Contact us at: sooddram@gmail.com

 

இருமொழிக் கொள்கை சிறுபான்மை மக்களின் உரிமைகளை பேணிப் பாதுகாக்கின்றது

ரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் அரசாங்க கூட்டுத்தாபனங்கள் அனைத்திலும் சிங்களமும், தமிழும் சம அந்தஸ்துடன் அரச கரும மொழிகளாக அவற்றின் நாளாந்த பணிகளில் நூற்றுக்கு நூறு சதவீதம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். நம்நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் தங்கள் தாய்மொழி மூலம் அரச பணி களை செய்துகொள்ளும் பூரண உரிமையை அரசியல் சாசனம் வழங்கு கின்றது என்றும், அதற்கு உத்தரவாதம் அளிப்பது அரச ஊழியர்களின் கடமை என்றும் ஜனாதிபதி அவர்களின் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட் டுள்ளது. 1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் மொழிப் பிரச்சினை என்று ஒன்று இருக்கவில்லை. அப்போது அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரசாங்க அனுசரணையுடன் செயற்படும் நிறுவனங்களில் ஆங் கில மொழி மூலம் நிருவாகம் நடைபெற்றாலும், சுதேச மொழிகளில் எவ ரும் சென்று தங்கள் பிரச்சினைகளை முன்வைத்து அவர்களின் குறை பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கு வசதியிருந்தது.

1956 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் முதல் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சியை பொதுத் தேர்தலில் தோற்கடித்துவிட்டோம் என்ற மகி ழ்ச்சியுடன் சிங்கள மக்களிடையே இருந்து வந்த தங்களின் ஆதரவையும் செல்வாக்கையும் பெருக்கிக் கொள்வதற்காக பதவியேற்ற குறுகிய காலத் திலேயே 24 மணி நேரத்தில் சிங்கள மொழியை அரச கரும மொழியாக மாற்றுவோம் என்று வாக்குறுதி அளித்து, சிறுபான்மை மக்களின் உணர்வு களை உதாசீனம் செய்து செயற்பட்டதனால் அரசாங்க நிருவாகத்தில் தமிழ் மொழிக்கு இருந்து வந்த அந்தஸ்தும் உரிமையும் பறிக்கப்பட்டது.

அரச ஆவணங்கள் அனைத்துமே சிங்கள மொழியிலேயே வெளிவந்தன. இதனால், சிங்கள மொழி அறிவு அற்ற சிறுபான்மை மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்கள். அதையடுத்து சிங்கள இனவாதிகள் நாடெங்கிலும் உள்ள வீதிகளின் தமிழ்ப் பெயர்கள் மற்றும் நிறுவ னங்களின் தமிழ் அறிவிப்புகள் அனைத்தையும் தார் பூசி அழித்துவிடும் ஒரு இனவாதப் போக்கை கடைப்பிடித்தனர்.

இதனால் தமிழ் மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டு, அவர்கள் தங்களுக்கு சமமொழி உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தை ஆர ம்பித்தனர். அத்தகைய முயற்சிகளுக்கு லங்கா சமசமாஜ கட்சியும், இல ங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் நேரடியாக ஆதரவு அளித்த காரணத்தி னால், தென்னிலங்கையில் இவ்விரு இடதுசாரி கட்சிகளுக்கு இருந்த சிங் கள மக்களின் ஆதரவு நிறைய ஆரம்பித்தது.

தங்கள் மொழி உரிமைக்காக இந்த இடதுசாரி கட்சிகள் குரல் கொடுக்கின்றன என்பதை வடபகுதி தமிழ் மக்கள் நன்கு உணர்ந்திருந்த போதிலும், அவர்கள் தேர்தல் நடைபெறும் போது, இலங்கை தமிழரசுக் கட்சியையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸையும் ஆதரித்து வாக்களித்து இடதுசாரி கட்சிகளை படுதோல்வியடையச் செய்தனர்.

மொழிப் பிரச்சினை, அரசியல் லாபம் பெறக்கூடிய ஒரு புதிய வலுவான சக் தியாக அமைந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட தென்னிலங்கை யின் இரண்டு பிரதான கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஐக் கிய தேசியக் கட்சியும் சிங்களம் மட்டும் சட்டத்தை பகிரங்கமாக ஆத ரித்தன. இது தங்களின் அரசியல் செல்வாக்கை பெருக்கி, சகல தேர் தல்களிலும் வெற்றி பெறுவது சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று உண ர்ந்து கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ¤ம் தமிழ்மொழியும் அரச கரும மொழியாக பிரகடனப்படுத் தப்பட வேண்டும் என்று பிரசாரம் செய்து அரசியல் லாபம் திரட்டினர்.

இவற்றின் விளைவாக மொழிப் பிரச்சினையாக ஆரம்பித்த தமிழர் பிரச் சினை பின்னர் இனப்பிரச்சினையாக மாறி, இறுதியில் இரு தரப்பு அரசி யல்வாதிகளிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாத காரண த்தினால், இனவாதமாகவும் பிரிவினைவாதமாகவும் இறுதியில் பயங்கர வாதமாகவும் மாறி, கடந்த காலத்தில் நாட்டை சின்னாபின்னப்படுத்தி பேர ழிவுக்கு வழிவகுத்த சம்பவங்கள் இடம்பெற்றன.

ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் எதிர்காலத்திலும் இத்தகைய பிரச்சினைகள் நாட்டில் ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசும் மக்களுக்கு சமமொழி உரிமை இருக்க வேண்டும் என்றும், அதற்கு முதல் நடவடிக்கையாக இவ்விரு மொழிகளிலும் அரச கருமங் களை அரசாங்க ஊழியர்கள் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை இப் போது வெற்றிகரமான முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

தமிழ் பேசும் மக்களோ, சிங்களம் பேசும் மக்களோ நாட்டின் எந்தவொரு பகு தியிலும் பரஸ்பர மொழி அறிவு இல்லாத காரணத்தினால் ஓரங்கட்டி பாகு பாடான முறையில் நடத்தப்படலாகாது என்றும் ஜனாதிபதி இந்த உத்தர வில் குறிப்பிட்டுள்ளார்.

இருமொழிக் கொள்கை நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திர மன்றி, நாடெங்கிலும் சரியான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். பாடசாலைகளில் சிங்களப் பிள்ளைகளுக்கு தமி ழும், தமிழ் பிள்ளைகளுக்கு சிங்களமும் ஒரு பாடமாக கற்பிக்கும் செய் முறை படிப்படியாக நிறைவேற்றப்படுகின்றது.

தபால் நிலையங்கள், அரச திணைக்களங்கள், பொலிஸ் திணைக்களம் ஆகிய வற்றில் இருமொழி மூலம் நிர்வாகம் செய்யப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் நாட்டில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் தெரிந்த உத்தியோகஸ்தர்களை நியமிக்க வேண்டும் என்ற ஜனாதிபதி அவர்களின் ஆணையை பொலிஸ் மா அதி பர் இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். எந்தவொரு பொலிஸ் நிலையத்திற்கும் சென்று தமிழ் மொழி மாத்திரம் தெரிந்த தமிழ், முஸ்லிம் மக்கள் தமிழிலேயே முறைப்பாடு செய்வதற்கும் இப்போது வகை செய் யப்பட்டுள்ளது.

இவ்விதம் ஜனாதிபதி அவர்களின் சிறந்த ஆளுமைத்திறன் மூலம் நாட்டில் இருமொழி நிர்வாகக் கொள்கையை நெறியான முறையில் கடைப்பிடிப்ப தன் மூலம் இனங்களிடையே நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் ஏற்ப டுத்த வேண்டும் என்ற மஹிந்த சிந்தனை எண்ணக்கரு வெற்றிகரமாக இன்று நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com