எந்தெந்த நாடுகள் பங்குபற்ற வேண்டும் என்பதையும் கூட இந்தியாவே தீர்மானித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

2002இல்,போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுவதற்கு முன்னர் இந்திய அதிகாரிகள் விடுதலைப்புலிகளை ரகசியமாகச் சந்தித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை விடயத்தில் இந்தியாவே ஒரேயொரு தீர்மானகரமான சக்தி என்பதையே மேற்படி தகவல்கள் வெள்ளிடைமலையாகக் குறிப்பிடுகின்றன.

இதை எனது மொழியில் சொல்வதாயின், இந்தியாவின் பிராந்திய நலன்களுடன் முரண்பட்டுக்கொண்டு ஈழத் தமிழ் அரசியல் சக்திகள் எதையும் சாதிக்க முடியாது. ஈழத் தமிழர்களைப் பொருத்தவரையில் சர்வதேச அரசியல் என்பது முதல் அர்த்தத்தில் இந்தியாவின் மூலோபாய அரசியல் என்பதுதான் உண்மையிலும் உண்மை. இந்த விடயத்தை விளங்கிக்கொள்ளாமல் முன்னெடுக்கப்படும் எந்த அரசியல் முன்னெடுப்பும் ஈழத் தமிழர்களின் அரசியல் இருப்பை மேலும் பலவீனப்படுத்தவே வழிவகுக்கும்.

இந்த விடயத்தைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எந்த வகையில் புரிந்துகொண்டிருந்தார் என்பதை ஊகிக்க முடியவில்லை. ஆனால் அவரது இறுதி முடிவு, அவர் இந்தியாவைக் குறைத்து மதிப்பிட்டிருந்ததாகவே தெரிகிறது.

தனது உணர்ச்சிவசப்பட்ட முடிவால் இந்தியாவுடன் தீராத பகையை வளர்த்துக்கொண்ட பிரபாகரன், பின்னர் இந்திய எதிர்ப்பு அரசியல் உள்ளடக்கத்தையும் தனது ஜசிங்கள எதிர்ப்புக்கு நிகராகஸ தமிழ்த் தேசியவாத அரசியலுடன் இணைத்துக்கொண்டார். ஆனால் புலிகளின் தத்துவ ஆசிரியர் அன்டன் பாலசிங்கம் இந்தியா தொடர்பில் பிறிதொரு பார்வையைக் கொண்டிருந்தார்.

இந்திய-அமெரிக்க மூலோபாய உறவின் பின்னணியில் இந்தியாவின் முக்கியத்துவத்தைப் புரிந்துவைத்திருந்த பாலசிங்கம், 2006இல் ஒரு ராஜதந்திர நகர்வைச் செய்யும் நோக்கில் ராஜீவ் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

'இது வரலாற்று ரீதியான நிரந்தரத் தன்மைமிக்க துன்பியல் சம்பவம். இதற்காக நாங்கள் ஆழந்து வருந்துகின்றோம். இந்திய அரசும் இந்திய மக்களும் இந்த விடயத்தை மிகவும் பெருந்தன்மையுடன் புறம்தள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் இந்தியாவுடன் புதிய புரிந்துணர்வையும் புதிய உறவையும் கட்டியெழுப்பத் தயாராக இருக்கிறோம். இந்தியா இது தொடர்பில் ஒரு சாதகமான சமிக்ஞையைக் காட்ட வேண்டும்.'

ஆனால் வழமைபோல் இதிலும் பாலசிங்கத்தின் ராஜதந்திர அணுகுமுறையானது, அவருடன் கலந்துரையாடப்படாமலேயே புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனால் நிராகரிக்கப்பட்டது.

இதன் பின்னர் புலிகளின் தத்துவ ஆசிரியராகப் பெயரளவில் செயற்பட்டு வந்த அன்டன் பாலசிங்கம் இறக்கும்வரை, புலிகள் இயக்கத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தார் என்பது பலருக்கும் தெரியாத விடயம்.

04.

இந்த இடத்தில்தான் தமிழகத்தின் ஈழ ஆதரவுச் சக்திகளின் அரசியல் புரிதல் குறித்த கேள்வி எழுகிறது.

ஈழத் தமிழரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் இந்தியாவின் தீர்க்கமான இடத்தைத் தமிழக தேசியவாத சக்திகள் புரிந்துகொண்டிருந்தனரா அல்லது ஆகக் குறைந்தது புரிந்துகொள்வதற்கான முயற்சிகளையாவது மேற்கொண்டிருந்தனரா?

தெற்காசிய அரசியல் சிக்கல்களில் இந்தியா தீர்மானகரமான சக்தி என்பதை விளங்கிக்கொண்டு தமிழக ஆதரவுச் சக்திகள் செலாற்றியிருக்கவில்லை என்பதே இந்தக் கட்டுரையின் துணிபாகும்.

விடுதலைப்புலிகளின் ஒட்டுமொத்தத் தலைமையும் முள்ளிவாய்க்காலுக்குள் சிக்குண்டு அழிந்துகொண்டிருந்தபோது, அவர்களை அழிவிலிருந்து காப்பாற்றக்கூடிய ஒரேயொரு சக்தியாக இந்தியாவே இருந்தது. இது கொழும்பின் புத்திஜீவிகளே மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லிவருகின்ற விடயம். ஆனால் இந்தியாவை அத்தகையதொரு நிலையை நோக்கிக் கீழிறக்குவதற்கான ஆற்றல் யாரிடம் இருந்தது?

இந்தக் கட்டுரையாளரின் அவதானிப்பில் அது நிச்சயமாகத் தமிழகத்திடமே இருந்தது. தமிழகத்தின் ஈழ ஆதரவுச் சக்திகள் புலிகளின் நிகழ்ச்சிநிரலைப் பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டனரே தவிர, இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கருத்தில் கொண்டு புலிகள்மீது அழுத்தங்களைக் கொடுக்கக்கூடியவர்களாக இருந்திருக்கவில்லை. ஆனால் பிழையான நம்பிக்கைகளையே கொடுத்துவந்தனர். இதன் தொடர்ச்சிதான் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர்கூடத் தமது செயற்பாடுகளைச் சுயவிமர்சனம் செய்ய முடியாமல் இருப்பதற்கான காரணம்.

கடந்த காலங்களில் தமிழக ஆதரவு சக்திகள் ஈழத் தமிழர் நலன் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதை இந்தக் கட்டுரை மறுக்கவில்லை. ஆனால் அவற்றின் விளைவுகள் என்ன என்பதில் இந்தக் கட்டுரை அக்கறைகொள்கிறது. தமிழகம் ஆரம்ப காலங்களில் புலிகளின் பின்தளமாக ஜசுநயச டியளநஸ இருந்தது. புலிகளுக்கு மட்டுமல்ல இந்தியாவால் பயிற்சியளிக்கப்பட்ட பல்வேறு இயக்கங்களின் பின்தளமாகவும் தமிழகமே இருந்தது.

ராஜீவ் கொலையைத் தொடர்ந்து புலிகள் இந்தியாவில் செயற்பட முடியாத இயக்கத்தினராகத் தடைசெய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்தே புலிகளின் பின்தளம் மேற்கு நோக்கி ஜபுலம்பெயர் சமூகம்ஸ நகர்ந்தது.

ஈழ விடுதலை இயக்கங்கள் தமிழகத்தில் முகாமிட்டிருந்த காலத்தில் பல்வேறு தமிழக அரசியல் சக்திகளுடனும் தொடர்பிலிருந்தனர். இந்தக் காலத்தில் ஒருசில சிறு குழுக்களைத் தவிரத் தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஈழ விடுதலை அரசியலைத் தங்களது கட்சிசார் அரசியல் நலன்களுடனும் இணைத்துக்கொண்டன.

இதன் பின்னர் ஈழ ஆதரவுநிலை என்பது தமிழக அரசியலில் பிரதான இடத்தைப் பெற்றது. ஆனால் இந்தப் 'பிரதான இடம்' என்பது உணர்ச்சிவசமான அரசியல் சுலோகமாக இருந்ததே தவிர இன்றுவரை இந்தியாவின் பிராந்திய நலன்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஈழ அரசியலைப் புரிந்துகொள்ளும் நிலைக்கு முன்னேறவில்லை. இதுவே, தமிழகத்தின் இதுவரையான ஈழ ஆதரவுச் செயற்பாடுகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகியதன் காரணம்.

புலிகள் வீழ்ச்சியடைந்து இரண்டு வருடங்களாகின்றன. உலக வரலாற்றில் பல இயக்கங்கள் தோல்வியடைந்திருக்கின்றன. ஆனால் புலிகள்போல் இவ்வாறு மூன்றே வருடங்களில் ஒட்டுமொத்தத் தலைமைத்துவமும் துடைத்தழிக்கப்பட்ட இயக்கம் வேறு எதுவும் இல்லை.

எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் உணர்வுசார் அரசியலை விடுத்து, நிலைமைகளை அறிவுபூர்வமாக அணுகும் முறையொன்றே அவசியம்.

ஈழத் தமிழர்களின் அரசியல் என்பது தமிழக அரசியலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. தமிழகக் கட்சி நலன்சார் அரசியலுக்குள் சிக்குண்டுகிடக்கும் ஈழத் தமிழர் அரசியலைப் பிரித்தெடுக்கும் பார்வை அவசியம். தமிழக ஆதரவு சக்திகள் இந்தியாவின் மீது 'அழுத்தங்'களைப் பிரயோகிப்பதன் மூலம் ஈழத் தமிழர் நலனை வென்றெடுக்கும் உபாயங்கள் குறித்துச் சிந்திக்க வேண்டிய பொறுப்புடையவர்களாக இருக்கின்றனர். ஆனால் அதை முன்னைய 'சவால்வகை' அணுகுமுறையால் செய்ய முடியாது.

இங்கு நாம் 'அழுத்தம்' என்பதை எவ்வாறு விளங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதும் இன்னொரு பிரச்சினை. நமது தமிழ்த் தேசிய அரசியல் மரபில் அழுத்தம் என்பதை எதிர்ப்பு அரசியலாகச் சுருக்கிக்கொண்டுள்ளோம். இது தமிழகத்தின் கடந்த கால ஈழ ஆதரவுநிலை அரசியலில் காணப்படும் பிரதானக் குறைபாடாகும்.

புதுதில்லிக்குச் சவால் விடுவதன் மூலமோ பின்லேடனைக் கொன்றது சரியென்றால் ராஜீவ் காந்தியைக் கொன்றதில் என்ன தவறு என்று கேட்பதன் மூலமோ ஒருபோதுமே ஈழத் தமிழ் மக்களுக்கு நன்மையைச் செய்துவிட முடியாது. இதுவரை இத்தகைய சவால்வகை அரசியல் வாதங்கள் எவையும் ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்றவும் பயன்பட்டிருக்கவில்லை. ஆனால் அவர்களை அழித்ததில் இப்படியான வாதங்களுக்குப் பங்குண்டு.

இந்தியாவின் பிராந்திய நலன்களை விளங்கிக்கொண்டு, ஈழத் தமிழர்களின் நலன்களை வெற்றிகொள்ளும் வகையில் ஈழ ஆதரவு சக்திகளின் அரசியல் செயற்பாடுகள் மீள்பரிசீலனைக்கு ஆளாக வேண்டியது காலத்தின் தேவை. அத்தகையதொரு நிலை ஏற்பட்டாலன்றித் தமிழக ஆதரவு சக்திகளின் அனைத்துச் செயற்பாடுகளும் வெற்றுக் கோசங்களாகவே சுருங்கிப் போகும்.

கடந்த காலத்தின் செயற்பாடுகள் ஏன் எதிர்பார்த்தது போன்று தாக்கங்களை ஏற்படுத்தவில்லை?

ஏன் எட்டுக் கோடித் தமிழ் மக்கள் இருந்தும் சில மைல்கள் தூரத்தில் நடந்த அவலத்தைத் தடுத்து நிறுத்த முடியாமல் போனது?

ஏன் புதுதில்லி தமிழகத்தின் தீக்குளிப்பு அரசியலைக் கருத்தில் கொள்ளவில்லை?

தமிழகத்தின் இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் எவ்வாறு புலிகள் அழித்தொழிக்கப்பட்டனர். கூடவே ஜஐநாவின் கணிப்பில்ஸ நாற்பதாயிரம் மக்களும் யுத்தத்துக்குள் சிக்கி மாண்டனர்?

இத்தகைய கேள்விகளின் அடிப்படையில் தமிழக ஆதரவு சக்திகள் தங்களைச் சுயவிமர்சனத்துக்கு ஆட்படுத்திக்கொள்வதொன்றும் தற்கொலைக்கு ஒப்பானதல்ல.

(இக்கட்டுரை ஏற்கனவே ஒரு இதழில் வெளிவந்தது என்பதால் புதினப்பலகைக்கான விதிமுறைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்ய முடியவில்லை. உதாரணமாக எமது தளத்தில் 'தமிழகம்' என்ற சொல் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் 'தமிழகம்' என்ற ஒரு இடம் 'வடவேங்கடம் தென்குமரியாயிடை' நிலப்பரப்பில் தமிழ் இருந்த காலத்தில் அழைக்கப்பட்டதாகும். இன்று தமிழை அகமாகக் கொண்டோரின் எல்லை உலகெங்கும் பரவிவிட்டது. அது தமிழ்நாட்டு தமிழ், ஈழத்தமிழ், மலேசியத்தமிழ்,.. எனப்பலவாறாக விரிவடைந்து விட்டது. அந்த பழைய தமிழகத்தின் இன்றைய பெயர் 'தமிழ்நாடு' என்பதாகும்.)

சுயவிமர்சனம் தற்கொலைக்கு ஒப்பானதல்ல

புலிகளின் வீழ்ச்சியும் தமிழகழூ ஆதரவு சக்திகளின் அரசியல் புரிதலும்: சில குறிப்புகள் – யதீந்திரா

எங்கே அது எம்மைக் கொண்டு சேர்க்கும்

என்றறியாமலே

இருளில் நாங்கள்

ஒரு பாதையைத் தேர்ந்தோம்.

- ஸபான் இலியாஸ் மேஸடோணுயா.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com