Contact us at: sooddram@gmail.com

 

ஐக்கிய தேசியக் கட்சி ஒரு வலுவான எதிர்க்கட்சியாக மாற வேண்டும்

ஒரு நாட்டின் பாராளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டுமாயின், அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி வலுப்பெற்றிருக்க வேண்டும். ஒரு வலுவான எதிர்க்கட்சி அரசாங்கத்தின் நல்லாட்சியை சிறந்த முறையில் வழிநடத்துவதற்கு ஒரு நல்ல சட்டாம்பிள்ளையாக இருக்க முடியும். பாராளு மன்ற ஜனநாயகம் சிறப்புற்று விளங்கும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அந்நாட்டின் ஆட்சியாளர்கள் எந்நேரமும் பயந்து அவதானமான முறையில் நல்லாட்சியை மேற்கொள்வதற்கு அங்கு ஒரு சக்திவாய்ந்த எதிர்க்கட்சி இருப்பதே பிரதான காரணமாகும். சமீபத்தில் இந்தியா எங்கும் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்திய எரிபொருள் விலையேற்றத்தின் போது இந்திய எதிர்க்கட்சிகள் நாடெங்கி லும் மக்களின் பூரண ஆதரவுடன் மேற்கொண்ட வெற்றிகரமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இந்திய அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்திய தனது தீர்மானத்தை வாபஸ்பெற்று எரிபொருளின் விலையை முன்பிருந்ததை விட சிறிதளவு குறைத்து விடுவது என்ற தீர்மானத்தை எடு த்தது.

இந்திய பொது மக்களுக்கு இந்த சலுகையை பெற்றுத் தருவதற்கு இந்தியாவில் வலுவான எதிர்க்கட்சி ஒன்று இருப்பதே பிரதான காரணமாகும். இந்திய அரசியலிலும் நிர்வாகப் பீடத்திலும் ஊழல்களும், மோசடிகளும் தலைவிரி த்து ஆடுகின்றன. ஆகவே, அரசாங்கம் இத்தகைய மோசடிகள், ஊழல் களை தடுப்பதற்கு லோக்பால் சட்டமூலத்தை கொண்டுவர வேண்டும் என்று சமூக சீர்த்திருத்தவாதியான அன்னா ஹசாரே மகாத்மா காந்தியடிகளின் வழியில் உண்ணாவிரதம் என்ற சாத்வீக போராட்டத்தை நடத்திய போது இந்திய அரசாங்கமே சில தினங்களுக்கு ஆட்டம் காணுமளவுக்கு பலவீன மடைந்திருந்தது. அதற்கும் இந்திய எதிர்க்கட்சிகளின் ஆதரவு ஒரு பிரதான காரணமாக அமைந்தது.

இந்த எதிர்ப்பை சமாளிப்பதற்காக ஊழல்கள், மோசடிகள் பொது வாழ்க்கையில் இடம்பெறுவதை தடுப்பதற்கு சட்டம் இயற்றுவதற்கு இந்திய அரசாங்கம் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. அதுபோ ன்று, இலங்கையில் ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லாதிருப்பது குறித்து நாம் வேதனைப்பட வேண்டும்.

இலங்கையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒரு வலுவான எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் அமர்ந்து, அரசாங்க கட்சியை சரியான முறையில் ஜனநாயக தாற்பரியங்களை பாதுகாக்கக்கூடிய வகையில் தனது பங்களிப்பை வழங்கத் தவறிவிட்டது. குறிப்பாக ஒரு நாட்டில் வருடா வரு டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் வரவு செலவுத் திட்டம் எந்தளவு அந் நாட்டிற்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை உணராமல், இன்றைய ஐக்கிய தேசிய கட்சி செயற்பட தவறிவிட்டது.

நிதியமைச்சர் ஒருவர் வரவு செலவுத் திட்ட உரையை பாராளுமன்றத்தில் நிகழ்த் தும் போது, எதிர்க்கட்சியினர் தாங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டா லும் பாராளுமன்றத்தில் அமர்ந்து அவரது உரைக்கு பாதகம் இழைக்கக் கூடிய வகையில் வெறுமனே கத்தி கூச்சல் போட்டு முட்டுக்கட்டை விதிக் கலாகாது. நிதியமைச்சர் தெரிவிக்கும் கருத்தை அமைதியாக இருந்து, செவி மடுத்த பின்னர் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது அக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவரோ வரவு செலவுத்திட்டத்திலுள்ள குற் றங் குறைகளை சுட்டிக் காட்டி அவற்றை மக்களுக்கு ஏற்புடைய முறையில் திருத்தியமைப்பதற்கு அரசாங்கக் கட்சிக்கு நல்ல ஆலோசனைகளை கூறும் தங்களின் பொறுப்பையும் இந்த தடவை எதிர்க்கட்சி நிறைவேற்ற தவறி விட்டது.

1970ம் ஆண்டு தசாப்தத்தின் ஆரம்பத்தில் திருமதி ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கூட்டரசாங்கம் பதவியேற்ற போது பிரதம மந் திரி திருமதி பண்டாரநாயக்க லங்கா சமசமாஜ கட்சித் தலைவர் டாக்டர் என்.எம். பெரேராவை நிதியமைச்சராகவும் கம்யூனிஸ்ட் கட்சியின் பலம் வாய்ந்த பொதுச் செயலாளர் பீற்றர் கெனமன் அவர்களை வீடமைப்பு துறை அமைச்சராகவும் நியமித்தார்.

பொருளாதார துறையில் இரட்டை கலாநிதிப் பட்டம் பெற்ற டாக்டர் என்.எம். பெரேரா ஒரு சிறந்த பொருளாதார நிபுணராக விளங்கினார். அவர் எங்கள் நாட்டின் பணம் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டு கறுப்பு பணமாக இரு ப்பதனால், தேசிய பொருளாதாரத்திற்கு பெரும் தாக்கம் ஏற்பட்டு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்.

அதையடுத்து, டாக்டர் என்.எம். பெரேரா தனது வரவு செலவுத்திட்டத்தில் அன்று புழக்கத்திலிருந்த 100 ரூபா கரன்சி நோட்டுக்களை இரத்து செய்து விட்டு, இந்த நோட்டுக்களை வைத்திருப்பவர்களை அவை சட்டப்பூர்வமாக உழைத்து சேர்க்கப்பட்டது என்பதை நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு நிரூபி த்து காட்டிய பின்னர் புதிய நோட்டுக்களை இலங்கை மத்திய வங்கி யிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்ற ஒரு புரட்சிகரமான நிதி சீர்த்திருத் தத்தை அமுலாக்கினார்.

அதன் மூலம் சில அப்பாவிகள் பாதிப்புக்குள்ளானாலும், சட்டவிரோதமாக பது க்கி வைக்கப்பட்டிருந்த 100 ரூபா நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்த காரண த்தினால் தேசிய பொருளாதாரம் அன்று வலுவடைந்தது. இந்த செயற்பா ட்டை அன்று எதிர்க்கட்சியில் வீற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சி வரவேற்று ஆதரித்து அதிலிருந்த சில குறைபாடுகளை திருத்தியமைப்பதற்கான யோச னைகளையும் முன்வைத்தது. அவ்விதம் தான் ஒரு நாட்டின் எதிர்க்கட்சி, அரசாங்கத்தின் நற்பணிகளுக்கு தனது ஆக்கபூர்வமான பங்களிப்பை வழ ங்க வேண்டும்.

ஆனால், இன்று அவ்விதம் ஒரு எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்திலும், நாட்டி லும் மக்களின் மேம்பாட்டிற்காக செயற்படுவதை அடியோடு மறந்துவிட்ட ஐக்கிய தேசிய கட்சி உட்பூசல்களினால், சீர்குலைந்து போகும் அவலநிலை க்கு தள்ளப்பட்டுள்ளது. இரண்டு சந்தர்ப்பங்களில் பிரதம மந்திரி பதவியில் வீற்றிருந்த திரு. ரணில் விக்கிரமசிங்கவை கட்சித் தலைவர் பதவியிலிருந்து தூக்கி ஏறிந்துவிட்டு, கட்சியை நற்றாற்றில் விட்டு, அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை எடுத்துவிட்டு, ஏதோ ஒரு காரணத்தினால், மீண்டும் கட்சியில் வந்து சேர்ந்து கொண்ட கரு ஜெயசூரியவை கட்சித் தலைவராக அமர்த்து வதற்கு இப்போது மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஐக்கிய தேசிய கட்சியை ஒரு வலுவான எதிர்க்கட்சியாக மாற்றுவதற்கு பதில் வலுவிழந்த ஒரு சாதா ரண கட்சியின் நிலைக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடலாம் என்று, அக் கட்சியின் பல்லாண்டு கால ஆதரவாளர்கள் இன்று அங்கலாய்க்கிறார்கள்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com