Contact us at: sooddram@gmail.com

 

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளிலிருந்து தொடக்கப்பட்டதே தேசிய இனப்பிரச்சினை
 

(கடந்த வாரத் தொடர்)

நாணயபெறுமதியிறக்கம் 3 சதவீதமாக பெறுமதியிறக்கம் செய்வதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதி பொருட்கள் வெளிநாடுகளில் போட்டியிடக் கூடிய வாய்ப்பினை ஏற்படுத்த கூடியதாக அமைகின்றது. உல்லாச பயணிகளின் வருகை மூலமான வருமானத்தை 1 பில்லியனாக அதிகரிக்க இலக்கிடப்பட்டிருப்பது சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான அரசின் முன்னுரிமையை எடுத்துக்காட்டுகின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கு உல்லாச அபிவிருத்தி துரித கதியில் நடைபெறுவதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவும். சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் (SME) எமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் காணப்படுகின்றது. இது தொடர்பான வருமானவரி 10% மாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வங்கிக் கடன்கள் அதிகரிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான வங்கிக் கடன் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது. மக்கள் வங்கி, இலங்கை வங்கி, கிராமிய அபிவிருத்தி வங்கி கிளைகளில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி பிரிவுகள் உருவாக்கப்பட்டும் கடன்கள் வசதிப்படுத்தப்பட்டும் சிறு தொழில் முயற்சி மறுசீரமைப்பு தொடர்பான கடன் வழங்கல்களிற்கு அரச உத்தரவாதம் 50% வழங்கப்படுவதுடன் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை மேலும் சக்திப்படுத்த, ரூபா 500 மில்லியனிற்கும் குறைவான வருடாந்த புரள்வினைக் கொண்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க முன்னர் ஏற்பட்ட செலவினங்களை முதலாம் வருட வருமானத்திலிருந்து கழிப்பதன் மூலம் வரிச்சலுகை வழங்க முன்மொழியப்பட்டிருப்பதுடன் வரவேற்கக் கூடியது. காலாண்டு புரள்வு ரூபா 100 மில்லியனிற்கும் குறைவாகக் கொண்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளிற்கு பொருளாதார சேவைக் கட்டணத்திலிருந்து (ESC)  விலக்களிக்கப்பட்டிருப்பதுடன், இதனை விரிவாக்கும் வகையில் ரூபா 500 மில்லியனிற்கும் குறைந்த காலாண்டு புரள்வைக் கொண்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளிற்கு ரூபா 100 மில்லியன் வரை பொருளாதார சேவைக் கட்டணத்திலிருந்து  (ESC) விலக்களிக்கப்பட்டிருப்பதுடன் இத்துறையை மேலும் விரிவாக்குவதற்கான முன்மொழிவாகவும் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் தொடர்பாக ரூபா 50 மில்லியனிலிருந்து ரூபா 300 மில்லியன் வரையிலான முதலீடுகளிற்கு 4-6 வருடம் வரிவிடுமுறையினை விரிவாக்குவதற்கான முன்மொழிவுகள் வைக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கதாகும். நீண்ட கால யுத்த சுமைகளால் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மக்களுக்கு விரைவான பாரிய முன்னேற்றத்திற்கு இவை உதவும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அந்த வகையில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் சார்பாக ஜனாதிபதி அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மேலும் அச்சுவேலியில் மீண்டும் ஆரம்பிக்க இருக்கின்ற கைத்தொழில் பேட்டையாளருக்கும் மற்றும் வவுனியாவில் அமைந்திருக்கும் கைத்தொழில் பேட்டையாளருக்கும் மற்றும் மட்டக்களப்பில் அமைய இருக்கும் கைத்தொழில் பேட்டையாளருக்கும் இது உறுதுணையாக அமையும் என்பது உறுதி.

பால், பச்சைத் தேயிலை, கறுவா மற்றும் லேட்ரக்ஸ் றப்பர் Latex இறப்பர் என்பவற்றில் ஈடுபடும் தொழில் முயற்சிகளிற்கு தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியிலிருந்து (NBT) விலக்களிக்கப்பட்டுள்ளது.

புடவைக் கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக நூல் மற்றும் உபகரணங்களிற்கு இறக்குமதி வரிச்சலுகை வழங்கப்படவுள்ளது.

நூல் இறக்குமதி தொடர்பாக இறக்குமதி தொடர்பாக வரிகள் தீர்வைகள் யாவும் விலக்களிக்கப்படும். மேலும் சுங்கத் தீர்வை, பெறுமதி சேர்க்கப்பட்ட வரி என்பன இத்தொழில் முயற்சியை நவீனமயமாக்குவதற்கான உபகரணங்களை கொள்வனவு செய்யும் பட்சத்தில் விலக்களிக்கப்படும். மேலும் இந்த துறை சம்பந்தமான வரிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு புடவைக் கைத்தொழிலை பொருளாதாரத்தில் சக்திமிக்க ஒரு துறையாக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யுத்தத்தினால் நலிவுற்ற வடக்கு கிழக்கு மாகாணங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வடக்கு கிழக்கில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், வடக்கு கிழக்கு மக்களும் தேசிய அபிவிருத்தி நீரோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உற்பத்திச் செயற்பாடுகள் அதிகரிக்கும் போக்கினை பதிவு செய்திருப்பது சமாதானத்தின் பலன்களைப் பிரதிபலிக்கின்றது.

வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி வீதம் 23 சதவீத வளர்ச்சியினைப் பதிவு செய்திருப்பதுடன் இது தேசிய பொருளாதார வளர்ச்சி வீதமான 8 சதவீதத்தினைவிட உயர்வாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

தெற்கு, கிழக்கு ரஜரட்ட மற்றும் வடக்கில் நான்கு ஏற்றுமதி வலயங்களை உருவாக்குதல், விதை அபிவிருத்தி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கல் சேவைகளை உருவாக்குதல், ஏற்றுமதி வலயங்களில் அரிசி ஆலைகளை உருவாக்குபவர்களிற்கு வரிச்சலுகை அளித்தல் போன்றன வரவேற்கத்தக்கன.

அரச காணிகள் தனியாருக்கு 30 வருட குத்தகைக்கு வழங்கப்படும் பட்சத்தில் அவை ஒரு வருடத்திற்குள் பாவிக்கப்படுதல் வேண்டும். அரசாங்க பிரதம மதிப்பீட்டாளரின் பெறுமதியின் அடிப்படையில் குத்தகைப் பெறுமானம் நிர்ணயிக்கப்படும். ஒரு வருடத்திற்கு பயன்படுத்தப்படாத காணிகள் மீளெடுக்கப்பட்டு சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிற்கு வழங்கப்படுவது காணிப் பயன்பாட்டினை அதிகரிப்பதற்கான ஒரு செயற்திறனான வரவு செலவுத் திட்ட முன்மொழிவாகும்.

மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்பி சமூக ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முன்மொழியப்பட்டிருக்கும் பிரேரணை வரவேற்கத்தக்கதாகும். இது இனங்களுக்கிடையே சமத்துவத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

ஒரு மில்லியன் வீட்டுத் தோட்டங்களை மேம்படுத்தல்- கொல்லைப்புற பொருளாதாரம்- மரக்கறி, பழவகை மற்றும் பூச்செடிகளை உருவாக்கல், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் மீன்பிடி துறைகளில் விருத்தி செய்தல், தொழில் முயற்சிக் கிராமங்கள்- மனை அடிப்படைக் கைத்தொழில்கள் முயற்சிகளுக்கு கடன் திட்டங்களை விரிவாக்குவதன் மூலம் நிலைத்து நிற்கக்கூடிய மனைப்பொருளாதார கைத்தொழில் அலகுகளை உருவாக்குவதற்கு வசதியளித்தல்.

2012 ம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் பின்வரும் பிரதான விடயங்களையும் கரிசனை காட்டப்படும் துறைகளையும் உள்ளடக்கியுள்ளது.

உணவுப் பாதுகாப்பும் மனைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதலும் - வாழ்வு எழுச்சி தேசிய நிகழ்ச்சித்திட்டம் (திவி நெகும)(Ensuring food security and home based economy - divi Neguma) இது எல்லா மாவட்டங்களிலும் அமுல்படுத்தப்படும். இதற்கூடாக மீள்குடியேற்ற மக்களும் வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்களும் சமுர்த்தி பயனாளிகளும் மிகவும் பயனடைவர். இவர்களது வாழ்வாதாரம் மேம்படுவதுடன் உறுதிப்படுத்தப்படும். அந்த மக்களின் சார்பில் ஜனாதிபதிக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

தொழில்முயற்சிசார் பொருளாதாரம் ஒன்றினைக் கட்டியெழுப்புதல் (Boosting an enterprise economy) மிகவும் பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்தல் (Developing the most difficult villages) பாரம்பரிய கைவினைக் கைப்பணிக் கிராமங்களை விருத்தி செய்தல் (Development of traditional craft villages) - 100 மில்லியன் ஒதுக்கீடு மாத்தறை, மாத்தளை மற்றும் கண்டி.

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், (வீதி வலையமைப்பு, குடிநீர், நீர்ப்பாசனம், அனைவருக்கும் மின்சாரம், புகையிரதப் பாதை மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்பு சேவைகள்), ஆரோக்கியமான சமுதாயம் (Healthy Society) ஒன்றினைக் கட்டியெழுப்புதல், திறன் அபிவிருத்தி அறிவுசார் சமூகம் (Knowledge Society)  ஒன்றினைக் கட்டியெழுப்புதல் திறன், அபிவிருத்தியை நோக்கிய கல்வி (Skills Education) திறன்களை அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி, மூலப் பொருள் ஏற்றுமதிக்குப் பதிலாக பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி தேயிலை, இறப்பர், தெங்கு மற்றும் கறுவா ஆரம்ப மூலப் பொருட்களாகவன்றி பெறுமதி சேர்க்கப்பட்ட முடிவுப் பொருட்களாக ஏற்றுமதி செய்தல்.

மேற்குறிப்பிடப்பட்ட வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதுடன் வறுமையைக் குறைத்து சமூக அபிவிருத்தியை ஏற்படுத்தி, இலங்கையை 135 ஆசியாவின் மலர்ந்து வரும் ஆச்சரியமாக மாற்றுகின்ற மஹிந்த சிந்தனை- எதிர்காலத்திற்கான தொலைநோக்கில் குறிப்பிடப்பட்ட இலக்கினை அடைவதற்கு வழிவகுக்கும் ஒரு வரவு செலவுத் திட்டமாக இதனை நோக்கலாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com