Contact us at: sooddram@gmail.com

 

ராஜதந்திர மேதை "சாணக்கியன்" ஐயா சம்பந்தனுக்கு ஒரு பகிரங்க மடல்...

அரசியலில் சாணக்கியம் என்ற வார்த்தை கூறுகின்ற அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியன், அரசியல் மேதை மிக்கியாவில்லியன், மாமேதை மார்க்ஸ் எல்லாரையுமே விஞ்சி விட்ட அரசியல் மேதையே, சிங்களத்தின் குகையில் நின்று அஞ்சாது கர்ஜித்த கிழச் சிங்கமே ... இராஜதந்திரத்தால் கடந்த முப்பது ஆண்டுகள் தமிழனை தூக்கி நிறுத்திய தானை தலைவனே ... ஐயா...சம்பந்த சிகரமே...வணக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிங்கள் நாடாளுமன்றத்தில் உங்கள் கர்ஜனை கேட்ட போது ஏற்பட்ட புல்லரிப்பு தாங்க முடியாமல்தான் இதனை எழுதுகின்றேன்...ஐயா...நீங்கள் ஒரு புலி இல்லை சிங்கம் என நிரூபிக்கும் அப்படி ஒரு பேச்சை நான் கேட்டதே இல்லை... எப்படி ஐயா உங்களால் மட்டும் முடிகிறது..... அப்படியே போடு போடு என்று போட்டு விட்டீர்கள்... ஈழத் தமிரை காக்க உண்ணாவிரதம் இருந்த தியாகப் புயல் ஆனானப்பட்ட கலைஞர் கருணாநிதி எல்லாம் உங்கள் பேச்சின் முன் தூசு...ஐயா தூசு..

உங்கள் உரை கேட்டு ஆவெண்டு பிளந்த வாய் மூண்டு நாளா மூடவேயில்லை...சிங்களத்தின் குகையாம் நாடாளுமன்றத்தில்....நீங்கள் பேசிய பேச்சில

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி... ஜார்ஜ் புஷ் எல்லாம் உங்கள் பேச்சில தோத்துபோனாங்க ...

உங்கள் லாஜிக்..அந்த மாதிரி...ஏன்னா....ஒரு லட்சம் மக்களை கொன்ற மகிந்த அரசின் படைகள் பற்றி வாயே திறக்காமல்...புலிகளை மட்டும் பயங்கரவாதிகள் என்டீங்களே இந்த லாஜிக் யாருக்கு வரும்...

பின்ன, புஷ்க்கு மட்டும்தான் புலிகளை பயங்கரவாதின்னு சொல்ல முடியுமா நம்ம ஐயாவுக்கு முடியாதா?... சம்பந்தரா கொக்க ? உங்களை நினச்சா ரொம்ப பெருமையா இருக்கு.. ஏன்ன ..
தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைன்னு கோட்பாடு வச்சு போராடிய புலிகளை.... பயங்கரவாதின்னு சொல்ல உங்களை விட்டா வேற எந்த தமிழனுக்காவது தில் இருக்கா ... இந்த ராஜ தந்திரம் வேற யாருக்காவது வரும ?....

ஆனா ஒன்னு... நீங்களே பயங்கரவாதி என்டு புலிகளை சொன்ன பிறகு... அப்ப அவங்களை ஏக பிரதிநிதிகள் எண்டு ஏற்றுக் கொண்டது இவருதான்.. இவரையும் புடிச்சு உள்ள போட்டுறலாமா? அப்படின்னு யாரவது கேட்டுட்டா எண்டு பார்த்தா... புலிய தடை செய்ய வச்ச கதிர்காமரே நம்ம பங்காளிதான்னு போட்டிங்களே ஒரு போடு...அங்க நிக்குறீங்க நீங் ..ஐயா, எத்தனையோ எம்.பி.மார் எல்லாம் சாகடிக்கப்பட்ட போதெல்லாம் நீங்க மட்டும் எல்லாருக்கும் அல்வா கொடுத்திட்டு இண்டைக்கு வரைக்கும் அசையாம இருக்கீங்களே....எப்பிடி? அதுக்குதான் பேர் ராஜதந்திரம்...அத உங்கள மாதிரி வேற யாராலையும் பண்ண முடியுமா?

உங்களுக்கு தெரியாத ராஜதந்திரமா? சிங்களவனை பகைச்சுக்கொண்டு அரசியல் செய்ய நீங்க என்ன ரவிராஜ், குமார் பொன்னம்பலம் மாதிரி சாணக்கியம் தெரியாதவரா?.. உங்கட இந்த ஸ்பெசாலிட்டி தான் ஐயா உங்களில எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...அப்புறம்.. புலிகள் இல்லாம போனதுக்கான எல்லா கிரடிட்டையும் மகிந்தவே எடுத்துக்கப் பார்த்தா விட்ருவீங்களா நீங்க...புலிகளை உலகமெல்லாம் தடை செய்ய வச்ச கருவா தோட்ட கம்பி, செந்தமிழ் சொங்கி.. கதிர்காமர் உங்கள் நண்பன், பங்காளி என்று சொந்தம் கொண்டாடி ஷார்ப்பா பங்கு கேட்டிங்க பார்த்தீங்களே அப்ப நீங்கள் எங்கேயோ போய்டீங்க....இத நீங்க என்ன சும்மா பேச்சுக்கா சொன்னிங்க...இல்லையே...கதிகாமர் வீட்டு கட்டுத்தறி சுமந்திரன் ஐயாவை நீங்கள் வாரிசாக வளர்க்கும் போதே எங்களுக்குத் தெரியும்...சம்பந்தர் ஒண்டும் சும்மா இல்லை...

.."எதையும் பிளான் பண்ணிதான் பண்ணுவாரு" எண்டு..

இதுக்காகவே உங்களுக்கு லாயர் சுமந்திரன் பன்னாட(சாரி) பொன்னாடை போர்த்த போறாராம்...ஆனா சிலைதான் வைக்கணும் என்கிறதுதான் என்னோட ஆசை ஐயா. அது மட்டும் இல்லை ஐய,.. இனப்படுகொலை, போர் குற்றம், சர்வதேச விசாரணை என்று உலக தமிழரெல்லாம் உயிரை வச்சு வேலை செய்யும் போது அதற்கு எப்படி ஆப்பு அடிக்கலாம் என்று மகிந்தரும், சோனியா அம்மையாரும், பாண் கி மூனும், வெள்ளை மாளிகையும் தலையை பிச்சிக் கொண்டு இருந்தாங்களாம்..... அந்த நேரம் பார்த்து...அதான் டைமிங்க் பார்த்து...புலிகள் வெறும் பயங்கரவாதிகள் தான் அதுகளை அழிச்சால் பரவாயில்லை... அதுலயும் அதுகள் தற்கொலை தான் செய்து கொண்டதுகள் யாரும் கொல்லயில்லை ...சும்மா விசாரணை எல்லாம் ஒண்டும் தேவை இல்லை என்ற மாதிரி.. நீங்க பார்லிமெண்டுல கொடுத்த் ஐடியா இருக்க ....

அப்ப தான் நீங்க இந்தியாவுக்கே ஏன ..அமெரிக்காவுக்கே ராஜதந்திரம் சொல்லுற பெரிய்ய ஆளுன்னு விளங்கிச்சு.....நீங்க இவ்வளோ பெரிய்ய ராஜ தந்திரம் எல்லாம் பண்றீங்க..உங்களை போய் கொஞ்ச பேர் தப்பா பேசுறாங்க...படிக்காத மூடன்கள். ஐயா...ராணுவம் எண்டா எதுக்கு ...மக்களை பாதுகாக்க தானே...அப்ப எங்கட மக்களில மூண்டு பேருக்கு ஒரு ஆள் கணக்கா இராணுவம் இருந்தா நல்லதுதானே ...இத தானே நீங்க பார்லி மேண்டு ..ராணுவம் எல்லாம் ஒன்றும் வெளியேற தேவை இல்லை நாங்க அப்படி கேக்கவும் இல்லை எண்டீங்கள்.. இதக் கூட புரியாம உங்களைப் போயி தப்பா பேசலாமா?

அது மட்டும் இல் ..

இந்த அறியாத...விடலை பொடியன்கள்... புரியாம கார்த்திகை இருவத்தி ஏழாம் திகதி யூனிவர்சிட்டியில தீபம் ஏத்திப் போட்டாங்கள்...அடக்கு முறை தொடர்ந்தா போராடுவோம் என்று அதுல சொல்லாம சொல்லிப் போட்டங்கள்... தாங்கள் புலிகளை மாவீரரா தான் மதிக்கிரம் எண்டுற மாதிரியும் ஓபனா காட்டீடாங்கள்.... ஆனா...நீங்க குடுத்த விளக்கம் சும்மா அந்த மாதிரி...? அதாவது.."முள்ளி வாய்க்காளோட எல்லாம் முடிஞ்சு போச்ச .... அவங்க கதிகாம முருகனுக்குத்தான் தீபம் ஏத்தினாங்க..வேற யாருக்கும் இல்லை....நீங்க ஒன்னும் பயப்புட வேணாம்.. பொடியன்களை நாங்க பார்த்துக்குறோம .. ஏன் ஏன்டா எங்க கட்சிக்குத்தான் மக்கள் ஒட்டு போட்டு ஆணை கொடுத்து இருக்காங்க... இப்ப எல்லாம் நாங்க தான் ஏக பிரதிநிதி என்ட மாதிரி...

இனி எங்க பேச்ச கேக்காம அங்க இனி வீட்டில கூட விளக்கு எத்த மாட்டாங்கன்னு".... நீங்க உத்தரவாதம் கொடுக்கிற மாதிரி பேசுனீங்க பாருங்க ...உங்க நம்பிக்கை வேற யாருக்கு ஐயா வரும்.. ஐயா, நீங்க பேசுன இங்கிலீசு இவங்கள் ஒருத்தனுக்கும் புரியலை போங்க.. லண்டன்லயும் அமெரிக்காவுலையும் இருவது வருஷமா இருக்கவுங்களுக்கு கூட விளங்களையாம் ...
அந்த நேரம் பார்த்து... இங்க உள்ள ஐ.சி.ஜி.
எண்ட சர்வதேச நெருக்கடி குழு அப்படின்னு இயங்குற என்.ஜி.ஒ ஒரு அறிக்கைய விட்டுட்டுது...ஒரு மாதிரி அத வாசிப்பம் என்டு பார்த்தா ...நீங்க என்ன பேசணும் எண்டு அவங்க அப்படியே எழுதி வச்சு இருக்காங்க... நீங்களும் அப்பிடியே கிளிப்பிள்ளை மாதிரி ஒரு பிழை இல்லாம அதுல சொன்ன மாதிரியே பேசி இருந்தீங்க... அப்ப தான் புரிஞ்சது நம்ம சம்பந்தன் ஒண்டும் சாதாரண ஆள் இல்லை... அவருக்கு பேச்சு கூட வெளிநாட்டுல இருந்துதான் எழுதுறாங்க... அவரு ரொம்ப பெரிய்ய ஆள் என்று..

சரி, யாருடா இந்த ஐ.சி.ஜி. அப்படின்னு பார்த்தா அவங்கதான் இந்த வெளிநாட்டு அரசாங்கத்துக்கிட்ட எல்லாம் காசு வாங்கிட்டு அவங்களுக்கு ஏத்த மாதிரி...இலங்கையில எல்லாம் ஒண்ணுக்க இருக்க வேணும்.... இனப்படுகொலை நடந்தது எண்டு எல்லாம் கெட்ட வார்த்தை பேசப்படாது எண்டு சொல்லுரவங்கலாம்... என்ட மாற மண்டைக்கு ஏனோ இவங்க சொல்றத ஏத்துக்க முடியல ..ஆனா " வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்னு உங்களுக்கு மட்டும் தான் ஐயா புரிஞ்சிருக்கு... ....என்னதான் இருந்தாலும்...புலிகளையும் மக்களையும் அழிக்க ஆயுதம், ஆலோசனை மட்டும் கொடுத்திட்டு சும்மா இருந்திராம ..இன்னைக்கும் கூட மறக்காம.. சம்பந்தன் யாவுக்கு ஐடியா சொல்ல வெளிநாடுகள் எல்லாம் இப்படி ஒரு கம்பனியும் வச்சு கொடுதிருக்கிராங்கன்னா...அவங் ..நல்லவங்களா தானே இருக்கணும்....இப்ப தானே ராஜ தந்திரம் எண்டு நீங்க இவ்வளோ காலம் விமானம் விமானமா ஏறி சொல்லிக்கிட்டு இருந்தது புரியிது..

மாமேதையே ஐயா, எனக்கு ஒரே ஒரு ஆசை...ஒரு சின்ன விண்ணப்பம் ...

நீங்க ஒங்க அருமையான இங்கிலீசு பேச்சை அப்பிடியே ஒருக்கா யாழ்ப்பான பல்கலைகழகத்தில மட்டும் பேசுனீங்க எண்டு வையுங்க....அப்படியே உங்களுக்கு ஆரத்தி எடுத்துருவாங்க... வன்னியில பேசுனா உங்கள எங்கயோ கொண்டு போயிருவாங்க... ஒருக்கா செய்வீங்களா? பிளீஸ் மனசுல ஒன்னும் செயலுள ஒன்னுமா மாறாட்டம் இல்லாத தங்கமே....! நீங்க2009இல கொஞ்சம் மௌனமா இருந்தீங்க அது ஏன் எண்டு எங்கட அறிவில்லா மூளைக்கு அப்போ விளங்கள்ள ...எதோ அழிவ நிப்பாட்ட ஐயா எதோ ராஜ தந்திரம் செய்யுறார் எண்டு நினைச்சிட்டம். இப்ப மூண்டு வருஷம் கழிச்சு தானே விளங்குது... பயங்கரவாதிகளை அழிக்கிற "உலக தர்மத்துக்கு" குறுக்கே வரக் கூடாது எண்டுதான் நீங்க மௌனமா இருந்தீங்க எண்டு... போர் எண்டா மக்கள் சாவினம் தானே அதுக்கு ஏன் சாணக்கியம் இல்லாம கூப்பாடு போடா வேணும் எண்டு பேசாமல் இருந்தனீங்கள்...அதுல என்ன ஐயா பிழை...

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்... உங்களுக்கு தெரியுமாஐயா....உங்கட உருக்கமான உரைய கேட்டு மகிந்தா மாமாவும்... சோனியா அண்டியும்,,மண மோகன் சிங்கு அங்கிளும் கண் கலங்கிட்டாங்கலாம்..... சோனியா அம்மாவின்ற முந்தானை.. கண்ணீர துடைச்சே நனைஞ்சு போச்சுதாம்...சிங்கு மாமா முண்டாச கலட்டி கண்ணை துடைச்சுக்கிட்டாராம்.. ஆனா சிங்கு மாமா உங்களை பற்றி ஒன்னு மட்டும் சொன்னாராம் ஐயா அதான் என்னாலயும் அழுகைய அடக்க முடியல... அதாவது... "என்னதான் இருந்தாலும் சம்பந்தன் ரொம்ப நல்லவன் ...ஏன்னா எவ்வளோ அடிச்சாலும் தாங்குறான் எண்டாராம்"...

இதுக்கு மேல முடியல ஐயா மறுபடி முடிஞ்சா எழுதிறன்...

இப்படிக்கு

உங்கள் அடிப்பொடி [PROXY]

-நன்றி -ஒரு
பேப்பர்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com