Contact us at: sooddram@gmail.com

 

யாழ். பல்கலைக்கழக மாணவ சமூகத்திற்கு...

கடந்த வாரத்திற்கு முதல் வாரம் இதே தலைப்பில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கம் தொடர்பாகப் பலர் எம்முடன் தொடர்பு கொண்டு தத்தமது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். உண்மையில் வரவேற்கத்தக்க விடயம். யுத்தம் காரணமாக கல்வியைத் தொடரமுடியாது இடைநடுவில் கைவிட்டோர், பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர் கள், தமது உறவுகளை இழந்தவர்கள், யுத்தகாலத்தில் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு நேரடியாக முகங்கொடுத்தோர் எனப் பலதரப்பட்டவர் களும் எம்முடன் உரையாடினர். சிலர் தமது பெயர்களைத் துணிவாகக் குறிப்பிட்டும், பலர் தமது பெயர்களைக் குறிப்பிடாதும் தொலைபேசி வாயிலாகவும், கடிதங்கள், மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டி ருந்தனர்.

இவற்றிலிருந்து மக்களது குறிப்பாக வடபகுதி மக்களது உண்மையான சமகால அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக அறிந்துகொள்ளக் கூடிய தாக இருந்தது. எமது ஆசிரியர் தலையங்கத்தின் தலைப்பு யாழ். பல்கலைக்கழக மாணவ சமூகத்திற்கு..... என விழித்து எழுதப்பட்டி ருந்தபோதும் அப்பல்கலைக்கழக மாணவ சமூகத்திலிருந்து ஒரு மாணவர் கூடத் தொடர்பு கொள்ளாமல் போனமை கவலையையே அளித்தது. ஆனாலும் அதே பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மூவர் ஒரே தொலைபேசி அழைப்பில் அரைமணி நேரமாக மாறி மாறித் தெரிவித்த கருத்துக்கள் அங்குள்ள கள நிலவரத்தின் உண்மை நிலையைத் தெளிவாக எடுத்து விளக்கியது.

அந்தளவிற்கு இளம் பல்கலைக்கழக மாணவ சமூகம் குறிப்பிட்ட சில தமிழ் அரசியல்வாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு தவறாக வழிநடத்தப்படுவது விரிவுரையாளர்களது மனக்குமுறல்களிலிருந்து தெட்டத் தெளிவாகியது. அதுமட்டுமல்லாது சிவில் சமூகத்திலுள்ள சிலரும் மாணவர்கள் இவ்வாறு மூர்க்கத்தனமான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை ஆதரிப்பவர்களாகவே காணப்படும் மனநிலையில் இருப்பது பெரும் கவலைதரும் விடயமாக உள்ளதாகவும் அந்த விரிவுரையாளர்கள் தெரிவித்தனர். இவை கல்விக்குப் பெயர்போன யாழ்ப்பாணத்தில் இன்று அதே கல்வியை வைத்துத் தமது காரியங்களை செய்து முடிக்கத் துடிக்கும் ஒரு சாராரின் எண்ணத்தையே எடுத்துக் காட்டி நிற்கின்றது.

அன்றைய ஆசிரியர் தலையங்கம் தொடர்பாக இன்றுவரை உரையாடி வரும் பலரும் இராணுவத்தினரையும், பொலிஸாரையும் குறை கூறுவதுடன் மாணவர்களது செயற்பாட்டிற்கு ஆதரவாகவே வாதாடி வரும் மனநிலையில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதற்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். பொய்யான ஊடகப் பிரசாரத்தின் விளைவா அல்லது மக்கள் இன்னமும் யுத்தகால மனநிலையில் உள்ளனரா என்பது குறித்து ஆராய வேண்டும். மக்களுக்கும், மாணவ சமூகத்திற்கும் உண்மை நிலையை விளக்கி தமிழ் மக்கள் எதிர்காலத்தில் நிம்மதியாக வாழும் ஒரு சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

கல்வி கற்க வேண்டிய மாணவ சமூகம் இத்தகைய தேவையற்ற போராட்டங்களில் இனியும் ஈடுபட்டுத் தமது கல்வியைச் சீர்குலைக்க முனையக் கூடாது என்றும், அரசியல்வாதிகள் சிலர் தமது இருப்பிற்காக மீண்டும் உங்களைப் பகடைகளாகப் பாவிக்க முனைகிறார்கள், தமிழ்ச் சமூகம் கடந்த முப்பது வருட காலமாகப் பட்டது போதும், உங்கள் பெற்றோரது கனவுகளை நனவாக்க கல்வியில் கவனம் செலுத்துங்கள் என்றும் நாம் சொன்ன கருத்தைப் பலரும் ஆதரித்தாலும் மாணவர்களை விட்டுக்கொடுப்பதாக இல்லை. இதுவொரு மோசமானதொரு நிலைமை யாகவே கருத வேண்டும்.

இது எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பிரதான காரணம் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறும்போது அதனை பூதாகாரமாக மிகைப்படுத்தி வெளியிட்டுவரும் தமிழ் ஊடகங்களே என்பதை அந்த மூன்று விரிவுரையாளர்களுடன் இணைந்து எம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு பழிதீர்க்க இள இரத்தங்களான மாணவ சமூகத்தைத் தூண்டிவிட்டு அதில் குளிர் காய்ந்து அவர்களைப் பலிக்கடாவாக்க நினைப்பவர்களாகவே இன்று பலரும் உள்ளனர் என்பதை ஓரளவு உணர முடிகிறது. இதுவொரு பாரியதொரு பின்விளைவைத் தரக்கூடியது என்பதை இவர்கள் உணராதி ருப்பது கவலையைத் தருகிறது. தமது பழியுணர்வைத் தீர்க்க மாணவர் களைப் பாவிப்பது எவ்வகையிலும் பொருத்தமல்ல.

விரிவுரையாளர்கள் மூவர் இணைந்து தெரிவித்த கருத்தில் தமது பல்கலைக்கழக மாணவர் சமூகத்தை போராட்டச் சூழலுக்கு மீண்டும் அழைப்பது தமிழ் அரசியல்வாதிகளே என்றும் தமிழ் அரசியல்வாதி களைத் தூண்டிவிடுவது புலம்பெயர் சமூகத்திலுள்ள சில குழுக்கள் எனவும் குற்றம் சாட்டினர். அன்றைய கார்த்திகை தீபச் சம்பவம் குறித்து எமது ஆசிரியர் தலையங்கத்தில் எழுதப்பட்ட விடயம் அத்தனையும் உண்மை என்று தெரிவித்த அவர்கள் அன்றுமட்டும் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சம்பவ இடத்திற்கு தனது புகைப்படப் பிடிப்பாளரான ஆசிரியருடன் வராதிருந்திருந்தால் இன்று இத்தகைய தொரு சம்பவமே இடம்பெற்றிருக்காது என்றும் தெரிவித்தனர்.

அவர் தனக்கும் தனது பத்திரிகைக்கும் பிரசாரம் தேடவே அங்கு வந்தார். ஆனால் அதன் விளைவாக இன்று மாணவர்கள் நால்வர் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். இது தொடர்பாக மாணவர்களை அன்று உசுப்பிவிட்ட இவர் இன்று என்ன நடவடிக்கை எடுத்தார்? தனது பத்திரிகையில் நான்கு செய்திகளைப் பிரசுரித்தார். அவ்வளவுதான்.

அன்று பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு அதிஉயர் கல்வி நிறுவனத்தில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் போன்று உயர்கல்வி கற்கும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தது மட்டுமல்லாது கூலிப்படை காடையர் கூட்டம் போன்று கல்லெறிந்து நடந்துகொண்டனர். இது அரு வருக்கத்தக்க செயல். தொலைக்காட்சிகளிலும், பத்திரிகை படங்களிலும் பார்த்துப் பெருமைப்படும் விடயமல்ல இது. மாணவ சமூகத்தை இவ்வாறு செயற்பட வைத்து உள்ளூர் தமிழ் அரசியல்வாதிகள் சிலரும், புலம்பெயர் சமூகத்திலுள்ள சில குழுக்களும் தமது காரியங்களைச் சாதித்து வருவதே உண்மை.

உங்களது கல்விக்குத் தடை ஏற்படுத்துகிறார்கள் என்று எவர் மீதாவது நீங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினால் உங்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும். அதில் ஒரு அர்த்தமும் உள்ளது. ஆனால் அன்று நீங்கள் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தினீர்கள்? சிந்தித்துப் பாருங்கள். அது ஒரு அரசியல் கட்சி செய்ய வேண்டிய வேலை. இவ்விடயத்தைத் தமிழ்க் கூட்டமைப்பினர் தமது மக்கள் பலத்துடன் செய்திருந்தால் வரவேற்றி ருக்கலாம். ஆனால் இதுபோன்ற கூத்துக்களுக்கு இப்போது மக்கள் வரமாட்டார்கள் என்பதால் அவர்கள் மாணவர்களாகிய உங்கள் மூலம் தமது காரியத்தைச் சாதித்துக் கொண்டார்கள்.

மாணவ சமுதாயத்தின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவதோ அல்லது தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராகத் திருப்பிவிடுவதோ எமது நோக்கமேயல்ல. உங்களை இவர்கள் பகடைக்காய்களாகப் பாவிக்க முனைகிறார்கள் என்ற உண்மையை உணர வைப்பதே எமது நோக்கம். அதற்கு இடமளிக்காதீர்கள். அவர்கள் உங்கள் விடயங்களில் தலையிட்டு அதனைத் தமக்குச் சார்பாகத் திசைதிருப்ப முனையும்போதாவது எதிர்க் கேள்வி கேளுங்கள். உங்கள் பெற்றோரின் கனவுகளை நனவாக்குங்கள். அதற்காக யாருக்கும் அடிமையாக இருங்கள் என்றோ அடித்தால் அடியை வாங்கிக் கொண்டிருங்கள் என்றோ கூறவில்லை. நாசூக்காக உங்களை வைத்து தமது அரசியல் காய்களை நகர்த்துவோர் குறித்து விழிப்பாக இருங்கள் என்றே கேட்டுக்கொள்கின்றோம்.

சில தமிழ் அரசியல் தலைமைகள் நாட்டில் மீண்டுமொரு பிரச்சினை வருவதை விரும்புகிறார்கள். இவர்களை புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து சிலர் இயக்குகிறார்கள். அதனால்தான் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை இவர்கள் பிற்போட்டு வருகிறார்கள். குழப்பங்களை உருவாக்கி வடக்கில் அமைதி நிலை இல்லையென்று வெளியுலகிற்குக் காட்ட மாணவ சமூகமான உங்களைப் பாவிக்கிறார்கள். அதற்கு நீங்கள் பலியாகி விடக்கூடாது. முன்னொரு காலம் போன்று பிரச்சினையை ஆரம்பித்து விட்டு இவர்கள் கொழும்பிற்கு ஓடி வந்து தமது சொந்த வீடுகளில் சொகுசாகக் குடியேறி அறிக்கைகளை மட்டுமே விட்டுக் கொண்டிருப்பர். இங்கும் இருக்க முடியாவிட்டால் ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் அரசாங்கத்தின் உதவியுடன் குடியேற்றி வைத்திருக்கும் தமது மனைவி, பிள்ளைகளுடன் சென்று தங்கியிருந்து அங்கிருந்து அறிக்கைகளை விடுவர். ஆனால் இங்கோ நீங்களும், உங்கள் நண்பர்களும் உங்கள் கண்ணெதிரிலேயே காயப்படுவீர்கள், பலியாகுவீர்கள். அதுமட்டுமா ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.

இத்தகைய நிலையைத் தமிழ்ச் சமூகம் ஏற்கனவே ஒரு தடவை அனுபவித்துவிட்டது. உங்களில் சிலருக்கு அது தெரியாமலிருக்கலாம். உங்களது பெற்றோரிடம் அது பற்றிக் கேட்டறிந்துகொள்ளுங்கள். எனவே இனியுமொரு போராட்டத்திற்கு பார்வையாளராக மட்டுமே இருந்து கொண்டு அழைப்பு விடுக்கும் தமிழ் அரசியல்வாதிகளை நம்பி ஒருபோதும் களத்தில் இறங்கிவிடாதீர்கள். இவர்களில் பலர் தமது பிள்ளைகளை லண்டனிலும், அவுஸ்திரேலியாவிலும் உயர் பல்கலைக் கழகங்களில் கல்வி கற்க இணைத்துவிட்டு அப்பாவி மாணவர்களான உங்களது எதிர்காலத்துடன் விளையாடுகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள். இவர்கள் சிலரின் பிள்ளைகள் இலங்கை அரசாங்கத்திடமிருந்து புலமைப்பரிசில் பெற்றே அமெரிக்காவில் கல்வி பயில்கின்றனர் என்பது உண்மையான விடயம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com