Contact us at: sooddram@gmail.com

 

புலம் பெயர் நாடுகளை நோக்கிப் பொன்முட்டைகள்

(சுதர்சன்)

வரலாறு தெரிந்த காலம் முதல் வளரும் தலைமுறை சமூகவிரோதச் சிந்தனை அனைத்தையுமே நியாயமான வாழ்க்கை முறை என்று கேட்டே முதுமை கொள்கிறது. பெரும் வியாபார நிறுவனங்களின் கொள்ளையை நயம் மிக்க வியாபாரத் தந்திரம் என்று விதந்து போகிறார்கள். அத் திருட்டுக்கள் சமூகத்தின் பொதுச் சிந்தனையாகிவிட்டது. அளவுக்கு அதிகமான நுகர்வையும் ஆடம்பரக் கொள்வனவையும் திறமை என்கிறார்கள். இவ்வாறான வரையறைக்குள் சமூகத்தைப் பேணிக்கொள்ளும் அரசியலையே ஜனநாயகம் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுதங்களை மட்டுமே நம்பியிருக்கும் வன் முறை செயற்பாடாக மாற்றமடைந்த போது கூட ஒடுக்கு முறை உருவாக்கிய சமூகத்தின் சிந்தனை தனது எல்லையை வரையறுத்திருந்தது.

துரோகிகள் என்று ஒரு பகுதியாகவும் தியாகிகள் என்று இன்னொரு பகுதியாகவும் சமூகம் பிளவுற்றது. அரசியல் அடிப்படை, தத்துவார்த்தப் பின்புலம், கருத்து என்பன எல்லாவற்றிற்கும் அப்பால் பலம் மிக்கவர்களாக இனம்காணப்பட்டவர்கள் பொதுவாகத் தியாகிகளாகக் கருதப்பட்டனர். வலிமை குன்றிய ஆனால் மாற்று அரசியலை முன்வைத்தவர்கள் துரோகிகள் வரை தரம் தாழ்த்தப்பட்டனர்.

சமூக வழக்காயிருந்த இவ்வாறான கருத்தும் சிந்தனையும் பொதுவாக யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கை முறையிலிருந்தே உருவானது. வெளிப்படையாகத் தெரிகின்ற பலம் என்பதே அங்கு முக்கியத்துவப்படுத்தப்பட்டது. அந்தப் பலத்தை அடைவதற்கு அயோக்கியர்கள் கூடத் தகுதியானவர்களாகக் கருதப்பட்டனர்.

அறுபது வீதத்திற்கு மேலாக நில உடமையாளர்களாகவோ, நிர்வாக உத்தியோகத்தர்களாகவோ காணப்பட்ட யாழ்ப்பாணம் சார்ந்தே தமிழ்த்

தேசியத்தினது கருத்தியலும் சிந்தனையும் உருப்பெற்றது.
இக்கருத்தியலின் பிரதிநிதிகளாக உருவான விடுதலை இயக்கங்கள் சமூகத்தோடு தம்மை இசைவாக்கம் அடையச் செய்து கொள்வதற்கான வழிமுறைகளைக் கையாண்டனர்.

- பலமானவர்கள் என நிறுவிக்கொள்ள ஏதாவது ஒரு வழியில் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்களை இணைத்துக் கொண்டனர்.
- தாம் சார்ந்த இயக்கத்தை சுற்றிநாம்என்ற கருத்து விதைக்கப்பட்டது.
- ஒவ்வ்வொருநாம்இற்கும் மற்றவர்கள் துரோகிகளாக இனம் காட்டப்பட்டனர்.
- எங்காவது தன்னிச்சையான தாக்குதல்கள் நடந்தால்கூட அதனை உரிமை கோரி தமது பலத்தை இனம்காட்ட முற்பட்டனர்.
- தமது குறுகிய வரலாற்றை ஊதிப் பெருப்பித்து தம்மை பலமானவர்களாகவும் தகுதியானவர்களாகவும் காட்ட முற்பட்டனர்.
- யாராவது மரணமடைந்தால் அதன் அனுதாப அலையை நீட்டிப் பெருப்பித்து இலாபகரமான அரசியலாக்கிக்கொண்டனர்.

இந்தச் சிந்தனை புலிகளின் அழிவோடு இலங்கையில் மாறுதலுக்கு உள்ளாகி வருகின்றது. சிறீலங்கா பாசிச அரசுக்கு எதிரான போராட்டங்களை புதிய வழிகளில் முன்னெடுக்க ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்து கொள்வார்கள் என்பது திண்ணம்.

புலம்பெயர் நாடுகளில் இயக்கங்கள் கையாண்ட அதே வழிமுறைகளை இப்போது அங்குள்ள வியாபாரிகள் கையாள்கிறார்களா என்ற சந்தேகம் அவ்வப்போது கேட்கும் சலசலப்புகளிலிருந்து முளைவிடுகிறது.
இதில் இரண்டு வகையான மனித வியாபாரிகளைப் பார்க்கின்றோம்.
முதலாவதாக புலி சார் பிரமுகர்கள் இரண்டாவதாக புலி எதிர்ப்புப் பிரமுகர்கள்.

புலிசார் பிரமுகர்கள் நடுவே பிளவுகளைக் காண்கிறோம். இவர்களை தமக்கு இடையே சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதுவரை சிறீ லங்கா பாசிச இன அடக்கு முறைக்கு எதிராகப் போராடி மரணித்துப் போனவர்களை வைத்தே இவர்களின் அரசியல் நடைபெறுகிறது.

பிரபாகரன் கொலை செய்யப்பட்டது கூட இவர்களுக்குத் தெரியும். இன்னும் பிரபாகரன் இருக்கிறார் என்று குறைந்தபட்ச அஞ்சலி பிரசுரம் கூட விட மறுக்கும் இவர்களின் வியாபாரத்திற்கு பிரபாகரன் பயன்பட்டுப் போகிறார். அதில் வேறு தேசியத் தலைவர் என்று வரிக்கு வரி கூறும் இவர்களின் அயோக்கியத் தனத்தை ஈழத்தில் மரணத்துள் வாழும் மக்கள் அருவருப்பாகத் தான் பார்கிறார்கள்.

உணவும் உறக்கமும் இன்றி போராடி இறந்து போன அப்பாவிகளின் படங்களை வைத்து இவர்கள் ஆடம்பரமாகக் கொண்டாடும் மாவீரர் தினத்தில் மட்டும் பசிக்காக எத்தனை பெண்கள் உடலை விற்கிறார்கள்? எத்தனை பிஞ்சுகள் பசித்த வயிற்றோடு கண்ணீர் வடிக்கிறார்கள்??
சரி இவற்றை எல்லாம் இணையத் தளங்களில் எழுதித் தொலைப்பவர்கள் யாரென்று நோக்கினால், கொலைகார அரசின் அம்மணமான அடிவருடிகள். இவர்களும் அதே இயக்க வழிமுறைகளையெ பின்பற்றுகின்றனர்.

புலி சார்ந்தவர்களுக்கு வியாபாரம் செய்வதற்கு எப்படி அரசால் கொல்லப்பட்டவர்கள் பயன்ப்பட்டுப் போகிறார்களோ, அரசு சார் அயோக்கியர்களுக்கு புலிகளால் கொலை செய்பவர்கள் பயன்படுகிறார்கள்.

இலங்கை அரசாங்கத்துடன் தமது வியாபார நோக்கங்களுக்காக நேரடியான தொடர்பு வைத்திருக்கும் வியாபாரிகளோடு இணைந்த பலர் தமது ஆட் சேர்ப்பு வியாபாரத்தைஹோ என்று நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

புலிகளால் கொல்லப்பட்ட பலர் இலங்கை அரசிற்கு எதிராகப் போராடியவர்கள். வேறு வழிமுறைகளை முன்வைத்தவர்கள். இவர்களின் மரணத்தை விற்பனை செய்து ஆட்சேர்கும் குழுக்கள் இப்போது துளிர் விடுகின்றன. இது வரைக்கும் இவர்கள் ஆபத்தான கட்டம் வரை வளர்ச்சியடையவில்லை. மரணித்துப் போனவர்களை வைத்து சம்பாதித்துக்கொள்ள இன்னுமொரு வெளி காணப்படுகின்றது என்பதை இவர்கள் நன்கு உணர்ந்து கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.

ஆரம்பத்தில் புலிகளின் தொடர்பில் இருந்தவரும் 80ம் ஆண்டு காலப்பகுதியில் ஒபரோய் தேவன் தலைமை தாங்கிய தமிழீழ விடுதலை இராணுவத்தின் ஆலோசகரக இருந்தவரும் பின்னர் மரணிக்கும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் செல்வாக்கு மிக்க உறுப்பினராகவும் ஆலோசகராகவும் இருந்தவருமான அன்டன் பாலசிங்கத்தின் நினைவு நாள்ப்போது புலம் பெயர்நாடுகளில் களைகட்டுகிறது.

எது எவ்வாறாயினும் சாம்பல் மேடுகளில் இருந்து பொன் முட்டையிடும் வாத்துக்கள் புலம் பெயர்கின்றன என்பது மட்டும் தெளிவாகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com