Contact us at: sooddram@gmail.com

 

அரசியல் போட்டியிருக்க வேண்டும் ஆனால் பொறாமை இருக்கலாகாது

ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று தோன்றியுள்ள தலைமைத்துவ போரா ட்டம் அக்கட்சியை மட்டுமன்றி, எங்கள் நாட்டின் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தையே சீர்குலைக்கக் கூடிய வகையில் விஸ்வ ரூபம் எடுத்து வருகின்றது. கட்சியின் இணை உப தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாசாவுக்கு கட் சியின் தலைமைத்துவத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற பேராசை இரு க்கின்ற போதிலும், அவர் தலைமைத்துவப் போராட்டத்தில் இறங்கி தோல் வியடைந்து, மூக்குடைபட்டு, தனது அரசியல் எதிர்காலத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்பவில்லை. எனவே, அவர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்யும் தனது முயற்சிக்கு ஒரு பலிக் கடாவைத் தேடி கட்சியின் இன்னுமொரு இணை உபதலைவரான கரு ஜெயசூரியவை தலைமைத்துவப் போட்டியில் இறக்கியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வரும் இந்த தலைமைத்துவப் போராட்டம் கேலிச் சித்திரக்காரர்களுக்கு இன்று ஒரு நல்ல வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளது. எனது வாழ்க்கையில் ஒரே குறிக்கோள் எனது கட்சியை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்துவதே என்று கரு ஜெயசூரிய கூறும் போது, அவருக்கு அருகில் பலவீனமடைந்த நிலையில் நின்று கொண்டி ருக்கும் ஒரு யானை, நான் அதுவரை உயிரோடு இருப்பேனா? என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்று கேலிச்சித்திரக்காரர் எழுதியிருக் கிறார்.

கேசிச் சித்திரக்காரரின் இந்தக் கருத்தில் ஒரு யதார்த்தம் இருக்கத்தான் செய் கிறது. சமீபத்தில் கருஜெயசூரிய தனது இணையத்தளத்தை அங்குரார்ப் பணம் செய்த வைபவத்தில் கலந்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க, கரு ஜெயசூரியவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் நடுவில் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்து, சில நிமிடங்களில் அந்த வைபவத்திலிருந்து மெதுவாக வெளியேறிவிட்டார்.

இதனை அவதானித்த ஒரு ஊடகவியலாளர் "ஏன் சேர் நீங்கள் போகிaர்கள் என்று ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டபோது, அவர் சிரித்துக் கொண்டே தெரிவித்த பதில் கரு ஜெயசூரியவின் அரசியல் எதிர்காலத்துக்கு நிச்சயம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே நாம் நினைக்க வேண்டியி ருக்கிறது.

19 ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கரு ஜெயசூரிய அரசாங்கக் கட்சியில் சேர்ந்து கொண்ட போது, நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்துவதற்கே இந்த முடிவை எடுத் தேன் என்று அன்று கூறினார். இணையத்தளத்திலும் அந்த கூற்று சேர்க் கப்பட்டிருக்கிறதா என்று பார்த்து, அது இல்லாத காரணத்தினால் ஏமாற்றம் அடைந்து போகிறேன் என்று ரணில் விக்கிரமசிங்க சிரித்துக்கொணடே பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் அதன் ஆரம்ப காலத்திலிருந்தே அரசாங்கக் கட்சியின ருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே அரசியல் ரீதியில் பலத்த போட் டியும் கருத்து முரண்பாடுகளும் இருந்தாலும், அவர்கள் அனைவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அதனால்தான் அன்று கொழும்பு மாநகரில் உள்ள இரண்டு பிரதான கல்லூரிகளான ரோயல் கல்லூரி மற்றும் சென்தோமஸ் கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி, ஆரம்பிக்கும் போது, பாராளுமன்றத்தில் இரு தரப்பினரும் ஏக மனதாகத் தீர்மானித்து அன்றைய கூட்டத்தை ஒத்தி வைத்துவிடும் அள வுக்கு ஒற்றுமையாகச் செயற்பட்டார்கள்.

ஒரு தடவை பிரதம மந்திரியாக இருந்த சேர் ஜோன் கொத்தலாவலை, ஒரு தடவை பிரதம மந்திரியாக இருந்த டாக்டர் டபிள்யூ. தஹநாயக்காவைப் பார்த்து, நீங்கள் அளவுக்கு அதிகமாக பேசுகிaர்கள். நான் நினைத்தால் உங்களை அப்படியே விழுங்கிவிடுவேன் என்று சவால் விட்டார். அதற்கு டாக்டர் தஹநாயக்கா கோப்பப்படாமல் அமைதியாக ஒரு பதிலை அளித் தார். என்னை நீங்கள் விழுங்கிவிட்டால், உங்கள் தலையில்லாத ஒரு பொருள் உங்கள் வயிற்றில் வந்து சேர்ந்துவிடும் என்று கூறிய போது சபையில் சிரிப்பொலி எழுந்தது.

இவ்விதம் தான் அன்று, பாராளுமன்றத்தில் அரசியல் கெளரவமான முறை யில் நடைபெற்றது. ஒரு தடவை டாக்டர் கொல்வின் ஆர். டி. சில்வா பாரா ளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது, திரு. பிலிப் குணவர்தன வின் இளைய சகோதரர் ரொபட் குணவர்தன அவரை தொடர்ந்தும் குறு க்கீடு செய்து கொண்டிருந்தார். அதனால், சற்று எரிச்சலடைந்த டாக்டர் கொல்வின் ஆர் டி. சில்வா "சபாநாயகர் அவர்களே! நான் இப்போது தெரி வித்த கண்டனம் ஒரு முட்டாளை இளைய சகோதரனாகப் பெற்ற மூத்த சகோதரன் மீது தெரிவித்த கருத்து" என்று கூறினார். அப்போது சபையில் அமர்ந்திருந்த ரொபர்ட் குணவர்தன, பிலிக் குணவர்தன ஆகியோர் உட்பட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

இத்தகைய நல்ல சம்பிரதாயத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் ஏற்படுத்துவதற் காக ஜனாதிபதி அவர்களின் யோசனைப்படி சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர்கள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை கடந்த வார இறுதியில் ஒழுங்கு செய்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர்களின் கிரிக்கெட் அணியில் ஜே. வி. பியின் உறுப்பினர்களும், அவர்களுடன் நெருங்கிய உறவுடைய இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் கப்டன் அர்ஜுன ரணதுங்கவும் மாத்திரம் கலந்து கொள்ளவில்லை.

மற்ற கட்சிகளில் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்துகொண்டு, ஓர் அணி என்ற உணர்வுடன் மிகவும் நெருக்கமாக ஒரு விக்கெட்டை தாங்கள் வீழ் த்தும் போது ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பாராட்டுத் தெரிவிக்கும் நற்பண்புடன் நடந்து கொண்டது இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரம் நிலைத்திருக்கும் என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்திருந் தது.

அந்தக் கிரிக்கெட் போட்டியை ஜனாதிபதி தமது பாரியார் சகிதம் வருகை தந்து, பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அவருடன் திரு. ரணில் விக் கிரமசிங்கவும் அருகில் அமர்ந்து இந்தக் கிரிக்கெட் போட்டியை மகிழ்ச்சி யுடன் பார்த்து ரசித்தார். இவ்விதம்தான் அரசியலில் போட்டியிருக்க வேண் டும். ஆனால் பொறாமை இருக்கக் கூடாது என்ற நல்ல கருத்தை எமது அரசியல்வாதிகள் அன்றைய கிரிக்கெட் போட்டியின் மூலம் நாட்டு மக் களுக்கு எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com