Contact us at: sooddram@gmail.com

 

21.12.2012 உலகம் அழியாது!

  • மாயன் இன வழித் தோன்றல்களே நம்பிக்கை
  • வதந்திகளை நம்புவோரால் இலாபம் - மெக்சிக்கோ

மாயன் நாட்காட்டி இன்றுடன் (டிசம்பர் 21) முடிவடைவதையொட்டி அதனை எதிர்கொள்வதற்கு சீனா, அமெரிக்கா முதல் மெக்சிகோவரை பலர் தயாராகியுள்ளனர். இந்த நாட்காட்டி முடிவதனால் உலகம் அழியும் என்ற வதந்தி உலகெங்கும் பரவி இருப்பதால் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க ஒவ்வொரு நாட்டு அரசும் உஷார் நிலையில் உள்ளன. மெக்சிகோவை பூர்வீகமாக கொண்டதாக கூறப்படும் மாயன் இனத்தினரின் 5,125 ஆண்டு சுழற்சியை கொண்ட நாட்காட்டி இன்றுடன் முடிவடைகிறது. எனினும் இந்த நாட்காட்டியின் முடிவுக்கு பின்னர் என்ன நிகழும் என்பது குறித்து மாயன் இனத்தவர் எந்த தகவலும் விட்டுச் செல்லவில்லை. ஆனால இதுகுறித்து ஊடகங்கள், இணையதளங்கள் என நவீன உலகில் பல ஊடகங்களும் வதந்திகளும் பரவியுள்ளன. இதில் நாட்காட்டி முடிவுடன் உலகம் அழியும் என்ற வதந்தி அனைத்து ஊகங்களை விடவும் முன்கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் 2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட 2012 என்ற ஹொலிவுட் திரைப்படம் இந்த வதந்திக்கு மேலும் மெருகூட்டியது. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் கடலுக்குள் செல்வது, பாரிய சுனாமி அலை, இமய மலையை மூடுவது என்ற பயங்கர காட்சிகள் அந்த திரைப்படத்தை வர்த்தக ரீதியல் வெற்றி பெறச் செய்ததோடு உலகம் அழிவதை நாம்புபவர்களுக்கு ஆதாரமாக அமைந்தது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து மாயன் நாட்காட்டி தொடர்பிலான விவாதங்கள் தொலைக்காட்சி பத்திரிகை மற்றும் இணையதளங்கள் எங்கும் பரவின. ஆயிரக் கணக்கானோர் மாயன் இன அடையாளத்தைத் தேடி மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.

ந்நிலையில் மாயன் நாட்காட்டி முடிவடையும் தறுவாயையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க அரசுகளும் விஞ்ஞானிகளும் அவதானமாக உள்ளதோடு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா இம்மாத ஆரம்பத்திலேயே இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு மணி நேரம் கொண்ட வீடியோவை யூடியுப் இணைய தளத்தில் வெளியிட்டது.

அதில் உலகம் அழிவதாக கூறும் காரணிகளை பொய்யாக்கும் வகையில் அவை அனைத்துக்குமான விளக்கங்களை வெளியிட்டது.

எனினும் உலகம் அழிவதை நம்புவோர் அதற்கு தயாராகி வருகின்றனர். குறிப்பாக பிரான்ஸில் உள்ள பைரனீஸ் என்ற மலையில் வேற்று கிரக வாசிகளின் விண்கலம் வந்து மக்களை காப்பாற்றுவதாக நம்பும் பலர் அந்த மலையை நோக்கி குவிய ஆரம்பித்தனர். இதனால் ஏற்படும் அசம்பாவிதத்தை தடுக்க அந்த மலைக்குச் செல்வதற்கு பிரான்ஸ் அரசு கடந்த டிசம்பர் 17 முதல் 23 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்கு தடை விதித்தது. அந்த மலைப் பகுதியில் வசிக்கும் 200 கிராம வாசிகளின் முறைப்பாட்டை அடுத்தே பிரான்ஸ் நிர்வாகம் இந்த தடையை விதித்தது.

தற்போதைய சூழல் எம்மைப் பற்றித்தான் சொல்கிறது. குறிப்பாக மேற்கு உலகின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதே ஒழிய பண்டைய மாயர்கள் பற்றியல்லஎன்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மனித இன சாஸ்திரம் தொடர்பான விரிவுரையாளரும் மாயா நாகரிகம் தொடர்பான ஆய்வாளருமான ஜெப்ரி பிரெஸ்வெல் குறிப்பிட்டார்உலகம் விரைவில் அழியும் என்ற நம்பிக்கையை மேற்குலகம் உறுதியாக நம்புகிறது. ஆனால் மாயர்கள் உலகம் அழிவதை நம்பினார்களா என்பது பற்றி எனக்கு உண்மையில் தெரியாதுஎன்றும் அவர் குறிப்பிட்டார்.

இதில் சூரியனுக்கு பின்புறமாக ஒளிந்திருக்கும் நிப்ரு என்ற கிரகம் திடீரென வெளிப்பட்டு பூமியுடன் மோதும் என நம்பும் ஒரு சிலரும் உள்ளனர். அத்துடன் பிரபஞ்சத்தின் மத்தியில் இருக்கும் கருந்துளை பூமியை விழுங்கி துண்டு துண்டாக்கிவிடும் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் பாரிய வெள்ளம் காரணமாக உலகம் அழியும் என்று நம்பும் ஒரு சீன நாட்டவர் அதிலிருந்து தப்ப பேழைகளை தயாரித்துள்ளனர். லியு சென்காய் என்பவர் 160,000 டொலர்கள் செலவு செய்து 70 கீ 50 கன அளவு கொள்கலன் கொண்ட மூன்று டீசல் என்ஜின் சக்தி வாய்ந்த தாக இந்த பேழை அமைக்கப்பட்டுள்து.

உலகம் அழியும்போது எனது வீடு மூழ்குவதையிட்டு நான் பயப்படுகிறேன்என்று முன்னாள் இராணுவ வீரரான 44 வயது சென்காய் சீன அரச ஊடகத்திற்கு கூறியுள்ளது.

அதேபோன்று கிழக்கு சீனாவைச் சேர்ந்த 32 வயது தொழிலதிபரும் உலகம் அழிவதிலிருந்து தப்புவதற்கு கப்பல் ஒன்றை தயாரித்துள்ளார். அட்லான்டிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் 13 அடி விட்டம் கொண்ட மூன்று தொன் மஞ்சள் இரும்பினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இது சுனாமி, பூமியதிர்ச்சி, வெடிப்பு போன்ற அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்தாக சீன அரச ஊடகமான லியோ வாங் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் மாயா இனத்தின் வழித்தோன்றல்களான மெக்சிகோவின் யுகடன் தீபகற்பத்தில் இருக்கும் ஜொஸ் மன்ரிக் எஸ்குவல், உலகம் அழியும் இத்தனைக்கு எதிராக கடும் கண்டனம் வெளியிட்டார். அன்றைய தினத்தில் இனச் சுத்திகரிப்பு மற்றும் துன்புறுத்தல்களில் இருந்து தமது இனம் தப்பி வாழ்வதை கொண்டாடப்போவதாக கூறினார்.

டிசம்பர் 21 இல் ஒரு சிறந்த சகாப்தம் முடிவடைகிறது. அதேபோன்று புதிய சகாப்தம் ,ிu@தி!கிறது. நாம் எமது சிந்தனைகளை புதுப்பிக்கவுள்ளோம்.

மது சூழவுள்ளவை பற்றிய சிந்தனையை புதுப்பிக்கவுள்ளோம்என்று எஸ்குவல் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தெற்கு மெக்சிகோவுக்கு 2012 ஆம் ஆண்டில் 50 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என மெக்சிகோ அரசு நம்பிக்கை தெரிவித்திருந்தது. அத்துடன் மாயன் நாட்காட்டி இருக்கும் சிச்சன் இட்சா பகுதிக்கு இன்றைய தினத்தில் 200,000 மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இது வியாபாரத்திற்கு நல்ல நாள். தனிப்பட்ட முறையில் எனக்கு வழமைபோன்று இன்னுமொரு தினமேஎன்று மெக்சிகோவின் குவைன்டனா மாநிலத்தைச் சேர்ந்த மாயன் இனப் பூர்விகம் கொண்ட 34 வயது ஜுலியன் நுஹிகப் குறிப்பிட்டார்.

சிச்சென் இட்சா பகுதியில் இருக்கும் ஹோடல்கள் ஓர் ஆண்டுக்கு முன்னரே முற்பதிவு செய்யப்பட்டு அவை தற்போது நிரம்பி வழிகின்றன.

எனினும் பெரும்பாலான மெக்சிகோ நாட்டவர்கள் இன்று உலகம் அழியும் என்ற வதந்தியை நம்பவில்லை. இன்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாயன் பூர்விக இனத்தவர்கள் ஆன்மீக மற்றும் கலாசார செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளனர்.

இதேபோன்று கியுபா, குவன்தனமோ உட்பட மாயன் நாகரீகத்தைச் சேர்ந்த கோவில்கள் இருக்கும் பகுதிகளிலும், ஆன்மீக மற்றும் கலாசார செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.

எவ்வாறாயினும் இன்று உலகம் அழிவதாக நம்பும் ஒருசிலர் தற்கொலை முயற்சிகள் மற்றும் ஏனைய அசம்பாதவிதங்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக அரசுகள் எச்சரித்துள்ளன. ஏற்கனவே சீனாவில் இந்த வதந்தியால் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் ஆரம்பப் பாடசாலையின் 23 சிறுவர்களை கத்தியால் தாக்கியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுபுறத்தில் இன்று உலகம் அழியும் வதந்தியை விஞ்ஞானிகள் 100 வீதம் நிராகரித்துள்ளனர்.

மாயன் இனத்தினரின் பூர்வீகமான மெக்சிகோவின் யூகாடன் நகரில் சமீபத்தில் நடந்த மாயன் நாட்காட்டி தொடர்பான கருத்தரங்கில் அகழ்வாராய்ச்சி துறை நிபுணர் தோமஸ் கால்ரெட்டார், விண்வெளி ஆய்வாளர் ஆர்காடியோ போவேடா ரிகால்டே பேராசிரியர் மார்டே டிரெஜோ உள்ளிட்டோர் மாயன் நாட்காட்டி தொடர்பான அனைத்து தவறான கருத்துக்களுக்கும் பதில் அளித்தனர். இந்தகருத்தரங்கின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பூமியின் இறுதி நாளை மாயன் நாட்காட்டி குறிப்பிடவில்லை. ஆனால் என்றாவது உலகம் ஒரு நாள் அழியக்கூடும். அறிவியலால் அனைத்தையும் கணித்துவிட முடியாது என்று கூறினார்.

நாசா விஞ்ஞானிகள் உலகம் அழிவதற்கான காரணிகளாக எரிமலை சீற்றம், தீவிரவாதிகள் தாக்குதல், விண்வெளிப் பாறை தாக்குதல், சூரிய காந்தப் புயல், கோள்கள் மோதல் ஆகியவை கூறப்படுகிறது இதற்கு நாசா விஞ்ஞானிகள் அளித்துள்ள தெளிவான விளக்கம் வருமாற :-

* கோள்கள் மோதலுக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை. சூரிய குடும்பத்தில் வளர்ச்சிக் குன்றிய சில கோள்கள் இருப்பது உண்மைதான். ஆனால் அவை வெகு தொலைவில் உள்ளன. பூமியை நோக்கி வருவதுபோன்று கூட அதன் பாதை இல்லை. இதனால் கோள்கள் மோதலுக்கு இப்போதைககு 100 சதவீதம் வாய்ப்பில்லை.

* பூமியை நோக்கி மோதவருவது அல்லது அதற்கான வாய்ப்புகள் இருக்கும் விண்வெளிப் பாறைகள் குறித்து பல ஆண்டுகளாக சாசா ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. எந்த விண்வெளிப் பாறையும் இரண்டு நாளில் பூமிக்கு அருகில் வர வாய்ப்பே இல்லை.

* சூரிய காந்தப் புயலால் பூமிக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. சூரிய காந்தப்புயல் என்பது வழக்கமான இடைவெளியில் நடந்து வருவதுதான் ஒவ்வொரு 11 ஆண்டுக்கு ஒருமுறை அது அதிகபட்சமாக இருக்கும் இதுபோன்ற சமயங்களில் விண் வெளியில் சுற்றி வரும் செயற்கைக் கோள்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும். அதேபோல், பூமியில் இலத்திரனியல் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். ஆனால் மனித இனத்துக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. மேலும், 2012 ல் சூரிய காந்தப் புயலுக்கு வாய்ப்பு இல்லை.

* தீவிரவாதிகள் தாக்குதல் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வேண்டுமானால் நடக்கலாம் ஒட்டுமொத்த உலகத்தை அழிக்க வாய்ப்பில்லை. எரிமலையும் வெடிப்பும் இதுபோன்றதே.

* இதுதவிர துருவ மாற்றம் ஏற்படலாம் என்றும் சிலர் பீதி கிளப்புகின்றனர். துருவ மாற்றம் என்பது சராசரியாக 4 இலட்சம் ஆண்டுக்கு ஒருமுறை நடக்க வாய்ப்புள்ளது. இதனாலும், மனித இனத்துக்கு எந்த பெரிய பாதிப்பும் ஏற்படாது. இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு துருவ மாற்றத்துக்கும் வாய்ப்பில்லை.

இவ்வாறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இப்படி இல்லை இல்லை என்று விஞ்ஞானிகள் அடித்து கூறினாலும், அழியப் போகிறது அழியப்போகிறது என்று ஒவ்வொரு வினாடியும் வதந்திகள் கிளப்பப்படுவதை தடுக்க முடியவில்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com